logo

படைப்பு 'அறிவிப்புகள்'

Showing 1 - 20 of 42

Year

சர்வதேச மகளிர் காணொளி பேச்சுப்போட்டி - 2024

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும்  பேச்சுப்போட்டி  இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

போட்டியாளர்களின் விவரம்:
20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group A), 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group B) பிரிக்கப்பட்டு பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 40000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

Group A - 20 வயதிற்கு உட்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 1000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 20000 ரூபாயிலிருந்து Group A இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

Group B - 20 வயதிற்கு மேற்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 1000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 20000 ரூபாயிலிருந்து Group B இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து Group A & B இல் வெற்றி பெரும் 14 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப்படும்

போட்டி விவரம்:

தலைப்பு : மாண்புமிகு மகளிர்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

கரு: மகளிர் சம்பந்தமான எந்தக் கருவிலும் பேசலாம் . அது பெண்மை, தாய்மை, பெண்ணடிமை, புதுமைப்பெண், பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சமூகம், இப்படியாக பெண் சார்ந்து, அவர்களுடைய உரிமை சார்ந்து, அவருடைய வாழ்வியலை சார்ந்து, அவர்களுடைய அறிவுத் திறமையை சார்ந்து, எந்த மாதிரியான கருப்பொருளிலும் பேசலாம்.  ஆனால் கண்டிப்பாக பெண் சம்பந்தமான கருவை மட்டுமே எடுத்து பேச வேண்டும்.

பங்கு பெறுவோர்: மகளிர் மட்டும்

கடைசி நாள் : 27-மார்ச்-2024 இரவு மணி 12 வரை

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப:  காணொளியை +91 7338897788 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

தலைமை நடுவர்: பேச்சாளர் கவிதா ஜவகர்
நடுவர் குழு:  பேச்சாளர் அனுகிரகா ஆதி பகவன்  / பேச்சாளர் கபிலா விசாலாட்சி

முடிவு அறிவிப்பு நாள் : 27-ஏப்ரல்-2024

காணொளி ஒளிபரப்பு:  https://youtube.com/c/PadaippuTV

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பெண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் இப்போட்டிக்கு.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு மீடியாவின் (YouTube) போட்டிப் பகுதியில் 01-ஏப்ரல்-2023 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பரிசு பணமும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மகளிர்/பெண் பெயர், வயது, ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 

7. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

8. மார்ச் 27  ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

9. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

10. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

11. மகளிர் மட்டுமே போட்டியில் பங்கு பெற இயலும். மகளிரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் பங்கேற்க இயலாது அப்படியே பங்கேற்று போட்டிக்காக பேசி அனுப்பினாலும் அவர்களுடைய காணொளி போட்டிக்காக எடுத்துக் கொள்ள மாட்டாது. இது முழுக்க முழுக்க மகளிருக்கான போட்டி என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மகளிர்/பெண்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

சமூகத்தில் மகளிருக்கான இடம் தனித்துவமானதாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக படைப்பு குழுமம் இம்மாதிரியான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. ஒத்துழைப்பு தாருங்கள் இதை சாத்தியமாக்க நம்முடன் கைகோர்த்துள்ள  நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்

View

படைப்பு இலக்கிய விருது - 2022

படைப்பு இலக்கிய விருது - 2022
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2022 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.

தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.

வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.

விருதுகளின் பட்டியல்:
~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).

2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)

3 .சிறந்த நாவல்/குறு நாவல்

4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல்/வட்டார வழக்கு/புதினம்/சிறார் இலக்கியம்

5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)

இந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய ஆளுமை மிக்க கவிஞர்/எழுத்தாளர் குழு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பணப்பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.

விதிமுறைகள்:
~~~~~~~~~~~
1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.

3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

4. 2022 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2022 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும் மேலும் 72 அல்லது அதற்கு மேறபட்ட பக்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.

5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.

6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.

8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல்,  நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு 7338897788 என்ற எண்ணிற்கு வாட்சாப் வழியே "படைப்பு இலக்கிய விருது 2022" என தலைப்பிட்டு தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா  மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.

10. அவர் அவர் சொந்த படைப்பான நூல்களை அனுப்பலாம் அல்லது பரிந்துரைகள் செய்யும் பொருட்டு அந்நூலின் பிரதிகளை வாங்கி அனுப்பலாம். 

11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.

12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.

13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் அல்லது நண்பர்கள் என யாராவது முன்வந்து அனுப்பலாம்.

14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.

15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.

16. இன்றிலிருந்து தொடங்கி வரும் May  30 ஆம் தேதி வரை (30-May-2023) உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.

17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் அனுப்பியதும் தகவல்களை வாட்சாப்பில் அனுப்ப மறவாதீர்கள். 

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:
-------------------------------------
படைப்பு பிரைவேட் லிமிட்டட்,
#12/6, மூன்றாம் தளம், 
வெல்வோர்த் ப்ராபர்ட்டடீஸ், 
7 வது தெரு , டாக்டர் சுப்பாராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
Ph: +91 7338897788 / 7338847788

Address in English format:
--------------------------
Padaippu Private Limited,
No. 12/6, 3rd floor, 
wellworth properties, 
7th street, Dr. Subarayan Nagar, 
Kodambakkam, Chennai. 600024
Ph: +91 7338897788 / 7338847788

Email: admin@padaippu.com

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 30-May-2023

நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...

பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..

வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்.
படைப்பு குழுமம்.

#படைப்பின்இலக்கியவிருது

View

சர்வதேச மகளிர் காணொளி பேச்சுப்போட்டி - 2023

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும்  பேச்சுப்போட்டி  இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

போட்டியாளர்களின் விவரம்:
20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group A), 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group B) பிரிக்கப்பட்டு பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 40000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

Group A - 20 வயதிற்கு உட்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 1000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 20000 ரூபாயிலிருந்து Group A இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

Group B - 20 வயதிற்கு மேற்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 1000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 20000 ரூபாயிலிருந்து Group B இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து Group A & B இல் வெற்றி பெரும் 14 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப்படும்

போட்டி விவரம்:

தலைப்பு : மாண்புமிகு மகளிர்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

கரு: மகளிர் சம்பந்தமான எந்தக் கருவிலும் பேசலாம் . அது பெண்மை, தாய்மை, பெண்ணடிமை, புதுமைப்பெண், பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சமூகம், இப்படியாக பெண் சார்ந்து, அவர்களுடைய உரிமை சார்ந்து, அவருடைய வாழ்வியலை சார்ந்து, அவர்களுடைய அறிவுத் திறமையை சார்ந்து, எந்த மாதிரியான கருப்பொருளிலும் பேசலாம்.  ஆனால் கண்டிப்பாக பெண் சம்பந்தமான கருவை மட்டுமே எடுத்து பேச வேண்டும்.

பங்கு பெறுவோர்: மகளிர் மட்டும்

கடைசி நாள் : 18-மார்ச்-2023 இரவு மணி 12 வரை

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: 
 காணொளியை +91 7338897788 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

போட்டி நடுவர் : பேச்சாளர் கவிதா ஜவகர்

முடிவு அறிவிப்பு நாள் : 14-ஏப்ரல்-2023

காணொளி ஒளிபரப்பு:  https://youtube.com/c/PadaippuTV

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பெண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் இப்போட்டிக்கு.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு மீடியாவின் (YouTube) போட்டிப் பகுதியில் 01-ஏப்ரல்-2023 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பரிசு பணமும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மகளிர்/பெண் பெயர், வயது, ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 

7. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

8. மார்ச் 18  ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

9. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

10. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

11. மகளிர் மட்டுமே போட்டியில் பங்கு பெற இயலும். மகளிரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் பங்கேற்க இயலாது அப்படியே பங்கேற்று போட்டிக்காக பேசி அனுப்பினாலும் அவர்களுடைய காணொளி போட்டிக்காக எடுத்துக் கொள்ள மாட்டாது. இது முழுக்க முழுக்க மகளிருக்கான போட்டி என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மகளிர்/பெண்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

சமூகத்தில் மகளிருக்கான இடம் தனித்துவமானதாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக படைப்பு குழுமம் இம்மாதிரியான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. ஒத்துழைப்பு தாருங்கள் இதை சாத்தியமாக்க நம்முடன் கைகோர்த்துள்ள  நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்

View

படைப்பு பற்றி 'கேபிடல் மெயில்' செய்தி

இன்றைய 'கேபிடல் மெயில்' ஊடகம் படைப்புக் குழுமம் மற்றும் படைப்பு சங்கமம் விழா பற்றிய செய்தி வெளியிட்டு இருக்கிறது. மிக்க நன்றிகள் ஆசிரியர் மற்றும் நாளிதழ் குழுமத்திற்கு.

நற்செயல்களை தேடித்தேடி கொண்டாடும் கவிஞர் மானா பாஸ்கர் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்

View

முடிவுகள் - மகளிர் கவிதைப் போட்டி 2022

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

முதல் முறையாக WRC ( Women's Renaissance Centre) மற்றும் படைப்பு குழுமம் இணைந்து நடத்தும் சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும் கவிதை போட்டி இந்தாண்டு முதல் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி போட்டியும் சிறப்பாக நடந்தேறியது. அதிலிருந்து நாம் அறிவித்தபடி இப்போது வாகை சூடியவர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும
 வாழ்த்துகள் மற்றும் அன்பின் நன்றிகள்.

வாகை சூடியவர்கள்:

முதல் பரிசு:  ஹேமலதா
வரிசை எண்: 228

இரண்டாம் பரிசு:  வள்ளி கண்ணன்
வரிசை எண்: 343

மூன்றாம் பரிசு:

1) R. தில்பர் புஷ்பிதா
வரிசை எண்: 395

2) மோகன சுந்தரி
வரிசை எண்: 262

சிறப்பு பரிசுகள்:
~~~~~~~~~~~~

1)  எஸ்தர் ராணி
வரிசை எண்: 176

2)  ஜே.ஜே. அனிட்டா
வரிசை எண்: 72

3)  ரத்னா வெங்கட்
வரிசை எண்: 436

4)  பாரதி சண்முகநாதன்
வரிசை எண்: 502

5)  கீர்த்தி கிருஷ்
வரிசை எண்: 194

6)  அல்லி பாத்திமா
வரிசை எண்: 251

பரிசு விவரம்:
மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் இருவருக்கு).

சிறப்பு பரிசு : 6 நபர்கள் - 6000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: WRC ( Women's Renaissance Centre) 

விரைவில் பரிசளிப்பு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

சர்வதேச மகளிர் காணொளி பேச்சுப்போட்டி - 2022


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

முதல் முறையாக WRC ( Women's Renaissance Centre) மற்றும் படைப்பு குழுமம் இணைந்து நடத்தும் சர்வதேச அளவில் மகளிருக்கான மாபெரும்  பேச்சுப்போட்டி  இந்தாண்டு முதல் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

போட்டியாளர்களின் விவரம்:
20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group A), 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும்(Group B)
பிரிக்கப்பட்டு பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 50000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய்).

Group A - 20 வயதிற்கு உட்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா 1000 ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து Group A இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

Group B - 20 வயதிற்கு மேற்பட்டவர்கள்:

முதல் பரிசு :  10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

இரண்டாம் பரிசு : 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

மூன்றாம் பரிசு : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய் ஒருவருக்கு).

சிறப்பு பரிசு : 3 நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா 1000 ரூபாய்)

மக்கள் பேச்சாளர் விருது : 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நான்காயிரம் ரூபாய் ஒருவருக்கு)

பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து Group B இல் வெற்றி பெரும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

ஆக மொத்தம், பரிசுத்தொகை 50,000 ரூபாயிலிருந்து Group A & B இல் வெற்றி பெரும் 14 நபர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: WRC ( Women's Renaissance Centre) 

போட்டி விவரம்:

தலைப்பு : மாண்புமிகு மகளிர்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

கரு: மகளிர் சம்பந்தமான எந்தக் கருவிலும் பேசலாம் . அது பெண்மை, தாய்மை, பெண்ணடிமை, புதுமைப்பெண், பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சமூகம், இப்படியாக பெண் சார்ந்து, அவர்களுடைய உரிமை சார்ந்து, அவருடைய வாழ்வியலை சார்ந்து, அவர்களுடைய அறிவுத் திறமையை சார்ந்து, எந்த மாதிரியான கருப்பொருளிலும் பேசலாம்.  ஆனால் கண்டிப்பாக பெண் சம்பந்தமான கருவை மட்டுமே எடுத்து பேச வேண்டும்.

பங்கு பெறுவோர்: மகளிர் மட்டும்

கடைசி நாள் : 05-மார்ச்-2022 இரவு மணி 12 வரை

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: 
 காணொளியை +91 7338897788 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

போட்டி நடுவர் : பேச்சாளர் கவிதா ஜவகர்

முடிவு அறிவிப்பு நாள் : 15-மார்ச்-2022 

காணொளி ஒளிபரப்பு:  https://youtube.com/c/PadaippuTV

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பெண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் இப்போட்டிக்கு.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு மீடியாவின் (YouTube) போட்டிப் பகுதியில் 06-மார்ச்-2022 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பரிசு பணமும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மகளிர்/பெண் பெயர், வயது, ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 

7. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

8. 2021ல்2 - மார்ச் 05ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

9. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

10. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

11. மகளிர் மட்டுமே போட்டியில் பங்கு பெற இயலும். மகளிரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் பங்கேற்க இயலாது அப்படியே பங்கேற்று போட்டிக்காக பேசி அனுப்பினாலும் அவர்களுடைய காணொளி போட்டிக்காக எடுத்துக் கொள்ள மாட்டாது. இது முழுக்க முழுக்க மகளிருக்கான போட்டி என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மகளிர்/பெண்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

சமூகத்தில் மகளிருக்கான இடம் தனித்துவமானதாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் மேம்பாட்டுக்காக, WRC அமைப்பு படைப்பு குழுமத்துடன் இணைந்து இம்மாதிரியான ஒரு முயற்சியை எடுத்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள் இதை சாத்தியமாக்க நம்முடன் கைகோர்த்துள்ள  நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம் 


View

படைப்பு இலக்கிய விருது - 2021

படைப்பு இலக்கிய விருது - 2021
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2021 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.

தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.

வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.

விருதுகளின் பட்டியல்:
~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).

2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)

3 .சிறந்த நாவல்/குறு நாவல்

4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல்/வட்டார வழக்கு/புதினம்.

5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)

இந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய ஆளுமை மிக்க கவிஞர்/எழுத்தாளர் குழு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பணப்பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.

விதிமுறைகள்:
~~~~~~~~~~~
1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.

3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

4. 2021 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2021 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.

5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.

6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.

8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல்,  நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு 7338897788 என்ற எண்ணிற்கு வாட்சாப் வழியே "படைப்பு இலக்கிய விருது 2021" என தலைப்பிட்டு தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா  மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.

10. அவர் அவர் சொந்த படைப்பான நூல்களை அனுப்பலாம் அல்லது பரிந்துரைகள் செய்யும் பொருட்டு அந்நூலின் பிரதிகளை வாங்கி அனுப்பலாம். 

11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.

12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.

13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் அல்லது நண்பர்கள் என யாராவது முன்வந்து அனுப்பலாம்.

14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.

15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.

16. இன்றிலிருந்து தொடங்கி வரும் ஏப்ரல்  30 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.

17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் அனுப்பியதும் தகவல்களை வாட்சாப்பில் அனுப்ப மறவாதீர்கள். 

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:
-------------------------------------
படைப்பு பிரைவேட் லிமிட்டட்,
#12/6, மூன்றாம் தளம், 
வெல்வோர்த் ப்ராபர்ட்டடீஸ், 
7 வது தெரு , டாக்டர் சுப்பாராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
Ph: +91 7338897788 / 7338847788

Address in English format:
--------------------------
Padaippu Private Limited,
No. 12/6, 3rd floor, 
wellworth properties, 
7th street, Dr. Subarayan Nagar, 
Kodambakkam, Chennai. 600024
Ph: +91 7338897788 / 7338847788

Email: admin@padaippu.com

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 30-ஏப்ரல் -2022

நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...

பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..

வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்.
படைப்பு குழுமம்.

#படைப்பின்இலக்கியவிருது

View

இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழ் படைப்புக் குழுமம் பற்றிய செய்தி வெளியிட்டு இருக்கிறது. மிக்க நன்றிகள் ஆசிரியர் மற்றும் நாளிதழ் குழுமத்திற்கு.


நற்செயல்களை தேடித்தேடி கொண்டாடும் கவிஞர் மானா பாஸ்கர் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்

View

படைப்பின் அடுத்த அரவணைப்பு - ஓவியக் கவிஞர் அமுதபாரதி

படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களை அரவணைத்துக் கொள்கிறது படைப்பு குழுமம். அதன்படி கவிஞர் அவர்களுக்கு ஆயுள் முழுக்க  அவருக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்று மாதந்தோறும் கொடுக்க இருக்கிறோம்

கவிஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு பார்வை:

இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கிய திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது. 

பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி, 
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...

இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.

எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.

இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களையும் இரண்டாவதாக எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களையும் அரவணைத்துக் கொண்டது. அதேபோல இப்போது மூன்றாவதாக ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களையும் அவர் பிறந்த நாளான 31-08-2021 அன்று படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொண்டது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவர்களுக்கான  உணவு மற்றும் மருத்துவம் போன்ற  வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

படைப்பு இலக்கிய விருது - 2020

படைப்பு இலக்கிய விருது - 2020
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2020 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.

தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.

வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.

விருதுகளின் பட்டியல்:

~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).

2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)

3 .சிறந்த நாவல்/குறு நாவல்

4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.

5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)

இந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய கவிஞர்/எழுத்தாளர் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.



விதிமுறைகள்:

~~~~~~~~~~~
1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.

2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.

3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.

4. 2020 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2020 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.

5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.

6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.

8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல்,  நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு இணையதளத்தில் உள்ள (https://padaippu.com/contact-us) என்ற லிங்கை சொடுக்கி வரும் பக்கத்தின் வழியே தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா  மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.

10. அவர் அவர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.

11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.

12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.

13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.

14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.

15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.

16. இன்றிலிருந்து தொடங்கி வரும் OCT  31 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.

17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:

-------------------------------------

படைப்பு பிரைவேட் லிமிட்டட்,

#12/6, மூன்றாம் தளம், 
வெல்வோர்த் ப்ராபர்ட்டடீஸ், 
7 வது தெரு , டாக்டர் சுப்பாராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.

Ph: +91 7338897788 / 7338847788


Address in English format:

--------------------------
Padaippu Private Limited,
No. 12/6, 3rd floor, 
wellworth properties, 
7th street, Dr. Subarayan Nagar, 
Kodambakkam, Chennai. 600024
Ph: +91 7338897788 / 7338847788

Email: admin@padaippu.com

படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31-OCT -2021

நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...

பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..

வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்.

படைப்பு குழுமம்.

#படைப்பின்இலக்கியவிருது

View

பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி


அன்புள்ளம் கொண்ட இளம் தலைமுறையினருக்கு அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி"யைப் பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக நடத்த படைப்புக் குழுமம் திட்டமிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மிக வெற்றிகரமாக நடந்ததன் தொடர்ச்சியாக இப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன... தயவுகூர்ந்து பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்துப்பகுதியில் (கமெண்ட்ஸ்) கேட்டுத் தெரிந்துகொள்ளவும்...

போட்டி விவரம்: 
1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் (ஜுனியர்ஸ்), 7 லிருந்து 12 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும்(சீனியர்ஸ்) பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம்  மற்றும் சிறப்பு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு விவரம்:
மொத்தப் பரிசு : 40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : இரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐந்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : இரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்).

மூன்றாம் பரிசு : இரு நபர் - 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்).

மக்கள் பேச்சாளர் விருது : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றாயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 20,000 ரூபாயானது, வெற்றிபெறும் 7 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் முதல் பரிசு பெறும் இரு மாணவர்/மாணவியரின் பள்ளிகளுக்குச்  சுழற்கோப்பை வழங்கப்படும். மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்யும் 20 மாணவர்/மாணவியருக்கு(ஒவ்வொரு பிரிவிலும் தலா 10), இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்படும்.

போட்டி விவரம்:

தலைப்பு: இனி ஒரு விதி செய்வோம்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: 
ஜுனியர்ஸ் பிரிவு (1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை) காணொளியை +91 73589 79406 (வாட்ஸாப் வழியே) என்ற  எண்ணிற்கும், சீனியர்ஸ் பிரிவு (7 லிருந்து 12 வகுப்பு வரை) காணொளியை +91 82486 93805 (வாட்ஸாப் வழியே) என்ற எண்ணிற்கும் அனுப்ப வேண்டும்.

ஜுனியர்ஸ் பிரிவு (1 லிருந்து 6 ஆம் வகுப்பு வரை) பேசும் விதிமுறை:
-------------------------------------------
உங்களுக்குத் தோன்றும் சொந்த கருத்துகளைத் தொகுத்தும் பேசலாம் அல்லது பாரதியாரின் புரட்சிக்கவிதைகளை மூன்று நிமிடத்திற்குள் சொல்லலாம்.

சீனியர்ஸ் பிரிவு (7 லிருந்து 12 வகுப்பு வரை) பேசும் விதிமுறை:
--------------------
சமூகத்தில் இதுவரையில் நீங்கள் கண்ட சமூக அவலங்களை சுட்டிக்காட்டி,இனி அவ்வாறு நடக்காதிருக்க தீர்வுகளைச் சுட்டலாம் அல்லது உங்களுக்கான மாற்றுச்சிந்தனை,எதிர்கால கனவுகள் குறித்தும் பேசலாம்
அல்லது ஒரு துறை சார்ந்து சமூக அவலத்தை மையப்படுத்தி,அதில் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளைத் தொகுத்து பேசலாம்.சான்றாக பெண் சார்ந்த வன்முறைகள்,சட்டம்,விவசாயம்,கல்வி, மருத்துவம்,உணவு இப்படி எது வேண்டுமாகவும் இருக்கலாம் அல்லது புதிய விதிகள் நம் நாட்டிற்கும், உலகத்திற்கும் எவ்வளவு தேவை என்பதை பாரதியின்வழி நீங்களும் கூறலாம் அல்லது உங்களுக்குத் தோன்றும் சொந்த கருத்துகளைத் தொகுத்தும் பேசலாம்.

கடைசி நாள் :16-ஜனவரி-2021 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : படைப்பாளி ஈரோடு மகேஷ், பேச்சாளர், ஊடகவியலாளர் 

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

காணொளி ஒளிபரப்பு: https://youtube.com/c/PadaippuTV
போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். காணொளி கேட்கவும் பார்க்கவும் தெளிவாக இருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் நடப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அனுப்பலாம்.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு டிவியின் (YouTube) போட்டிப் பகுதியில் 16-ஜனவரி-2021 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க இளம் பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மாணவர்/மாணவி பெயர், வகுப்பு, படிக்கும் பள்ளி  பெயர், ஊர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் மற்றும் பள்ளியின் ஐடி கார்ட் (அடையாள அட்டை) ஆகியவற்றை நகல் படம் எடுத்தும் இணைத்து அனுப்ப வேண்டும். 

7. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் 'பங்கேற்பாளர் மின்சான்றிதழ்' நடுவராக இருக்கும் படைப்பாளி ஈரோடு மகேஷ், பேச்சாளர் , ஊடகவியலாளர் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்படும்.

8. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு நாம் நடத்தும் விழாவில் நேரடியாகச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடித்த தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க இளம் பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

9. 2021 - ஜனவரி 16ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

10. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

11. ஒரே பள்ளியிலிருந்து எத்தனை மாணவ மாணவிகள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

12. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. 

உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மாணவ/மாணவியர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

போட்டியை வெற்றி பெறச் செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

படைப்பின் அடுத்த அரவணைப்பு - படைப்பாளி ரமேஷ் பிரேதன்


படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களை தத்தெடுத்து அரவணைத்துக் கொள்கிறது படைப்பு குழுமம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு ஆயுள் முழுக்க  அவருக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்று மாதந்தோறும் கொடுக்க இருக்கிறோம்

கவிஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு பார்வை:

இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கிய திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது. 

பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி, 
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...

இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.

எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.

இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களை அரவணைத்துக் கொணடது. இப்போது இரண்டாவதாக எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களையும் தத்தெடுத்து அரவணைத்துக் கொண்டது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவர்களுக்கான  உணவு, மருத்துவம் மற்றும் உறைவிடத்துக்கான  வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் - ஒரு பார்வை:

பெயர்:    ம. ரமேஷ் @ ரமேஷ் பிரேதன்

ஊர்: புதுச்சேரி

அவர் எழுதிய நூல்கள்

கவிதைகள்
இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்
கறுப்பு வெள்ளைக் கவிதை
பேரழகிகளின் தேசம்
சக்கரவாளக் கோட்டம்
கொலை மற்றும் தற்கொலை பற்றி
உப்பு
நாவற்கொம்பு
அதீதனின் இதிகாசம் (காவியம்)
காந்தியைக் கொன்றது தவறுதான்
சாராயக்கடை
பன்றிக்குட்டி
அயோனிகன் (காவியம்)
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
நடுநிசி மதியம்

நாவல்கள்

1. நல்லபாம்பு: நீல அணங்கின் கதை 
2. ஐந்தவித்தான்
3. அவன் பெயர் சொல் 
4. சொல் என்றொரு சொல்
5. புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்
6. பொந்திஷேரி 
7. ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து (மீபுனைவு)

கதைகள்

முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்
பரதேசி
மகாமுனி
குருவிக்காரச் சீமாட்டி

நாடகம்

ஆதியிலே மாம்சம் இருந்தது (ஐந்து நாடகங்கள்)
இரண்டு பிரெஞ்சு நாடகங்கள் (மொழிபெயர்ப்பு)

கட்டுரைகள்

சிதைவுகளின் ஒழுங்கமைவு
கட்டுரையும் கட்டுக்கதையும்
பேச்சு மறுபேச்சு

பிற

கி. ரா. எழுத்துலகம்
இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்

விருதுகள்

1998 ஆம் ஆண்டு, கவிதைக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது

1999 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சின்னத்தம்பி வாத்தியார் நினைவு 
  அறக்கட்டளை விருது

2001 ஆம் ஆண்டு, நாவலுக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது

2010 ஆம் ஆண்டு, சுஜாதா கவிதை விருது

2011 ஆம் ஆண்டு களம்புதிது கவிதை விருது

2017 ஆம் ஆண்டு கி. ரா. கரிசல் அறக்கட்டளை விருது.

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் பேசிய உரை விரைவில் வெளியிடப்படும்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா அவர்கள் பேசிய நெகிழ்ச்சியான உரை (  https://youtu.be/aatiV_3pAgc ) இணைக்கப் பட்டுள்ளது.  கவிஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய  முதல் அறிவிப்பை படைப்பு இணையதளத்தில் ( https://padaippu.com/announcement/24 ) பார்க்க.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழ் படைப்புக் குழுமம் பற்றிய செய்தி வெளியிட்டு இருக்கிறது. மிக்க நன்றிகள் ஆசிரியர் மற்றும் நாளிதழ் குழுமத்திற்கு.


நற்செயல்களை தேடித்தேடி கொண்டாடும் கவிஞர் மானா பாஸ்கர் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்

View

சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்-2020

படைப்பு குழுமம் மற்றும் கில்லி FM இணைந்து வழங்கும் சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்-2020. 

தலைப்பு: இன்றைய இணையப் பயன்பாடு - சிறகுகளா? சிலுவைகளா?

நடுவர்: பேராசிரியர் கு.ஞானசம்மந்தன்

அணி பேச்சாளர்கள்:

சிறகுகள் அணி:

திரு.ராஜ் மோகன் (தலைமை)
திரு.சசி S குமார் 
திருமதி சங்கீதா 

சிலுவைகள் அணி:

திரு.ஈரோடு மகேஷ் (தலைமை)
திரு. பழனி 
திருமதி. ஜெஸிலா பானு 

நாள்: ஆகஸ்ட் 15 - 2020

நேரம்: இரவு 8 மணி 

நேரலை: படைப்பு டிவி (https://www.youtube.com/PadaippuTV) மற்றும் கில்லி FM (துபாய்)
 
உலகமே இணையவழியில் பயணத்தை தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், இணையவழிப் பயன்பாட்டைப் பற்றி  இன்றைய தமிழுலகில் மிகவும் பிரசித்திப் பெற்ற பேச்சாளர்களை உங்களுக்காக சிரிக்கவும் சிந்திக்கவும் பேச அழைத்திருக்கிறோம். அனைவரும் நேரலையில் கண்டு ரசிக்க அன்புடன் அழைக்கிறோம்.

சிறப்பம்சம்:
தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேச்சாளர்கள் தனித்தனியே அவரவர் இடத்திலிருந்தே பேசினாலும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம்  அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் உட்க்கார்ந்து பேசுவதுபோல கொண்டுவந்து காட்டும் புத்தம்புதிய முயற்சியை எடுத்துள்ளோம். வருங்காலத்தில் இதுபோன்ற சாதனைகளை செய்ய இன்றைய தொழில்நுட்பம் உதவியுடன் சாத்தியப்பட்டாலும் அதை இன்றே நாம் முயற்சித்து நிரூபிக்க இருக்கிறோம். இந்த மாபெரும் முயற்சியை வெற்றியடைய செய்வதில் உங்கள் பங்களிப்பே முக்கியம். இந்த சுதந்திர தினத்தில் இணையவழி ஒன்று கூடுவோம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்.


சிரித்திருங்கள் சிந்திருங்கள்... சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.


மிக்க நன்றிகள்: கில்லி FM , யுனிக் ஆங்கிள் மற்றும் நேவிகேட்டர்

View

படைப்பு பேச்சுப் போட்டி - 2020

சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி - 2020
---------------------------------------------------------------
அன்புள்ளம் கொண்ட இளம் தலைமுறையினருக்கு அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி" இந்தாண்டு முதல் மாணவர்களுக்கெனப் பிரத்யேகமாக நடத்த படைப்புக்குழுமம் திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன... தயவுகூர்ந்து பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்துப்பகுதியில் (கமெண்ட்ஸ்) கேட்டுத் தெரிந்துகொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்தப் பரிசு : 20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய்).

மக்கள் பேச்சாளர் விருது : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றாயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 20,000 ரூபாயானது, வெற்றிபெறும் 4 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் முதல் பரிசு பெறும் மாணவர்/மாணவியரின் கல்லூரிக்குச் சுழற்கோப்பை வழங்கப்படும். மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்யும் 10 மாணவர்/மாணவியருக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்படும்.

போட்டி விவரம்:

தலைப்பு: பெரிதினும் பெரிது கேள்

கால அளவு: மூன்று நிமிடங்கள்

பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: +91 82486 93805 (வாட்ஸாப் வழியே) அல்லது padaippumedia@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வி டிரான்ஸ்பர் மூலமும் அனுப்பலாம்.

கடைசி நாள் :25-ஆகஸ்ட்-2020 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : படைப்பாளி பாரதி கிருஷ்ணகுமார்

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 25-ஆகஸ்ட்-2020 அன்று இரவு 12 மணிக்குள் +91 82486 93805 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் வழியாகவோ அல்லது padaippumedia@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வி டிரான்ஸ்பர் மூலமாகவோ அனுப்பிவிட வேண்டும்.

2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப்  படைப்பு டிவியின் (YouTube) போட்டிப் பகுதியில் 26-ஆகஸ்ட்-2020 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.

5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க இளம் பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.

6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மாணவர்/மாணவி பெயர், டிகிரி/பட்டம் பெயர், படிக்கும் ஆண்டு, கல்லூரி பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் மற்றும் கல்லூரியின் ஐடி கார்ட் (அடையாள அட்டை) ஆகியவற்றை நகல் படம் எடுத்தும் இணைத்து அனுப்ப வேண்டும். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருப்பவர்களுக்கு இன்னும் அடையாள அட்டை கொடுக்கவில்லை என்றால் வேறு ஏதாவது சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

7. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பாளர் மின் சான்றிதழ் நடுவராக இருக்கும் பேச்சாளர் கையொப்பமிட்டு வழங்கப்படும்.

8. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஆறு பேச்சாளர்களுக்கு மட்டும் நாம் நடத்தும் விழாவில் நேரடியாகப் பிரிண்ட் செய்த சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க இளம் பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.

9. ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.

10. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

11. ஒரே கல்லூரியிலிருந்து எத்தனை மாணவ மாணவிகள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காணொளியை அனுப்பக்கூடாது. அதாவது ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். மேலும் ஒருவரே ஒரே வீடியோவை மாற்றி அனுப்புவதாகச் சொல்லி மீண்டும் மீண்டும் அனுப்பக்கூடாது.

12. ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.

13. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

14. தயவுசெய்து போட்டி நடந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் காணொளிகளைப் பதிய வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மாணவ/மாணவியர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.

போட்டியை வெற்றி பெறச் செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

இன்றைய கவிதை உலகம் - கலந்துரையாடல்

உலக இலக்கிய உரையாடல்:

தலைப்பு: இன்றைய கவிதை உலகம்
சிறப்புரை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
நாள்: நேரலை - 28 ஜூலை 2020

கலந்துரையாடல்:
கவிஞர் சிற்பி அவர்களுடன் இணைந்து , இன்றைய கவிதை உலகம் குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஐவரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஜூம் இணையவழியே (நேரலையாக படைப்பு டிவி யூட்யூப் வழியாகவும்)  28 ஜூலை 2020 காலை 11 மணிக்கு படைப்பு குழுமம் நடத்த இருக்கிறது. 

உலக இலக்கியத்தில் இன்றைய கவிதை உலகம் குறித்து அரிய தகவல்களை தெரிந்து/பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தனது 85வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் அவரது நீண்ட இலக்கிய பயணத்திற்கும் பார்வையாளார்களாக பூங்கொத்துகளைப் பரிசளிப்போம்

படைப்புடன் இணைந்திருங்கள்

View

மாற்றுத்திறனாளிக்கு உதவி

சென்னையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான திரு. முனிவரதன் அவர்களுக்கு, படைப்பு அறக்கட்டளை மூலம் 18-07-2020 அன்று மிதிவண்டி வாங்கி கொடுக்கப்பட்டது. 

தனது வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில் மிதிவண்டி ஒன்றை வாங்கித்தந்து உதவ இயலுமா என படைப்பு குழுமத்திடம் விண்ணப்பித்து இருந்தார்  அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு  பயனளிக்கும் வகையிலும்  அதனால் அவர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையிலும் புதியதாக மிதிவண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்து நேசக்கரம் நீட்டியது படைப்பு. அவருக்கு ஏற்றதுபோல் இருக்க வேண்டும் என்று அவரையே சென்னையில் உள்ள சைக்கிள் ஷோரூமுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அவருக்குப் பொருத்தமான பிடித்தமான சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்து நம்பிகை கொடுத்தோம்.

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல
உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உதவும் உள்ளம் இறைவன் இல்லம்

படைப்பு - சமூகத்தின் இணைப்பு

View

அச்சம் தவிர் - இலவச மருத்துவ ஆலோசனை

1).கொரோனா பற்றிய அச்சத்திலேயே
மூழ்கி இருக்கிறீர்களா?

2).கொரோனா பற்றிய சந்தேகங்களில்
குழம்பிப் போயிருக்கிறீர்களா?

3).வீட்டிலேயே தனிமைப்பட்டுக் கிடப்பதால் மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா?

4).உறவினர் மற்றும் நண்பர்களுக்கு
வந்திருக்கும் கொரோனாவால் நீங்கள்
மனமுடைந்து காணப்படுகிறீர்களா?

5).கொரோனா வந்தால் சுற்றியிருப்போர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வேண்டுமா?

6).கொரோனாவால் பாதிக்கப்பட்டு
மன உளைச்சலில் வெதும்புகிறீர்களா?

7).கொரோனாவை எதிர்க்கொள்ள உணவு முறை சந்தேகங்கள் இருக்கின்றனவா?

8).கொரோனாவால் சுற்றத்தாரின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகி
வருத்தப்படுகிறீர்களா?

9).கொரோனாவால் நம்பகத்தன்மை
இழந்து தவிக்கிறீர்களா?

10).கொரோனா பற்றிய விழிப்புணர்வு
தேவைப்படுகிறதா?

மேற்கண்ட ஏதாவது ஒன்றில் உங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் கீழ்கண்ட மருத்துவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உங்கள் சந்தேகங்களைப் போக்கி கொள்ளுங்கள்.

Dr. பிரபு சங்கர். க - 98941 23788
( 4pm to 8pm)

Dr. அப்துல் மூயினுத்தீன் - 99946 17277
( 10 am to 1 pm )

 Dr. தி. கலையரசி- 98840 75760
( 2 pm to 4pm)

Dr. அசோக் குமார்- 96263 33591
( 8pm to 9pm)

Dr. ஹேமாவதி- 99520 24719
( 6pm to 8pm)

இப்போது உள்ள சூழ்நிலையில் பலருக்கும் பலவிதமான அச்சமும் பலவிதமான குழப்பங்களும் இருப்பதால் பலர் மன அழுத்தத்தாலும் நோய் பற்றிய பயத்தாலும் மனதளவில் பெரும்பாதிப்படைந்து இருக்கிறார்கள். சமூக நலன் கருதி அவ்வாறான மக்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கி அவர்களை மீட்டெடுக்க படைப்பு குழுமம் முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவைப்படுவோர் மருத்துவ ஆலோசனைப் பெற்று தெளிவு பெற்று மீண்டு வாருங்கள்.

இது முற்றிலும் இலவசம். ஆனால் தயவுசெய்து ஒவ்வொரு மருத்துவருக்கும் அவர்களது பெயருக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆலோசனை வழங்கும் நேரத்தில் மட்டும் அவரவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு ஆலோசனை (counselling) வழங்க முன் வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் படைப்பு குழுமம் நன்றிகளை சமர்ப்பிக்கிறது.

லைன் பிசியாக இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் அவர்களது ஆலோசனைப் பெற முடியாவிட்டாலோ கமெண்ட் பகுதியில் உங்கள் கேள்விகளை கேட்கவும். அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தக்க பதில் தருவார்கள். 

மருத்துவரிடம் பேசுங்கள்
மன அழுத்தத்தைப் போக்குங்கள்.

படைப்பு - சமூகத்தின் இணைப்பு

View

கவிஞர் காப்பீட்டுத் திட்டம்

கவிஞர் காப்பீட்டுத் திட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமூகத்தின் அழுகையை எழுத்துக்களால் துடைத்தவரின் கண்ணீர்த்துளிகளை துடைக்க...

மானுடத்தின் வலிகளை வரிகளில் சுமந்தவரின் வலியைப் போக்க...

சேர்ந்தேயிருப்பது புலமையும் வறுமையும் என்றால் புலமை மிக்கவர்களின் வறுமையை போக்க..

இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கும் திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது. 

பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி, 
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...

இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.

எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.

இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவருக்கான  உணவு மற்றும் உறைவிடத்துக்கான  வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா அவர்கள் பேசிய நெகிழ்ச்சியான உரை இணைக்கப் பட்டுள்ளது. 

இம்மாபெரும் திட்டத்தினை கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளன்று கவிஞர்களுக்காக அறிமுகம் செய்வதில் படைப்பு பெருமகிழ்வு கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

Showing 1 - 20 of 42 ( for page 1 )