logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 421 - 440 of 735

Year
Award
   

படைப்பு பேச்சுப் போட்டி

  • சிறப்பு பரிசு - இலக்கியா

0   824   0  
  • November 2020

படைப்பு பேச்சுப் போட்டி

  • சிறப்பு பரிசு - யோகேஸ்வரன்

0   760   0  
  • November 2020

படைப்பு பேச்சுப் போட்டி

  • மக்கள் பேச்சாளர் - க யோகபாலாஜி

0   1085   0  
  • November 2020

கவிச்சுடர் விருது

  • க. ராஜகுமாரன்

0   1590   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • நசீமா ரசாக்

0   981   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • ரத்னா வெங்கட்

0   927   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • நா.கி. பிரசாத்

0   789   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • மகேந்திரன். கோ

0   1090   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • இரா. பூபாலன்

1   781   1  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • கோ.ஒளிவண்ணன்

0   911   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • செல்வக்குமார், இராஜபாளையம்

0   1005   0  
  • October 2020

மாதாந்திர பரிசு

  • மணி அமரன்

0   760   0  
  • October 2020

கவிச்சுடர் விருது

  • காயத்ரி ராஜசேகர்

1   1875   5  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • மாரி கார்த்தி

0   822   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • கவிசெல்வா@செல்வராணி

0   862   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • ச.ப்ரியா

0   1039   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • கோதை

0   813   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • த.முருகன்

0   772   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • அமுதன் மகேஷ்வர்மா

0   719   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • லஷ்மி RS

0   773   0  
  • September 2020

படைப்பு பேச்சுப் போட்டி

சிறப்பு பரிசு - இலக்கியா

View

படைப்பு பேச்சுப் போட்டி

சிறப்பு பரிசு - யோகேஸ்வரன்

View

படைப்பு பேச்சுப் போட்டி

மக்கள் பேச்சாளர் - க யோகபாலாஜி

View

கவிச்சுடர் விருது

க. ராஜகுமாரன்

"அதிகாரம் என்பது
கோடரிதான்
அது எக்காலத்திலும்
நிலம் உழப்போவதில்லை" - க.ராஜகுமாரன்.

தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் மருதூரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் இயங்கிவரும் கவிஞர் க. ராஜகுமாரன் அவர்கள்தான் இந்த மாதத்தின் படைப்பு குழுமத்தின் "கவிச்சுடர்" விருதுக்கான சிறந்த கவிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் அறிவிப்பு செய்கிறோம்.

இவரது தந்தையார் சித.கருணாநிதியும் சிந்து பாடல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர்.. இவரது கவிதைகளும் ஈழக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளுமே தன்னை கவிதைகளின் பக்கம் ஈர்த்ததாக பெருமையுடன் நம்மிடம் பகிர்கிறார். 

நமது படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளிக்கான விருதினை ஏற்கனவே பெற்றிருக்கும் கவிஞர் 'உயிர்திசை' கவிதை போட்டியிலும் சிறப்பு பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமில்லாமல் 2019ல் ஜப்பானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பாஷோ விருதுக்கான ஹைக்கூ போட்டியில் சிறப்பு பரிசும், 2020 ல் நடைபெற்ற 74வது பாஷோ நினைவு ஹைக்கூ போட்டியில் பங்கேற்று சிறப்பு பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கவிஞரின் சில கவிதைகளை ஆய்வுப் படுத்துவோம்: 


* காதல் பிரிவுகளின் நேசத்தில் கவிதையாவதும் ஓர் அழகு! அது ஆறாத காயங்களாக இருந்தாலும் அதன் கோப்பையை அவை வற்றவிடுவதில்லை... நிராகரிப்பு என்பது நெருக்கத்தின் பரிபாசை! இங்கு உளறல்களும் காதல்தான்.. உங்களுக்காக இதோ அந்தக் கவிதை:
@

சிறகுகளை வரமளித்து
வானத்தை யாசகம் பெற்றுப்போனது
இந்த வாழ்வு

ஆறாத காயங்கள்
வற்றாமல் வைத்திருக்கிறது
கோப்பைகளை

நீ விட்டுப்போன
நிராகரிப்பின் அண்மையில்தான்
இருக்கிறேன் இன்னமும்

பிரிவின் பள்ளதாக்கில்
நிற்காமல் பாய்கிறது
காதல்

நீங்கள் பார்த்தபடி 
இருக்கும் நிலா 
அவள் விட்டு சென்ற காதல்

இதயத்தில் சிக்கிக்கொண்ட
அந்த புன்னகைதான்
நீங்கள் தவணைமுறையில் 
வாசித்துக்கொண்டிருக்கும் 
இந்த கவிதை
--------------------

* கடினம் என்பது வாழ்வின் அங்கமாகிப்போன ஒன்று! ஒரு வார்த்தை உருவாக வேண்டுமென்றாலும் முதலெழுத்து வந்துவிழுவதும் கடினமே.. பின் அதன் பயணம் சிறப்பாக அமைந்துவிடும் கடினத்தை கவிஞர் எப்படி கையாள்கிறார் பார்ப்போம்:

@
எப்பொழுதும் 
முதலெழுத்தில் இருக்கிறது கடினம்

எளிது என்பது 
கடினத்தின் உடலில் எப்பொழுதாவது முளைக்கும் இறகு

கடிவாளமிடப்பட்ட கடினம் 
எப்பொழுதும் ஒரே பாதையில்
சென்றபடி இருக்கிறது

கடினத்தின் வயிறு செரிப்பதுமில்லை
நிரம்புவதுமில்லை

கடினமானதாகிவிட்டது காலம்
எளிது 
வாய்மூடி வாழ்கிறது

-----------------------
* தனிமை என்பது வரமா? சாபமா? சில நேரங்களில் தனிமை வரம் என்றாலும் அச்சத்தின் முடக்கத்தில் ஒளிந்து கொள்ளும் தனிமை மிகவும் மோசமானது! இங்கும் ஒருவன் தனிமை வாட்டத்தில் தன் அங்க அவயங்களையே சுமையென்று விற்கிறான்.. அவனுக்கு தெரியாது அவை இந்த உலகத்தில் விலையே யில்லாத பொக்கிசங்கள் என்று...

@

ஆகப்பெரும் சுமையென்று 
முடிவு செய்த பிறகு 
முதலில் 
என் கைகளை ஏலம் விட்டேன்..

நடப்பதற்கு 
விரும்பாத கால்களை
பிறகொரு நாள் 
நல்ல விலைக்கு கைமாற்றிவிட்டேன்..

இமைகள் மூடி 
உறக்கத்திலிருக்கும் கண்கள்தான் ஆகப்பெரும் 
பேரத்தில் முடிந்தது...

எல்லாம் விதி என்று 
நொந்துகொண்ட தருணத்தில்தான் 
மிச்சமிருந்த தலை 
ஞாபகம் வந்தது

இனிவரும் பொழுதுகளில் 
தனிமையில் வாழும் மீதத்திற்கு 
ஏதாவது பெயர் 
சூட்டிவிட்டுப்போங்கள்...?

---------------------

* பகல் உழைப்பின் பரந்தவெளி ! அதையே முடக்கினால் என்னவெல்லாம் ஆகும்!

@
ஒரு பகலை
இப்படியே விட முடியவில்லை

கைப்பிடிக்குள் 
நால்திசையும் தலையெட்டிப்பார்க்கும் குருவியாய்..

திசைகள் யாவும் 
சிறைபட்டிருக்க மிரண்ட விழிகளில் 
வானம்

ஒடுங்கிய இறகுடன்
பறத்தலின் கனவு
சதுரங்களாக வெட்டப்பட்ட பகலின் 
குருதியில் நனைகிறது...

இந்த நாளின் 
மூடப்படுவதற்கு என்று 
கடைசி கதவையும் வைத்திருக்கிறது
அந்தி...
-----------------
* காரணங்கள் ஏதுவாக இருந்தாலும் பேச்சுரிமை முடக்கப்பட்டால் ஊனமாகிவிடுகிறது சுதந்திரத்தின் தெளிவு! எளியவனின் பேச்சுரிமைகளை முடக்குவதே அதிகார வர்கத்தின் ஆளுமையாவது மிகவும் ஆபத்தானது! 

@
இப்பொழுது
சன்னல் கதவு தாண்டாமல்
நிபந்தனைக்கு உட்பட்ட
பேச்சுரிமைக்கு 
வாய்மூட சலுகை எனும் மூன்றாவது கை வரமளிக்கப்பட்டிருக்கிறது..!

சாயுங்காலங்களில்
ஆமாம், சரிக்கு நேர்ந்துவிடப்பட்ட 
பேச்சுரிமைகள் எப்பொழுதும் 
தள்ளாடியபடி நடக்கிறது..

தண்ணீர் குழாயில்
வழிந்தபடி தெருவில் செல்லும்
பேச்சுரிமை 
பசுமையின் வேர் 
அறிய விரும்புவதில்லை

அமர்ந்திருக்கும் உயரம் பொறுத்து
மாறுபடுகிறது 
பேச்சுரிமையின் நிறம்..

எளியவனின் பேச்சுரிமை
எப்பொழுதும் 
அதிகாரம் மிதித்து செல்ல ஏதுவாய் 
அவன் காலடி தூரம்தான்..!
------------------
* நம்பிக்கைத்தான் வாழ்க்கையின் ஒழுங்கு! அதையே பாடலாக்கிவிடும் கவிஞர் ஆங்காங்கே அவை சந்திக்கும் முடக்கங்களையும் பட்டியலிடுகிறார்! கடைசியாக அவர் அதனை முடக்காமல் இருக்க எதனைப் பாட சொல்லியிருப்பார்! பார்க்கலாம் வாங்க...

@

நீண்ட காலமாய் இருக்கிறது 
என் இனிய பாடலொன்று..

அது வீதியில் 
செல்லும்போதெல்லாம் காது பொத்திச்செல்கிறீர்கள்..

யாரும் பார்க்காத 
நேரத்தில் கத்தி வீசுகிறீர்கள்..

ஓர் நாள் பாடலை 
பறவையாக்கிவிட்டேன்
அது அமரும் 
மரங்கள் முழுவதையும் 
வெட்டத்தொடங்கிவிட்டீர்கள்..

கார் காலம் ஒன்றைப் 
பாடியபடி
அழகாய் சிறகு விரித்து 
பறக்கத்தொடங்கிவிட்டது

இனி வானத்தை 
என்ன செய்யபோகிறீர்கள்?
-----------------

* வாழ்வியலின் தேவை மனிதம் மட்டுமே! அதை சீர் குலைத்துவிடுகிறது மதங்களால் பின்னப்பட்ட கயிறு! வெளிச்சத்தைக் காட்டாத மதம் இருட்டை நமது அறைக்குள் கடத்திச் சிறைவைப்பது மிகவும் கொடுமை! 

@

ஒரு புன்னகையின் சத்தியம்
பாதுகாப்பான 
நகரமதில் ஒளிந்தபடி வாழ்கிறது

மதம் பிடித்த 
மனிதர்களின் குரல் நெய்தளித்த 
கயிறுகள்
பாத்திமாக்களின் கனவுகளை
சூடிக்கொண்டன.

நான் நம்பியபடி இருந்த 
பாதுகாப்பான நகரம்
இருட்டையே 
சன்னலாகவும் கதவாகவும் 
வைத்திருக்கிறது..

சகமனிதனை 
தனிமைபடுத்த நீங்கள் 
பயன்படுத்தும் ஆயுதம்
உங்கள் கடவுளை சாத்தானாக்குகிறது.
-----------------
* கடந்து செல்பவர்களை அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விடுவதில்லை! ஒன்று அவர்கள் நம்மிடம் எதையாவது விட்டுச் செல்கிறார்கள்! அல்லது அவர்களிடம் நாம் எதையாவது விட்டுக்கொடுத்துச் செல்கிறோம்!

@
கடந்து செல்பவர்கள்
எவற்றையாவது நம்மிடம்
விட்டுச்செல்கிறார்கள்..

அவ்வளவு எளிதில்
நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவதில்லை
கடந்து செல்பவர்கள்

சில பொழுதுகளின்
எல்லா பக்கங்களும்
பயணத்தபடியே இருக்கிறது
கடந்து செல்பவர்களோடு

வந்ததும் போனதும் தெரியாமல்
தொலைவாகிபோன ஞாபகம்
கடந்து செல்பவர்கள்.

கடந்து செல்பவர்கள்
சிலர் பள்ளத்திலும் பலர்
உயரத்தில் இருக்கிறார்கள்.

கடந்து செல்பவர்கள்
பல பொழுதுகளின்
ஆசிர்வதிக்கப்பட்ட கட்டளை

நிற்கச்சொல்லியபடியே
கடந்து செல்பவர்கள்
நடுவே ஒரு நாள் கடவுளையும் பார்த்தேன்.
-------------------
* கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

@
கூடவே வரும் துயரத்தை
எப்படி வழி மாற்றி போகச்சொல்வது
அது எனக்கான துயரம்
-----------
@
வழி தொலைந்த காடு
சந்தோஷம்தான்
சுற்றிலும் பச்சை

------------

@
புத்தன் அரசனானான்
ஆசைகள் 
வரி வரியாய் துளிர்விட்டது

கூட்டாளிகளின் 
உடல் முழுதும் இறக்கை 
முளைக்க வரம் தந்தான்

நிஜங்களை 
ஏமாற்றுவதற்கென்றே 
கனவுகளுக்கு வார்த்தைகளால் 
வண்ணம் தீட்டினான்..

இப்பொழுது 
போதிமரம் வெட்டி 
விமானம் செய்தபிறகு ஆசைகளை 
பறக்கவிட்டபடியே இருக்கிறான்..
---------------
@
தேவாலய உச்சியில்
அமரும் கழுகின்
காலிடுக்கில் எலி
---------
@
இரண்டு ம..ர..ங்..களிடையேயான 
இடையேயான இடைவெளி
அதிகமாகிவிட்டது..!

தனித்தனியே 
கூடு கட்ட தொடங்கிவிட்டது ப..ற..வைகள்..!

நான்கு ம..னி..தர்கள் 
தனித்தனியே 
பேசிக்  கொண்டிருக்கிறார்கள் 
அலைபேசிகளில்..!

நகர வீதிகளில்
மற்றொன்றுக்கு தெரியாமல்
இரை தேடப்புறப்பட்டு விட்டன 
ஒவ்வொரு மா..டுகளும்...!

தூரத்தில் வாழ்கிறார்கள் 
ம..னி..தர்கள்
காம்பவுண்ட் சுவர்களுக்கிடையான 
இடைவெளி மட்டும் குறைந்துவிட்டது...!

------------
@
கிழியாத பழைய சட்டையால் 
வண்டி துடைக்கும் தருணம் கடந்துபோகும் 
பிச்சைக்காரனின் பார்வை
நிர்வாணப்படுத்திப்போனது 
என் இருப்பை
-------------
@
எல்லா மரங்களும் அவைகளின் 
இடங்களில் 
சிலுவையாகத்தொடங்கியது
சூனியக்காரியின் 
சுருக்குப்பையில் அடங்கியது நதி.
சகுனியின் கட்டத்திற்குள் 
அடங்கி போனார்கள் 
பாண்டவர்கள்
முள்கிரீடங்களின் வழியே 
ரத்தத்தின் கடைசி நீரும் 
ஆவியாகியது..
இவையாவும் ரசித்துக்கொண்டே 
ஆகாயவிமானத்தில் 
வேறோரு நாட்டிற்கு வறட்சி நிவாரணம் கொடுக்கச்செல்கிறார் 
என் கடவுள்...
-----------
@
மரம் மட்டும்தான் தேவை
நிழல் கொடுக்க 
எந்த பஞ்சமும் வைத்ததில்லை வெயில்..
----------
@


தூக்கு கயிற்றின் தாகத்திற்கு
என் காதல் எத்தனையாவது மிடறு
வசீகரத்தையும் 
வாசத்தையும் வைத்து மரம்
என்ன சமரசம் செய்ய முடியும்?
கோடரியிடம்
தனிமையின் உடல்
பிரிவின் அருகிலேயே வாழ்கிறது
துயரின்
இதயத்திற்கு நூறு அறைகள்
ஒரே காதல் முகம்
.....

@
ஆச்சர்யத்திற்கான வெளியில் 
பூ பூப்பதற்காக 
காத்திருக்கிறது காலம்..

காத்திருத்தலின் கடைசிவரை 
நீட்டிக்கப்பட்டிருக்கிறது
அற்புதத்திற்கான கணம்..

எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருக்கும் பயணங்களுக்குள்தான்
குழந்தையின்
புன்னகையை போலிருக்கிறது
பூரணங்கள்..

ஆவலின் தாகம் 
குறையாமல் வைத்துக்கொண்டிருக்கிற 
தேடலில் 
ஒரு பேரமைதி இருக்கிறது 
அந்த நிழலில்தான் 
அமர்ந்திருக்கிறேன் இன்னமும்...!
----------------

@
முகமூடிகள் 
முகங்கள் ஆகிவிடுகின்றன.
முகங்கள்தான் எப்போழுதும்
முகங்களாகவே 
இருக்கமுடிவதில்லை.
-------------------

@
தொலைய விரும்புகிறவன்
தேடியபடி இருக்கிறான்
ஐந்தாவது திசையை

செல்ல செல்ல 
ஆழத்திலிருக்கிறது நம்பிக்கை

வெளிச்சத்தை 
ஒளித்திடப்பார்த்து
இடறி இடறி விழுகிறது இருட்டு

சமரசம் செய்யாத இடம்
கண்ணீருக்கானது

நிழலுக்கு
நிஜம் தேவை

இல்லை என்பது 
இன்னும் அதே இடத்தில் இருக்கிறது

சத்தியம் தடுமாறும் இடம் 
முழுதும்
பிழைகளின் சாலை

காலம் என்பது அதேதான்
நாம் தான் வேறு வேறு

----------------------

@
வேலி தாண்டி வளரும்
கருவைமுள் பச்சைக்கு
தினம் ஒன்றாய்
முளைக்கத்தொடங்குகிறது
சிங்கத்தின் பற்கள்..

-----------------
@

சுயப்படம்
எடுத்துக்கொள்ளாத மேகம்
எவர் வயலிலும் 
மழையாகக்கூடும்.

தண்ணீர் 
தன்னை எழுதிக்கொள்ள
தானே மொழியாகி
காகிதங்களை 
தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன

புறம் பேசத்தெரியாத
தண்ணீர் எப்பொழுதும்
வேரடியில் சரணடையும்..

இப்பொழுதெல்லாம்
தண்ணீர் தாகங்களை
குற்றவாளியாக்கிவிடுகிறது

நிலமே சாமி என்று 
ஒப்புக்கொண்டவர்களிடம்
மந்திரங்கள் 
கடவுளை சிபாரிசு செய்கின்றன..

-----------------

View

மாதாந்திர பரிசு

நசீமா ரசாக்

View

மாதாந்திர பரிசு

ரத்னா வெங்கட்

View

மாதாந்திர பரிசு

நா.கி. பிரசாத்

View

மாதாந்திர பரிசு

மகேந்திரன். கோ

View

மாதாந்திர பரிசு

இரா. பூபாலன்

View

மாதாந்திர பரிசு

கோ.ஒளிவண்ணன்

View

மாதாந்திர பரிசு

செல்வக்குமார், இராஜபாளையம்

View

கவிச்சுடர் விருது

காயத்ரி ராஜசேகர்

தமிழுக்கான சிறப்பே வளமான வார்த்தைகள்தான். நாம் அப்படிபட்ட வார்த்தைகளுடன்தான் உறவாடுகிறோமா என்றால் தயக்கங்களுடன் சில ஆச்சரியக் குறிகள் நம்மை விழுங்கிவிடும்! கவிதையியல் என்பதே ஓர் அழகியல்தான்... அதில் செழிப்பான வார்த்தைகளையும் இணைத்து உறவாடும் போது கவிதையே ஓர் அழகான இடத்திற்கு நகர்ந்துவிடுகிறது...

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருது பெறும் கவிதாயினி காயத்ரி ராஜசேகர் அவர்கள் இந்த வளமான வார்த்தைகளுடன் உறவாடுவதால் அவரது கவிதைகளும் செழுமையாகின்றன!

காயத்ரி ராஜசேகர் - ஒரு பார்வை:

"காயத்ரி ராஜசேகர் பிறந்தது தஞ்சை. தற்போது வசிப்பது சென்னையில். நவீன தமிழ்க் கவிஞர், குடும்பத் தலைவி. முதுநிலை நுண்ணுயிரியல் படித்துவிட்டு நுண்தமிழ்க் காதலால் கவிதைகளை எழுதத் தொடங்கியவர்...

2017 ல் இருந்தே படைப்பிலும் முகநூலிலும் எழுதிவருகிறார். 

நவம்பர் 2017 ல் படைப்பில் சிறந்த படைப்பாளியாக தேர்வு.

பிப்ரவரி 2018 இல் இரண்டு குறும்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.

செப்டம்பர் 2019 இல் படைப்பு பதிப்பகத்தின் வாயிலாக முதல் கவிதைத் தொகுப்பாக "யாவுமே உன் சாயல்" என்ற நூல் வெளியிட்டவர்.

படைப்பு குழுமத்தில் 'வேர்த்திரள்' தலைப்பில் அவர் எழுதியக் கவிதை கவிஞர் கல்யாண்ஜி அவர்களால் சிறப்பு பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. படைப்பு குழுமத்தின் இலக்கிய இதழான 'தகவு' இதழிலும் மூன்று முறை இவரது கவிதைகள் பிரசுரமாகி இருக்கிறது. மேலும், படைப்பு 'கல்வெட்டு' மின்னிதழில் தொடர்ந்து  கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் 'இனிய உதயம்' இதழிலும்,  கணையாழி இதழிலும் கவிதை வெளியாகின.

செவ்வியல் கவிதைகளோடு வழங்கு மொழியிலும் பல கவிதைகள் எழுதி வருகிறார்.... 'காயத்ரி கவிதைகள்' வலைப்பூவில் 1.4 K வாசகர்களுடனும் மேலும் சில கவிதைகள் காணொலி வடிவத்திலும் தொகுத்து வெளியாகியுள்ளது "

கவிச்சுடர் காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு படைப்பு குழுமத்தின் நல் வாழ்த்துகள்!

இனி கவிச்சுடர் காயத்ரி ராஜசேகர் அவர்களின் படைப்புகள் பற்றிய பார்வை:
----------------------------------------------------

காதல் என்பது நேசபிரபஞ்சத்தின் வார்த்தையழகு! ஒன்பது துளைகளில் போகாத உயிர் எண் துளிகளில் கசிகிறதாம். அப்போது மிஞ்சியுள்ள அந்த ஒரு துளை என்பது இங்கு இதழாகிறது!  இதழோடு இதழ் ஊத , உயிரின் கசிவு எண்துளைகளில் வழிகிறதாம்! காணாத இறைவனையே கல்லில் இருப்பதாக நம்பும் மனசு அவனையே இறையாக தரிசிக்கிறது அவன் கணிவு சொற்களில்! ஆனாலும் அவன் சில நேரம் உதிர்க்கும் கடும் சொற்கள் இறைவனுக்கு நிகராகிவிட்ட சாத்தானின் சிங்கப் பற்கள் என்று சொல்லாடுகிறார்!
இதோ கவிதை:

*

நவ துளைகளில் சிக்கியும்
வெளியேரா உயிர்
எண் துளைகளில் கசியும் உன்னிதழூத

கல்லிலுறைவதாய் நம்பும் கண்காணா இறை
உன் வாஞ்சைச் சொல்லிலுறையும்

இருப்பின் கேள்வியிலரற்றும்
இறைநிகர் சாத்தான்
புறக்கணிப்பில் நீளுமுன் சிங்கப்பற்களில்

வரவேடந்தரித்த சாபம் நீ.

-----------------

காதலின் நேசம் என்பது விரட்ட விரட்ட வெளியேறாமல் திரும்பி வந்து அண்ணாந்து அப்பாவியாய் பார்க்கும்  நாயைப் போல் மதிகெட்டு திரிகிறதாம்!  

*

விரட்ட விரட்ட
வெட்கமற்றுத் திரும்பிவந்து
எல்லை தாண்டாது
அண்ணாந்து அப்பாவியாய்க் கண்ணுறும்
மதிகெட்டதிந்த
நேசம்.

-------------

அவன் காம போதையில் பிதற்றும் வார்த்தைகளும் பணிவும் ஈசனாய் வந்தவனிடம் இத்தனை இன்சொல் கேட்கவே தவம் கிடக்கிறேன் என்கிறவள் அவனுடன் இணைகிறாள்.. அவன் முரட்டுத்தனம் வலியை ஏற்படுத்தினாலும் அவளின் ரௌத்திரம் தன்னை நொந்து கொள்ள மட்டுமே செய்கிறது.. அவன் அவளிடம் ஈசனாகவே...

*

கண்டுகொண்டுவிட்டாள் கொற்றவை
கூந்தல் வண்டல் ஊடாடிய அருவியென்கிறான்
கண்களை அருகருகே ஈர்க் கருந்துளையென்கிறான்
முறுவலை முகையவிழும் பிச்சியென்றான்
சொடுக்கெடுக்கையில் நுனிவிரல்களை
மரமல்லியென்கிறான்
தன் சொல்லனைத்தும்
செவிமடுக்கிறான்
துடுக்குப் பேச்சை
மடக்கிக் களிக்கிறான்

ஈசனுருவில்
இத்தனை இன்சொல் கேட்கவென
யுகமாய் ஏங்கிக் கிடந்தவள்
தெரிந்தே தொடர்கிறாள்
வரையறை நகர்த்தியபடி
ஆண்திமிர் மேவ வளை நொறுங்க
கைப்பற்றியிழுக்கும் விசை
ஈசனை நினைவூட்ட
தன்னை நொந்தபடி
ரௌத்திரமாகிறாள்.

------------------------------
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு / எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்ற மூதுரையே இங்கு கவிதையாகிறது! வசதியானவர்கள் ஏழைகளை அண்டவே விடுவதில்லை.. நடுத்தர வர்கமோ ஒண்ட இடம் கொடுத்தாலும் அவர்களின் பசியை அறியாது... குடிசைகள் மட்டுமே ஒண்ட இடமும் உள்ள உணவும் கொடுக்குமாம்! இவர்கள் பொருட்டு பெய்யும் மழை எல்லோருக்கும் ஆகிவிடுகிறது...

*

ஈவிரக்கமின்றி
வெளி கேட்டைப் பூட்டிக்கொள்ளும்
எலைட் ரகக்காரர்கள்
பசித்திருத்தலின் ப்ரஞ்ஞையின்றி
ஒண்ட இடந்தந்த்தற்கேற்ப
தர்மம் தலையை மட்டும்
காத்தால் போதும்
தலைக்கவசம் போலவெனும் நினைப்பில் நடுத்தர வர்க்கங்கள்
சுற்றியொழுகும் குடையொத்த
குடிசையில் அண்டவும் கொடுத்து
பழையசோற்றை ஒரு கை அள்ளி
ஓரம் வைக்கும்
திக்கற்ற நல்லோர் பொருட்டு
யாவர்க்கும் பெய்யும் ஈனமழை.

________________

சொற்கள் எப்போதெல்லாம் தொலைந்து போகிறது பாருங்கள் கவிஞரின் சீரியப் பார்வையில்...

*

சொல்லமுடியாமல்
மொழி தேடியலையும்

அதே பரிதவிப்பு
பச்சிளஞ் சிசுவிற்கும்
தேர்ந்த கவிஞனுக்கும்

பால்வற்றிப்போன எரிச்சலினும்
வலி மேலோங்கிய வன்கலவி
சொற்கள் தொலைத்தது

பகிரங்க நிராகரிப்பினும்
சொற்தீர்ந்த வெற்றுரையாடல்
பாழும் மண்டபத்தின் எதிரொலி

நேசம் வறண்டபின்னான உடனுறைதலில்
பொன்குடமுடைத்த மருமகள்

மென்னியிறுக்கும் சொற்களும்
கண்களுறிந்துகொள்ளத் திணறும் நீர்மையும்
கொட்டித்தீர்க்க மடியேந்தும்
சூன்யக் கருந்துளை.

--------------------------

இதுவும்  இச்சையின் வெம்மை பற்றியதுதான்! அவன் விரல்கள் துழாவும் முன் நிகழ்த்தும் கிளறல்கள்!


வெம்மை கிளர்த்தும் தூறல்
தாகங்கூட்டும் வெந்நீர்
சிகை பிய்க்கும் பீடிகை
நாசி தீண்டி மொட்டவிழ்க்கும் வாசம்
ஆடியசைந்து அழைத்தபின்
சிலையாகும் மரம்
புன்னகைத்து பின் முகந்திருப்பும் உறவு
நெருங்கிய பின்
தொடுதிரை துழாவுமுன் விரல்கள்.

--------------------------
கொரானாவின் அச்சம் உறவை தள்ளி நின்று அழைக்கிறது! இழவு வீட்டின் மெல்லிய புன்னகையை அவன் வருகையில் ஒப்பிடுவது சிறந்த உணர்வு!

*

சூரியன் உதிப்பதும் மறைவதுமான மாயை
நீயின்றி நகருமென் பொழுதுகள்

நேர்ச்சை ஆடுகளின்
பலிக்கெனும் உத்தரவுகள்
நீ இப்போது வரவேண்டாமெனும்
என் கொரோனா அச்சங்கள்

அமர்த்தலான அதட்டலுக்கு
அடங்கும் குழந்தையின்
கணநேர அழுகை
என் சிற்றுறக்கங்கள்

நீண்டு நெடும் சாலையோடும் கானல்
உன் வரவிற்கான நிமித்தங்கள்

தொடுவானத்தின் தூரங்கள் மட்டுமே
நமக்கிடையில்

இழவு வீட்டில் சந்திக்கும் நமக்கானவர்க்கான
மெல்லிழைப் புன்னகை
உன் வருகை.

-------------------------
ஊடலின் விரகம் கவிதையின் வரிகளில்...

*

தேநீர் தயாரித்தபடி
தோலுக்கு நெருக்கமான
ஓர் நெக்குருகும் கனவின் அடுக்ககங்களுக்குள்ளேறி
மடலவிழ்த்து விளக்கியபடியிருக்கையில்

தொடுதிரையைத் தடவியபடியான
உன் "ம் " க்கு
அலைக்கப்பாற்பட்ட மணற்கோட்டையை
ஈரமருந்தி காய்த்துச் சாய்க்கும்
வறண்ட காற்றின் சாயல்.

------------------

பிரிவின் கணம் தாளாது சேரத்துடிக்கும் சங்கத்தமிழின் வரி 'அவர்வயின் விதும்பல்' கவிஞருக்கு கவிதையாகிறது... 

*

கடிவாளமிட்ட குதிரை
கிளி கழுத்திலுறை மாறன் கண்
குருடனின் செவி
நீரோவின் பிடில்
கவணேவும் சிறுகல்
சோதி தழுவியழியும் குருட்டு விட்டில்
மடையுடை வெள்ளம்
யாவற்றுக்கும் எனக்கும்
ஒரே வழி
ஒரே விழி.

#அவர்வயின் விதும்பல்

-------------------

தலைவியின் பசியறியாத தலைவனின் குறட்டைக்கு இத்தனை உவமைகளா?!

*

அடித்துக் களைத்து
கையெடுக்கையில் மௌனமாகும் அந்தக் காலக் கைபேசி
பரபரவெனப் படித்து
கடைசியிரு பக்கங்கள் கிழிந்த புதினம்
அடிமேலடி வைத்து
வெளியேற எத்தனிக்கையில் கண்விழித்து வீரிட்டழும்
சாமக் குழந்தை
அழுதோய்ந்த கண்களுடனென்

பசித்த இரவிலுன்
அசட்டைக் குறட்டை.

-------------------

கவிதையென்று அவளை அழைப்பதே சிறப்பு ! ஏன்? கவிதையொத்த எல்லா குண நலன்களுடனும் அவள் இருக்கிறாளாம்!

*

இதமாகவும் இன்பமாகவும்
கூர்ந்த பார்வையுடனும்
தேர்ந்த சொல்லுடனும்
மர்மம் போர்த்திப் புதிராகவும்
நைச்சியமான பகடியாகவும்
பெரும்பொழுதில் வினாவாகவும்
சிலபொழுதில் விடையாகவும்
நினைவை அகழ்ந்த படியும்
நித்தம் முகிழ்ந்தபடியும்
பரவசத்தில் ததும்பும் நீர்மையாகவும்
முயக்கந்தரும் தமிழாகவும்
உலவுமவளை
கவிதையென்றழைப்பதே மதி.

----------------------

இதம் தரும் எதற்குள்ளும் ஒரு வலியிருக்கும்! இந்த மயிலிறகிலும்...

*

நூல்களுக்கிடையில் பத்திரப்படுத்தப்பட்டு
விழிவருடும்
விசிறியாய்த் தொங்கி
நினைவுகள் கிளர்த்தும்
புறக்காயத்தில் மருந்திடவென
உடல் வருடும்
கண்ணனவன் சின்னமென
மனம்வருடும்
மயிலிறகு பலநேரங்களில்
மயிலிடமிருந்து வலிக்க வலிக்க

பிடுங்கப்பட்டிருக்கும்.

-------------------

விரகத்தின் மொழி இப்படியும் பேசலாம்!

*

தினமும் ஊதித் தள்ளுகிறான்
அசூயையுடனேயும்
ஆகச்சிறந்ததாய் சமைக்கிறேன்
உதடுகள் தீண்டித்தீண்டி
எச்சில் மரத்து விட்டது
கருந்துளைகளாலேயே
சிக்குண்டு கிடக்கிறேன்
களிறின் உதடுகளுக்கும் பற்களுக்கும்
ஏங்கித் தவமிருந்த
சாபம் தீரா மூங்கில் நான்.

---------------------

மேலும் கவிஞரின் ஒரு சில கவிதைகள்:

*

இப்பொழுதே வெள்ளெழுத்தென்கிறாய்
செவிப்பறை கூர்ந்திடவியலாமல் அவதானிக்கத் தொடங்கியிருக்கிறதுனக்கு
பெயர் தெரியா வதையாயெனக்கு
கைவிரல்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன
அலைபேசியில் தட்டச்சவும்கூட
உன் தொலையுறவான
என் ஆகப்பெரும் ஆற்றாமையெல்லாம்
நம் தொடர்பு எல்லையின் விஸ்தீரணம்
தூர்ந்துகொண்டேயிருக்கிறது
பாழும் கிராமங்களைப் போலவே.

--------------------


எங்கு வேண்டுமோ செல்
மாலை வரை
எவரிடமும் பேசு
சகோதர எல்லைக் கோட்டுடன்

என்னவெனிலும் பகிர்
மரியாதை மீறாமல்
நினைத்ததை எழுது
சமூகத்தை சீர்திருத்தும் விதமாக
பிணக்கைப் பேசித் தீர்ப்போம்
உடன்படு முடிவாக
சுத்தமாய் "சு"வை யிழந்த
சுதந்திரம்.
-----------------

பேரழுகையின்போதகப்படும் தோள்
மீப்பெரு பயத்திலொண்டும் மடி
கடும் வெறுப்பிலகலும் நிழல்
முயக்கத்திலிறுகப் பற்றும் விரல்கள்
எனக்கென யாவும் உனதாயிருக்க
அருகிருக்க தயை கூர்ந்திருக்கலாம்
எல்லாம் வல்ல ஏதிலியிறை.

-----------------------

அருவியாய் மூச்சணை
நதியைன மடியேந்து
ஆழியாய் இழுத்துத் துரத்தி இம்சை செய்
புவியெனப் பற்று
பறப்பினும் வீழச்செய்
வானென கூடவே வா
கதிர் நீட்டி ஒளியுமிழ் கண்காணி
வளியாய் உயிர் கொடு
கூதலால் வாதை செய்
நெருங்கியும் தொடாமல் இதமூட்டு
தீயென எனைப் புசி

என் பஞ்சம் தீர்க்கும் பூதம் நீ.

--------------------

பெத்த புள்ள தண்ணிக்கி தவிக்கிறப்போ கையாலாகாம வறண்டு போற
ஆத்தா தொண்டக்குழிதான்
திருவிழாவுல வருசஞ்சென்டு
நீ என்ன பாத்தப்ப
ஒஞ் சிரி்ப்பு.

-----------------------

என்னமோ செய்யக்கூடாத தப்ப
செஞ்சுட்ட மாரி
நெஞ்செல்லாங் கெடந்து அடிச்சுக்குது எப்பல்லான்னா...
கோயில்ல வெளிய வாரப்ப
கையேந்தும் மொடமான
கடவுளத் தாண்டி போறப்பவும்
சிக்னலுல சன்னலத் தட்டி பொம்ம
புக்கு விக்கிற சின்னப் புள்ளைக்கி
பொரணி காட்டுறப்பவும்
ரயிலுல கேக்காமலே
உச்சிய தொட்டு வாழ்த்த வரும்
கைதட்டும் ஆம்பள பொம்பளக்கி
தொட்டுடாம ஒதுங்குற
தீண்டாமத் தனத்தப்பவும்...
இதுக்கெல்லாம் மருந்து என்னாங்குறீங்க
அந்த பழுப்பேறிப்போன
பத்து ரூவாத் தாளுங்க தான்.

---------------------

ரொம்ப வருசங்கழிச்சு பொறந்தநாளைக்கி பேசுறப்ப
ஏந்தேதி மறந்துட்டதா
விட்டேத்தியா கேட்டுக்குற
சட்டுன்னு மழ வந்துட்டதா துணியெடுக்கணுமுன்னு
சாக்குச் சொல்லி ஃபோன வச்சதும்
வந்தது மழயில்ல கடலு.

View

மாதாந்திர பரிசு

மாரி கார்த்தி

View

மாதாந்திர பரிசு

கவிசெல்வா@செல்வராணி

View

மாதாந்திர பரிசு

அமுதன் மகேஷ்வர்மா

View

Showing 421 - 440 of 735 ( for page 22 )