logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 461 - 480 of 761

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • கவிசெல்வா@செல்வராணி

0   907   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • ச.ப்ரியா

0   1073   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • கோதை

0   844   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • த.முருகன்

0   804   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • அமுதன் மகேஷ்வர்மா

0   746   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • லஷ்மி RS

0   801   0  
  • September 2020

மாதாந்திர பரிசு

  • கீர்த்தி கிருஷ்

0   842   0  
  • September 2020

கவிச்சுடர் விருது

  • கோவை சசிகுமார்

0   2398   1  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • வசந்த தீபன்

0   796   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • இதயசகி

0   935   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • மணி அமரன்

0   869   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • போஸ் பிரபு

0   899   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • கோ.பாரதிமோகன்

0   911   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • ஜோதி சரண்

0   807   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • ரேணுகா ஸ்டாலின்

0   1092   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • ஜெகன் M ஆண்டனி

0   833   0  
  • August 2020

கவிச்சுடர் விருது

  • ஜே.ஜே. அனிட்டா

3   1566   2  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கலை

0   1131   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கழாரம் துலாலிங்கம்

0   1277   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கார்த்தி

0   815   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

கவிசெல்வா@செல்வராணி

View

மாதாந்திர பரிசு

அமுதன் மகேஷ்வர்மா

View

மாதாந்திர பரிசு

கீர்த்தி கிருஷ்

View

கவிச்சுடர் விருது

கோவை சசிகுமார்

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் சார்பாக வழங்கப்படும் கவிச்சுடர் விருதினை, நமது படைப்பு குழுமத்தில் தனது சிறந்த படைப்புகளை தொடர்ந்து அளித்துவரும் கோவை சசிகுமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! 

அவரைப் பற்றிய சிறு குறிப்பினை அவரது சுய தகவல்களின் வழியாக நாம் அறிவோம்...

"தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பட்டியகவுண்டனூர் அவரை உலகிற்கு அறிமுகம் செய்த அழகிய கிராமம். பழைய வாய்மொழி வரலாறுகளில் செந்தாமரைக்குளம் என்பதுதான் பட்டியகவுண்டனூர் கிராமம். இயற்கை எழில் பொங்கும் அழகிய கிராமம். விவசாயத் தொழில்தான் வாழவைத்த தொழில். அப்படியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே அவரது தந்தையார் விவசாயம் சம்பந்தமாக அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு தற்போது இறைவனது நிழலில் இளைப்பாறுகிறார். 

தனியார் துறையில் பணியாற்றும் அவர் சமூகத் தொண்டில் தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பில் கோயமுத்தூர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்

வாழ்க்கை பல நிகழ்வுகளை கற்றுத் தந்துவிட்டு மறந்துவிடாத நிகழ்வுகளை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது. அப்படியான ஒரு மறக்கமுடியாத நிகழ்வைத் தான் சில எழுத்துகள் நினைவுபடுத்திக் கொண்டே அவரையும் எழுதவைக்கிறது. 

இதன் தொடக்கமாக கவிதை மலர்கள் அவர் வாழ்வில் அரும்பிய வயது 17. ஆம் எனது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அரும்பியது. அதற்கு ஒரே காரணம் ரசனையை எழுத்துக்களில் கோர்வையாக்கியதுதான். கல்லூரி வாழ்வில் கவிதை மொட்டு மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது. அப்போது அவருக்கு கவிதை எழுதவும் அவர் எழுதிய வரிகளை ரசித்தது கல்லூரித் தோழமைகள். அப்போதே ஒரு மணி நேரத்தில் 30 கவிதைகள் எழுத அத்தனையும் ரசித்தார்கள். 

வாசிப்பின் மௌன மொழி இன்னும் அவரை நிறைய எழுத வைத்தது. காலச்சூழலில் கவிதை மனதுக்குள் இருந்தாலும் சிறு தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலில் கவிதைகளை மீண்டும் மலர செய்ய கிடைத்தது முகநூல் தளம். அப்படி எழுதும் போது நிறைய நண்பர்கள் அவரை மேன்மேலும் எழுத ஊக்குவித்தனர். அப்படியாக  கவிதைகளை படைப்புக் குழுமத்தில் எழுத வாய்ப்புக் கிடைத்தது. அப்படி எழுதுகையில் முதன் முதலில் அவரை மேடை ஏற்றி 2017ல் முதல் விருதை படைப்பு குழுமம்தான் தந்தது. 

அதன் பின்னர் அவர் கவிதைகளை கனடா டொரண்ட்டோவில் உள்ள சி.எம்.ஆர் இணையதள வானொலி என் கவிதைகளை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஒலிபரப்பி உலகத்திற்கு அறிமுகம் செய்தது. 
பொள்ளாச்சி எப்.எம் வானொலியும் எனது கவிதைகள் ஒலிபரப்பியது.

பின்னர் ஸ்விட்சர்லாந்தில் சந்துரு என்ற இணையதள வானொலியும் அவரது கவிதைகளை ஒலிபரப்பியது.

பின்னர் 

தினஇதழ் நாளிதழ் சென்னை
பரணி காலாண்டிதழ்  - நெல்லை
இனிய நந்தவனம் – திருச்சி
உதய சூரியன் – ஆஸ்திரேலியா
சிகரம் – ஈரோடு
மருதாணி - திருவனந்தபுரம்
படைப்பு மின்னிதழ்
கொலுசு மின்னிதழ்
தமிழ்நெஞ்சம் மின்னிதழ் – பிராண்ஸ்
காற்றுவெளி மின்னிதழ் – லண்டன்
ஆகிய பத்திரிக்கைகள் மற்றும் மின்னிதழ்களில் பிரசுரம் ஆகி வருகிறது. 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு மூலம் சிறகசைப்பில் மிளிரும் வெயில் நூலை ஏப்ரல் 2018ல் வெளியிட்டுள்ளார்
 
அதன் பிறகு 

படைப்பு குழுமம்- 2017 சிறந்த படைப்பாளிக்கான விருது
தென்றலின் கவிப்பூங்கா – இரண்டாம் பரிசு
கவிஞனின கனவு – 7 வெற்றிச் சான்றிதழ்கள்
கவியரங்க சான்றிதழ் – உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா மதுரை – 2 விருதுகள்
தளிர் இலக்கிய கூடம் நினைவு விருது – திருப்பூர்
“கவி இளவரசு” சாதனையாளர் விருது 2018 - சக்ஸஸ் அவார்ட்ஸ் கரூர் 
அசோகமித்திரன் படைப்பூக்க விருது 2018 – தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தேனியில் வழங்கியுள்ளது. 
வேளாங்கண்ணியில் எழுச்சிக் கவிஞர் விருது 2019 – வானம் வசப்படும் வா நண்பனே மார்ச் 17ம் தேதி வழங்கி உள்ளது
சிறந்த கவிஞருக்கான விருது – சிகரம் இதழ் ஈரோடு 02.06.2019
கவிச்சுடர் விருது – கமலாலயம் அறக்கட்டளை சென்னை மேனாள் மேயர் சைதை துரைச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது. 
இவ்வளவு விருதுகள் என கவிப்பயணம் பெற்றுத்தந்தது

தற்போது பிப்ரவரி – 14 என்ற காதல் கவிதைகள் தொகுப்பு பிப்ரவரி 2020ல் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலம் வெளியிட்டுள்ளது

இதுவரை முகநூல் மற்றும் இணையம் பத்திரிக்கைகளில் இயற்கை, சமூகம், காதல், என சுமார் 5000 கவிதைகள் எழுதிவிட்டார்.


கவிதையின் மொழி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது வரையறைகளின் கோட்பாடல்ல! தன்னிச்சையாய் எழுந்து தனித்துவத்துடன் பேசுகிற இலாவகம்தான் கவிதைகள் தனக்கான மொழியாக எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லலாம். கவிச்சுடர் கோவை சசிகுமாரின் கவிதைகள் தன் இயல்பில் மொழியாளுகையை எடுத்துக் கொள்கின்றன! தனக்கான உணர்வுகளை தக்காரிடம் கொண்டு சேர்க்க புரிதலின் பக்கம் தலைசாய்த்து மொழியை வளைத்துக் கொள்கிறது!

இனி அவரது படைப்புகள் சிலவற்றை அலசி ஆய்வோம் வாருங்கள்!


இலையுதிர் கால நிறங்கள் உஷ்ணத்தால் உதிர்க்கப்படுவதாக சொல்லும் கவிஞர், சிதறடிக்கப்பட்ட மேகத்தூறல்களில் வானவில்லின் நிறங்களும் வளைவதாக அழகியல் பேசிடும் அதே வேளையில் உதிர் இலைகளின் வேதனை, கூடடடைய பறபறக்கும் பறவைகளின் அச்சம் மற்றும் பிரிவுகள், அடர்ந்த மௌனங்களும்தான் வனத்தின் அடைமழையாகிறது என்று சொல்வதில் ஓர் இன்பத்தின் உள் பெரும் பதட்டம் இருப்பதை நாசூக்காக சொல்கிறது இந்தக் கவிதை! 




சூரியக் கீற்றுகளின்
உஷ்ணத்தில் உதிர்க்கப்பட்ட
இலையுதிர் கால நிறங்கள்!

மேகத்தூறல்களில் 
சிதறடிக்கப்பட்ட துளிகளில்
வளைகிறது 
வானவில்லிலும் நிறங்கள்!

உதிர்ந்த இலையின்
வேதனையிலும் 
விரைந்து செல்லும்
பறவைகளின் அச்சத்திலும்
பிரியமானவரின் பிரிதலின்
மௌனத்திலும்
சிதறிய சிதறல்கள் 
அடைமழையாகின்றது
வனத்திற்குள்!

********************

சில கேள்விகளும், சில கலகங்களுமே விடிவிற்கு முன்னோடியாக இருக்கும் என்றும் சொன்னது சாக்கரட்டீஸ் என்ற மேதை! இந்தக் கவிதையும் அந்தப் பணியை செவ்வனே செய்கிறது என்று சொல்லலாம்! கடவுளை எல்லோருக்கும் பொதுவென்று சொல்லிவிட்டு குருக்கள் மட்டும் அவரை மறைத்து நிற்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறது! அதுமட்டுமில்லாமல் கடவுளை கருவறையில் குருக்கள் பூட்டி வைத்துவிட்டு செல்கிறாரே... அவர்தான் மனிதனை உருவாக்கினார் என்றால் அவரை பூட்டும் அதிகாரம் இவருக்கு எப்படி வந்தது என்ற கேள்வி பெரும் கலகத்தையும் இந்த கவிதைக்குள் விதைக்கிறது!


நிர்ப்பந்திக்கப்பட்ட
வாசலில்
பொதுமையில் உண்டாக்கப்பட்ட
கருவறையில் அனைவருக்கும்

அனுமதி 
மறுக்கப்பட்டு இருக்கிறது

காலையில் எழுந்து
குளித்து முடித்துக்
கடவுளென 
வணங்க வருகையில்
என்னை முதலில்
பார் என குருக்கள்தான்
நின்றிருக்கிறார்
கருவறையில் 
தனக்கு மட்டுமே
உரித்தான அதிகாரத்தோடு.

கடவுள் பொதுவுடைமையாக்கப்
பட்டவர் என்றபோதும்
தினம் சிறைவைத்துப் பூட்டிச்
செல்கிறார் குருக்கள்.

கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டாரா?
எனில் அவரை பூட்டி வைப்பதில்
தவறில்லை

கடவுள் மனிதனை உருவாக்கினாரா?
அப்புறம் ஏன் பூட்டி 
வைக்க சம்மதிக்கிறார்?

******************

மனிதனை கடவுள் படைத்ததாக சொல்லும் மனிதன் கடவுளைப் படைத்து சந்தைக்குள் கொண்டுவரும் அவலம், அன்பு, பாசம் மறைந்து அலையும் கூட்டம்.. இதனிடையில் சிந்திக்க மறந்த ஆறடி நீளம் மூன்றடி ஆழம் என ஆழமாய் ஊன்றுகிறது இந்தக்கவிதை!


நடைபாதையொன்றின் சருகுகள்
முனகலாய் சப்தமிடும் 
கானகத்தினூடே
சமூகத்தின் சீற்றத்தில் வெந்து 
சாம்பலாகிக் கொண்டிருக்கும் 
மரங்களின் நடுவில் 
காட்சிப் பொருளின் நாற்காலியில் 
அமரும் பொருட்டு 
அங்கேயும் கோர்க்கப்பட்ட 
வார்த்தைகளின் 
வலிமையின் பக்கங்களில்
பாரதியின் வரிசையில் 
தொடங்கியவொரு 
விழிப்புணர்வாய்!

வாய்மையைப் புறம்தள்ளி
பொய்மையின் வாக்கியங்களுக்குள்
பிறிதோர் உலகம் 
படைக்கும் வரிசையில்
விலைபோக காத்திருப்பு
பட்டியலில் கடவுள்கள்
கடவுள் படைத்ததாக 
நம்பிய மனிதன்
கடவுளை படைக்க 
ஆரம்பித்துவிட்டான் 
தனது வசதிகளுக்கேற்ப!

நடக்கும் அவலங்களில்
சீராக்கப்படாத சீர்திருத்தங்களில்
நெறிமுறை தவறிய பதவியில்
துயரத்தில் சிரிக்கும் கூட்டத்தில்
அன்பு, பாசம், பண்பை மறந்து
பணத்திற்கு 
விலைபோகும் சந்தையில்
இறந்தபின்பு கூத்தடிக்கும் 
ஆடம்பர மயானத்தின் 
வரிசையில் 
ஆறடி நீளம், மூன்றடி ஆழம்…
********************
பிரபஞ்ச அழகியலின் நேசத்தைப் பேசும் கவிதை, தனக்குள்ளாகவும் சிலக்கேள்விகளை கேட்டுக் கொள்கிறது! முடிவு என்பது கடந்து போன சாம்ராஜ்ஜியங்களின் நிழல் மட்டும் அல்லவா! இதோ அந்தக் கவிதை:


அந்தரத்தில் இருந்து
விழுந்துகொண்டு இருக்கும்
மழைத்துளியொன்றின்
பிரகாசத்தில்
சிரித்து மலர்வதாக 
செடிகளும் கொடிகளும்!

ஒவ்வொரு மலரிலும்
வெளிப்பட்ட உணர்வுகளில்
காற்றோடு கலந்து பரப்பிய 
வாசனையின்னும்
பிரபஞ்சத்தை நேசிக்க வைக்கிறது!

அவ்வப்பொழுதுகளில்
என்னை நானே 
கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன்
இப்பொழுது யாரும்
நிதானிப்பதாயில்லை நவீனத்தில்

நினைவில் தொடரும்
வலிகளையோ 
நிர்பந்திக்கப்படும் உணர்வுகளையோ
யாரும் பொருட்படுத்தவில்லை

விசாரிப்புகள்
ஆதங்கங்கள்
அரவணைப்புகள்
அனைத்தும்
திட்டமாகவோ 
எதிர்பார்ப்பினூடோ
முடிவுகளை நோக்கி!

மௌனங்களின் பின்னே
பெரிய சரித்திரங்களின்
சாம்ராஜ்யம் மறைந்து 
தனக்குள்ளே
தன்னை ஆட்கொண்டு 
கடந்துபோகின்றது
நெடுநாட்களாக
யாருமற்ற பொழுதுகளில்!
******************************
எந்திரங்களாகிவிட்ட மனிதர்கள் வேடம் தரித்துக் கொள்கிறார்கள்! பெற்றவர்களின் கனவை புத்தகங்களாய் சுமக்கும் சிறுவர்கள்! பைத்தியமாக்கிவிட்ட அலைப்பேசிகள் மனிதத்தை தின்றுவிட்டதாய் புலம்புகிறது கவிதை:


வேடம் தரித்த நவநாகரிகத்தில்
எங்கிருந்தோ இயக்கப்படும்
எந்திரங்களாய்
மனிதர்கள்!

தூக்கமின்றி சிலரும்
உறக்கம் கலையாமல் சிலரும்
நிற்கமுடியாமல் சிலரும்
நடக்கமுடியாமல் சிலரும்
நாகரிகத்திற்கேற்ப 
வேடம் தரித்துக்கொள்கிறார்கள்!

தன் கனவைப்பூர்த்தியாக்க
சுமையேற்றிய வண்டிகளாய்
மாணவர்கள் 
கற்பதெல்லாம் பெற்றோரின் 
விருப்பத்திற்காக வெறுப்பாக்கிக் 
கொள்கின்றனர் இளைய சமூகம்!

மீண்டு்ம் மீண்டுமாய்
மீண்டுவர முடியாத 
சுழலுக்குள் தள்ளப்படும்
எந்திரமான வாழ்க்கை!

வழிதெரிந்தும் குருடனாய்
நினைவிருந்தும் பைத்தியமாய்
மாற்றிவிட்ட அலைபேசிகளின்
ஆதிக்கத்திற்குள் மெல்ல மெல்ல
மறைகிறது மனிதம்!

*******************

ஆதரவற்ற அவலர்களின் வாழ்க்கையையும் வறுமையையும் பேசும் கவிதை:


வான் வெளியில்
காற்றும் தீயும்
பற்றி ஏவுகணையாக
எண்ணுகையில்
பளிச்சென்று மின்னி மிளிரும்
சூரியக் கற்றைகளின்
வெப்பம் தாளாத
புழுக்களின் நெளிவுகளாக!

வாழவும் சாகவும்
வழி தெரியாது
ஆதரவற்ற அவலங்களின்
பின்னே வறுமையை 
அணைத்துக்கொள்ளும்
ஆளுமைகளின் சூடு தணியாத
நெருப்புப்  பிழம்பில்
அழிந்த மாள்கிறது
ஏழ்மை!

ஏழையின் சிரிப்பில் 
இறைவனைக்  காண்பதாய்
வேசம் போடும்
வேடிக்கைப்  பணக்குவியலின் 
வேள்வித் தீயில்
வெந்து மாள்கிறது 
ஏழ்மையின் வறுமைப் பசி!
***********************

உயிர்பெற்றெழும் சருகுகள் மனிதர்களை தங்களின் வனத்திற்குள் வராதே என்று எச்சரிப்பதாக பொங்கியெழும் கவிதையொன்று...


இலைகள் உதிர்ந்துபோன
வெற்று வனத்தினிடையே
இறந்து கிடக்கும்
இலைச்சருகுகள் 
உயிர்ப்பிப்பதாய் எனக்குள் 
உணர்கின்றேன்!

துடிக்க துடிக்க 
கதறுபவையாகவும்
வாழ வழியற்றப் 
போனவைகளாகும்
வளியெங்கும் வாளியில்
நச்சையூற்றி 
கொன்றுகுவிக்கும்
மானிடனே
வராதே என்று கதறுவதை
காண்கிறேன்!

சுயநலத்திற்காக
பெற்றவரையும் உற்றவரையும்
உயிர்குடிக்கும் துரோகி இனமே
நெருங்காதே என்று கதறுகிறது!

ஏவாள் ருசித்த கனியில்
வெட்கம் துவங்கி 
மறைக்கப்பட்ட அங்கங்களில்
ரசனை தூவி
வெட்கம் மறைக்க 
வெட்டிய என் கானக மரங்களில்
உன் இனம் செழித்துவிட்டது
என் இனம் செத்துவிட்டதென
கதறி காற்றில்
பறந்து மறைந்தது உயிர்வற்றிய
சருகொன்று!
************************.
எதுவும் எனக்கென்று சொந்தமில்லை! பெயர் பெற்றவர்களின் ஆசை, படிப்பு பெற்றவர்களின் கனவு, காதலையும் காதலி பறித்துக் கொள்வதாக புலம்பும் கவிதையின் மனக்குமுறலில் சில நியாயங்கள் இறந்து கிடக்கின்றன!



பெயர் கூட 
எனக்குச் சொந்தமில்லை
அதுவும்  
பெற்றவர்களுக்குச்  
சொந்தமானது

மழலை முதல் 
வாலிபம் வரை
பிடித்தவை எல்லாம் 
பெற்றோருக்கும் 
பிடித்தவையாக வேண்டும்
வாலிபத்தின் காதலை 
நிலைநிறுத்த
காதலி அதையும் பறித்துக் 
கொண்டு சென்றுவிட்டாள்

பெற்றோர் உற்றோர் 
உறவினர்களின் 
பிரியங்களில் திருமணம்

வாழ்க்கையில் எது பிடித்தாலும்
இருவருக்கும் பிடிக்க வேண்டும்
என்ற நிர்பந்தம்

உடை உடுத்தவும் 
உணவு அருந்தவும் 
இருவருக்கும் பிடித்தாக வேண்டும்

வானொலி கேட்பதிலும்
தொலைக்காட்சி பார்ப்பதிலும்
கூட
மனைவியுடனான நாடகங்கள்
கணவனின் செய்தி நேரங்கள்
மகனின் கிரிக்கெட் நேரம்
மகளின் பாடல் நேரங்கள் 
என அவர்களுக்குப் 
பிடித்தவைகளுக்காக
நான் மாறிக் கொள்கின்றேன்

இதையெல்லாம் விடுத்து
எனக்கான ஆறடி நிலம்
மூன்றடி ஆழம்
இரண்டடி அகலமென
யோசிக்கையில் 
அதுவும் 
நினைவஞ்சலி நாளில்
எனக்கான சவக்குழியை 
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
*************************

கவிஞரின் மற்றும் சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு:


எங்கோ வாசிக்கப்பட்ட
புல்லாங்குழலின் ஓசையொன்றில்
துண்டிக்கப்பட்ட மூங்கிலின்
ரணமொன்றை ரசிக்க
பழகிக்கொள்கின்றன செவிகள்!

சப்தங்களாகவோ
நாதங்களாகவோ
கேட்கும் இசையில் லயித்த
மனதில் இன்னுமாய்
மீட்டிப்போகும் சுவாசத்தின்
வாசத்தில் கிறக்கங்கள்!

நாளையும் வாசிக்கப்படலாமென்று
நேசிக்கப்பட்ட 
ஸ்வரங்களோடு
தூரத்தில் ஒலித்துப்போனது
பின்தொடர்வதாய்
அவனது உதடுகளில் 
ஊதப்பட்ட புல்லாங்குழலிசையின்
வலிகளின் வேதனை
கையேந்திய சில்லரை
காசுகளோடு!
******************

மௌனத்தின் வாசலை 
இறுக மூடிக்கொண்டு
பேசுகிறேன்
ஒலியற்ற குரலில்.

ஒரு வேகம் தான்
இன்னும் கடந்தபாடில்லை
எனக்கான இலக்கை

எனது முயற்சியில்
எனதுடம்பை நகர்த்த
எனக்குப் பின்னால் ஓராயிரம்
கரங்கள் கட்டியிழுக்கின்றன

எல்லாவற்றிலுமே துரோகத்தின் 
சாயல் தெரிகின்றது
ஒரு புன்னகையில் 
வன்மம் தெரிகின்றது
உபசரிப்பில் 
சுயநலம் தெரிகின்றது

எனக்கென்று ஓரிடத்தை தேடினால்
முன்னரே கையகப்படுத்தி 
வேறொருவன் 
உறங்கச் செல்கின்றான்

கடைசியில் புதை குழியும் கூட
வேறொருவன் வசமாகின்றது
எதைக்கொண்டு போனாலும்
கடைசியில் 
அரணாக்கயிறைக் கூட
அறுத்தெடுத்துக் கொள்கிறார்கள்

கடைசியில் குழிவெட்டிய 
வெட்டியானிடமும் 
பேரம் பேசப்படுகிறது
"இப்போ இத வச்சுக்கோ 
பிறகு பாக்கலாம்" என்று.
**********************

அந்தரத்தில் இருந்து
விழுந்துகொண்டு இருக்கும்
மழைத்துளியொன்றின்
பிரகாசத்தில்
சிரித்து மலர்வதாக 
செடிகளும் கொடிகளும்!

ஒவ்வொரு மலரிலும்
வெளிப்பட்ட உணர்வுகளில்
காற்றோடு கலந்து பரப்பிய 
வாசனையின்னும்
பிரபஞ்சத்தை 
நேசிக்க வைக்கிறது!

அவ்வப்பொழுதுகளில்
என்னை நானே 
கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன்
இப்பொழுது யாரும்
நிதானிப்பதாயில்லை 
நவீனத்தில்

நினைவில் தொடரும்
வலிகளையோ 
நிர்பந்திக்கப்படும் உணர்வுகளையோ
யாரும் பொருட்படுத்தவில்லை

மௌனங்களின் பின்னே
பெரிய சரித்திரங்களின்
சாம்ராஜ்யம் மறைந்து 
தனக்குள்ளே
தன்னை ஆட்கொண்டு 
கடந்துபோகின்றது
நெடுநாட்களாக
யாருமற்ற பொழுதுகளில்!
**********************

வெகுநேரம் காத்திருந்த
இடைவெளியில்
ஆக்கிரமித்த இருட்டுக்குள்
மெல்ல சமிக்கை
செய்து
ஔியூட்டிப் பின்தொடர்ந்த
ஒலியினூடே
சோவென பெய்யும் மழையில்
வேய்ந்த கூரையின்
ஓட்டையில் ஒழுகும் 
நீருக்கிடையில் 
தான் நனைந்து குட்டிகளுக்கு
வெப்பமூட்டுகிறது
வெள்ளாடு.
************************

விளக்கொன்றில் தீபம் ஏற்றுவதற்காக
நிமிருகின்றேன்
சன்னல் வழியே வழிந்தோடும்
பார்வையொன்றில் விடுபடமுடியாத
மனிதநேயத்தின் பரிதவிப்பாய்
இன்னும் ஏக்கங்களில் 
இருள் சூழ்ந்திருக்கின்றது

காலடிகளுக்குப்பின் தொடர்ந்து
வந்துகொண்டிருக்கிறது 
அனாதரவான சொற்களில்
சேர்த்து கோர்க்கப்பட்ட 
மனித வாசனை நிரம்பிய
உஷ்ண வார்ப்புகளாய் மௌனம்!

ஒரே திசையில் இரண்டு பயணம்
போய்வர அவகாசம் தேடிய
பொழுது
மாயக்கண்ணாடியில்  மறைந்துபோன
பிம்பங்களாய் நகர்ந்துபோன
சாலையோர மரங்கள்
அதில்
தொங்கவிடப்பட்டநினைவுகள்
காலம் களவுகொண்டு
போயிருந்தது!

திசையின் முடிவில்
திரும்பிய கணம்
காதடைக்கும் பெருவொலியில்
கதறிக்கொண்டு தேடியபொழுதுகளில் 
இலையுதிர்த்த மரங்களில்
உயிரற்றுபோயிருந்தது நினைவுகள்!
**********************

சிந்தனை கலைந்ததான 
சிரிப்பொன்றில் 
மீண்டும்
நெடுநேரம் சிரித்துவிட்டதாய்
தலைமீது கைவைத்து
தன்னைச்சுற்றி நின்றவர்களை
மீண்டும் ஒருமுறை நோட்டமிட்டு
மீண்டும் நிறுத்தப்படாத 
சிரிப்பொலியில் மனநிலை 
குளறுபடியான இடைவிடாத 
சிரிப்பொலி தனிமையில்

யாவர்க்கும் பதிலளிக்க முடியாத
ஆச்சரிய நிகழ்வாய் அமைந்த காலம்
நகர்ந்துபோனாலும் 
அன்றொலித்த அதே சிரிப்புக்குரல்
வெறிச்சோடிக்கிடந்த அந்த பொழுதுகளில்
தடுக்கமுடியாத அதே சிரிப்பொலியில்
தூரத்தில் தேய்ந்து போன நிலவாய்
தேம்பிக்கொண்டிருந்தது அந்த உருவம்
அன்னையாக இருக்கலாம்
மனைவியாக இருக்கலாம்!

அன்று சிரித்துப்போன
எண்ணங்களினூடே மழலையாக
சிரித்துப்போன அதே சிரிப்பில்
ஏதோவொரு நிகழ்வொன்றில்
நிர்பந்திக்கப்பட்டு விடுபடமுடியாத
வன்மத்தில் இடைவிடாமல்
சிரித்துக்கொண்டிருந்தான்
ஆகாயத்தை நோக்கி!

உணர்வற்ற குரலில்
மௌனமற்ற மொழியில்
அவனுக்குள்ளே அவளுக்கா…
************************

உதிர்ந்து விழும்போது
மௌனமாய் அழுதுகொண்டே 
இறக்கும் யோனியின் 
சினைமுட்டையில்
தப்பிப் பிழைத்தவன்
ஏசுகிறான்

"ஏண்டி உனக்கு வேற 
வேலையே இல்லையா
நீ போய் வாங்க வேண்டியதுதானே"
என்று புலம்பியவண்ணம்
மளிகைக் கடையில்
"அதாங்க அதை பேப்பரில்
சுத்திக்கொடுங்க" 
என்பதில்
இவனும் உதிர்ந்துபோயிருக்கலாம்

தினம் பூத்து
கருத்தரிக்காமல் 
வீழும் மலர்களையும் 
மரங்கள் என்றும் தாய்மையோடுதான்
மணம்வீசச் செய்கின்றது.
*********************

நிறைய நாட்கள்
மௌனித்த சொற்களை
எங்கேனும் 
நடவு செய்யவேண்டும்
என்பதில்
வெள்ளைத் தாள்களைத் 
தேடினேன்

அதிலும்
மெல்ல இமைதுடிக்கும்
விழிகள் சிமிட்டி
சிரிப்பதில்
நான் எதை எழுதினேன்
தெரியவில்லை
காதலிக்கிறேன்
என்று மௌனமொழி
பேசுகிறாள்
வெள்ளைத்தாளில் சொற்களின்
நடவு முடிந்து 
துளிர் விட்டிருந்தது 
காதல்.
******************

முன்னிரவு கடந்து
பின்னிரவுத் தொடக்கத்தின்
சிந்தனையில் 
தூரமாய்க் குரைக்கும்
நாயின் குரலில் 
மீண்டும் கலைக்கப்பட்ட
மௌனத்தில் 
கடிகார முட்கள் மட்டும்
உயிரோட்டமாக!

நிரப்பப்பட்ட பேனாவின்
மையும் தீர்ந்துபோக
குப்பைத்தொட்டியில்
நிறைந்த காகிதங்கள்
நெளிந்து விரிந்துகொண்டிருந்தன!

பின்னிரவின் இறுதியில்
கற்பனை நிரம்பிய
எழுத்துக்களை யாரோவின்
பிடியில் இறுகிய மனதோடு
வெளிப்படுத்த முடியாமல்
மௌனத்தின் சாயலில்
வழிந்தோடும் கண்ணீரில்
கரைந்து வழிந்துபோனது
கடைசிக் காகிதத்தில்!

உறக்கத்தின் தொடக்கத்தில்
விடிந்திருந்தது மறுநாள்!
********************


இன்னும் பாதையாகவே
பயணிக்கிறேன்
இருபுறமும் செடிகளாகி
மரங்களாகி மரித்தபின்னும்
சாலை பாதையாகவே
இருக்கிறது

வேகமாய் நகரும் வாகனத்தின்
முன்பு தோன்றி மறையும் 
கானல் நீரில்
வெப்ப உமிழ்களை உணர்கிறேன்

கடந்து கொண்டிருக்கிறது காலம்
நகர்ந்துகொண்டு இருக்கிறது
நாகரிகம் 
வெட்டப்பட்டு பாலையாக்கப்பட்ட
வனத்திற்குள்

எனக்கான பிரதேசத்தில்
மனிதம் இயற்கைக்கு 
கட்டுப்பட்டிருந்தால் இனங்கள் 
செழித்திருக்கும் 

விதையில்லாப் பழங்கள்
குளோனிங் ஆடுகள்
பறவையென அறியா கோழிகள்
மகரந்தமாகாத மலர்கள்
இவற்றையெல்லாம் நமதாக்கும்பொழுது
நமக்கான சந்ததியும் 
நாளை? 
******************

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய் 
எனக்கான சந்ததிகளை

விழிகள் நிறைய 
கண்ணீரோடு கையேந்தும் 
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி 
கைவிடப்பட்ட மூதாட்டியின் 
முனகலோடும்

நடுங்கும் கைகளில் 
கைத்தடியின் ஆதரவில் 
கால்இடறி ஆதரவின்றி 
விழப்போகும் முதியவரிடமும் 
தேடுகிறேன் 
வறுமையற்ற வாழ்வை.

ஒரே துணியை பலமுறை
உடுத்தி சக மாணவரின்
கேலிக்கு உரித்தாகி
முகம் சுண்டி வீடு திரும்பும்
மாணவனிடமும்

கல்வியின் ஏக்கங்களில்
வீடு வீடாய் பாத்திரக் கரியினை
முகத்தில் தடவி 
வீடு திரும்பும் சிறுமியிடம் 
தேடுகிறேன் 
வறுமையற்ற வாழ்வை.

மார்சுரக்க வழியின்றி
தண்ணீர் நிரப்பி
தன் கைக்குழந்தையின் 
பசி போக்க வழியின்றித் தவிக்கும் 
தாய்மையில் தேடுகின்றேன் 
வறுமையற்ற வாழ்வை.

இப்படியாக அடுக்கிப்போனால்
கண்ணிர் தளும்பும் 
என் விழிகளில் 
உவர்ப்புநீர் வற்றி 
உதிரம் கொட்டிப்போகும்

வறுமையற்ற வாழ்வினைத் தேடி
இன்னும் தான் ஓடுகின்றோம்
இன்னும் அந்த கானல் நீர் 
கண்ணுக்குத் தெரிகின்றது
கைகளுக்கு எட்டவில்லை.

**********************

சிரித்துக்கொள்ள செய்திகளற்று
போனதில்
விழிகளில் தெரியும் தேடலில்
எதிர்நோக்கும் சிந்தனைக்குள்
சிறைப்பட்டு வெளிவர மனமின்றி
உள்ளிருப்பு போராட்டமாய் 
மௌனம்!

நம்மைச்சுற்றி நோட்டமிடும்
கண்களில் 
எதுவும் நிகழக்கூடுமென்ற
எதிர்பார்ப்பினூடே
இரு கைகள் விரித்து நின்ற
கனவுக்குள்
நான் மட்டுமே அகப்பட்டு
விடுபடுவதற்குள்
கலைக்கப்படும் கனவாக
கதவு தட்டல்களின்
எதிர்ப்புறம் ஒரு புன்னகை!

-----------------

இனியும் நின்றபாடில்லை
சொட்டுச் சொட்டாய்
வடியும் திரவத்தின் 
உயிர்ப்பு நிலையின்
உயிர் சுவாசம்!

பெருவனப்பகுதியில்
ஆள் அரவமற்ற
அமைதியொன்றில் மெதுவாய்
மெல்லிய கீச்சொலிகளுக்கு
செவிமடுக்கையில்
வாழ்வாதாரப் போராட்டத்தில்
தப்பிக்க வேழமும்
இரைக்காக சிங்கங்களும்
ஓலமிட்ட சப்தங்கள்!

என்னவென்று
யோசிப்பதற்குள் தன் பசிக்கு
பிறவற்றைப் பற்றுதலின் 
பேரில் வேட்கை 
தணித்து பின் வேடமிட்டுக்
கொள்கிறார்கள் 
சிதைக்கப்பட்டு மீள்வதற்குள்
பலமுறை 
வன்மம் தீர்க்கப்படுவதாய்
தோற்றுப்போகும் நியாங்கள்!

--------------------------

View

மாதாந்திர பரிசு

வசந்த தீபன்

View

மாதாந்திர பரிசு

கோ.பாரதிமோகன்

View

மாதாந்திர பரிசு

ரேணுகா ஸ்டாலின்

View

மாதாந்திர பரிசு

ஜெகன் M ஆண்டனி

View

கவிச்சுடர் விருது

ஜே.ஜே. அனிட்டா

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை நமது படைப்பு குழுமத்தில் தனது தனித்துவமான கவிதைகள் மூலமாக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

சமூக நலன் சார்ந்த பணியாளராக பணியாற்றிய கவிஞர், தற்போது நல்லதொரு இல்லத்தரசியாக தனது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வரும் கவிஞர், தனது கவிதை பயணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அவரே சொல்ல தெரிந்து கொள்வோம்.

   
"சரியான துவக்கமென்றால் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த போது அதிக நேரங்களையும் நாட்களையும் தமிழ்த்துறையிலும் நூலகத்திலும் கழித்த போது ஏற்பட்ட மொழியின் மீதான பெருங்காதல் தான்.திருச்சியில் பிறந்து வளர்ந்து பள்ளி,கல்லூரி படிப்பெல்லாம் முடித்து பேராசிரியைப் பணியை தொடர்ந்த வரை எனதெழுத்துக்களோடு மனமொத்து பயணித்தேன்.சமூகப் பணி படித்து சமூகப் பணி செய்தவைகளை முடித்து குடும்பப் பணி துவங்கிய திருமண வாழ்விற்குப் பிறகு சிறிது இடைவெளி.
கவிதையும் குரலும் பெற்றுத் தந்த பரிசுகளின் முகம்தடவிப் பார்க்கும் போதெல்லாம் பேனாவையும் தேடத் துவங்கி விட்டேன்.
முகநூலில் இணைந்து எழுதத் துவங்கி எட்டு வருடங்கள் கழித்து தான் எனது அடையாளத்தை மிகச் சரியான தளத்தில் மிகச் சரியான ஆயுதத்தோடு  நிறுவிக் கொள்ள முடிந்தது.படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு,நக்கீரன்,மெல்லினம்,மேலும் சில மாத இதழ்கள்,மின்னிதழ்களில் கவிதைகள் களம் காண இன்னும் இனியும் தொடர்கிறேன்.

பெண்களுக்கேயுரிய அத்தனை சமூக இடர்பாடுகளையும் குடும்ப பொறுப்புகளையும் எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து துணிந்து எழும்போதெல்லாம்..எழுதும் போதெல்லாம்...
நிச்சயமாக கண்ணீர் இனிக்கிறது.

என்னிடம் எழுதுவதற்கான கொள்கை கோட்பாடுகள் எதுவுமில்லை.நான் காண்கிறவையோ என்னைக் காண்கிறவையோ என்னவெல்லாம் பிரம்மாண்டங்கள் நிகழ்த்துகிறதோ எவையெல்லாம் எனது மனம் கீறி அகழ்ந்து ஆராய்கிறதோ அதை கவிதையாகக் கொடுக்க முடிகிறது.
நிறைய சப்தங்களுக்கு இடையே தான் அதிகபட்சக் கவிதைகளை மௌனமாகப் பிரசவித்திருக்கிறேன் ஜே.ஜே.அனிட்டா என்னும் நான்."

இனி கவிஞரின் கவிதைகளில் சிலவற்றை கவனிப்போம் வாருங்கள்:

கவிதையின் அளவுகோல் என்னவாக இருக்கும்? மொழியும், வரிகளும் கொண்ட நயம் மட்டும்தானா? இல்லை இலக்கணம் என்ற கண்ணியத்திற்குள் வாழும் தொட்டி மீன்களாகவா? இல்லவேயில்லை ... கவிதையின் அளவுகோல் வேறானது என்று பட்டியலிடுகிறார் கவிஞர். யாரும் மறுக்கவியலா ஆழம். இதோ கவிதை:


நான்கடி அல்லது
ஒரு அங்குலம்

சில மீட்டர் தூரம்
ஒரு கடலின் பரப்பளவு
அல்லது 
இப்பிரபஞ்சத்தின் உயரம்

பிறகு..
மட்காத சாயம்..
வெளிர் நிறம் எடுப்பானது.

பதப்படுத்தப்பட்ட திடம்
அல்லது குளிரூட்டப்பட்ட
மென்மை..

கொஞ்சமாய் பிரியம்
லேசான கீறல்..
அங்கங்கே சத்தம்..
வெளிப்படையான தோற்றம்
பிறகு
வெளியற்ற உடல்

ஒரு பிடி கோபம்
சிறிதளவு வெட்கம்
எப்போதாவது  கண்ணீர்

ஆறடிக்கொரு முறை மரணம்
அரையடிக்கும் குறைவாய் அன்பு

போதவில்லையெனில் கடன்
போக வழியில்லையெனில்
திருட்டு..

மறைக்கப்பட்ட பிழை
பெரிதளவில் ஞானம்

அளந்தால்  பொருள் குறைவு
பிளந்தால் பூமியின் விலை

சின்னச் சின்ன கேள்விகள்
பெருந்துளிகளாலான சுடர்

உடைத்தாலும்
உடையெனத் தரித்தாலும்
ஒரே அளவு  கனவு

விற்கலாம்
வாங்கலாம்
மட்கியும் போகலாம்..

சொற்களால் ஆன பிறகு 
இன்னும் சிரமம்..

ஒரு கவிதை இவ்வளவு தான்.

விலை என்ன சொல்லுங்கள்.

-------------------------

கோபத்தின் வெளிதான், பிரபஞ்சத்தின் அமைதி என்றால் பொய்யில்லை. ஒவ்வொன்றின் சாதாரண நிகழ்வுகளும் ஒரு சீற்றத்தை, ஆற்றாமையை, அன்பை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த கவிதைக்குள்ளும் ஒரு கரு முட்டையின் சீற்றம் மறைமுகமாக இருப்பதை தெளிய முடிகிறது. இதோ கவிதை:

சினமுற்ற சினைமுட்டையின்
வெறிமுட்டிய பகை தான்
கருமுட்டை உதறி..
புறவுலகை வந்தடைவது.

இலையொற்றிய நீரின்
கரம்பற்றாத கிளைகளுடனான
மனமொத்த பிரிவு தான்..
மரம் விட்டு மண் பாய்வது.

வனம் பற்றிய கூட்டில்
அமையொத்து நிகழாத
இசை கொத்திப் பறவையின்
பிரிவுற்ற நிலையொப்ப நிகழ்வது தான்..
சுரம் தப்பி மொழியுறைவது.

அகம் பற்றி உன்னலகின்
பெருங்கோபக் கூர்முனையில்
செவி விட்டுத் தொலையாது
மனமொத்த ஊடற்கொண்டு

சிறுகோபம் துய்க்க
மனப்பித்துக் கொண்டவளாய்
உருப் பற்றொழிந்து
தடம் மாறித் திரிகின்றேன்..

எனையொத்து நிகழும்
பெருங்கோபம் கொள் நண்ப..

இருளொத்த ஒளியொன்று
கனம் பற்றிப் படரட்டும் என்மேல்...!

-----------------------------

நேசத்தின் உருவொன்று ஆழ்மனதில் உழல்கிறது. அது எல்லாமுமாகவும் விரிகிறது. அந்த நேசத்தின் உரு யாராகவும் இருக்கலாம். கடவுளாக, தாயாக, இணையராக, பிள்ளைகளாக,ஏன் ஆசையாகவும் இருக்கலாம் அதது அவரவர் மனவோட்டங்களே.... கவிதை:

ஆதிப் பெருந்தாகம் நீ..
ஆளும் துயர் மருளும்
நீள்வானக்  கீழ் வானம் நீ..
பேரண்டத்தின் முதற்புள்ளி துவங்கி
அசைவுற்று நெகிழ்ந்தாடும்
பேரன்புக்குரிய இப் பிண்டத்தின்
தோற்றக் காரணம் நீ..
ஜீவப் பெருந்தாகமணையா
ஆன்மக் கொடுஞ்சாபம்
தீயணைத்து வேகும் பூந்திவலைகளின்
நேர்மறைக் கோட்பாடு நீ..
என் பாவப் பெருங்கோபந்தணிய
ஏகுஞ்சிறுகாட்டுப் பேடைக் குரல் கரைய
ராகம் தாளம் பொருந்தியழ
கேட்கும் செவியளந்து மீட்கும்
இசையின்  விசையும் நீ..
நாளை வரையுழன்று
நேற்றின் மறையுகந்து
ஞானத் தீஞ்சுவைகள் நேரும் பின்
தேறுமெனக் காத்திருந்து
ஆழப் புதைகிற நேரஞ் சொல்லியே
ஆழ்மனக் கிடப்பை
ஆட்கொண்டலையும் ஆல் வடிவானவன் நீ..
நீருக்கெதிரான பசியும் நீ..
நேர்மைக்கெதிரான தகவும் நீ..
பேசித் தீராத ஆசை முகம் 
மறத்தலென்ன..
பூமிக்கெதிரான போர் புரியும்
பூமத்திய சித்தங்களில்
யாருக்கும் புலப்படாது

எனதகப் பிழைப்பின்
ஒற்றைத் துளி உயிர் திசுவில்
ஒட்டிக் கொண்டலையும்
பற்றறவே இல்லாத
ஒற்றையுலகம் நீ..!

-------------------------
ஏகாந்த பெருவெளியாய் பெண்!  அரிதாரமிட்ட செழுமைத்துயரம் இவள்!  அடர் மௌனத்தை கிழுத்தெறிகிறது ஒவ்வொரு வரிகளுமே!
கவிதை:

கோப்பைகள் நிறைய பருகத் தந்த
மரகதத் துளிகளை
செவ்விதற் குடுவைக்குள் சேகரித்து
மகரந்தம் துளிர்க்கிறாள்..
கண்களின் கதவுகள் திறக்கிற
ஏகாந்தப் பெருவெளிக்குள்
காந்தச் செருக்குடன்
ஆடவர் பலரும்
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்..
ஒப்பனைகளை மெருகேற்றும்
ஒளிக் கீற்றுகளின் மென்பாய்தலில்
அவளங்கத்தின் அசைவுகள்
துல்லிய பூகம்பக் கொடுங்கோள் புரிகிறது..
தன் மீது படரும் விரல்களின்
மயக்கத் தூரிகையில்
அவள்..
மேனியின் நிறங்களை வடிவமைக்கிறாள்..

நாளொன்றுக்கு ஒரே இரவு
அரிதாரமிட்ட செழுமைத் துயருடன் 
ஆதித் தோற்றமளித்து
ஆசைகளைப் பிறப்பிக்கும்
அற்பத் தொழில் தான் என்றாலும்...

பெண்மையின் தோற்றப் பிழையால்
பகலென்பது கூட
கூனிக் குறுகிப் போகும்
கனத்த இரவென
உறைந்து கிடக்கிறது.

இவர்களின் மெய் பித்தத்தில்

ஆடைகளென்ற பொய்யால்
நிறமியிட்டுக் கொள்ள வேண்டிய
பெண் என்பவளே மெய்..!

-----------------------------

மெய்பிம்பத்தின் கட்டமைப்பாக மிளிரும் கவிதை, தன் சுயத்தையும் விலக்கி கவிதையின் வழியாகப் பார்க்கிறது!
இதோ கவிதை:

கனவுகளற்றவர்களின் 
கூட்டத்திலிருந்து வந்திருக்கிறேன்..
எனதுறக்கங்களில்
இரவு அழுவதை கவனிப்பீர்களானால்
எனது பிறழ்வுகளில்
பழுப்பின் நிறத்தை சுவைப்பீர்களானால்
நான் இரக்கமற்ற கனவுகளைத்
துய்ப்பவளல்ல..
பகலின் நிறங்களில் நான்
பொய்முலாம் பூசுதலின் பொருட்டு
மெய்ப்படாத நிர்மூலங்களை சுமந்தவாறு
சிறு சிறு உறக்கங்கள் கழிகிறேன்..
எனில்..
நான் கனவுகளின் முதுகில்
சுமைகள் பிதுங்க நடக்கவியலாது.

என்னை
கனவுகளின் கூடாரங்களினின்று
வெளியேற்றத் துணிகிறேன்.

எந்தக் கனவிலும்
உறக்கம் அழுவதாய்
நினைவிலேயில்லை.

-------------------
பெண்ணெனப்படுபவள், எங்கெங்கு எந்தெந்த நிலைகளில் சுயம் இழக்கிறாள்! ஆண் சமுகத்தின் கட்டமைப்பு  கூடாரமாகிப் போகிறாள்!  உருப்புகளால் அலங்கரிக்கப்பட்ட போதையென சிங்காரித்தல் கட்டமைப்பின் பாசாங்கு! அவளின் மனம் படிக்காத பசியின் வெறி! அதுவும் விலைமகளென்றால், அவள் காசிற்கு வாங்கிய போதை! வெறுப்பின் உச்சமாய் வந்து விழுகிறது வார்த்தைகள்!
கவிதை:

அம்மா மருத்துவச்சியே..!
அவ்வுறுப்பைத் தகர்த்தெறிய வந்திருக்கிறேன்..
வலியறுக்கும் மரத்த ஊசியின்றியே
அறுத்தெறியலாம் நீ..
பாவப் புண்கள் குழுமிய எச்சிலின்
காய்ந்த அழுக்கொழிய
மழித்து உயிர்த்தெழ வை .
பணத்தின் பெருத்த கனம்
வயிற்றைக் கழுவத்தானே தவிர..
ஒருத்தனின் சிரத்தையிலும்
இரக்கமில்லையென்பதை
பழுத்த தடத்தைப் பார்த்தால்
புரிந்து கொள்வாய்.
சிறுத்த நீரையே தடுத்து நிறுத்துமளவு
வலிக்கிற கொடுஞ்சாபம்
சுமந்தவள் நான்..
அடுத்து எடுத்து வைக்க
மரணமன்றி வேறில்லையெனும் போது
கொடுத்த சுகங்களின் பதிலாய்
உறுப்பையிழந்தவளென்று
வழக்கில் வந்தாலும் பரவாயில்லை.
வழித்து எடு.

பெண்ணெனக் கொள்ள
அங்க அடையாளம் இல்லாத
வஞ்சப் பித்துக் கொண்டலைந்தாலும்

நஞ்சென உறுத்தும்
அவ்வுறுப்பு மட்டும்
கொன்று புதைத்து விடு..!

இந்தப் பிறவியின் 
இன்னும் மீதமுள்ள அற்ப வாழ்வுக்கு
கொஞ்சம் பொருளிருக்கிறது.

பெண்ணெனப்படுபவள்....

-------------------------

பேரன்பின் தேவதைகள் சிறகுகளுடன் தேவ லோகத்திலிருந்து இறங்க வேண்டும் என்பதில்லை! இங்கேயே இருக்கிறார்கள் என பட்டியலிடுகிறது இந்த கவிதை!


யாரிடம் பேசினால்..

பட்டாம்பூச்சியின் சிறகில்
நிறங்கள் முளைக்கிறதோ..

யாரிடம் மன்றாடினால்..

நெட்டுரு செய்த சொற்கள்
நெக்குருகிப் போகிறதோ..

யாரிடம் அழுதால்..

மழையின் கனவில்
மௌனம் துளிர்க்கிறதோ..

யாரிடம் சேர்ந்தால்
அணுக்களின் தாபத்தில்
அனுதாபம் மேலோங்குகிறதோ...

யாரை நேசித்தால்..

பிரபஞ்சமே உடைந்து
விழித்திரையில் சிறைபட்டுக் கொள்கிறதோ...

யாரின் குரல் கேட்டால்...

காற்று மெலிந்து
இசையின் துளையில்
வேர் விட்டெழுகிறதோ...

யாரை நினைத்தால்..

பூஞ்சிறகொன்று உயிர் துழாவி
வாஞ்சையுடன் 
பூமி தொடாது வானமும் துறக்கிறதோ...

யாரை மறந்தால்...

மரணத்தின் சிலுவைகளுக்கு
மனம் மண்டியிடுகிறதோ...

அவர்கள்...

பேரன்பின் தேவதைகளாகப்பட்டவர்கள்..!

---------------------------------
வயதுக்கு வருதல் என்பது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பருவ மாற்றம் மட்டுமல்ல. சுற்றம் சூழ, மகிழ்வின் சடங்குகளுடன் வாழ்வின் மறக்கா தருணமாகவும் அமைவது அதன் சிறப்பு! எளிய தாயின் மகளுக்கு இவையெல்லாம் சாத்தியமா! இந்தக்கவிதை வலியின் வலிதான்!

எனது பாவாடையில் தீட்டுக் கறையைப்
பார்த்து விட்ட அம்மாவுக்கு..
செய்வதறியாத பேரின்ப நிலை
ஆனாலும்..
உறவுகள் புடைசூழ 
ஊருக்கே விருந்து வைக்க
பேராசைப்படும் அவளின் கைகளில்
மிச்ச சொச்சங்களைக் கொண்டு
ஒரு முழம் பூவும்...
ஒரு டசன் பழமும் மட்டுமே வாங்கவியலும்..
சடங்கானவளை ஒதுக்கி வைக்க
இடமில்லாத குடிசைக்கு
கதவே இன்னும் விதிக்கப்படவில்லை...
தானே எல்லாமுமாகி
தலைக்கு எண்ணெய் வைத்து
நீராட்டு  விழாவைக் கூட்டுக்குள்ளேயே
நிகழ்த்தி..
பூப்பெய்திய சம்பவத்தை
கண்ணீரில் துடைத்துக் கரையேற்றுகிறாள்..

இன்னும் சற்று சூதானமாய்
இருந்திருந்தால்
அம்மாவுக்குத் தெரியாமல்
மறைத்திருக்கலாம்...

இப்போதெப்படி சொல்வது
இது ஆறாம் மாதத் தீட்டு என்று...

---------------
புதிய நடையில் சந்தம் குறையாமல் வார்த்தைகளில் வீரியம் கோர்த்தெழுதும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா மேலும் சிறந்த படைப்புகளை வழங்க  நமது குழுமம் மன நிறைவுடன் வாழ்த்துகிறது! கவிஞரின் சிறப்பான கவிதைகளில் இன்னமும் சில கீழே...

எளந்தாரிப் பய மக்கா
சுடுகாட்டுச் சுள்ளியால
அப்பன் பொணத்து மேல
சிந்திய செங்குருதி...

கடுங்காட்டுப் புங்கமரக் கெளையில
சுருங்கிய கழுத்தும்
எரிஞ்ச உடலுமா
தொங்கிய வெசக் கயிறு..

பாவாட நாடா அவுந்த பாவத்துக்கு
வயசுக்கே வாராம உதிரஞ் செலவழிய
மேக்காலப் பயக
நெருஞ்சிய முறிச்ச கத...

கெழக்கால வெதச்சது
ஈனச்சாதிப் பய எச்சமிட்ட வெளக்குன்னு
மேற்கால சாதி மக்க
சாமிய மறைச்ச குத்தம்..

வவுத்தாலப் போய் விட
வைத்தியரப் பாக்க
வெரசா வண்டி கட்டி கடந்த தார் ரோடு
வெவகாரம் புடிச்சவுக
செஞ்சுவச்ச பாதையின்னு
அடிச்சே வெரட்டி விட
அஞ்சாறு பொணமள்ளி
மாடு மட்டும் வீடு சேர...

எதுக்கோ படைச்சாரு
எதையோ வெதச்சாரு
கடவுளுக்கும் ரெண்டு சாதி..

நாங்கவொன்னு
அவுகவொன்னு..

பொணமா போன பின்ன
பொறுக்கும் எலும்புத் துண்டில்
பொறக்குமாய்யா புது சாதி..

மறக்காதிருக்கும்படி
மனசுல ஏத்திக்கங்க....

மேற்கால மறஞ்சாலும்
கெழக்கு எங்க வெத...!

-----------------------
 

இப்போதெல்லாம் அப்படியில்லை

நீயும் நானும்
ஆளுக்கொரு திசையில் பறக்கப் பழகியிருக்கிறோம்..

உனது நேரங்களை நான்
கொத்தித் தின்பதேயில்லை..
நீயும் எனக்கான கிளையிலேயே
பிறழ்ந்து கிடப்பதில்லை..

நமக்கான வானத்தை 
யாரோ தான் நெசவு செய்கிறார்கள்
இல்லையெனில்...

எந்த அலங்காரமுமில்லாத
நமது பேரன்புக்கு
இத்தனைப் பெரிய
சிறகிழப்பு தேவையாய் இருந்திருக்காது.


--------------------------

நானொரு எழுத்தாளனாகி விட்டேன்.
இனி கவிதைகள் ஒருபுறமும்
நானொரு புறமும் கிடக்கலாம்.
தலைக்கு மேல் அழுத்தும் கர்வத்தை
வியர்வை துடைத்தெடுத்துக் கொள்ளும்.
பிறகு...
பொருள் தேடுவேன்..
கவிதைக்கும் சேர்த்து.

எனது பேனா பிரபஞ்சத்தின் 
புண்களைக்  கீறி  பழுது பார்க்கும்.
ஆனால் ஆற்றுப்படுத்தாது
எனது மை.

எங்கும் எப்போதும்
தோன்றித் தொலையும்
சொற் சழக்குகளால் 
சிந்தனை கைதாகும்.

பேசும் போது எழுத வராது.
எழுதும் போது..
பேசவும் தெரியாது.

புகழ் மாலைகள் கழுத்தை நெரிக்கும்.
எழுத்து நிமிர நிமிர
பூ மாலையின் அளவு பெரிதாகும்.

சபைகளில் முதலிடம் தான்.
கால் மேல் காலிட்டு அமரத்
தடையில்லை.

பெயரை மாற்றுவேன்.
எனக்கே மறந்து விடும்.
யாரோ நினைவுபடுத்துவார்கள்
எழுத்தையும் தான்.

விருதுகள் சேமிக்க
வீடு கட்டியாக வேண்டும்.
வீட்டிற்கு வந்து கௌரவித்தல்
கூடுதல் பெருமையெனக்கு.

எது எழுத்து என
அகராதி சொல்வேன்.
அகராதி பிடித்தவர்கள்
எனதகராதியிலேயே இல்லை.

அடிபணியத் தோன்றாது.
எது நடந்தாலும்
நான்கெழுத்தில் நன்றியோ
மூன்றே வரிகளில்
அனுதாபக் குரலோ 
அறிவித்தால் போதும்.

புத்தகங்கள் என்னை எழுதும்.
புத்தகங்களை நான் எழுதிய பின்.

உலகமே சுற்றி
என்னை தோற்றுவிப்பேன்.
பிறகு அலுத்துப் போவேன்.
லேசாக சொற்கள் அந்நியமாகும்.
பேசாத சொற்கள் புண்ணியமாகும்.

நரைத்த எழுத்துக்கள்
பரண் மேல் ஏறும்.
எல்லோரும் மறக்கத் துவங்குவார்கள்.
எனது கழுத்தைப் பிடித்து
மாலையை அகற்றுவார்கள்.

பொருள் குறைந்த எழுத்தும்
வாழ்வுமாய்..
இருள் நோக்கி நகர்வேன்.


அப்போது...

எழுதுவேன்.

எழுதத் துவங்குவேன்.

எழுதிக் கோண்டேயிருப்பேன்.

அரிதாரங்கள் அம்பலமாகும்.
நிறமியகற்றி வெண்மை போர்த்துவேன்.
அலங்காரச் சொற்கள் அறவேயின்றி
அனுமானத் தேவை நிறைவு பெறும்.

உலகம் புரியும்.
உயிர் மரணத்தை வெல்லும்.

நானொரு எழுத்தாளனாய்
மரித்துப் போவேன்.

அப்போது எல்லோரும்  கூறுவார்கள்.

இப்போது தான்
அவனொரு ஆகச் சிறந்த எழுத்தாளனென்று.

-----------------------------


அது ஒரு பசி..
ஆற்றாமையின் அரூபம்
நிச்சலனப் பெருவெளி
தாகமுறையாத கடுங்காடு
தடித்த சுமையுணர்வு
கார்கால மழை பெறாத
பேறுகால வலி
இம்மையின் சாபத் துறவு
மறுமையின் வேரறுந்த பிணக்கு
ஆழ்நிலை கூப்பாடு
அருவருப்பின் எச்சம்
மானத்தின் துச்ச சன்மானம்
ஞானத்தின் பேருண்மை
உடலும் உடல் அல்லாத பொருளும்
உலகும் உலகல்லாத உயிரும்
ஆன்மத் துஞ்சலும்
மிகுதியான மரணமும்..
ஏற்றமுறா தாபமும்
வீழ்ச்சியுறா வெறுமையும்
மொழியறுந்த மௌனமும்
விழியிழந்த காட்சிப் பிழையும்...
யாருமல்லாத யாவரும்
யாதுமாகித் தொலைந்த யாக்கையும்

சிலநேரம் 
கடவுள் புசித்த மிருகம்

சிலசமயம்
மனிதம் புசித்த கடவுள்..

அதுவொரு தீராப் பசி.

அன்பெனப்படுவது யாதெனில்....

------------------------------


ஒரு பறவையின் சிறகு போர்த்த
தனதகத்தின் கதகதப்பை
பலியெனத் தரும் 
விருட்ச வேர்கள் 
அவளுடையது.

அவளின்  கனவுகளுக்கென்று
இரவு தன்னை புதுப்பிப்பதில்லை.
அவள் தன் இமைச் சிறகில்
இரவு பூட்டி..
கனவுகள் மெய்ப்பித்துக் கொள்கிறாள்.

அவளின் பிரயத்தனங்களில்
நூற்கோர்வைப் படையாலான
மந்தச் சரீரம் இருப்பதில்லை.
அது வெற்றுத் தோல்களை
தனதுடைக்கு நிறமிட்டு
கையகப்படுத்தும்..

ஆனால் அவள்..

வானம் படராத நிலத் துவாரங்களில்
நிழற் கச்சை நெய்து
அதனொளிப் படர்தலில்
பகல் நெய்பவள்.

அனிச்சப் பார்வை மலராத
வீதிகளின் தனித்த துயர்பொழுதில்
அவள் கனத்த சொற்களுக்கு
ஆகிருதி அன்பளித்து
வெய்யளாய்  உயர்ந்து நிற்பவள்.

சொல்லும் சொல் சார்ந்த நிலமும்
அவள் மெய்யழுந்த உழுத கவிதை.
அதன் மீதழும் பெயலின் துளிகள்
அன்பினாலானவை.

ஏனெனில்..

கண்ணம்மா

கவிதையினாலானவள்.

---------------------


உனது வீட்டின் மேற்கூரை..?
பகலில் வானமும் இரவில் வீதி விளக்கும்.

பசித்தால்..?
பறவையின் அலகில் பொருத்திய நெல்மணி.

ரசிக்க...?
எப்போதாவது மழை.

வெறுப்பது...?
எப்போதும் பசி .

பயமெனில்..
நாளைக்கும் பசிக்குமே.

கோபமெனில்...
கடவுள் வரட்டும். சொல்கிறேன்.

மிருகங்கள்.?
நேசிப்புக்குரியவை.

மனிதர்கள்..?
எனது உலகத்தில் இல்லை.

அடுத்த பிறவியிலாவது..?
இப்படியே தான்.ஆனால் கிழிந்த ஆடை மறைக்கப்பட்டு.

வயதுக்கு வந்துவிட்டாயா...?
நான்கைந்து அண்ணன்கள் சொன்னார்கள்.

உறவுகளென சொல்லிக் கொள்ள...?
இந்த திருவோடும்..அதில் பெற்றவர் இட்ட முதல் சில்லறையும்.

கனவுகள்..?
அதையும் உறங்க வைத்து விடுவேன்.

சேமிப்பு..?
நாளையாவது கிடைக்குமென்கிற பாதுகாப்பு.

பரிசு..?
அவரவர் விரும்பி அழைக்கும் எனது பெயர்கள்.

மரணம் பற்றி..?
பைக்குள் வைத்திருக்கிறேன்.

உடலென்பது..?
என்னிடம் இல்லாதது.

அன்பென்பது..?
உங்களிடம் இல்லாதது.

கண்ணீர்..?
தாகமெடுப்பதேயில்லை.

வாழ்க்கையென்பது..?
இந்நிமிடம் நீங்களும் நானும்.

நாளையைப் பற்றி..?
இந்தக் கேள்வியை மட்டும்
நான் கேட்கிறேனே...



-----------------------

நீயும் நானும் அப்போதெல்லாம்
மழைக்குருவியின் கீச்சொலி உரச
மழைக்கான ஆயத்தங்களோடு
உடன்படிக்கை செய்திருந்தோம்.

நிலத்தை கடலெனவும்
கடலினத்தை அடவியெனவும்
மனத்தோல் போர்த்தாத ஆன்மத்தை
நிழலெனவும் கொண்டு..

உயிர் வாழக் கற்றுக் கொண்டிருந்தோம்.

உலகம் சுருங்கி கைக்குட்டையான போது
விழிப் பிடியினின்று நழுவிய
பேரன்புத் துளிகளை
அத்தனைப் பிரியமாய்
பத்திரப்படுத்தியிருந்தோம்.

உனது சொல்லின் திரட்சியில்
நான் மட்காத எழுத்துக்களை
புலரச் செய்து கொண்டிருந்தேன்.

நுதலினின்று நழுவிய
உவலொன்றில் பெயரெழுதி
கடறு வரைந்தோம்.

அது..

கனத்த உருவமாய்
நறுந்துளிகளை மெய் போர்த்தியது.

இப்போது...

சிறகுலர்த்துகிறோம்.

வனம்..
கடல்..
நிலம்...
பறவை..

இவை தவிர்த்து
நீயும் நானும் மரணம் தழுவிய
யாவற்றிலும்

அச் சிறகுகள்
தன்னுயிர் வளர்த்துப் பறப்பதை
உனைப் போலவே நானும் காண்கிறேன்.

---------------------------------

View

மாதாந்திர பரிசு

கழாரம் துலாலிங்கம்

View

Showing 461 - 480 of 761 ( for page 24 )