logo

நம் காலத்துக் கவிதை


 நம் காலத்துக் கவிதை

விக்ரமாதித்யன்

எழுத்து என்பது மொழியின் ரகசியம். இந்நவீன உலகில் காலத்திற்கு ஏற்ப எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்ததைப் போல எழுத்திலும் நவீனத்துவம் என்பது இயல்பானது. "முட்டைக்கு ஓடு என்பது குறிப்பிட்ட காலம் வரை தேவைப்படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்படல் வேண்டும்" என்பதாக பழமையை உடைத்து நவீனம் பிறந்தது. தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனையும் எண்ணங்களை, நம்பிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மைய விழுமியாக இருக்கிறது இன்றைய நவீனம். அப்படிப்பட்ட நவீனக் கவிதைகளை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டிருப்பதே "நம் காலத்துக் கவிதை" எனும் கட்டுரைத் தொகுப்பு.  

தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் ”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்" உட்பட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை எழுதியுள்ளார். மேலும் 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருதும் பெற்றுள்ளார்.  

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாகத் தனது தொகுப்பை வெளியிட முன்வந்த படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் ரவி பேலட் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'படைப்பு' ஆசிரியர் குழுவுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. வளர்வோம்...! வளர்ப்போம்..!!

படைப்புக் குழுமம்.
நூல்

நம் காலத்துக் கவிதை

நூலாசிரியர்

விக்ரமாதித்யன்

நூல் வகைமை

கட்டுரை

நூல் விலை

150

வெளியீடு

படைப்பு பதிப்பகம்

அட்டைப்படம்

ஓவியர். ரவி பேலட்

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.