நூல் பெயர் : கவிதை இன்று
நூல் வகைமை : கட்டுரை
ஆசிரியர் : விக்ரமாதித்யன்
பதிப்பு : முதற் பதிப்பு - ஏப்ரல், 2025
பக்கங்கள் : 166
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 230
பொதுவாக கவிதைக்கு விமர்சனம் அல்லது மதிப்புரை என்பது கவிதைச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். காரணம் ஒருவர் எழுதும் மதிப்புரை அக்கவிதைக்கு இன்னும் மதிப்பு கூட்டுகிற வகையில் இருக்கும் என்பதும் அக்கவிதையும் அக்கவிஞரும் பலரது கவணம் பெற வழிவகுக்கும் என்பதும் கூடுதல் சிறப்பு. கவிதை விமர்சனம் என்பது ஒரு கவிதை புத்தகம் அல்லது ஒரு கவிதைப் பற்றி வாசகருக்குச் சொல்லும் ஒரு உரை. அந்தக் கவிதை அது செய்ய முயற்சித்ததில் எவ்வளவு சிறப்பாக வெற்றி பெற்றது என்பதை இது ஆராய்கிறது. அதில், விமர்சகர் அவர்கள் மதிப்பாய்வு செய்யும் கவிதைப் பற்றிய தங்கள் சொந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வழங்குகிறார்கள். சிறந்த மதிப்புரைகளில், அந்த எண்ணங்களும் உணர்வுகளும் கவிதையில் உள்ள ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன - மேற்கோள்கள், குறிப்புகள், எடுத்துக்காட்டுகள், பரந்த கருத்துக்களையும் கொண்டு மதிப்புரைகளாக எழுதப்படுகின்றன. அப்படி இன்றைய சமகால படைப்பாளர்களின் கவிதைகளை ஆராய்ந்து கலை வடிவமிக்க மதிப்புரைகளாக உருவாக்கி இருப்பதே ‘கவிதை இன்று’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் புதிய வரவாக, சமீபகாலத்தில் அவர் எழுதிய கவிதைகள்