logo

கடவுளின் பிரார்த்தனை


நூல் பெயர்    :  கடவுளின் பிரார்த்தனை
                      (கவிதை )

ஆசிரியர்    :  ப.தனஞ்ஜெயன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2021

பக்கங்கள்    :  134

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
வாழ்வின் எல்லாப் பிரார்த்தனைகளும் ஏதோவொரு வரம் வாங்குவதற்காகவோ அல்லது ஏதோவொரு சாபத்தை தடுப்பதற்காகவோ தவிர்ப்பதற்காகவோ அல்லது ஏதோவொரு மன்னிப்பிற்கோ மன்றாடுதலுக்கோ அல்லது மரணிக்கும் முன் ஏதோவொன்றை மறப்பதற்கோ கேட்கப்படலாம். கேட்கும் இடத்தில் இருக்கும் பிரார்த்தனைகள் யாவும் சுயநலமானவை இது மனிதனுக்கானது. கொடுக்கும் இடத்தில் இருக்கும் பிரார்த்தனைகள் யாவும் பொதுநலம் சார்ந்தவை இது கடவுளுக்கானது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், சுயநலமான சில பிரார்த்தனைகள் கூட வரிகளின் வடிவில் வரும்போது அவை பொதுநலமாக மாறி விடுவது என்பது இலக்கியத்தின் ஆகப்பெரும் ஆச்சர்யம். இப்படிப்பட்ட எழுத்தின் ஆச்சர்யங்களை எல்லாம் ஆழ்மனதின் உளிகொண்டு செதுக்கி அதை உணர்வுகளின் ஊடாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'கடவுளின் பிரார்த்தனை' நூல். இதில் உள்ள  ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் இருள் மனதில் ஒரு பேரொளியை  படரவிட்டுக் கொண்டிருக்கும் என்பது இத்தொகுப்பின் பலம்.

புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  படைப்பாளி 'ப.தனஞ்ஜெயன்' அவர்களுக்கு இது ஆறாம் தொகுப்பு. இவர் இதற்கு முன்பு படைப்பு பதிப்பகம் மூலம் ஐந்து நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவரது பல படைப்புகள்  பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன. படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த  படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

சுகிமி


0   492   0  
September 2022

ஷின்டோ


0   447   0  
September 2022

ஆரிகாமி வனம்


0   1296   0  
September 2019