logo

சிண்ட்ரெல்லாவின்  தூரிகை


மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் அமையப்பெற்ற தீபகற்ப இந்திய நாட்டை, மூன்று பக்கம் வாழ்வியலாலும் ஒரு பக்கம் அழகியலாலும் சூழ்ந்து நிற்கும் தீபகற்ப இலக்கிய நாட்டைப் போல வரிகளால் வடிவமைத்துக்கொண்டார் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்கள். பின்பு அதன் (மா)நிலங்களைக் கவிதைகளாய் வரைந்தும் அதற்குள் மானுடச் சமூகத்தை வரையறுத்தும் பல ஓவியங்களாகத் தீட்டினார். கடைசியாக அந்த ஓவியங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்த ஒரே கவிதை தேசமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதே "சிண்ட்ரெல்லாவின் தூரிகை". கவிதைக்கு ஓவியம் வரையலாம்.. ஆனால் கவிதையையே ஓவியமாகத் தீட்டி இருக்கும் இந்த தூரிகையைப் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது.

படைப்பாளி "குறிஞ்சி நாடன்" அவர்கள் தன் பார்வைத் தூரிகை மூலம் இப்பிரபஞ்சத்தைத் தொடுகிறார். அதில் ஏற்படும் உணர்வலைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓவியமாக்கி "எங்கே எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்படும்" என்பதைப் போல மீண்டும் இப்பிரபஞ்ச மானுடத்திற்கே திருப்பித் தருகிறார். ஆனால் உணர்ச்சிகளாக இருந்ததை எல்லாம் உருமாற்றி உணர்வுகளாகத் தருகிறார். சென்னையை வாழிடமாகவும் துபாயை வசிப்பிடமாகவும் கொண்ட முதுகலைப் பட்டதாரியான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.
நூல் பெயர்
சிண்ட்ரெல்லாவின் தூரிகை

ஆசிரியர்:
குறிஞ்சி நாடன்

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
136

அட்டைப்படம்:
ரவிபேலட்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
100

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.