logo

உயிர்த்திசை


நம் மனித சமூகம் எவ்வளவோ மகத்தான மனிதர்களை இவ்வுலகிற்குக் கொடுத்திருந்தாலும் சாதாரண சாமானியன் முதல் சாதித்த மகான்கள் வரை அனைவருமே ஏதோ ஒரு தாயின் கருப்பையிலிருந்தே ஜனித்தவர்கள். அப்படிப்பட்ட தாயின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்ல தாய்மை, தாய்ப்பாசம், தாயின் நினைவுகள், அம்மாவின் அரவணைப்பு, தாயின் தியாகம் இப்படி எவ்வளவோ இருக்கிறது. அதை விவரித்து முழுக்க முழுக்க தாயின் நினைவுகளைச் சுமந்து வரும் வரிகளைக் கொண்டு "உயிர்த்திசை" என்ற தலைப்பின் கீழ்ப் போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் கைகளில் விரவிக் கொண்டிருக்கும் உயிர்த்திசை.

இதனை 'அம்மையார் ஹைநூன்பீவி' நினைவு பரிசுப்போட்டியென அறிவித்து அதற்கு மொத்தப் பரிசில் தொகையையும் வழங்கிய எம் படைப்புக் குழுமத்தின் மூத்த உறுப்பினரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு. சலீம் கான் (சகா) அவர்களுக்கும், செம்மையாய் நடுவர் பணியேற்று தன் அழகுத் தமிழில் வாழ்த்துரை தந்த 'பாட்டரசர்' பழநிபாரதி அவர்களுக்கும் மேலும் போட்டியில் பங்கெடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை இச்சமயத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது.
நூல் பெயர்
உயிர்த்திசை

ஆசிரியர்:
சலீம் கான் (சகா)

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
88

அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
70

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.