logo

பெண் பறவைகளின் மரம்


நூல் பெயர்    :  பெண் பறவைகளின் மரம்
                      (கவிதை )

ஆசிரியர்    :  மதுரா

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  96

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம்

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ100
பறவைகளின்  மொழியே  உலகின் ஆதி மொழி.  பறவைகளிடமிருந்தே, இசையென்பது  ஒலி   வடிவத்திலிருந்து  மொழிவடிவமாக  மாறியது எனலாம். மனித இனத்திற்காக மரங்களின் விதைகளைப் பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன, பறவைகள். தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் விதைகளை எச்சம்மூலம் பரப்புகின்றன. ஒரே பறவை, ஒருவருக்கு வானமாகவும், மற்றொருவருக்கு வாகனமாகவும், இன்னொருவருக்கு சாதனையாகவும் தெரியலாம். ஒன்பது நிறத்தில் தெரியும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவையும், நீரில் மிதந்துகொண்டே தூங்கும் கடல் புறாக்களும், மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும் மரங்கொத்திப் பறவையும், ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்த புறாவும், ஒரேசமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் நெருப்புக்கோழியும் என, அதனதன் இயல்புகூட நமக்கெல்லாம் அதிசயமாகவும் தெரியலாம். தனித்துவம் என்பது பறக்கும் பறவைகளிடம் மட்டுமல்ல; பார்க்கும் பார்வையிலிருந்தேகூட சிறகடிக்கும். அப்படிப்பட்ட தனித்துவப் பார்வையில் (க)விதைகளைப் பதியமிட்டு, நவீனத்தின் மரமாக மாற்றியிருப்பதே ‘பெண் பறவைகளின் மரம்’ நூல். நவீனத்தை எளியவகையில் தமிழில் தந்ததும், அது புரியும்வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்ததும் இந்நூலின் மிகப்பெரும் பலம்.

மன்னையைப் பிறப்பிடமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும் கொண்டிருக்கும், ஆங்கில இலக்கியத்தில்  பட்டம் பெற்றுள்ள படைப்பாளி மதுரா அவர்களுக்கு இது, இரண்டாம் தொகுப்பு. இவரது ‘சொல் எனும் வெண்புறா’ என்ற நூல், படைப்பு பதிப்பகம்மூலமே வெளியிட்டு, பலரது கவன ஈர்ப்பும் பாராட்டுகளையும் பெற்றது. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த  படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் தனித்துவமான விருதையும்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.