logo

கை நழுவும் கண்ணாடிக் குடுவை


ஆதிக்காலம் தொட்டே சுருங்கச் சொல்லிப் பெரிய பொருள் தரும்படி இலக்கியங்கள் படைப்பது தமிழின் சிறப்பாக இருந்துவருகிறது. இரு வரிகளில் எடுத்துச் சொன்ன திருக்குறளும் ஒரே வரியில் உரக்கச் சொன்ன ஆத்திச்சூடியும் வாழ்வியல் நெறிகளை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கியங்களுக்குச் சான்று. ஜப்பானிய ஹைக்கூ, லிமரைக்கூ போன்ற குறும்பாக்கள் வகைமைகள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருந்தாலும் அவற்றை நம் தமிழ் மொழியின் தொடர்ச்சியாகவே படைப்பாளிகள் கருதியதால் மிக எளிதாக அவர்களை இன்று ஆக்கிரமித்துக்கொண்டன. இப்படிப்பட்ட ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக வளர்ந்துவரும் குறும்பாக்களை உருவாக்குவதிலும் வெளிக்கொணர்வதிலும் படைப்புக் குழுமம் தன்முனைப்போடு இயங்கிவருகிறது.

அதன் உந்துதலே இக் “கை நழுவும் கண்ணாடிக் குடுவை’’ தொகுப்பு. இயற்கையையும் இன்றைய சூழலையும் வாழ்வியலும் அழகியலும் இணைத்துச் சொல்வது போலத் தன் குறும்பாக்களால் சிலாகிக்க வைத்திருக்கிறார் படைப்பாளி கவி விஜய். சேத்துப்பட்டை வசிப்பிடமாகக் கொண்டும், 'முதுநிலை வணிக நிர்வாகம்' பட்டதாரியுமான இவர் தனியார் நிறுவனமொன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவர் காற்றில் வீசும் கவியைக் குறு விதைகளாகத் தூவிச் சென்றதை இக் கண்ணாடிக் குடுவை வழியே வாசிப்பவரும் காணமுடியும்.
நூல் பெயர்
கை நழுவும் கண்ணாடிக் குடுவை

ஆசிரியர்:
கவி விஜய்

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
88

அட்டைப்படம்:
ரவிபேலட்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
80

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.