நூல் பெயர் : இறு வேறு உலகம்
நூல் வகைமை : கட்டுரை
ஆசிரியர் : விக்ரமாதித்யன்
பதிப்பு : முதற் பதிப்பு - 2001
பக்கங்கள் : 266
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 370
உலகின் நிகழ்வுகள், நகர்வுகள், அரசியல் மற்றும் சிக்கல்களைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் ஊடகமே பத்திரிகை. அதில் வரும் செய்திகளை பாரபட்சமின்றி நடுநிலையாக தெரிவிக்கும் நண்பனே பத்திரிகையாளன். செய்திகளைப் புகாரளிப்பதோடு மட்டுமல்லாமல், கட்டுரைகளை ஆய்வு செய்தல், எழுதுதல், நேர்காணல்களை நடத்துதல், பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளுதல், உண்மைகளை வெளிக்கொணர தகவல்களைச் சேகரித்தல், தவறுகளைச் சுட்டிக்காட்டும் நேர்மையான வழிகளை விசாரித்தல் என சமூகத்தில் தகவல்களைப் பரப்புவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் பத்திரிக்கையாளனின் பங்கு மிக அவசியம். அப்படிபட்ட பத்திரிகையாளராக இருந்த கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர் அக்காலத்தில் சந்தித்து உரையாடிய பிரபலங்களின் தகவல்கள், சேகரித்த தரவுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கி இருப்பதே ‘இரு வேறு உலகம்’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.