நூல் :
மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான் பூச்சி
நூல் வகைமை :
சிறுகதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 208
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 320
ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு தொகுப்பாகும் இக்கதைகளில் யாருடைய
வலிகளையோ கவனிக்கும் கனவுக்குள் அகப்பட்டும் வாசகனின் காட்சிகள் அவனுக்கே நிகழும் சம்பவங்களாக
உருமாறுகிறது. கனவுக்கும் கனவுக்கும் இடையே மொழி ஒரு தேவதூதனை வழிநடத்தும் ஒளி போல
கதைகளை வழிநடத்துகிறது. குற்றங்களும்,வன்முறைகளும், ஏக்கங்களும், துயரங்களும் காதலர்களும், மரணங்களுமாய்த் தொடரும் மனிதப்பரப்பில் ஒரு மல்லாந்த
கரப்பான் பூச்சியாக தவிக்கும் ஓர் உயிர் தான் இப்பூகோளமென்றால் அதில் மனிதன் யார் என்று
அலைந்து தேடுகிற கதை சொல்லி முடிவில் கையறு நிலையில் வீடு திரும்பவில்லை இறந்து கொண்டிருக்கும்
ஒரு மல்லாந்த கரப்பான் பூச்சியாகிறான்.
சமகால புனை கதைகளின் புதிர் வட்டப்பாதைகளை இடைமறித்து வழியாற்றும் கதை தொகுதி நாமறியாத மாயத்தை படைப்புபித்தின் வழி நிகழ்த்தியுள்ளது.