logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 701 - 720 of 769

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • ரா.த ஜீவித்தா

0   970   0  
  • July 2018

ம.செல்வகணேஷ்

  • ம.செல்வகணேஷ்

0   992   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • மஹா பர்வீன்

0   956   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • கொத்தாளி க. அய்யப்பன்

0   1124   0  
  • July 2018

கவிச்சுடர் விருது

  • லதா நாகராஜன்

0   1403   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • சிவபெருமாள் கிருஷ்ணன்

0   1406   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • ஜா.ஜோசப்

0   956   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • அ. முத்துசாமி

0   1179   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • மீ மணிகண்டன்

0   1342   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • ஜே. பிரோஸ்கான்

0   1007   0  
  • June 2018

கவிச்சுடர் விருது

  • பாத்திமா மின்ஹா

0   1226   0  
  • May 2018

மாதாந்திர பரிசு

  • ஈரோடு கதிர்

0   939   0  
  • May 2018

மாதாந்திர பரிசு

  • சிந்துஜன் நமஷி

1   1659   0  
  • May 2018

மாதாந்திர பரிசு

  • தா. ஜோ. ஜூலியஸ்

0   930   0  
  • May 2018

மாதாந்திர பரிசு

  • ஷீலாசிவகுமாா்

0   902   0  
  • May 2018

மாதாந்திர பரிசு

  • ப.மதியழகன்

0   1041   0  
  • May 2018

கவிச்சுடர் விருது

  • குமரேசன் கிருஷ்ணன்

0   1346   0  
  • April 2018

மாதாந்திர பரிசு

  • சாண்டில்யன் விவேகானந்தன்

0   1015   0  
  • April 2018

மாதாந்திர பரிசு

  • கவிப்பிரியன் ஜீவா

0   1255   0  
  • April 2018

மாதாந்திர பரிசு

  • அகத்தின் அழகு (ரெஜி)

0   1008   0  
  • April 2018

மாதாந்திர பரிசு

ரா.த ஜீவித்தா

View

ம.செல்வகணேஷ்

ம.செல்வகணேஷ்

View

மாதாந்திர பரிசு

மஹா பர்வீன்

View

மாதாந்திர பரிசு

கொத்தாளி க. அய்யப்பன்

View

கவிச்சுடர் விருது

லதா நாகராஜன்

கவிச்சுடர் லதா நாகராஜன்  ஒரு அறிமுகம்
*************************************************************
தேன்கனிக்கோட்டையின் தெகிட்டாத பைந்தமிழின் படைப்பாளி. லதா நாகராஜன் அவர்கள் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்.

சிந்தனைகளைக் கொண்டு செதுக்கினால்தான் வார்த்தைகள் உயிர் பெறும். உயிரோட்டமுள்ள கவிதைகளை எழுதுவதில் படைப்பாளி லதா அவர்கள் ஒரு நுணுக்கமான சிற்பியென்றே சொல்லலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்புகளை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கழித்தவர். முதுகலை தமிழ் இலக்கியம், ஆசிரியர் பட்டயம் மற்றும் இளங்கலை கல்வியியல் முடித்த இவர் ஒரு நல்ல ஆசிரியையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் தன் தந்தைக்கு ஆற்றும் கடனாகவே எழுத்துலகில் அவரின் பெயரை தன் பெயருடன் இணைத்து லதா நாகராஜன் என்றப்பெயரில் தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

இதுவரை சுமார் 800 கவிதைகள் வரை எழுதியிருக்கும் இவரின் கவிதைகள் கடல்கடந்தும் பிரசுரம் கண்டிருக்கிறது. 2017ல் இவரது பறவைத்தச்சன் என்ற கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளது.

கூடிய விரைவில் அடுத்த நூல் வெளியிடவும் படைப்புக்குழுமம் வாழ்த்துகிறது. மேலும் படைப்புக்குழுமத்தில் மாதாந்திர பரிசும், உயிர்த்திசை பரிசுப்போட்டி கவிதைத் தொடரில் சிறப்பு பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் லதா நாகராஜன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் பலத் தளங்களிலும் சென்று நடை போடுகிறது. இவருக்கு வார்த்தைகள் எளிதில் வந்து விழுந்துவிடுகின்றன. படிமங்களை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத்தை கவிதைகளில் புகுத்தி தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு எழுதும் பெண் எழுத்தாளர்களில் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

கட்டுப்பாட்டையிழந்த மௌனத்தைக் கவிஞர் தன் வார்த்தைக் கட்டுப்பாட்டால் மிளிரச்செய்யும் கவிதை :

தவத்தில்
ஈடுபட்டிருந்த
மௌனமொன்று
கஜூராஹோ
சிற்பத்தையொத்திருந்தது
அதன்மீது ஆயிரம்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வார்த்தைகள் ...
கலைக்கப் போராடியது
ஒருவார்த்தைக்கும்
மறுவார்த்தைக்குமிடையே
சிக்கித் திணறி அதன்
ரோமக்கால்களின்
வேர்களுக்கடியில்
ஒளிந்தும் சிலிர்த்தது
மௌனம் தன்னை
கட்டுப்படுத்திக்கொள்ள
விடப்படும் மூச்சின்
இடைவிடாத சப்தம் தன்
அந்தரங்கத்தினை
அந்த அரங்கம்
முழுக்க சொல்லிக்கொண்டிருந்தது
அதன் எதிரொலிப்பில்
தன் கட்டுப்பாட்டினை
வார்த்தைகளுக்குள் இழந்த
மௌனம் அதன்
மோகத்தில் மெல்ல
மூழ்கத்துவங்கியது...!.

 ***
ஒரு சிற்பியின் வாழ்க்கை அவன் செதுக்கும் சிலைகளுக்குள் ரேகைகளாக ஓடுகின்றது என்பது புதிய கற்பனை. கவிஞர் இங்கு ஒரு சிற்பியாகவே மாறியுள்ளார். இதோ அந்தக் கவிதை :

சிற்பியின் உளியில்
பசியின் சப்தம் அவன்
உளிகளைத்தொட்டாலே
உலைக் கொதிக்கும்
செதுக்கும் மொழி
வறுமை பேசும்...
கண் இமைகளின்
சிறுமுடிகளில்
எழுதப்பட்டுள்ள துயரங்களை
சிலை படித்திருக்கும்
ஒருபாகம் சுகத்தையும்
மறுபாகம் சோகத்தையும்
உளிக்கப்பட்டிருக்கும் சிலையில்
உற்றுப் பார்த்தால்
உளியாளனின் ரேகையை
உள்வாங்கியிருக்கும்
சிற்பிக்கு அவன் சிலையே
சிம்மாசனம்...
உப்புக்காற்றும்
கடல் அலையும்
சிலையைச் சிதைக்கலாம்
அவன் சிந்தனையையல்ல...
பாறையில் குடைந்த
பல்லக்கையே பரிசொன்றாய்
சிலை சிற்பிக்கு அளிக்கும்...
சிலைக்கும் உளிக்கும்
நடுவில் தெறிக்கும்
அவன் கற்பனையின்
பொன் சிவப்புத் தீயை
உளிமொழிக்காதலென்று
சொல்லலாமா?!...

  ***

காதல் செய்வதற்கு வசியம் தேவையில்லையென்று சொல்லும் கவிஞர், அதற்கான வழியொன்றை பகரமாகச் சொல்லுகிறார் கவிஞர் :

மூன்றாம் பிறையில்
மேகலா லக்ன
பீடமமைத்து
ரதிமன்மத வசிய
சக்கரத்தில்
மந்திரம் சொல்லி
உடல் திரவம்
வழித்தெடுத்து
மதனகாமப்பூவின்
திரவத்தோடு
கலந்தளித்தெல்லாம்
யட்சிணியை
வசியம் செய்ய
வேண்டியதில்லை
தேனில் ஊறிய
சொல்லெடுத்து
மலைக்க மலைக்க
கவிபுனைந்து
திகட்ட ஊட்டும்
தருணத்தில்
அஞ்சனம்
வழிய வழிந்திடும்
கண்கள் உறக்கத்திலும்
வசப்படும்!!....

 ***
இந்தக் கவிதை ஒரு சிறப்பான கவிதையென்றே சொல்லலாம். பெண்களின் கூச்சமென்று ஒதுக்கியவற்றை ஆண்களின் பார்வைக்கு ஒதுக்குதல் கூடாது என்பதை மிகவும் சிறப்பாக சொல்லியுள்ளார் கவிஞர். இஃதொரு புரிதலின் ஒத்துழைப்பு என்பது மிகவும் சரியான வாதம் . இதோ அந்தக்கவிதை:

உதிரப்போக்கு

சிறுவயதில் அம்மாவிற்கு
உண்டான திடீர் கருச்சிதைவின் பொழுது
அப்பா கட்டிலுக்கடியில் வழிந்தோடிய
உதிரத்தை இருக்கைகளாலும்
அள்ளியெடுத்து வாளியில் சேகரித்து
அப்புறப்படுத்தி பின் தரையலம்பியதை
பார்த்தவள் நான்.

பின்னொரு நாளில்
யாருமற்ற நேரத்தில்
பிரசவ வலிகண்ட எனக்கு இளையவளை
உடன் பிறந்த தம்பி உதிரம் வழிய
இருக் கைகளிலும் அள்ளியெடுத்து
மருத்துவமனைக்குள் கொண்டு சென்று
ஆண் மகவென அறிவிக்கும் வரை
அருகே தனித்திருந்து காத்தான்

இன்று வரை மாதாந்திர நாட்களில்
மகனே எனக்கு நேப்கின்
வாங்கித் தருகிறான்

மறைத்துச் செல்ல இதுவென்ன
தவறுக்கு பிறந்த நோயா?

மறைத்து மறைத்தே வலி
உணர்த்தத் தவறினோம்
புரிந்துகொள்ள இடமிருந்தும்
புரியவைக்க மறுத்தோம்

தலைவலியைச் சொல்ல
தவிர்ப்பும் தவிப்பும் கொள்வதில்லை

தனி வலியைச் சொல்ல
தடுப்பெதற்கு ?

பொதுவெளியில் இதைப்பேசி
புரிதலை ஏற்படுத்தாதது
யார் குற்றம்

பயணத்தின் பொழுதும்
இருக்கை பார்க்கும் பதட்டம் தவிப்போம்

இது இயல்பு
இது இயற்கை
இதுவே ஆரோக்கியம்

இதற்கெதற்கு அச்சமும் நாணமும்

ஆண் அறிவான் அவஸ்தையை
வலி நிவாரணி அவன் வார்த்தைகள் என

சொல்லுங்கள் தொடக்கமும் முடிவும்
சொல்லாத வலி அறியப்படாது ...

புரிதலான பாதையில் முள்ளில்லை.

   ***

அன்றாடம் நிகழும் வாழ்வியலோட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் இணைப்படுத்தி காலையில் மட்டையாளனாகவும் , பிறகு பந்தாளானாகவும் மாறி விளையாடும் விளையாட்டை அழகாகப் பதிவு செய்கிறார் கவிஞர்

ஏனோ? வீசப்படும்
பந்திற்காகக் காத்திருக்கும்
மட்டையின் கைகளாகிறது
இந்த அதிகாலை...
புலர்வின் இறுதி நிமிடங்கள்
பந்தின் கையாகி
தன் முந்தைய கணங்களில்
தன்னைத் தேய்த்து
புதிய வேகம் கொள்ள
முயன்று கொண்டிருக்கிறது
போதும் போதும் என
விரல்நுனியால் நினைவைத் தட்டி
அருகாமைக்கு அழைப்பு விடுத்தபடி
முந்தைய கணம் விடுத்து
நிகழ் கணத்தினைச் சேரும்
அதிகாலை- எண் ஆறைத்தொட்டபடி
அந்தரத்தில் பறக்கவிடுகிறது
இரவின் கடைசி நொடிகளை

    ***

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது - என்ற வரிகளில் மோனத்தின் உச்சத்தை தொடும் கவிஞர், நேசத்தின் பிணைப்பை வார்த்தைகளில் ஊசலாட்டும் அழகுதான் இந்தக் கவிதை - தலைப்பே அசத்துகிறது - மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

ஒரு ஜென்மத்தின்
காட்டினை மூடிக்கொள்ளும்
பெருஞ்சிறகென சொற்கள்

ஊடே பயணத்தில்
பாதையில் புறக்கண்களும்
தன் பாதியில் அகக்கண்ணும்

நிறைந்த பௌர்ணமியாய்
நிறம் கொள்ளும்
உயிரணையும் மூச்சுவேர்

எழுதப்படாமலே
புரட்டப்பட்ட பக்கங்களின்
வெற்றுநாளையும் நிரப்புகிறது
வந்துவிழும் வாக்கியங்கள்

சமரசம் கொள்ளமுடியாமல்
மறுதலித்த மனதின்
மறுபக்கம் நிரப்பட்டது

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது

போதுமெனும் சொல்லை
கண்கள் பிரசவிக்க விழைகிறது
ஆயினும் உதடுகளின்
வேண்டாம் எனும் கட்டளைக்கு
கீழ்ப்படிந்து இமைவேலிப் போடுகிறதே...

------------
படைப்பாளி லதா நாகராஜன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சிவபெருமாள் கிருஷ்ணன்

View

மாதாந்திர பரிசு

அ. முத்துசாமி

View

மாதாந்திர பரிசு

மீ மணிகண்டன்

View

மாதாந்திர பரிசு

ஜே. பிரோஸ்கான்

View

கவிச்சுடர் விருது

பாத்திமா மின்ஹா

கவிச்சுடர் பாத்திமா மின்ஹா  – ஒரு அறிமுகம்
****************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி பாத்திமா மின்ஹா அவர்கள் மின்மினி மற்றும் மின்ஹா என்ற பெயர்களில் பலநூறு கவிதைகள் பல தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர். நம் குழுமத்தில் மின்ஹா மின்மினி என்ற பெயரில் பல கவிதைகளை எழுதி மாதாந்திர பரிசும் பெற்றவர். 

கிழக்கிலங்கையைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியை. வின்சென்ட் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். சிறிய வயது பெண்மணிதான் என்றாலும் வாசிப்பின் மீதும் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல மின்னிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. விரைவில் நூல் வெளியிடவும் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

மின்மினி என்ற பெயரில் நம் படைப்பு குழுமத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே நம்முடன் இணைந்து பங்களிப்பு செய்திருந்தாலும் புனைப்பெயரில் இருப்பதால்  இடையில் ஏற்பட்ட முகநூல் ஐடி முடக்கத்தால் மீண்டும் உண்மையான பெயரிலேயே இப்போது முகநூல் கணக்கு தொடங்கி நம் குழுமத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அவரது பல படைப்புகள் குழுமத்தில் படிக்க இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இதுவரை வந்த கவிதை மின்னிதழ்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் அவரது கவிதைகள் பிரசுரமாகி இருப்பதே அவரின் எழுத்துக்கு கிடைத்த சான்று. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நம் குழுமம் ஒரு படைப்பாளியை இனம் கண்டு அவரது படைப்புக்களை ஆராய்ந்து அவருக்கான அங்கீகாரம் கொடுக்க தவறுவதில்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறெல்லாம் ஒரு படைப்பாளியை நம் குழுமம் உன்னிப்பாக கவனிக்கிறதென்பது. அதுமட்டுமல்லாமல் படைப்பில் அங்கீகாரம் பெற வயதோ நாடோ இடமோ ஆணோ பெண்ணோ  முக்கியமல்ல ஒரு  படைப்பாளியின் திறமை மட்டுமே என்பது தெளிவுபடுத்துகிறோம் இதன் வாயிலாக.

கவிச்சுடர் பாத்திமா மின்ஹா அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் பலத் தளங்களிலும் சென்று நடை போடுகிறது. இவருக்கு வார்த்தைகள் எளிதில் வந்து விழுந்துவிடுகின்றன. படிமங்களை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத்தை கவிதைகளில் புகுத்தி தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு எழுதும்  பெண் எழுத்தாளர்களில் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

நாம் மௌனத்தை பல வடிவங்களில் கையாண்டாலும் உள் மனமொன்று எப்போதும் நம்மிடம் பேசிக் கொண்டேயிருக்கும். அதை இவர் அசரீரி என்ற தேவ வார்த்தையொடு ஐக்கியம் செய்து விடுகிறார். 

//
வாய்மூடிய
எல்லாவற்றிற்குள்ளும்
ஒரு அசரீரி
வேகமாக
பேசிக்கொண்டே
இருக்கிறது
//

தனித்தலின் இரசனையை எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்...

//
மழையின் தரிசுக்காடுகள்
காற்று நனைக்காத காகிதப்பட்டம்
இசை தரித்த புல்லாங்குழல்
பசுமையின் ஒரு பிடி பச்சையத்தில்
வரைந்த வனத்தின் வகிடு;
வெகுநேரமாய் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன்
பாதைகள் நகர்கின்றன!
//

அவரது வாசிப்பு அனுபவம் புத்தகங்களின் பக்கமே திரும்புகிறது, மனிதர்களைவிட்டு விலகி அந்த வாசிப்பிற்குள் நுழைந்துவிட ஆசை படுகிறார்...எவ்வளவு அழகான கவிதை!

//
புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்ட
அறையொன்றினுள்
பொழுதுகளைத்
தின்றுகொண்டிருக்கும்
கண்களாய் மட்டும் இருந்துவிடுதல்
கனவுக்குறிப்பில் கத்தரிக்கப்பட்டட
இரண்டாவது குறிப்பு

கீழே செல்லரித்துக்
கொண்டிருக்கும்
முதலாவது குறிப்பு;
மனிதர்களை விட்டும்
தொலைதல்

ஓ கறையான்களே
மனிதர்களை
விட்டு விடுங்கள்
அவர்கள்
அவர்களையே
தின்றுகொள்கிறார்கள்
//

காகிதங்களாய் மின்னும் பொக்கிசம் முகாரிக்கு இடைவெளி கொடுத்து காலவெளிக்கு கடத்திப் போவதை இந்தக் கவிதையில் அசத்துகிறார்:

//
அந்தக் காகிதங்களைச்
செல்லரித்திருக்கவில்லை

ஏதோவோர் ஆழ்ந்த தேடல்
களஞ்சிய அறைக்குள்ளிருந்த
பெட்டிக்குள் விழுந்து கிடக்கிறேன்

எதிர்பாரமல் என்னை
வந்தடைந்த குரலற்ற குரல்
அந்த காகிதத்தின் படபடப்பு

அத்தனையும் பசுமையான
பேரன்பின் பிதற்றல்கள்
பொதிந்த கையெழுத்து
அச்சுக்கள்

காலத்தின் நரைமுடிகளுக்கு
சாயமிடும் புன்னகைகள்
சுழியோடு சுழன்ற போது
குளிர்சாதனப் பெட்டியானது உள்ளம்

இரைமீட்டிய தொலைதல்
நேரங்களை விழுங்கிக்கொண்டபோது
முகாரிகளும் இடைவெளி
எடுத்துக் கொண்டன
//

நிலவிற்கு கூட வேள்வி செய்து இரசிக்கும் கவிதைமனம் அழகானது... இந்தக் கவிதை வியப்பானது. அதைவிட வியப்பு இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட பார்வையும் கோணமும் இவரிடம் இருப்பது. இதோ அந்த கவிதை...

//
நிலவுக்கு ஒரு வேள்வி.
இன்னும் ஒளிர்கிறது பூமி

கேட்கும் விறகுகள் போதவில்லை
துரும்புகளைச் சேர்க்கிறது காற்று

தீர்த்தம் தின்ற தீக்கு
தீக்குச்சிமாலை
அரும்பிக் கொள்கிறது..

சுடர் விடுத்த சுவாலை கொய்தேன்
அழகிய பச்சிலைக் கொழுந்து
தேனீருக்கு ஒரு மிடர் தாகம்

நிஷ்டை பூத்த நிலா மீண்டும்
நீறுக்குள் ஒளிக்குளியல்

பனித்துளிகள் உவர்த்தன
பசுமை விடைபெற்றது
//

நிசப்தம் மோனத்தினொரு அங்கம்... காதலின் மொழி பெயர்ப்பு, அஃது எந்த படகிலும் பயணிக்கும் ,இசையாகி இரசிக்கும் இன்புற்று இன்புறுத்தும் அப்படியான கவிதை இதோ:  

//
அலைகளில்லா நிசப்தம்
கரை தடவிச்சென்றதும்
அந்தியின் பிந்திய பகுதியில்
இருள் கரைந்து கொண்டது

பௌர்ணமி விட்டுச்சென்ற
கனவுகளை காற்றின் மென்விசை
கலைக்க ஒரு வானம் செய்தது நதி

ஒலிக்க மறுத்த மோனம்
கலைந்து மென்குழல் துளை
வழியே இசையானது

ஒளிர்ந்த நதிப்படுக்கையும்
மிதந்த கனவுக்கூடுகளும்
பின்னிரவைக் கொண்டாடின

ஒருத்தியின் தீயில் சுடர்விடும்
கூண்டுகள் சாம்பலாகியிருக்கவில்லை
ஆனால் பௌர்ணமியில்
படிந்திருந்தன 
//

-----------
படைப்பாளி பாத்திமா மின்ஹா அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
 
#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

ஈரோடு கதிர்

View

மாதாந்திர பரிசு

சிந்துஜன் நமஷி

View

மாதாந்திர பரிசு

தா. ஜோ. ஜூலியஸ்

View

மாதாந்திர பரிசு

ஷீலாசிவகுமாா்

View

கவிச்சுடர் விருது

குமரேசன் கிருஷ்ணன்


கவிச்சுடர் குமரேசன் கிருஷ்ணன்  ஒரு அறிமுகம்
*****************************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் அவர்களின்
இயற்பெயர் குமரேசன். தன் அப்பாவின் பெயரான "கிருஷ்ணன்" என்பதை இணைத்துக்கொண்டு குமரேசன் கிருஷ்ணன் என்ற பெயரில் எழுதி வருகிறார். சங்கரன் கோயிலை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழக மின்வாரிய துறையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

எட்டாவது பயிலும் காலத்தில் "மாயமோதிரம்" என்னும் கதை எழுதியதில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் முதல் கவி என முழுமையாக எழுதியது 1993ல் தந்தை மறைவிற்கு பின்பே.

வெளியிட்ட நூல்: நிசப்தங்களின் நாட்குறிப்பு(ஹைக்கூ கவிதைகள்)

பெற்ற விருதுகள்:
ஈரோடு தமிழன்பன் விருது

இவரது நூலுக்கான அங்கீகாரம்:

புதுச்சேரி மூவடி,மின்மினி இதழ்கள் நடத்திய போட்டியில் ஊக்கப் பரிசு.
கும்பகோணம், ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு பரிசு

இரண்டாம் தொகுப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுவரை புதுக்கவிதை, நவீனம், மரபு கவிதை சார்ந்த படைப்பாளிகள் கவிச்சுடர் பெற்ற நிலையில் முதல் முறையாக ஒரு ஹைக்கூ வகைமை எழுதும் படைப்பாளி இவ்விருது பெறுவது பெருமைக்குரியது.

கவிச்சுடர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
சொல்ல வந்த கருத்தினை எளிதாக சொல்லத் தெரிந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். எத்தனையோ ஹைக்கூ படைப்பாளிகள் இன்றைய கால கட்டத்தில் இருந்தாலும் தனது புதுமையான பார்வையில் தவழும் ஹைக்கூவால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பியவர் என்றால் அது மிகையல்ல.

எப்போதும் நீள் கவிதையே எழுதிக் கொண்டிருந்த இவர் ஹைக்கூ எழுத வந்ததே ஒரு எதேச்சையான நிகழ்வு மூலமே இருப்பினும் அதில் ஏற்பட்ட ஆர்வ மிகுதியால் பின்பு ஒரு ஹைக்கூ நூலையே வெளியிடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.
ஹைக்கூ கவிதைகளில் கூட படிமம், குறியீடுகள் மற்றும் தொன்மங்களை வைத்து எழுதும் ஒருசிலரில் முதன்மையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஹைக்கூ கவிதைகளின் ஈற்றடி பயன் உணர்ந்த கவிஞராகவே இவரை நாம் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு

//
  பொட்டல்வெளி
  மரம் தேடுகிறது
  குச்சியுடன் பறவை.
//

//
வாழவேண்டும்
சாவைத் தேடுகிறான்
சங்கூதுபவன்.
//

//
  பரண்மேல் புத்தகம்
  வாசிக்க எடுக்கையில் கலைகிறது
  சிலந்திவலை.
//

//
இரவு மழை
தூக்கத்தில் கேட்கிறது
தவளைச் சப்தம்.
//

சமூகம் சார்ந்து மட்டுமல்லாம் இயற்கை, தலைமுறை இடைவெளி, வாழ்வியல் அவலங்களை இவரது கவிதைகள் பேசத் தயங்குவதேயில்லை

இவரது ஹைக்கூ கவிதைகள் சில....

1)
பல்லியின் பிடி
தப்பித்துவிடும்
தும்பியின் இறகு .

2)
கரையும் காகத்திடம்
யார் உரைப்பர்
வீடு மாறியதை.

3)
நகரும் இரயில்
சன்னலோரம் அமர்கிறது
பட்டாம்பூச்சி.

4)
இரயில் பயணம்
அழகாயிருக்கிறது
மலை உச்சிக் கோயில்.

5)
மழைச்சாரல்
வாவென அழைக்கிறது
பறவையின் குரல்.

6)
அழகாயிருக்கிறது
அச்சத்தை எழுப்புகிறது
மின்கம்பியில் பறவை.

7)
நதி
தத்தளிக்கும் எறும்பு
இலையுதிர்க்கும் மரம்.

8)
தகரத் தட்டு
யாசிக்கும் மனிதர்
தங்கத்தில் கோபுரம்.

9)
சலசலக்கும் நதி
மெளனமாய் நகரும்
கூழாங்கல்.

10)
தூளியில் குழந்தை
உறக்கத்தில் தாய்
தாலாட்டும் ரயில்.

இவரது மற்ற வகைமை கவிதைகளைப் பற்றி பார்ப்போம் இப்போது....

ஆசை ஆசையாக வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தை வெயிலில் நின்று இந்திய வரைப்பட புத்தகங்களை விற்கும் பெண்ணிடம் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்தவளின் தன்மானத் திமிரை இந்தக் கவிதையில் அழகாகச் சொல்லுகிறார்...

நகரின் பிரதானக் கடையின்
நீண்ட வரிசையில் நின்று
பிரியாணி பொட்டலத்துடன்
வெளிப்படுகிறேன்.

என் நாவில்
அனிச்சையாய் எச்சிலை
சுரந்தபடியிருக்கிறது
உணவின் மணம்.

சேலையைத் தூளியாக்கி
முதுகில் தொங்கும் மழலையுடன்
இந்தியவரைபடத்தை
உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
கூவிக்கூவி விற்கிறாள்
பிரதானக் கடைவாசலில்
தமிழ்பெண்னொருத்தி.

பசியில் கசியும்
மழலையின் விழிவீச்சினை
சந்திக்க இயலாமல்
பொட்டலத்தை
அப்பெண்ணிடம் நீட்டுகிறேன்.

வேண்டாண்ணா
புக் வாங்கிக்கோங்கவெனும்
அவள் தன்மானத் திமிர்
பிடித்திருக்கிறது.

வறுமையை வீழ்த்தும்
அவள் உழைப்பின்
நம்பிக்கைக்குக் கரம் கொடுக்க
இந்தியாவை வாங்கிப் பிரிக்கிறேன்

வறுமையை விரட்டுவதாய்
வாக்களித்து
உலக வல்லரசாக்க விழையும்
மனிதத் தலைகள்
தோன்றி மறைகின்றன
எந்தச் சலனமுமின்றி
வரைபடத்துள்.
 
   ***

சின்ன வயதில் சாதாரணமாக பல் விழுவதை ஒரு கலாச்சர புதையலுக்குள் ஆழமாக வைத்துவிட்டு அதை நாம் தொலைத்து விட்டதை எவ்வளவு நேர்த்தியாக சொல்லுகிறார் பாருங்கள்...

ஆடுகின்ற...
அந்த ஒற்றைப் பல்லை
நாவினால் தெத்தித் தெத்தி
அழிச்சாட்டியம் செய்தும்
அடம்பிடித்து விழமறுக்க..

அப்பல் குறித்த
புலம்பல்களின் ஊடே
கண்ணயர்ந்த ஓர்இரவில்
திடீரெனயெழுந்த
யெவன பீதியில்
அனிச்சையாய்
நகர்ந்த கையோடு
ஒட்டிவந்தது அப்பல்..

ஒற்றைப் பல்லோடு
ஓலமிட்டபடி
ஓரிரவு நீள..

முந்திவரும் ஞாயிறுவின்
முனகல்களின் கீற்றுக்குமுன்
தலையணைக்குள் புதைத்த
தன்கையோடு பல்எடுத்து
சாணத்தில் திணித்து
கோழிகளுக்கு இரையாகாதவாறு
ஓட்டுமேல் எறிந்த அப்பருவத்து
கனாகாலத்து நினைவுகளை...!

ஆடும் தன் பல்காட்டி
என் செய்யவென்ற
உன்னிடம்
எப்படியுரைப்பேன்
என்மகனே...!

      ***

வாழ்க்கை படிப்பினையை பற்றி சொல்லும் வரிகள்...

உரலுக்குள் சிக்கிய
தலையை
உடைபடாமல் நகர்த்தும்
சாமர்த்தியத்தை
கற்றுத்தருகிறது வாழ்வு
      
         என்று சொல்லும் நேர்த்தி வியப்பானது.

திறந்த புத்தகமாயிருந்தேன்
தினம் வாசித்து
வீசியெறிந்தனர்
பலர்...

என்னுள் கொஞ்சம்
மூடிக்கொண்டேன்
நிறைய வாசிக்க
வேண்டியதிருந்தது
என்னை...?

      தேடலை பற்றி இவரின் பார்வை இப்படி விரிகிறது.

வீடுகளை பற்றிய கனவு ஒவ்வொரு மனிதனுக்குமான தவிர்க்க முடியாத ஆசையென்றே சொல்லலாம். அப்படிதான் இவரது தந்தைக்குமான ஆசையை சொல்லி வருபவர் கடைசியாக முடிக்கும் போது

சாலையோர...
நடைமேடையில் உறங்கும்
வீடற்ற சக மனித உலுக்கல்
பொய்யென உரைக்கிறது
எல்லாக் கனவுகளையும்.

    என்று முடித்து அதை கனவாகவே முடித்து விடுகிறார். மனம் கனத்து போகிறது.


ஊர்த்திருவிழா
---------------------------

மேனியெங்கும்
சில்லறை சிதறிக்கிடந்த
தெரு ஓவியத்தில்
இதயம் கிழித்து
இறைவனின் முகம்
காட்டியிருந்தான் ஓவியன்.

கரித்துண்டுகளும்
சுண்ணக்கட்டிகளும்
சாகாவரம்பெற்று
சாலைகளைக் கோயிலாக்க

உயிர்ப்பின்றி
உயிர்வாழும் போராட்டத்தில்
ஓவியத்தை வெறித்தபடி
வயிறு கிழித்து வறுமை
காண்பிக்கவியலா
விரக்தியில்...

தன் குடும்பத்தோடு
தெருவிலமர்ந்தபடி
கடந்து செல்பவர்களின்
கண்களை ஊடுறுவும்
கலைஞனைத் தரிசித்தபின்
வழிப்போக்கனாய்
எதை ரசிக்க
ஊர்த்திருவிழாவில்

--- இப்படி வாழ்வியலை வரிகளில் கண்முன் கொண்டுவந்து வாசிப்பவரை அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு மனதுக்குள் அசைபோட வைத்து விடுவதென்பது ஒருவகை கலையே கவிதையில் அதை சரிவர செய்திருக்கிறார் இக்கவியில்.
--------

படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சாண்டில்யன் விவேகானந்தன்

View

மாதாந்திர பரிசு

கவிப்பிரியன் ஜீவா

View

மாதாந்திர பரிசு

அகத்தின் அழகு (ரெஜி)

View

Showing 701 - 720 of 769 ( for page 36 )