logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 681 - 700 of 761

Year
Award
   

சிறந்த பங்களிப்பாளர் - 2018

  • கொ. வடிவேல்

0   1060   0  
  • September 2018

சிறந்த பங்களிப்பாளர் - 2018

  • அழ. இரஜினிகாந்தன்

0   995   0  
  • September 2018

சிறந்த பங்களிப்பாளர் - 2018

  • ஐசக்

0   1010   0  
  • September 2018

சிறந்த பங்களிப்பாளர் - 2018

  • கமல் காளிதாஸ்

0   1294   0  
  • September 2018

கவிச்சுடர் விருது

  • நிலாரவி

0   1343   0  
  • August 2018

மாதாந்திர பரிசு

  • வங்கனூர் அ. மோகனன்

0   1219   0  
  • August 2018

மாதாந்திர பரிசு

  • ஆனந்த குமார்

0   1280   0  
  • August 2018

மாதாந்திர பரிசு

  • தி பழனிவேல்

0   987   0  
  • August 2018

மாதாந்திர பரிசு

  • செந்தீஸ்வரன் சிவன்

0   942   0  
  • August 2018

மாதாந்திர பரிசு

  • ரமேஷ் கலை மித்ரன்

1   882   0  
  • August 2018

கவிச்சுடர் விருது

  • வளவன் கரிகாலன்

0   1261   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • சிவ. கருணாநிதி

0   917   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • ரா.த ஜீவித்தா

0   958   0  
  • July 2018

ம.செல்வகணேஷ்

  • ம.செல்வகணேஷ்

0   984   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • மஹா பர்வீன்

0   933   0  
  • July 2018

மாதாந்திர பரிசு

  • கொத்தாளி க. அய்யப்பன்

0   1112   0  
  • July 2018

கவிச்சுடர் விருது

  • லதா நாகராஜன்

0   1386   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • சிவபெருமாள் கிருஷ்ணன்

0   1395   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • ஜா.ஜோசப்

0   945   0  
  • June 2018

மாதாந்திர பரிசு

  • அ. முத்துசாமி

0   1168   0  
  • June 2018

சிறந்த பங்களிப்பாளர் - 2018

அழ. இரஜினிகாந்தன்

View

கவிச்சுடர் விருது

நிலாரவி

கவிச்சுடர் நிலாரவி  ஒரு அறிமுகம்
***************************************************
படைப்பாளி நிலாரவி அவர்களின் இயற்பெயர் ரவிச்சந்திரன். குடந்தையை பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் தன் பணி நிமித்தமாக தொழில் நகரம் கோவையில் வசித்து வருகிறார். மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் இவர் ஒரு சிறு கதை எழுத்தாளரும் கூட. இவரது படைப்புகள் சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் அடிக்கடி வெளிவந்துள்ளன மேலும் படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி விருதும் பெற்றவர்.

கவிச்சுடர் நிலாரவி அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

ஆசைகள் வட்டமிடும் நீர்க்குமிழிகள் என்று சொல்வார்கள். கவிஞரோ அவை அவரவர்களே வரையும் வட்டங்களென்று சொல்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் வரைந்த வட்டங்களை தங்களின் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள். இந்த வட்டங்களில் சில நேரங்களில் அடுத்தவர்களும் வரைந்து அவை பெரிதாகிவிடுகின்றன, வட்டங்களைவிட்டு விலகி சென்றுவிட்டதாக சொல்லும் சிலரும் சில வட்டங்களை போட்டுக்கொள்வதாக கவிஞர் பொருமுகிறார். கடைசியில் மனிதம், வட்டத்தில் ஒரு புள்ளியாக ஒளிந்துக் கொள்ள வட்டங்களின் போராட்டம் பெரிதாகிவிடுகிறதாம். சொல்வனத்தில் வந்த இந்தக் கவிதை மிக சிறப்பானதும் கூட


வட்டங்கள்

முதலில்
உங்களுக்கான
வட்டத்தை
நீங்கள் வரைந்து கொண்டீர்கள்
வட்டத்தில் வசித்துப்பின்
அவையே உங்கள்
அடையாளமென
அறிவித்தீர்கள்

பிறிதோர் வட்டத்தை
பிறிதொருவர் வரைய
பிறந்தன பல வட்டங்கள்

பின்
வட்டத்தின்
எல்லைகளை விரிவாக்க
எத்தனிக்கிறீர்கள்
அவரவர் வட்டத்தை
வலைகளாக்கி
கடல் முழுதையும்
கைது செய்ய
கனவு காண்கிறீர்கள்

வட்டங்கள் பொய்யென்று
விலகிச் சென்றவர்கள்
விடுதலை பெற்றதாய்
அறிவித்தனர்
விலகியும் கடந்தும்
செல்வதாய் நினைத்து
வேறு ஒரு வட்டத்தை
வரைகிறார்கள் அவர்கள்
பின் அவர்களுக்கான
மதில்களால்
சூழப்படுகிறார்கள்

குறுவட்டமாய்
நீள் வட்டமாய்
விதவிதமாய்
விரிந்து விரிந்து
தொடரும் வட்டங்கள் தமக்குள்
ஒன்றை ஒன்று விழுங்க
முயல்கின்றன
விழுங்கியிருக்கும்
பெரு வட்டமொன்றில்
வயிற்றுக்குள்
அடங்கிவிடும்
அனைத்து வட்டங்களும்.

----
ஒரு கடவுளும் சில மீன்களும் என்ற இந்த படிமக்கவிதை இவரது படைப்பாற்றலின் தெளிவை காட்டுகிறது. தொட்டி மீன்கள் வளர்க்கும் ஒருவன் அந்த மீன்களுக்கு கடவுளாக இருப்பதை போன்ற அமைப்பைத் தரும் இந்தக் கவிதை சமூகத்தில் நிலவும் ஆதிக்க நிலைப்பாடுகளை நகைச்சுவையாக எள்ளி நகைக்கிறது. கால சூழலுக்கேற்ப தன்னை பொறுத்திக் கொள்ளும் கவிதையிது

ஒரு கடவுளும் சில மீன்களும்

கொஞ்சம் நீர்
ஒரு தொட்டி
சில மீன்கள்
ஒரு மீன்கடவுள்
மீனுலகை படைத்தார்

உணவிடுதலும்
நீர் மாற்றுவதுமாய்
காத்துவந்தார்

மீன் கடவுளுக்கு மீன்களைத் தெரிந்திருந்தது
மீன்களுக்கு மீன்கடவுள் பற்றி
தெரியாதிருக்கலாம்
தெரியாதிருப்பதுதானே கடவுள்
என்று கர்வம் கொண்டார்

ஒரு முறை மீன்கடவுள்
தொட்டியை அதிரவைக்க
கலங்கிய மீன்கள்
அவரை மீன் சாத்தானாக கருதியிருக்கலாம்

ஒரு விடுமுறை தினத்தின்
காலையில் மீனொன்று
அவரின் அனுமதியின்றி
செத்து மிதக்க
அது ஒரு தற்கொலையென்று அறிவித்தார்

எதற்காகவோ மீனிரண்டு
சன்டையிட மீன்கடவுளின்
நடுவுநிலை
தடுமாறியது

மீன் மொழி மீன் வலி மீன் காமம்
எதுவும் புரியாமல் போக
பராமரித்துச் சலித்துப்போனார்
மீன்கடவுள்
விரக்தியில்
மீனுலகை கைவிடுவதாக
அறிவித்தார்
மீனுலகின் இறுதிநாளையும் உறுதிசெய்தார்

விபத்தொன்றில் மீன் கடவுள்
மரித்துப்போக
இது குறித்த எந்தச் சலனமுமில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தன மீன்கள்

------

நிலாவைப் பற்றி எழுதாத கவிஞர்களில்லை என்பதுபோல் முகமூடிகளை பற்றியும் எழுதாதவர்கள் குறைவே. இவரும் முகமூடியை பற்றி சுவாரசியமாக விவரிக்கிறார், அதே சமயம் முகமூடி போட்டு போட்டு களைத்துப்போனவன் கடவுளின் முன் நிற்கும் போது முகமூடியை கழற்றி வைத்துவிட்டு நின்றாலும் போலியாகத் தெரிவதாக சொல்வதுதான் இந்தக் கவிதையின் உச்சம்.

முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி
பின் கற்பிக்கப்பட்டவைகளின்
சாயங்கள் அடுகடுக்காய் பூசிக்கொண்டன என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

நண்பனிடம் பகைவனிடம்
காதலியிடம் அன்னியனிடம்
எஜமானிடம்
வேலைக்காரனிடம்
உறவுகளிடம்
என
ஒரு வித்தைக்காரன்
வண்ண வண்ண குல்லாக்களை
மாற்றி மாற்றி அணிவது மாதிரி
என் முகமூடிகள் மாறிக்கொண்டிருந்தன...

முகமூடிகளே
முகமாகிப்போன பின்னும்
நிறக்கண்ணாடிகளே
கண்களாகிவிட்ட பின்னும்
என் உலகின் நிறமும் மாறியிருந்தது

எந்த இடத்தில் நானிருக்கிறேன்
என
என்னை தேடி சலித்துவிட்டது...

இப்பொதெல்லாம்
கடவுளின் முன்
முகமூடிகளை களைத்துவிட்டு
நிற்பது தான்
பொய்மையாக படுகிறது.

---

அப்பாவின் வெள்ளெழுத்து கண்ணாடியை கைகளில் வைத்துக் கொண்டு கவிஞர் தன் தந்தையின் நினைவை மீட்டுவது அபாரமான சிந்தனை. தந்தையின் கண்களை இப்போதும் கையில் வைத்திருப்பதாக உணர்கிறார். தடித்த அக்கண்ணாடியில் காட்சிகள் கலங்கலாக தெரிவதாக சொல்லும் யதார்த்தத்தில் அவரது கண்ணீரும் சேர்ந்திருக்கிறது

அப்பாவின்மூக்குக்கண்ணாடி

பத்திரமாய் பாதுகாத்துவைத்தேன்
அப்பாவின்மூக்குக்கண்ணாடி
கண்மூடிய நாளில்
கழற்றியது நான்தான்...

கண்ணாடிதானே
இவனுக்கு அழகு,
எங்கே அது?
என்றும்
கண்மூடியபின்
கண்ணாடி எதற்கு?
என்றும்
சில முனுமுனுப்புகளுடன்
முடிந்துபோனது அவரது
இறுதி யாத்திரை...

கண்ணாடி வரைந்தாலே
காந்தியின் படமாகிற
தேசப்பிதாவின்
நினைவுச் சின்னம் மாதிரி
என் நேசப்பிதாவின் நினைவாய் போனது
மூக்குக்கண்ணாடி...

தோளுக்கு மேல் வளர்ந்தவனை
தோழன் என்று நடத்திய போதும்
கண்ணாடிக்குள் தெரிகிற
கண்களை பார்க்கையில்
மனதுக்குள் மரியாதை
மறைந்ததில்லை ஒருநாளும்...

அழுது கொண்டிருந்தாலும்
தொழுது கொண்டிருந்தாலும்
எதையாவது படித்துக்கொண்டிரு
அவர் வார்த்தைகளின் சாட்சியமாய்....
படித்து படித்து
தடித்து போயிருந்தது
அப்பாவின்மூக்குக்கண்ணாடி

கண்களை அடிக்கடி
தொலைத்துவிட்டுத்
தேடுவதாய்
அவர்
கவிதையாய்
சொல்கிற வேளைகளில்
கண்ணாடியை
தேடிக்கொடுத்து விடுகி்ற
என் கைகளில்
இன்றும் பத்திரமாய் இருக்கிறது...
அப்பாவைத் தொலைத்தபின்னும்

அணிந்து பார்க்கையில்
காட்சிகள் கலங்கி இருக்கும்
அந்நாளில்...
இப்போது
அணிந்துபார்த்தால் கலங்கிவிடுகிறது
கண்கள் இரண்டும்....
---

சம்பாதிக்கும்போதே
செலவாகிவிடுகிறது
காலம்.

- என்ற இந்த குறுங்கவிதையும் வாழ்க்கையின் மிகச்சிறந்த அலசல்தான்.

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கண்களின் துயரை கவிஞர் அவரது தொழிலோடு இணைத்து பின்னியிருக்கும் கீழுள்ள கவிதை சிறியதென்றாலும் கீர்த்தியில் மிகப் பெரியது

காலையிலிருந்தே
முதல் வாடிக்கையாளருக்காக
காத்திருந்தும்
யாரும் வராததால்
கடந்து செல்லும்
பாத சாரிகளின்
சின்னச் சின்ன
செருப்பு விரிசல்களை
கண்களால் தைத்துக் கொண்டிருந்தான்
அந்த
காலணிகள் சீர்செய்பவன்.

----

விருந்து என்ற தலைப்பிலுள்ள குறுங்கவிதையொன்று விரையம் செய்யப்பட்ட உணவுகளை குப்பைத்தொட்டியின் வயிற்று உணவாக சித்தரிப்பது.. அதை அவ்வாறு வீணாக்கியவர்களின் வயிற்றையும் குறிப்பிடுவதாகவே நினைத்துக் கொள்ளலாம்

குப்பைத்தொட்டிகளின்
வயிற்றை நிரப்பிவிடுகின்றன
எச்சில் இலைகளில்
மிச்சம் வைத்த உணவுகள்.
------

படைப்பாளி நிலாரவி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

வங்கனூர் அ. மோகனன்

View

மாதாந்திர பரிசு

ஆனந்த குமார்

View

மாதாந்திர பரிசு

தி பழனிவேல்

View

மாதாந்திர பரிசு

செந்தீஸ்வரன் சிவன்

View

மாதாந்திர பரிசு

ரமேஷ் கலை மித்ரன்

View

கவிச்சுடர் விருது

வளவன் கரிகாலன்

கவிச்சுடர் வளவன் கரிகாலன்  ஒரு அறிமுகம்
*************************************************************
பாளையங்கோட்டையைச் சேர்ந்த கவிஞரின் இயற்பெயர். அ.திருமாவளவன். சுய தொழில் முனைவராக இருக்கும் கவிஞர் கவிதைகளின் மீது கொண்ட ஈர்ப்பால் நமது படைப்பு குழுமத்தில் இணைந்து பன்முக கவிதைகளைத் தனது படைப்பாற்றலால் வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாள இதழின் மறு அங்கமாக வந்த மங்களம் தமிழ் வார இதழிலும் இவரது கவிதையும் சிறுகதையும் வெளிவந்துள்ளது. மற்றும் ஜனகணமன கையெழுத்துப் பிரதி மற்றும் நெல்லையிலிருந்து வெளிவரும் பரணி மற்றும் காணி நிலம் சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.

2015 லிருந்து முக நூலில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் 2016ல் கவிஞர் ஈரோடு தமிழன்பன் விருதும், நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி விருதும் பெற்றவர் .

கவிச்சுடர் வளவன் கரிகாலன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

காதலின் மௌனம் கட்டுப்பாடற்ற வெளியில் பயணிக்கும் போதும் அந்த மௌனத்தையே நேசிப்பதும் காதலாகிப் போகிறது. அது இட்டுச் செல்லும் பாதை சுவர்க்கமென்றாலும் அன்றி சோக நாடகமென்றாலும் சம்மதம் என்கிறார் கவிஞர்.

சுவர்க்க வசந்தத்தின்
வாசலுக்கோ
சோக நாடகத்தின்
துவக்கத்திற்கோ
இந்த
நெடும் பயணம்
எங்கு
இட்டுச் சென்றாலும்
சம்மதமே
எனக்கு!
இடைவிடாத
இந்த மௌனகீதம்
எனக்கெனவே நீ
இசைப்பதல்லவா!

----

கவிஞர், உலகத்தைத் தனது பார்வையில் அடர்ந்த வெளியாகவே பார்க்கிறார். எங்கும் வெற்றிடங்கள் கிடையாது என்று உறுதியாகச் சொல்கிறார். பல நிரவல்களால் நிறைந்திருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்..

இத்தொன்றும்
வெற்றுவெளி அல்ல!
இந்த வெளியெங்கும்
அடர்ந்து கிடக்கின்றன
வெறித்தனங்கள்
விசும்பல்கள்
நிராகரித்தல்கள்
நம்பிக்கைத் துரோகங்கள்
உரிமைக் கோஷங்கள்!
தொடர்ந்துவரும்
தோட்டாச் சத்தங்கள்!
அலறல்கள்!
அவற்றை நியாயப்படுத்தும்
நீசர்களின் உறுமல்கள்!
எனுமிவற்றின்
நெரிசலில்
சிக்கித் தவித்தும்
நீந்திப் பிழைத்தும்தான்
கடந்துகொண்டிருக்கின்றன
நமக்கான நேரங்கள்!

-----

வாழ்க்கையில் வலுவிழந்து போன நம்பிக்கைகளை அருகிப்போன சிட்டுக்குருவிகளோடு ஒப்பிடும் கவிஞரின் இந்தக்கவிதை சிறப்பானதுதான்

அழகாய்
ஒலித்திருந்து
அருகிக் குறைந்து
அப்புறம்
நம் காதுகளுக்கு
அந்நியமாகவே
ஆகிப்போன
சிட்டுக்குருவிகளின்
கெச்சட்டம் போலவே
ஏகமாய் இருந்து
எப்படியோ குறைந்து
பின்
இல்லாமலே
போய்விட்டன
வாழ்க்கையின் மீதிருந்த
வலுவான
நம்பிக்கைகள்!

-----

பேரானந்தத்தின் பெரு நிலையைப் பற்றி பேசும் கவிஞர் சன்னல் வழி தான் கண்ட காட்சியை மிக அழகாக தன் கவிதையில் புனைகிறார். ஆடிக்காற்றில் அலக்கழியும் ஒரு முருங்கை மரம். அதன் உச்சியை எட்டும் செம்போத்து பறவை அங்கு நிகழும் பெரும் போராட்டம் காட்சி வடிவமாகிறது. சன்னலைவிட்டு அவரது மனமும் அவற்றோடு சேர்ந்து கொள்கிறது.. முருங்கை மரம் உறுதியற்றது என்பதற்காகவே கவிதையில் இணைத்திருப்பார் போலும். நிலையற்ற வாழ்வில் செப்போத்தின் உறுதி ஒவ்வொரு மனதிற்கும் வேண்டுமென்பதே காட்சி படிமத்தின் வெற்றி. இது சிறந்த கவிதை என்றே சொல்லலாம்...

விடைபெற்றுப்
போகிறது
இரவு!
மெல்ல
விடியல் தொடங்கி
வெளிச்சம்
பரவுகிறது!

ஜன்னல் வழிப்
புகுந்த காற்றின்
குளிர்ச்சியைச்
சுகித்துக்கொண்டே
வெளியில் தெரிந்த
காட்சியொன்றில்
லயித்துப் போகிறது
மனது!

அடித்து வீசும்
ஆடிக்காற்றில்
அந்த முருங்கை மரத்தின்
அத்தனை
அவயங்களும்
அலைக்களிகின்றன!

அத்தனையும்
சமாளித்து
அந்த மரத்தின்
உச்சிக்கிளையை நோக்கித்
தத்தித் தத்தி
நகர்ந்தும்
கூர் நகம் கொண்ட
விரல்களால்
ஆடும் கிளைதனை
இறுகப் பற்றியும்
கருமையும்
செம்மையுமான
தன்
சிறகுகளைக்
கலைத்துப்போடும்
காற்றைச்
சந்தோஷமாய்
அனுபவித்தும்
முன்னேறியபடி
ஒரு
செம்போத்துப் பறவை!

எப்போது சென்றேனோ
அங்கே
நானும்
என்னை
இங்கே விட்டுவிட்டு!

உச்சிக்கிளையின்
முடிவை அடைந்தும்
அடர்ந்த இலைகளையும்
வெண்ணிறப் பூக்களையும்
தாங்கி இன்னும் சற்று
உயர நீண்டும்
உரத்து வீசும் காற்றைத்
தாங்காமல்
அனைத்துத்
திசைகளின்புறமும்
ஆடியபடியும் இருந்த
மெல்லிய கொம்பை நோக்கி
அதன்
பூக்களுக்கும்
தளிரிலைகளுக்கும்கூட
சேதமெதுவும்
ஏற்பட்டுவிடாதவாறு
தன் கூர்நக
விரல்களைப்
பதித்தும்
பதியாமலும்
சென்றடைந்து
இதற்குமேல்
உயரமில்லை
எனும்
பெருமிதம் தோன்றத்
தன் விழிகளை
உருட்டியபடி இப்படியும்
அப்படியுமாய்ப்
பார்த்த பறவையோடு
நானும்!

பதிந்தும்
பதியாமலுமிருக்கிற
பாதங்கள்!
சலசலத்துச்
சங்கீதமிசைக்கும்
இலைகள்!
உயர்ந்தும்
பக்கங்களிலுமாய்த்
தாலாட்டும்
கிளைகள்!
சிறகுகளைக்
கோதிவிட்டு
நலம் விசாரித்து நகரும்
காற்று!
என
அனைத்தோடும்
விரவிக் கலந்து
பேரானந்தப்
பெருநிலையில்
பறவையும்
நானும்!

திடீரென…
சிறகடிப்புச்
சப்தமெழவும்
அந்த
ஆனந்த லயிப்பினின்றும்
மிதந்து
மேலே வருமென்னைத்
திரும்பியும் பாராது
பறந்தெங்கோ போனது
பறவை!

பறத்தலறியாப்
பாமரன் நான்
உருண்டு
விழுகிறேன்
உச்சிமரக்
கிளை நழுவி
தூரப் பறந்த
பறவையைத்
துரத்திப் போகிற
மனதுடன்

-----

இரயில் நிலையத்தை போதிமடமாக உணரும் கவிஞரின் பார்வை சற்று வித்தியாசமானதுதான். பலதரப்பட்ட நிகழ்வுகளைக் கண்டும் எந்தச் சலனத்தையும் தன் மீது ஏற்றிக்கொள்ளாமல் ஞானியைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்.

வரவேற்க வந்தோரின்
வாழ்த்துகளில்
குளித்தும்
வழியனுப்ப வந்தோரின்
கண்ணீரில்
தகித்தும்
எந்த மாற்றமும்
இல்லாமலும்
எதையும்
காட்டிக்கொள்ளாமலும்
வரவேற்பதையும்
வழியனுப்புவதையும்
காலகாலமாய்ச்
செய்துவிட்டு
ஒரு ஞாநியைப்போல
உட்கார்ந்திருக்கின்றன
இரயில் நிலையங்கள்

----

பட்டுப்போன விவசாயத்தைக் குருவிகளின் பச்சாதாபத்தில் வெளிப் படுத்தும் ஒரு கவிதை

கதிர் முற்றிக்
கனிந்திருக்கும்
வானம் பார்த்த
வயல்களில்
பெருங்கூட்டமாய்த்
தாழப் பறந்தமர்ந்து
தம் சிற்றலகுகளால்
தானியமணிகளைக்
கொத்திக்
கொள்ளையிட்டுப்போகும்
படைகுருவிகளெல்லாம்
என்னதான் செய்யுமோ
இப்போது!

------

வண்ணத்துப் பூச்சிகளின் இரசனை நம் பார்வையில்தான் இருக்கிறது என்பதை இந்த குறும் கவிதையில் சிறப்பாக சொல்கிறார்

பறத்தல்
வண்ணத்துப்பூச்சியின்
இயல்பாக
இருக்கலாம்!
ஆனால்
பார்த்தலில்
இருக்கிறது
அதன்
அற்புதங்கள்!

------

படைப்பாளி வளவன் கரிகாலன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சிவ. கருணாநிதி

View

மாதாந்திர பரிசு

ரா.த ஜீவித்தா

View

ம.செல்வகணேஷ்

ம.செல்வகணேஷ்

View

மாதாந்திர பரிசு

மஹா பர்வீன்

View

மாதாந்திர பரிசு

கொத்தாளி க. அய்யப்பன்

View

கவிச்சுடர் விருது

லதா நாகராஜன்

கவிச்சுடர் லதா நாகராஜன்  ஒரு அறிமுகம்
*************************************************************
தேன்கனிக்கோட்டையின் தெகிட்டாத பைந்தமிழின் படைப்பாளி. லதா நாகராஜன் அவர்கள் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்.

சிந்தனைகளைக் கொண்டு செதுக்கினால்தான் வார்த்தைகள் உயிர் பெறும். உயிரோட்டமுள்ள கவிதைகளை எழுதுவதில் படைப்பாளி லதா அவர்கள் ஒரு நுணுக்கமான சிற்பியென்றே சொல்லலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்புகளை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கழித்தவர். முதுகலை தமிழ் இலக்கியம், ஆசிரியர் பட்டயம் மற்றும் இளங்கலை கல்வியியல் முடித்த இவர் ஒரு நல்ல ஆசிரியையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் தன் தந்தைக்கு ஆற்றும் கடனாகவே எழுத்துலகில் அவரின் பெயரை தன் பெயருடன் இணைத்து லதா நாகராஜன் என்றப்பெயரில் தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

இதுவரை சுமார் 800 கவிதைகள் வரை எழுதியிருக்கும் இவரின் கவிதைகள் கடல்கடந்தும் பிரசுரம் கண்டிருக்கிறது. 2017ல் இவரது பறவைத்தச்சன் என்ற கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளது.

கூடிய விரைவில் அடுத்த நூல் வெளியிடவும் படைப்புக்குழுமம் வாழ்த்துகிறது. மேலும் படைப்புக்குழுமத்தில் மாதாந்திர பரிசும், உயிர்த்திசை பரிசுப்போட்டி கவிதைத் தொடரில் சிறப்பு பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் லதா நாகராஜன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் பலத் தளங்களிலும் சென்று நடை போடுகிறது. இவருக்கு வார்த்தைகள் எளிதில் வந்து விழுந்துவிடுகின்றன. படிமங்களை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத்தை கவிதைகளில் புகுத்தி தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு எழுதும் பெண் எழுத்தாளர்களில் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

கட்டுப்பாட்டையிழந்த மௌனத்தைக் கவிஞர் தன் வார்த்தைக் கட்டுப்பாட்டால் மிளிரச்செய்யும் கவிதை :

தவத்தில்
ஈடுபட்டிருந்த
மௌனமொன்று
கஜூராஹோ
சிற்பத்தையொத்திருந்தது
அதன்மீது ஆயிரம்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வார்த்தைகள் ...
கலைக்கப் போராடியது
ஒருவார்த்தைக்கும்
மறுவார்த்தைக்குமிடையே
சிக்கித் திணறி அதன்
ரோமக்கால்களின்
வேர்களுக்கடியில்
ஒளிந்தும் சிலிர்த்தது
மௌனம் தன்னை
கட்டுப்படுத்திக்கொள்ள
விடப்படும் மூச்சின்
இடைவிடாத சப்தம் தன்
அந்தரங்கத்தினை
அந்த அரங்கம்
முழுக்க சொல்லிக்கொண்டிருந்தது
அதன் எதிரொலிப்பில்
தன் கட்டுப்பாட்டினை
வார்த்தைகளுக்குள் இழந்த
மௌனம் அதன்
மோகத்தில் மெல்ல
மூழ்கத்துவங்கியது...!.

 ***
ஒரு சிற்பியின் வாழ்க்கை அவன் செதுக்கும் சிலைகளுக்குள் ரேகைகளாக ஓடுகின்றது என்பது புதிய கற்பனை. கவிஞர் இங்கு ஒரு சிற்பியாகவே மாறியுள்ளார். இதோ அந்தக் கவிதை :

சிற்பியின் உளியில்
பசியின் சப்தம் அவன்
உளிகளைத்தொட்டாலே
உலைக் கொதிக்கும்
செதுக்கும் மொழி
வறுமை பேசும்...
கண் இமைகளின்
சிறுமுடிகளில்
எழுதப்பட்டுள்ள துயரங்களை
சிலை படித்திருக்கும்
ஒருபாகம் சுகத்தையும்
மறுபாகம் சோகத்தையும்
உளிக்கப்பட்டிருக்கும் சிலையில்
உற்றுப் பார்த்தால்
உளியாளனின் ரேகையை
உள்வாங்கியிருக்கும்
சிற்பிக்கு அவன் சிலையே
சிம்மாசனம்...
உப்புக்காற்றும்
கடல் அலையும்
சிலையைச் சிதைக்கலாம்
அவன் சிந்தனையையல்ல...
பாறையில் குடைந்த
பல்லக்கையே பரிசொன்றாய்
சிலை சிற்பிக்கு அளிக்கும்...
சிலைக்கும் உளிக்கும்
நடுவில் தெறிக்கும்
அவன் கற்பனையின்
பொன் சிவப்புத் தீயை
உளிமொழிக்காதலென்று
சொல்லலாமா?!...

  ***

காதல் செய்வதற்கு வசியம் தேவையில்லையென்று சொல்லும் கவிஞர், அதற்கான வழியொன்றை பகரமாகச் சொல்லுகிறார் கவிஞர் :

மூன்றாம் பிறையில்
மேகலா லக்ன
பீடமமைத்து
ரதிமன்மத வசிய
சக்கரத்தில்
மந்திரம் சொல்லி
உடல் திரவம்
வழித்தெடுத்து
மதனகாமப்பூவின்
திரவத்தோடு
கலந்தளித்தெல்லாம்
யட்சிணியை
வசியம் செய்ய
வேண்டியதில்லை
தேனில் ஊறிய
சொல்லெடுத்து
மலைக்க மலைக்க
கவிபுனைந்து
திகட்ட ஊட்டும்
தருணத்தில்
அஞ்சனம்
வழிய வழிந்திடும்
கண்கள் உறக்கத்திலும்
வசப்படும்!!....

 ***
இந்தக் கவிதை ஒரு சிறப்பான கவிதையென்றே சொல்லலாம். பெண்களின் கூச்சமென்று ஒதுக்கியவற்றை ஆண்களின் பார்வைக்கு ஒதுக்குதல் கூடாது என்பதை மிகவும் சிறப்பாக சொல்லியுள்ளார் கவிஞர். இஃதொரு புரிதலின் ஒத்துழைப்பு என்பது மிகவும் சரியான வாதம் . இதோ அந்தக்கவிதை:

உதிரப்போக்கு

சிறுவயதில் அம்மாவிற்கு
உண்டான திடீர் கருச்சிதைவின் பொழுது
அப்பா கட்டிலுக்கடியில் வழிந்தோடிய
உதிரத்தை இருக்கைகளாலும்
அள்ளியெடுத்து வாளியில் சேகரித்து
அப்புறப்படுத்தி பின் தரையலம்பியதை
பார்த்தவள் நான்.

பின்னொரு நாளில்
யாருமற்ற நேரத்தில்
பிரசவ வலிகண்ட எனக்கு இளையவளை
உடன் பிறந்த தம்பி உதிரம் வழிய
இருக் கைகளிலும் அள்ளியெடுத்து
மருத்துவமனைக்குள் கொண்டு சென்று
ஆண் மகவென அறிவிக்கும் வரை
அருகே தனித்திருந்து காத்தான்

இன்று வரை மாதாந்திர நாட்களில்
மகனே எனக்கு நேப்கின்
வாங்கித் தருகிறான்

மறைத்துச் செல்ல இதுவென்ன
தவறுக்கு பிறந்த நோயா?

மறைத்து மறைத்தே வலி
உணர்த்தத் தவறினோம்
புரிந்துகொள்ள இடமிருந்தும்
புரியவைக்க மறுத்தோம்

தலைவலியைச் சொல்ல
தவிர்ப்பும் தவிப்பும் கொள்வதில்லை

தனி வலியைச் சொல்ல
தடுப்பெதற்கு ?

பொதுவெளியில் இதைப்பேசி
புரிதலை ஏற்படுத்தாதது
யார் குற்றம்

பயணத்தின் பொழுதும்
இருக்கை பார்க்கும் பதட்டம் தவிப்போம்

இது இயல்பு
இது இயற்கை
இதுவே ஆரோக்கியம்

இதற்கெதற்கு அச்சமும் நாணமும்

ஆண் அறிவான் அவஸ்தையை
வலி நிவாரணி அவன் வார்த்தைகள் என

சொல்லுங்கள் தொடக்கமும் முடிவும்
சொல்லாத வலி அறியப்படாது ...

புரிதலான பாதையில் முள்ளில்லை.

   ***

அன்றாடம் நிகழும் வாழ்வியலோட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் இணைப்படுத்தி காலையில் மட்டையாளனாகவும் , பிறகு பந்தாளானாகவும் மாறி விளையாடும் விளையாட்டை அழகாகப் பதிவு செய்கிறார் கவிஞர்

ஏனோ? வீசப்படும்
பந்திற்காகக் காத்திருக்கும்
மட்டையின் கைகளாகிறது
இந்த அதிகாலை...
புலர்வின் இறுதி நிமிடங்கள்
பந்தின் கையாகி
தன் முந்தைய கணங்களில்
தன்னைத் தேய்த்து
புதிய வேகம் கொள்ள
முயன்று கொண்டிருக்கிறது
போதும் போதும் என
விரல்நுனியால் நினைவைத் தட்டி
அருகாமைக்கு அழைப்பு விடுத்தபடி
முந்தைய கணம் விடுத்து
நிகழ் கணத்தினைச் சேரும்
அதிகாலை- எண் ஆறைத்தொட்டபடி
அந்தரத்தில் பறக்கவிடுகிறது
இரவின் கடைசி நொடிகளை

    ***

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது - என்ற வரிகளில் மோனத்தின் உச்சத்தை தொடும் கவிஞர், நேசத்தின் பிணைப்பை வார்த்தைகளில் ஊசலாட்டும் அழகுதான் இந்தக் கவிதை - தலைப்பே அசத்துகிறது - மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

ஒரு ஜென்மத்தின்
காட்டினை மூடிக்கொள்ளும்
பெருஞ்சிறகென சொற்கள்

ஊடே பயணத்தில்
பாதையில் புறக்கண்களும்
தன் பாதியில் அகக்கண்ணும்

நிறைந்த பௌர்ணமியாய்
நிறம் கொள்ளும்
உயிரணையும் மூச்சுவேர்

எழுதப்படாமலே
புரட்டப்பட்ட பக்கங்களின்
வெற்றுநாளையும் நிரப்புகிறது
வந்துவிழும் வாக்கியங்கள்

சமரசம் கொள்ளமுடியாமல்
மறுதலித்த மனதின்
மறுபக்கம் நிரப்பட்டது

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது

போதுமெனும் சொல்லை
கண்கள் பிரசவிக்க விழைகிறது
ஆயினும் உதடுகளின்
வேண்டாம் எனும் கட்டளைக்கு
கீழ்ப்படிந்து இமைவேலிப் போடுகிறதே...

------------
படைப்பாளி லதா நாகராஜன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சிவபெருமாள் கிருஷ்ணன்

View

மாதாந்திர பரிசு

அ. முத்துசாமி

View

Showing 681 - 700 of 761 ( for page 35 )