logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 621 - 640 of 735

Year
Award
   

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - நெய்தல்

0   945   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - தோழன் பிரபா

0   975   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - ம.அகதா

0   853   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - கோ.ஶ்ரீதரன்

0   1009   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - ரா . ரமேஷ் கலை மித்ரன்

0   936   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • மூன்றாம் பரிசு - மஹா பர்வீன்

0   1129   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • மூன்றாம் பரிசு - குறிஞ்சி நாடன்

1   955   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • மூன்றாம் பரிசு - பொள்ளாச்சி முருகானந்தம்

0   866   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • இரண்டாம் பரிசு - ம.கனகராஜன்

0   907   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • இரண்டாம் பரிசு - மனோ அரசு

0   913   0  
  • November 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • முதல் பரிசு - மௌனன் யாத்ரிகா

0   1003   0  
  • November 2018

கவிச்சுடர் விருது

  • ஜபீர்

0   1241   0  
  • November 2018

மாதாந்திர பரிசு

  • சௌவி

0   1392   1  
  • November 2018

மாதாந்திர பரிசு

  • சூர்யநிலா

0   834   0  
  • November 2018

மாதாந்திர பரிசு

  • காதலாரா

0   920   0  
  • November 2018

மாதாந்திர பரிசு

  • ஜமீல்

0   925   0  
  • November 2018

மாதாந்திர பரிசு

  • முகில் நிலா தமிழ்

0   1104   0  
  • November 2018

கவிச்சுடர் விருது

  • ஜானு இந்து

0   1194   0  
  • October 2018

மாதாந்திர பரிசு

  • நஸ்புள்ளாஹ்

0   903   0  
  • October 2018

மாதாந்திர பரிசு

  • கயல்

0   870   0  
  • October 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

சிறப்பு பரிசு - தோழன் பிரபா

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

சிறப்பு பரிசு - கோ.ஶ்ரீதரன்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

சிறப்பு பரிசு - ரா . ரமேஷ் கலை மித்ரன்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

மூன்றாம் பரிசு - மஹா பர்வீன்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

மூன்றாம் பரிசு - குறிஞ்சி நாடன்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

மூன்றாம் பரிசு - பொள்ளாச்சி முருகானந்தம்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

இரண்டாம் பரிசு - ம.கனகராஜன்

View

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

முதல் பரிசு - மௌனன் யாத்ரிகா

View

கவிச்சுடர் விருது

ஜபீர்

கவிச்சுடர் (Z) ஜபீர்  ஒரு அறிமுகம்
***************************************************
இறந்த நதியில் மீனின்
எச்சங்கள் கவிழ்ந்த நதியை
மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
புதைந்த மீனின் நிழலை
தூண்டிலிட்டுக் கொண்டிருக்கிறான்
நிரம்பிய நதியில் வலையிழந்தவன்

தன் எண்ணவோட்டத்தில் எழும் அத்தனை வடிவங்களையும் அழகான கவிதை வரிகளாகப் பதிய முயற்சிக்கும் ஒரு படைப்பாளி. நமது படைப்பு குழுமத்தின், 2018 நவம்பர் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் முகமது (z) ஜபீர் இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பை பிறப்பிடமாகவும், ஓமான் மஸ்கட்டை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள கவிஞர், ஆரம்ப நாட்களில் அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தாலும், வேலை முனைப்பின் காரணமாக தொடராக எழுத முடிவதில்லை என்பது அவரின் பெரும் ஆதங்கம்.

படைப்பில் ஏற்கனவே மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் பெற்றவர். சிறந்த கவிதைகளை தன் ஆக்கமாகத் தரும் கவிஞர் (Z)ஜபீரை கவிச்சுடர் விருதின் மூலம் பெருமை செய்கிறது, நமது படைப்பு குழுமம்.

கவிச்சுடர் (Z) ஜபீர் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் உள்மன அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு நுணுக்கமாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

இவரது கவிதைகள் இயற்கை மற்றும் வாழ்வியலை மட்டும் சார்ந்து இருக்காமல் சில படைப்புகள் அகம் சார்ந்த சிந்தனைகளோடும் சூஃபி வகைமையோடும் நகரக்கூடியவை அப்படிப்பட்ட அகம் சார்ந்து இருக்கும் படைப்புகள் இவரது தனித்தனமைகளை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். இந்த கவிதைப் பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும் படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது.

சூபித்துவமான சிந்தனைகளோடு மரணத்தையும் காதலையும் சுமந்து செல்லும் இவரது இந்தக் கவிதையின் வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. நினைவுகளால் நிரம்பும் கோப்பை...

@

ஒரு பிரவாகத்தின் பெருக்கோடு
என் மரணம் உன் கதவை தட்டலாம்

என் விடை பெறுதலின் வானம் என்
இறகை உதிர்த்து விட்டுப் போகலாம்

நழுவும் காலத்தின் அந்தியிலும்
சரிந்த வாழ்க்கையின் முனையிலும்
மரணம் காயமாக பூத்திருக்கிறது

அறுந்த உன் விரல் வழி
உன் கருணை மீட்டதா
அவமானங்களில் அமரும் உடலில்
மீதமிருப்பது வெறும் நிர்வாணமே

நீ தோல்விகளைப் பரிசாக கடத்திய
நாளொன்றில் மரணத்தின் தூரம்
என் கதவின் அழைப்பு மணியை
அழுத்திய வண்ணம்
என் வாசல் படிகளில் இறங்கிச் செல்லும்

உன் காலடி ஓசை
என் சுவாசத்துக்கிடையில் ஓர்
ஊசியாய் நுழைகிறது

உயிர் கரை சேரா மௌனத்தின்
பள்ளத்தாக்கில் புதையுண்டிருக்கும்
மரணத்தின் குரலில் மீள்தல் என்பது
ஒரு வார்த்தையல்ல

இல்லாமல் போன
ஒரு இழவு வீட்டின் வெறுமையை
நீ அறிந்ததே இல்லை

என் இழப்பின் வலி உன் இருப்பை
தீர்மானிக்கும்

உடல் பொய்யாக உருவம் தொலைந்து
உன் மனச்சுவரில்
என் நிழற்படம் மறந்து போன
என் பால்யத்தின் கதை சொல்லும்

விதியைத் துரத்தும் ஒரு அந்திமத்தின்
கணத்தில் நுழைகிறேன்
இருப்பிட்கும் இறப்பிற்கும் முடிச்சு விழும்
பிழையற்ற தருணத்தில்
திறந்து வை எனக்கான உன் வானத்தை

வேர்களின் வனாந்திரத்தில்
என் விதைகளைத் தொலைத்த திசைகளில்
உயிர்த்தெழுகிறது நமக்கான விருட்சம்

என்னால் நிரப்ப முடியாத உன் நாட்களும்
காலங்களும் ஏதுமற்றதாகிப்போய்
பொருளற்ற காலத்தின் பெருவெளியிலும்
பொருளுனரா வாழ்க்கையிலும் நாமற்றதாய்
வழிந்து கொண்டிருக்கிறது நம் காலம்

@
சமாதானம் என்பது சாயம் தோய்ந்த துணியாகவே இருக்கிறது.. மடாலயங்களும் புத்த விகாரங்களும் தத்தம் கொள்கைகளைவிட்டு நழுவிச்செல்கின்றன... வேதனையில் மடிகிறது இக்கவிதை..

மறுபடி விடைபெயருக்
கொண்டது வெற்று
சமாதானம் புதையும் நீதியில்
பூக்கிறது மாயணங்கள்

யார் தாகம் தணிப்பதற்கு
இக்கோடாரிகள் காயங்களை
அறுவடை செய்கிறது

எஜமான் கட்டளையேந்தி
நாவை விற்று நம்பிக்கை
விதைக்கிறார்கள் நம் திசை
உறங்கா தன் இனம்விற்ற
எம் தலைவர்கள் உங்கள்
நம்பிக்கையின் மீதமரும்
முட்களில் அவ்வப்போது
எங்கள் குருதியின் கறைகள்
நீங்கள் அதை விபத்தெனக்
கூவி வாந்தியெடுக்கிறீகள்

நாம் தோற்பதென்னவோ
எங்களை வெறிகொள்ளவா
எதுவரை எம் சுவடுகளின்
இருப்பைத் தொலைக்கும்வரை
அவர்களின் செவிகளில்
அறையப்பட்டுவிட்டது புத்தன்
சரணம் சிங்களன் தேசம்

என் சகோதர இனத்தின்
குருதியின் புலால் ருசியை ருசித்த
இவ்வேட்டை நாய்கள்
எம் குருதியை நுகர்கிறது
வன்மத்தின் மிகையால்

பௌத்த விகாரைகள்
அவ்வப்போது புத்தனை
வாளால் போதித்து அகிம்சையை
சிலுவையேற்றிய கோட்சேக்களின்
கூடாரமாக மாறிவருகிறது

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
எம்திசை நோக்கி எப்போதும்
ஒரு தோட்டா இலக்குத்தவறாமல்
குதறும் குரூரத்துடன்
காத்துக்கிடக்கிறது

இவ்வினஅரிப்புக்கு அரசும்
அவ்வப்போது கைதட்டுவதுதே
வேதனை இனி நாமும் மாவீரர்களை
விதைப்போம்

@

உரிமைகளுக்கான வாய்ப்புகள் ஜன நாயகத்தின் பெயராலேயே மறுக்கப்படுகின்றன. கைகளைக் கட்டிவிட்டு கைதட்ட சொல்லும் அவல அரசியலின் பின்னணியில் இக்கவிதை

-----
உங்கள் லாப நஷ்டங்களை
தீர்க்க எப்போதும் எங்களை
ஓர் பொரிக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள்

உங்கள் நாணய சுழற்சிக்கு
நாங்களா பகடைகள்

விதிகளும் சரத்துகளும் தீர்மானிக்கப்பட்ட பிறகே
கட்டை விரல் ஒப்புதலுக்கு
சலுகை தருகிறீர்கள்

உங்கள் கைக்குலுக்கலின்
விவாதங்கள் சவங்களையே பரிந்துரைக்கிறது

எங்கள் மறுப்பின் கேள்விகளை
களையெடுக்க எமக்கே கட்டளையிடுகிறீர்கள்
கையசைக்கும் எம் நம்பிக்கைகள்
பின்னால் கட்டப்படுகிறது

உப்பையிட்டு வளர்க்கும்
பச்சோந்திகளின் பசிக்கு
எங்கள் மாமிசங்களா மூலதனம்

முடிச்சு விழும் எங்கள்
சுயங்களின் முகங்களுக்கு
கருப்புத்துணி நெய்யப்படுகிறது

எளிதாய் கிடைத்துவிடுவதில்லை
உரிமைக்கான வாய்ப்புகள்


@ மகளைப் பிரிந்து வாடும் ஒரு தகப்பனின் தனிமை நெருப்பு அறையின் தவம் ஆகும். பழகிய நாட்கள் பாழாய் வந்து பாடு படுத்தும். சிறகுகள் வெட்டியென சிந்திக்கச் செய்யும்.. இந்தக்கவிதையும்...

********மகளெனும் தேவதை**********

என் உயிரின் வளையத்தை
உனக்காகவே தானம் செய்வேன்
தினமும் கேவல்கள் இல்லாமல் க
தவடைத்திட முடிவதில்லை
நீ இல்லாத அறையின் கதவுகளை

என் திறந்த வீடு
நீயற்று பூட்டியே கிடக்கிறது
வெறுமையின் நிழல் பூத்த அறைகளில் மௌனம் உலவுகிறது

நீ கடந்த வெற்றிடங்களில்
இடறும் என் இருப்பிடம் சாவைப்பற்றிய
கனவுகளை வரமெனப்பெறுகிறது

இயல்பாகிட்ட தனிமையின் குரல்
அரூபத்தில் புலம்பிக்கொண்டிருக்கிறது
வெறிச்சோடிய சுவர் முழுவதும்
உன் துயர் விதைத்த உரு
மேலும் கீழுமாய் நகர்கிறது
என்னுள் இருக்கும் உனது குரல்
என் மீள்வை மீதம் வைத்திருக்கிறது

என் துயரின் ஓசைகளுக்கான சொற்களோ
செவிகளோ இல்லை
உன்னுடன் பேசிக்கொள்ளாத
வார்த்தைகள் வீடெங்கும் முளைத்திருக்கிறது
என் அழைப்பை நிரப்ப மறுத்த அவை
தருவதாயில்லை நீ
விட்டுச்சென்ற இருக்கைகளை

ஓர் பிணத்தனிமை என்னை மென்றுக்
கொண்டிருக்க மதிய உணவுகள் சுவை
தரவில்லை காலையுணவுப் பருக்கைகளை
கட்டெறும்புகள் சுவைக்கிறது
பசிக்கருந்திய கவலத்தில் பழைய ருசி

உன் நினைவுகள் பூத்த கடும் சாம்பல்
நிற விடியலில் முன்நெற்றி முத்தங்கள்
இல்லாத காலை நோவுகள் போக்க
போக்கற்று என்னை நானே மறந்து விடுகிறேன்
நீயே என் கடைசிச்சொட்டுத் துயர்

உன் சிறு பிடிவாதங்களைக் கடந்து
போக முடிந்ததில்லை அழுத்தும் உன்
பார்வைகள் என் பெருவாழ்வை
சங்கடப்படுத்தி விடுகிறது உன்
சிறு கோபமும் என்னை வென்றுவிடுகிறது
நானென்பதும் நீதான் நீயேதான்

தினமும் உனக்கொரு இரவை
சுமந்து வருகிறேன் பரிமாற
உன் விசாரிப்புகளில்லாததால் அவ்விரவுகள்
தவளைகளின் மேய்ச்சல் நிலமாகிறது
தூக்கமோ வழமைபோல்
என் புறமுதுகில் சுமை பதிகிறது

தலையணை இடுக்குகளில்
உறக்கமற்ற இரவுகளின் நகங்கள்
பழுதான விடியலின் வெளுப்பை
கருப்பாய் சாயமேற்றுகிறது

@

இறுதி உறக்கத்தின் முன் நிகழ்த்தும் மௌன போராட்டம் இரக்கமற்று சுடரும் வலியை இந்தக் கவிதை வலியுடன் ஏந்திக் கொள்கிறது..

ஓர் சாவின் கண்களில்
வெறிக்கிறது இருப்பின்
கடவாத காலம் மீளாத பயம்
ஆட்கொள்ளும் தனித்த அவலம்
வெறுமையின் கையறு நிலை
ஆழப்புதைக்கும் இருள்
இருளுக்குள் ஒலிக்கும்
வினையின் முனகல்
நெருப்பை விழுங்கிய கேவல்
ரத்தம் பருகும் உடல்
உறையும் மூச்சுக்கயிறு
உடல் உளுத்த பின்
மரணம் பெயர்துறக்கும்
இறுதியில் உயிர் விழுங்கும்
கடைசி துளியில் குரல்வளையில்
மௌனமாக நூல் கோர்க்கும்
இறுதி உறக்கம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலும் கவிஞரின் அற்புதமான கவிதைகள் தொடர்கின்றன உங்கள் பார்வைக்காக...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எம் நிர்வாணத்தை
ஒப்படைக்கிறீர்கள்
ஆடை உரிகிறவர்களிடம்

@
*** ஓர் அந்திமத்தின் அழுகுரல் ****

மகனே உன் மீதே என் சதைவற்றிய
வயோதிகத்தைச் சுமந்திருந்தேன்
என் தழும்புகளின்மேல் உன்னை
களிம்பாய் தடவியிருந்தேன்
உன் துணை நோக்கி என் சுவடுகள் நழுவும்போது
எனக்கான பக்கங்களை மூடிவிட்டாய்

தளர்த்த என் சிம்மாசனம் இன்று
அநாதை விடுதியில்
என் கூந்தலின் பூக்கள் சருகானபோதும்
எனது வண்ணங்களைக் கலைத்தபோதும்
உன் தந்தையை நீ சிதையூட்டி திரும்பியபோதும்
துயிலாத என்னுயிர் கெடாமலிருந்தது
நீயெனும் ஒரே வாசகமே என் சிதையை அணைத்தது

இறுதியாகப் புலன்கள் மரித்த என் சவத்தை
அநாதை விடுதியில் அறைந்த அன்றே
என் உடலை மென்ற உன் பிரசவம்
உயிர்நோக வலித்தது
முதலும் கடைசியுமாய் பூமித்தட்டில்
நானிட்ட பிச்சை நீ
துர்குப்பையாய் எறிந்துவிட்டாய் என்னை
உயிரிருந்த இடத்தில் உடலில்லை
உடலிருக்குமிடத்தில் உயிரில்லை மகனே

இனி என் மரணத்தின் நிழல்வரை
தேங்கிக்கிடக்கும் உன்னைப் பெற்ற ஊனம்
என் கருவறை கொப்புளங்களை
அறிந்ததில்லை நீ மகனே

இன்றும் என் இமைகளில் தேங்கிக்கிடக்கிறது
நீ அம்ம்மாவென முதல்முதலாய் அழைத்தபோது
விந்திய கண்ணீர் துளிகள்
அன்று பாலொழுகிய என் மார்புகள்
இன்று விறைத்துபோயிருக்கிறது

இனி எனதழைப்பு
அநாதை தாலாட்டு மறந்த கட்டில்கள்
இருள் படிந்த விளக்குகள்
தனிமை தூவிய இருக்கைகள்
தட்டேந்திய பருக்கைகள்
செவியெல்லாம் என்னைப்போன்ற குரல்கள்
ஆற்றிடாத அனாதைக் காயங்கள்
உறங்க மறுக்கும் என் இரவுகள்
உன் முகமாய் உரு கொள்கிறது
வேடிக்கை பார்க்கும் நீயற்ற இச்சுவர்
மரணத்தின் அழைப்பை உள் நுழைக்கிறது

உன் முகமற்ற முகமே என் பலவீனம்
உன்னைப் பற்றியே உளறிதீர்க்கிறேன்
நீ துயிலாத இவ்விரவிடம்
எனது இப்போதைய கவலையெல்லாம்
மரணமொழுகும் இவ்வறை
நாளை உனதாகிடக்கூடாதென்பதே

இறுதியாக நான்
மயானம் சுவாசிக்கும் நாளொன்றில்
நிரந்தரமாய் என் தவிப்பின்மீது
ஓர் பாறாங்கல்லை இறக்கி
பாவத்தின் சிலுவையை சுமந்து செல்கிறாய்
மூடிய காத்திருப்பின்மேல் என் மரணம் நகர்கிறது...

@
வாழ்த்துக்கள் போய்வா சகி
எந்தக் காதலில் கண்ணீர் இல்லை
வென்ற காதலும் கண்ணீர்
மீண்டதா நம்பிக்கை நரைத்ததொரு
கேள்வியில் உன் உள்ளங்கை இடைவெளி விரிய
நம் சுவாசங்கள் சுருங்கி மரணம்
நீ விட்ட பாதையை நிரப்புகிறது

உன் பிடி தளர்ந்த அடர்ந்த இரவில்
மூச்சுக்குமிழ் தொண்டை வரை இறுகி
சுருக்கம் விழும் சுவாசத்தில் நீ
வழியனுப்பிவிட்டு கடைசியாக பரிமாறிய புன்னகையை
ஒரு முறை மீட்டுக்கொள்கிறேன்
அதன் வெளியெங்கும் உதிர்ந்த பிரியத்தின்
செதில்கள்

என் விரல் உதறிக் கோபித்து
உனை திறந்து அழுத கணங்களில்
என் வலிகளைத் துறந்து உன்
விம்மல்களைத் துடைத்த மறுகணம்
என் தோள்சாய்ந்த அச்சுமைகள் என்னை
உயிர் வதைத்து அரைக்கம்பத்தில் ஏற்றியது

உன்னிடம் திருடிய கைக்குட்டையில்
உலர்ந்த உன் வியர்வையின் நெடி
உன் நேற்றைய சாயல்களை
ஜனனித்துக்கொண்டிருக்கிறது

உன் உருவம் நழுவிய என் உடலற்ற தருணங்களில்
எஞ்சியிருப்பது வெறும்
அசைவற்ற சதைப் பிண்டமே
துயரத்தின் லாகிரியால் இறுகிய கொடுந்துயரை
வெகு இழலகுவாக நிரப்பிவிடுகிறாய்
உன் புறக்கணிப்பில் மனம் பிசகிய வெற்றிடங்களில்
வலைபின்னுகிற சவத்தின் துயரம் நீ ........

என் நினைவில் விரியும் உன் அந்தியில்
நீ முழுவதுமாய் உலாவுகிறாய்
என்னைக் கடந்த பின்பும் எனதிருக்கையில்
முழுவதுமாய் நிறைகிறாய் உன்னை
விடச் சிறந்த வேறொன்றும் என்னிடமிருந்ததில்லை
பெறுவதற்கும் தருவதற்கும்

நேசங்கள் வற்றிய உன் மலட்டுத் தேகத்தில்
மலர்வதற்கு இனி முட்கள் தவிர்ந்து
வேறென்ன இருக்கிறது போய்வா சகி
உன் பயணச்சுவட்டின் சுழியில் மூழ்குமென் இறுதி மூச்சு
----------------

படைப்பாளி (Z) ஜபீர் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

முகில் நிலா தமிழ்

View

கவிச்சுடர் விருது

ஜானு இந்து

கவிச்சுடர் ஜானு இந்து  ஒரு அறிமுகம்
***************************************************
செப்பனிடப்படாத பாதையொன்றின்
மேடு பள்ளங்களென
நீட்டியோ குறுக்கியோ
வலுக்கின்ற வார்த்தைகளின்
வன்மங்களால் நெஞ்சின் ஆழம்வரை
இறங்கிப்பரவுகிறது கசப்பின் துளிகள்...

கவிதையென்பது ஆர்வத்தால் துளிர்த்தாலும் ஆழம் இருக்கவேண்டும். எதையோ சொல்லிவிட்டு போவதெல்லாம் கவிதையாகாது. சொல்லவேண்டியதை இதயத்தினருகில் சொல்லவேண்டும். கவிதாயினி ஜானு இந்துவின் கவிதைகள் இதில் சளைத்ததல்ல.

நமது படைப்பு குழுமத்தின், 2018 அக்டோபர் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் ஜானு இந்து அவர்களின் இயற்பெயர் ஜான் இந்திரா மேரி என்பதாகும். முதுநிலை சைக்காலஜி படித்திருக்கும் கவிதாயினி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான பணியினை செய்து வருகிறார்.

கடந்த 15 வருடங்களாகச் சமூக மேம்பாட்டு ஆய்வுப்பணிகளோடு பயிற்றுநராகவும் பணி புரிகிறார். இவரது சொந்த ஊர் மதுரை.

பள்ளி நாட்களில் இருந்தே கவிதைகள் எழுதுவது தனது ஆர்வம் என்று சொல்லும் கவிதாயினி, கடந்த மூன்று ஆண்டுகளாக கொஞ்சம் தீவிரமாகவே எழுதி வருவதாகப் பெருமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரது படைப்புகள் இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லையென்றாலும் நமது படைப்பு குழுமத்தின் வழியாக நிறைய வாசகர்களை அவர் பெற்றிருக்கிறார்.

அவரது படைப்புகள் விரைவில் நூல்வடிவம் பெற படைப்பு குழுமம், அவரை வாழ்த்துகிறது.

கவிச்சுடர் ஜானு இந்து அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் எல்லா மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு எளிமையாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

நினைவுகளின் அடுக்குகளில் ஆறாத இரணங்களாய் அமர்ந்திருக்கும் சில நிகழ்வுகளோடு கவிதையின் கரம்பற்றி ஆறுதல் தேடுகிறார் கவிதாயினி. மேகத்துளிகளின் சப்தங்களில் உள்ளன்பின் இசையைக் கேட்கிறார். கண்களின் மொழியறிந்தவர் ஆறுதல் தேடவும் வழி சொல்கிறார்.

கூரிய அலகினால் இடைவிடாது
மரம் கொத்தும் மரங்கொத்தியைப்போல்
மனதைக் கொத்தி அரிக்கிறது நினைவுகள் ஆற்றாமையால்
.....
குருதி கசியவில்லை எனினும்
அவை ஆறாத ரணங்கள்
.....
நீர்த்தொழுகும் மேகத்துளிகளின் சப்தங்களிலிருந்து
சேகரிக்கிறேன்
உள்ளன்பினை உணர்த்துவதற்கானதொரு இசையினை
.....
உறுத்து நோக்கும் அந்தக் கண்களிலிருந்து
தெறிக்கும் உணர்ச்சிகளை
விவரிக்க வார்த்தைகளில்லை
.....
வெறுமை தாங்கிய அந்தக் கண்களில்
நான் கண்டிருக்கிறேன்
அவ்வளவு கருணை
அவ்வளவு உயிர்ப்பு
அத்தனை நேசம்
அவ்வளவு மனிதம்
அவ்வளவையும் தொலைக்க நேர்ந்த
அந்தத் தருணத்தை எப்படிக் கடந்திருப்பாய் ???
.....
கடந்த தடங்களின் எச்சம் வடுக்களின் படிமம்
.....
வலியறியா மனதொன்று எங்குமில்லை
வலிபுரியா நேசம் நிஜமுமில்லை
.....
நிறைந்திருக்கிறது என்னுள்
வெறுமை துடைத்தெறியும் நேசம்
பகிரலாம் வா
இன்னும் இருக்கிறது வாழ்வு
விரிக்கப்படாத சிறகுகளோடு..

@@@
ஆறுதல் மொழிக்கு இனிமையைத் தேடுபவர்களின் மத்தியில் முரண்களின் வாசலில் கவிதையைத் தொடங்கி அவலங்களின் மொழியில் ஆறுதல் தேடுவதும் புதுமைதான்...

*

காலுக்குக் கீழே நழுவும் வானம்
தலைக்கு மேலே விரிந்த பூமி
இன்னும் கண்களுக்கு
பழக்கப்பட்டிராததொரு இருட்டு

கீழ்த்திசையில் தவறிப்படர்ந்த
சேகரிக்கவியலா ஒளிப்புள்ளிகள்
பலத்த காற்றில் உதிர்ந்த
சிறகொன்றின் அலைக்கழிப்பில்
வாழ்வின் தள்ளாட்டம்

தனித்து விடப்பட்ட குயிலொன்றின்
மெலிந்த கூவலில்
இசைதப்பியதொரு கேவல்

சாலையின் வளைவொன்றில்
கூட்டமாய் புணரப்பட்ட நாயொன்றின்
நீண்டு தொடரும் வலி நிறைந்த அழுகுரல்

தூக்கம் தொலைந்த நடுநிசியில்
கண்களை கனமாய் அழுத்தும்
கனவின் கசப்புகள்

மரம் சப்தமின்றி தனது
இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும்
நிசப்த இரவொன்றில்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அழுகை
போதுமானதாய் இருந்துவிடுகிறது
இத்தனிமைத் துயரினை சமன் செய்ய...

@@@

ஆறுதலின் சாய்வு கூடச் சுருங்க செய்யும் சூத்திரம் எனச் சொல்லும் கவிஞர் எல்லா வாசங்களையும் கடக்க கற்றபின் மரணத்தின் வாசம் பெரும் போதை என்றும் சொல்கிறார்...

*

தோள் சாய்த்துக் கொள்தலென்பது
எவருமறியாமல் வெளிதனை
சுருங்கச் செய்யும் சூத்திரம்

அரவணைத்த கரங்களின்
விரல்வழி நீளும் சவுக்கின் நுனியில்
இறுக்கி முடியப்பட்ட சிறகுகள்

சரணடைதலின் பாவனைகளால்
செதுக்கப்படும் சிலுவைமரம்

உறுத்தாத பார்வைக்குப் பின்
இரைதேடும் கழுகொன்றின் எத்தனிப்பு

அத்தனை கடினமில்லை
தீர்ந்து கொண்டிருத்தலின் வாசமறிதல்

எல்லா வாசங்களையும் கடக்க கற்றபின்
மரணத்தின் வாசம் பெரும்போதை...

@@@

சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஓர் உலகம் இருப்பதாகச் சொல்லும் கவிஞர் அதனை வகைப்படுத்தவும் தவறவில்லை. அலங்காரமென்பது வெறும் மேற்பூச்சுதான்..அதன் புழுக்கங்களை இந்தக் கவிதையில் வாசிக்கமுடிகிறது...

*

சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்
மௌனித்துக் கிடக்கிறது
முரண்களால் செதுக்கப்பட்ட ஓர் உலகு...

புழுக்கம் நிறைந்த இரவுகளின்
கண்ணீர்த்துளிகளால் எழுதப்பட்டிருக்கலாம்
இதுவரை வாசிக்கக்கிடைக்காத
எத்தனையெத்தனையோ கதைகள்...

புன்னகைகளின் சாயல் படிந்திருக்கும் தூண்களில்
பதிந்திருக்கலாம் காதலின் கை ரேகைகள்...

ஆதுரம் நிரம்பிய வார்த்தைகள் பொதிந்திருக்கலாம்
சுவர்களின் சிறு விரிசலொன்றில்...

நிறைந்த நேசமோ பகிர்ந்த காமமோ
கோபம் உதிர்த்த வார்த்தைகளோ
வார்த்தைகளைக் கடந்த கண்ணீரோ
சிதறிக்கிடக்கலாம் தரையெங்கிலும்...

ஒரு உறவோ ஒரு பிரிவோ
ஒரு பிறப்போ அல்லது ஒரு இறப்போ
நிகழ்ந்திருக்கலாம் அல்லது நிகழ்த்தப்பட்டிருக்கலாம்...

இரவின் வாசம்
களிப்பின் சுகந்தம்
கண்ணீரின் கரிப்பு
முத்தத்தின் ஈரம்
முனகலின் வேதனை
இயலாமையின் வெறுமை
என எதனையேனும் உள்வாங்கியிருக்கலாம்...

வாசல்களில் தெளிக்கப்பட்ட அலங்கரிப்பின்
வண்ணங்கள் போலற்றது
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னாலான உலகு...

அது ஒரு மௌனியைப்போல்
பலவற்றின் சாட்சிகளை தன்னுள் புதைத்து வைத்துள்ளது...

வெளி வாசல்களின் அலங்காரங்களால்
தீர்மானிக்கவியலாதவை
சாத்தப்பட்ட கதவுகளின் பின்னாலுள்ள உலகு...

@@@

விலங்குகளுக்கு எதிர்பார்ப்புகள் என்று ஒன்றும் இருப்பதில்லையென்று சொல்லும் கவிஞர் இரையே கிடைக்காதபோது இரை தருபவனையே அவை தன் இரையாகத்தான் பார்க்கின்றன... மனிதன் மட்டும்தான் விசுவாசத்தைத் தேடுகிறான் என்று சொல்லும் இந்தக் கவிதை சிந்தனையின் மகுடம் என்று சொல்லலாம்...

*

உயிர்களைத் தின்று செரித்துக் களித்திருக்கும்
விலங்கின் பார்வையில் இரைக்கும்
இரையிடுபவருக்கும் வித்தியாசம் ஒன்றுமிருப்பதில்லை

பெரும்பசிப் பொழுதுகளில்
உண்மையில் அது இரையிடுபவரையே
உறுத்து நோக்குகிறது

உணவிட்ட கைகள் அதன் பார்வையில்
சதையுள்ள ஒரு எலும்புத் துண்டு என்பதைத் தவிர
வேறொன்றும்
அறிந்திருக்க நியாயமில்லைதான்

ஒரு சிறு கொடுத்தலுக்குப் பின்
விசுவசிக்க வேண்டும் என்பதான
நமது அறியாமை அதனிடத்தில்
எப்போதும் இல்லை

அதனது அதனதன் இயல்புகளோடு
இயங்கிக் கொண்டிருக்கும் போது
நாம் மட்டும்தான்
நமது எதிர்பார்ப்புகளை
நம் விருப்பங்களுக்கேற்க
கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம் நன்றியறிதலின் பெயரால்...

@@@

மேலும் கவிஞரின் அற்புதமான கவிதைகள் தொடர்கின்றன உங்கள் பார்வைக்காக...

*


விருப்பங்களுக்கும்
விலகியிருத்தலுக்குமான இடைவெளியினை
எவ்வார்த்தைகளால் விளிப்பது

பிம்பங்களின் சாயல் கொண்டு தீர்மானித்தலில்
எத்தனை நியாயம் இருந்துவிடக்கூடும்

இருள் படர்ந்த கானகம்
திசை தவறிய பாதைகள்
ரகசியமாய் சேமித்த வார்த்தைகள்
மறைத்து வைக்கப்பட்ட அன்பு
மறுதலிக்கப்பட்ட. நேசம்
உறுத்தியபடிக் கிடக்கும் பொய்கள்
வலிபொருந்திய நிராகரிப்பு

நீளும் பட்டியல்களுக்கிடையே
இக்கணம் உள்ளோடும் நடுக்கம்
ஆண்டாண்டு காலமாய் சேர்த்து வைத்த
விலக இயலாத ஒரு பிரியம்

அலைவதும் தொலைவதுமான
அலைக்கழிப்பினிடையே
சுயதீர்மானங்களில் ஏதுமில்லை
ஒளியின் திசைக்கேற்ப உருமாறும்
பிம்பங்கள் வெறும் பிம்பங்கள்தான்
அவை பிரதிகளல்ல

நிஜங்கள் வேறாகவும் இருக்கக்கூடும்...
----

இனி எதுவுமில்லை என்ற சொல்
கவனமாய் தீட்டப்பட்ட கத்தியின் கூர்முனை

யாரோபோல் வேடிக்கை பார்த்து நகரும்
நேசம் தண்டித்தலின் ருசியறிந்த ஞானம்

நினைவின் வெளியெங்கும் தூவப்பட்டுக் கிடக்கும்
கவனமாய் தவிர்க்கப்பட்ட சொற்களுக்குள்
மனசு வலிக்கும்படியான
ஒரு பேரழுகையின் தனிமை துயர்

சிரத்தையுடன் பின்னப்படும்
வலைகளுக்கு சிதைபடும் சிறகுகள்
குறித்த கவலையேதுமில்லை

புறக்கணிக்கப்படும் நேசம் மரணத்தைக்காட்டிலும்
வலி பொருந்தியதாய் இருக்கலாம்
ஆனால் அது உள்ளோடித்திரியும் உதிரம்
அதற்கு மரணமென்பதில்லை...
--------

சுடு மணலில் அலையும் வெற்றுப்பாதங்களின்
பெரும் அவஸ்தையென உள்ளிறங்கி
அலைகழிக்கிறது துயருற்ற பொழுதின் தனிமை...

மேலும் கீழுமாய் ஏறி இறங்கி
சுவாசத்தை இடம் பெயர்த்தும் வறண்ட
நெஞ்சக்கூட்டிலிருந்து வடிந்து விட்டிருந்தது நீர்மை...

என்ன பேச என்கிற கேள்விக்கு
எதையாவது பேசேன் என்பதான பதிலில்
கவனமிழக்கிறது பகிரவென சேமித்த அத்தனையும்...

பிரியமானவரென வரையறுக்கப் பட்டவரது
இருத்தலின் மேல் நிராகரிக்கப்பட்ட அக்கறை
இருவரின் இருப்பையும்
கேள்விக்குறிக்குள் இட்டு அடைத்து விடுகிறது...

முழுதாக எதையும் நேசிக்க முடியாத போது
முழுதாக வாழவும் முடியாமல்தான் போய்விடுகின்றது...

தனிமையை இழுத்தணைத்தபடி தவித்துக் கடந்த தாகப்பொழுதுகளை,
நிறைந்து வழிந்த ப்ரியத்தை,
சேர்த்து வைத்த முத்தங்களை,
அடர்இரவின் கரித்த கணங்களை, கண்ணீர்த்துளிகளை,
கொன்று புதைத்த ஞாபகங்களை
இப்படி எத்தனை எத்தனையோக்களை
முழுங்கி முழுங்கிச் செரித்து
காத்திருப்பின் கணங்களைக் கரைத்து முடித்த நிமிடம்...

நீ திரும்ப வருகிறாய்...

இப்போது என்னிடம் தீர்ந்து விட்டிருக்கிறது காதல்...

---

இருளுக்குள் ஒளியும் ஒளிக்குள் இருளுமாய்
எனது தனிமையினை ஊதிப்பெருக்கிய
நட்சத்திர இரவொன்றில்
கீழ்வானின் அடர்கருமைக்குள்
பிசாசென அலைகிறது மனம்...

உனக்கானதொரு வாழ்தல் கணத்தை
உன்னுடனானதொரு வாழ்வியல் பொழுதை
உருவாக்கும் பொருட்டு மிக நேர்த்தியாய்
நேசமுடன் கட்டமைக்கத் தொடங்குகிறேன்...

நீயறியாத கனவுகளும் என்னுள் உண்டு...

சமூக மதிப்பீடுகளால்
இறுக்கிக்கட்டப்பட்ட பெண் வாழ்விலிருந்து
அவளின் ப்ரத்யேகக் கனவுகளைக்
கண்டறியும் அகப்பார்வை அநேகருக்கும் போலவே
உனக்கும் வாய்க்கவில்லை...

தடவுதல்களாலும் ஒருசில முத்தங்களாலும்
காதலை நிறைத்துவிட முயற்சிக்கிறாய்...

முற்றுப்பெறாமல் பெண்ணொருத்தியுள்
எரியும் தாகத்திலும் முற்றுப்படுத்தாத ஆணிண்
அலட்சியத்திலும்
நிறைக்கவியலாததொரு தவிப்பென இன்மைகளுக்குள்
ஆட்பட்டுவிடுகிறது காதல்...

நட்சத்திரங்கள் தொலைத்த இரவுகளில் அல்லாது
வெண்ணிலவு நாளொன்றின் மென்கமழ் வாசத்தில்
ஒரே ஒரு முறை புன்னகைத்துப் பார்...

ஒரு வேளை புரிபடலாம் காதலும்
காதலியேந்திக் கொண்டிருக்கும் கனவுகளும்...

-----------

கடைசிவரை கழுவேற்றவியலாத
பாவச்சுமையொன்று உறுத்தியபடியே
அழுந்திக் கிடக்கிறது உள்ளறுத்தபடி...

பாவத்தின் ஈடாய் காணிக்கையென
ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்
வெப்பமேறி உருகிவழிந்து உறைநிலைத்த பிறகும்
தணிவதாய் இல்லை உள்ளோடும் எரிநிலை...

எதிலிருந்து தொடங்க???
இல்லை எங்கு முடிவுற???
தொடங்கும் போதே முடிந்து போவதும்
முடிவிலிருந்து தொடக்கம் பெறுவதுமான
இன்மைக்குள்
குழம்பிக்கிடக்கிறது ஆற்றுப்படுத்தவியலா
பாவமிழைத்த இதயமொன்று...

அந்திமகால நெருக்கங்கள்
கடந்து போகும் அவசரங்களில்
விரைந்து நகர்கின்றன...

இளைப்பாறுதல் கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்
பாதைமுழுக்க உறுத்தும் முட்களுக்கிடையே
எங்கேனும் தென்படலாம்
கருணை நிறைந்த சிறு புன்னகையொன்றும்...

துரோகங்களினால் தொலைந்த வாழ்வில்
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறது
நேசத்தால் தொலைத்த ஒரு பெருங்கனவு...

ஆயிரம் பிரார்த்தனைகளோடு
கையளிக்கப் படுகின்ற பாவமன்னிப்புகளால்
கடந்தேறாத பாவச்சுமைகள் எப்போதும்
அழுந்தியே கிடக்கின்றன உள்ளறுத்தபடி...

---------

படைப்பாளி ஜானு இந்துவி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

நஸ்புள்ளாஹ்

View

Showing 621 - 640 of 735 ( for page 32 )