logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 581 - 600 of 727

Year
Award
   

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • மூன்றாம் பரிசு - கார்த்திக் திலகன்

0   1235   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - சே. தண்டபாணி தென்றல்

0   895   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - காயத்ரி

0   914   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - கவிஜி

0   904   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - பிறைநிலா

0   958   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - முகமது பாட்சா

0   1135   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • சிறப்பு பரிசு - லதா நாகராஜன்

0   1299   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • நயினார்

1   979   1  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • கா. அமீர்ஜான்

0   925   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • ச.ப. சண்முகம்

0   893   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • நிலவை பார்த்திபன்

0   835   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • மு.முகமது ஃபாருக்

0   1452   0  
  • March 2019

கவிச்சுடர் விருது

  • வீ கதிரவன்

0   1164   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • ஜெ.ப. செல்வம்

0   1151   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • சுரேஷ்பாபு ராசேந்திரன்

0   874   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • அ.க இராஜாராமன்

0   967   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • டீன் கபூர்

0   931   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • ஜே ஜே அனிட்டா

1   887   0  
  • February 2019

கவிச்சுடர் விருது

  • ரிஸ்கா முக்தார்

0   1662   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • கரு. கிருஷ்ணமூர்த்தி

0   871   0  
  • January 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

மூன்றாம் பரிசு - கார்த்திக் திலகன்

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

சிறப்பு பரிசு - சே. தண்டபாணி தென்றல்

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

சிறப்பு பரிசு - பிறைநிலா

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

சிறப்பு பரிசு - முகமது பாட்சா

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

சிறப்பு பரிசு - லதா நாகராஜன்

View

மாதாந்திர பரிசு

கா. அமீர்ஜான்

View

மாதாந்திர பரிசு

ச.ப. சண்முகம்

View

மாதாந்திர பரிசு

நிலவை பார்த்திபன்

View

மாதாந்திர பரிசு

மு.முகமது ஃபாருக்

View

கவிச்சுடர் விருது

வீ கதிரவன்

கவிச்சுடர் வீ கதிரவன் – ஒரு அறிமுகம்
*************************************************** 
கவிதையென்பது இயற்கையாகப் பெய்யும் மழையை போன்றது. கனவுகள் + கற்பனைகள் இருந்தாலும் யதார்த்த வெளியில்தான் அவை அதிகம் சுற்றிச் சுழன்று வருகின்றன. காணும் காட்சிகளில் அவை மகிழ்ந்து போகிறது அல்லது நெகிழ்ந்து போகிறது. அப்படிப்பட்ட யதார்த்த வரிகளின் சொந்தக்காரர்தான் படைப்பாளி வீ.கதிரவன். அவரது படைப்புகளை உன்னிப்பாக கவனித்துவரும் நமது படைப்பு குழுமம்  2019-மார்ச் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினையளித்து கௌரவம் செய்கிறது.

கவிஞரின் பள்ளிப் படிப்பு 8ம் வகுப்போடு  நின்றுவிட்டதென்றாலும், அவர் நேசிக்கும் கவிதைகள் அவரை உயர் படிப்பின் தரத்திற்கு உயர்த்தி பிடிக்கின்றன.

பிறந்தது காரைக்கால் மாவட்டம் விழிதியூர் கிராமம் என்றாலும் அவரது வாழ்க்கைப் பயணம் புதுச்சேரியில் 48 ஆண்டுகளாக தொடர்கிறது. தந்தையார் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அம்மா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குடும்ப சூழலின் காரணமாக பெயிண்டராகவும் பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் கிடங்கி நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.

அவரது கவிதைகள் சராசரி மனிதர்களின் உலகத்தை உற்று கவனிக்கிறது. 

எளிமையான சொல்லடல்களின் மூலமாக, வரிகளின் ஆழத்தை வாசிப்பவர்களின் உள்ளத்திற்கு எளிதில் கடத்திவிடுகிறார். 

கவிச்சுடர் வீ கதிரவன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
ஒரு சிறுகதையையே கவிதையாக வடித்து தந்திருக்கிறார் கவிஞர். அதுவும் அந்த கிராமத்திற்கே உரிய மொழி நடையுடன்... 

மூத்தாள் பிள்ளைப்பேறு இல்லாதவளென்று அந்த வீட்டிற்கு இரண்டாவதாக வந்த சின்னவள் பெற்றக் குழந்தையை தன் குழந்தையாகவே வளர்க்கிறாள் மூத்தாள். 

ஒரு தாயாக எல்லாவுமாக இருக்கும் மூத்தாள் , நீச்சலடிக்க போன மகன் தண்ணீரில் மூழ்குவதை கவனித்துப் பதறிக் காப்பாற்றியவள் அவனை பாசத்தின் மிகுதியால் நாலடி அடித்துவிடுகிறாள்... 

அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பிள்ளை பெத்திருந்தாதானே அருமைத் தெரியும் என்று திட்டிவிட மனமொடிந்து போகும் மூத்தாள், தூக்கிட்டு தொங்குவதற்காக செல்கிறாள்... கவிஞர் இந்தக் கவிதையை அங்கேயே நிறுத்தாமல் யாராவது அவளைக் காப்பாற்றுங்கள் என்று பதறுகிறார்... அவள் வயிற்றிலும் ஒரு பால் சிசு கருவாகியிருப்பது அவளுக்கே தெரியாதாம்... படியுங்கள் உருக்கமான இந்தக் கவிதையை..

எத்தன சுளுவா சொல்லிப்புட்டா
சின்னவ பெத்ததாச்சேன்னு
பீத்துணி அலசி குளுப்பாட்டி
சோறூட்டி தாலாட்டி
வளத்தவ நானு
நடவு நட்ட காசுல
துணியெடுத்து அழகுபாத்து
சுத்திபோட்டது யாரு
ஒடம்புக்கு முடியலன்னு
ஒத்த மூக்குத்திய அடகு வச்சி
மருந்து மாத்ர வாங்குனது
யாரு
ரெண்டாம்பு பெயிலுன்னு
மூங்கி குச்சியால 
அந்த சாத்து சாத்துனானே
அவுங்கப்பன்
குறுக்க பூந்து அடிய வாங்கி
வெம்புற புள்ளைய மாரோட
அணைச்சுகிட்ட
எனக்கா தெரியாது
பயலுவோட சேந்து
நீச்ச தெரியாம
மூழ்க கெடந்தவன
சுள்ளி பொறுக்க போன நா
எத்தேச்சயா பாத்து
காப்பாத்தி
மனசு கேக்காம பயலுவலோட
சேருவியான்னு ரெண்டு
அடி கொடுத்தது தப்புதேன்
அதுக்குன்னு புள்ளன்னு
பெத்திருந்தா அரும புரியும்னு
பொசுக்குன்னு நெஞ்சு கூட்ட
அத்துபுட்டாளேன்னு
மனசொடுஞ்சி
அந்த புளிய மரத்துல
சுறுக்கு கவுத்த மாட்டுறா
அவ
யாருவது வந்து
காப்பாத்துங்களேன்னு
மூனு நாளா உருவாகியிருக்க
அவ வவுத்துல இருக்க
பிஞ்சு கதறுவது
யார் காதிலையும் ஏன்
அவ காதுலயும் கேக்க வழியில்லதான்......

@@@

இரயில் பயணிகளுடன் பயணிக்கிறது அவரது மற்றுமொரு கவிதை. பச்சை கொடி காட்டியதில் தொடங்கும் கவிதை பரபரப்புடன் நகர்கிறது... ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் பயணம் செய்கிறார்கள்.. இவை அனைத்தையும் காட்சியாக்கும் கவிஞர்..

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......
என்று கவிதையை முடிக்கும் விதமே மிக சிறப்பு... இதோ அந்தக்கவிதை....

பச்சை கொடி அசைத்து
கிளம்பச்சொல்லும்
அதிகாரி

பெருமூச்சோடு
கிளம்ப எத்தனிக்கும்
இரயில்

கொடுத்த
தேநீருக்கு காசு 
தராதவனிடம் காசு கேட்டு
நச்சரிக்கும் அவன்

வாங்கிய
தண்ணீர் போத்திலுக்கு
கொடுத்த
மிச்ச காசினை
வாங்காமல்
ஓடத்துவங்கும் அவன்

அடுத்த
இருபத்து நான்கு
மணிநேரமும் கைதியை
பத்திரமாய் நீதிமன்றத்தில்
சேர்க்க வேண்டிய
பயத்தோடந்த புது காவலன்

கோவிச்சு
சண்டயிட்டு சும்மான்னா
என் வீட்டுக்கு
கெளம்பிடுவேன்னு
வீராப்பா அமர்ந்து
கடைசி நேரத்துல
அழச்சி போவான் கணவன்னு
நகரும் வண்டிய பயத்தோட
பாக்கும் மனைவி

தன் ஆதர்ச நாயகன
பட்டணம் போய்
பாத்துடலாம்னு வீட்டுக்கு
சொல்லாம
திருட்டு பயணம் செய்யும்
ஏழாம் வகுப்பு மாணவன்

எப்படியும்
தனக்கென 
காத்திருப்பான் காதலன்னு
வீட்டுல திருடுன
நகையோட கிளம்பும்
காதலி

கடைசி காலத்துல
தன் மனைவி அஸ்திய
மடியில வச்சி
கவலையோட கடக்கும்
அவருன்னு

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......

@@@

காலதூரத்தின் இடைவெளியில் கை மாறும் பொருட்களை கொண்ட இந்தக் கவிதை சிறியதென்றாலும்... ஞாலத்தின் பெரிது...

தொட்டு தொட்டு
மகிழ்ந்து சிரிக்கும்
பேரனின் கைகளில்
கைபேசி

தொடமுடியாத அருகின்
மூலையில் அமர்ந்திருக்கும்
தாத்தனின் கைகளில்
மரப்பாச்சி பொம்மை....

@@@

கால வோட்டம் கடந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை.. நண்பனின் நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் இந்தக் கவிதை முடிக்கும் போதும் நலமா நீ எங்கிருக்க? என்று கேட்டுவைத்து  நெகிழ்கிறது.

கம்மாகுளியல்
கால் சேற்றின்
கிண்டல்

மாங்கா
எச்சில் கடியில்
புளிப்பின் மிச்சம்

களிமண்
பொம்மை செய்ய
நமக்கு மட்டுமே
தெரியும் உருவம்

வய
நெல் உருவி
ஐஸ் தின்ன
தித்திப்பு

பள்ளி சோற்றை
ஒரு தட்டில் தின்றே
யார் கழுவ போட்டி

கிழிந்த
டவுசருக்கு
பட்ட பெயர் வச்சி
வெட்கம் மறைக்கும்
கண்ணீர்

திருவிழா
கூட்டத்தில்
கண்டெடுத்த
ஐந்து பைசா

அதில் வாங்கிய
குச்சி ரொட்டி
பொற வரிக்கி

பொங்க
நாளுக்கு காசு கேட்டு
அழுது வாங்கி
பஞ்சு மிட்டாய்
பங்கு போட்டு

அச்சு வெல்லம்
கடி கடிக்க
கடவாயில் ஒழுகி நிக்க

புறங்கை
தொடச்சி 
கால்சட்டை மிச்சம் 
வைக்க

தூக்க நடுவில்
எறும்பு
கடிச்சி வைக்க
வீங்கிய அந்த இடம்
உன்னிடம்
காட்டி நிக்க

நீ
சிரிச்ச
அந்த சிரப்பு
இன்னும் மின்னும்
கண்ணுக்குள்ள

பனங்கா
வண்டி செஞ்சி
டுர்ர்ருனு
பந்தயம் வச்சி

கிட்டி புள்ளு
விளையாட
பான ஒன்னு
ஒடஞ்சி போக
தொடப்ப அடி வாங்கினது

படிப்பாகி
நீ பட்டணம் போக
படிக்காம
நா வயல் பாக்க

செமிக்கா
ஞாபகத்த
சேத்திருக்கேன்
என் நண்பா...

நலமா நீ
எங்கிருக்க..?

@@@

பழைய இரும்பு வாங்கும் கிழவனின் நேசம் அவன்  குடும்பத்தையும் நினைக்க வைக்கிறது...

பழய பாத்திரத்துக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய இரும்புக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய பேப்பருக்கு
பேரீட்ச பழேய்ய்ய்னு
தெரு முக்க கத்தி ஏதும்
கெடைக்காம
அழும் தெரு பிள்ளைக்கு
ஒரு பேரீட்சைய கையில கொடுத்து
கன்னம் தட்டி 
சிரிக்கவைத்துப்போகும்
அந்த கிழவன் வீட்டிலும் இருக்கலாம்
பசியோடு
பேரப்பிள்ளைகள்........

@@@

ஆற்றோரம் தவழ்ந்த காதலை அழகாக சொல்லிவரும் கவிஞர் மண் கடத்தலில் தன் காதலையும் கடத்துவது ஒரு வித்தியாசமான பார்வை...

நினைவிருக்கிறதா...?
ஆற்றுப்படுகையில் முன்னே
நீ நடக்க
உன் கால்தடம் ஒற்றி
என் கால்தடம் பதிய பின்
வருவேன் நான்
வளைந்து வளைந்து செல்வாய்
நான் தவிப்பேன்
கிண்டலாய் சிரிப்பாய்
ஒரு கிளிஞ்சல் குத்தியதற்கு
ஆற்றையே சபித்தாயே
துளி உதிரத்திற்கு பதறி
கண்ணீர் உகுத்தாயே
நான் கூட விளையாட்டாய்
சொன்னேன்
ஆறு நிரம்பிவிடப்போகிறதென்று
மண்ணள்ளி கடத்துவதாய்
நினைத்து
காதல் கால்தடங்களை
சுமந்து போகிறது
மண் லாரி
இதோ ஒற்றை கால்தடத்தை
பதியவைக்க முயல்கிறேன்
பதிய மறுக்கிறது
உன் சாபம் பலித்ததபோல
உன்னை போல இறந்துபோயிருந்தது
ஆறு......

@@@

சமையலிலும் சாதூர்யமாக அரசியல் பேசும் கவிதை

வெங்காயம் தக்காளி
பச்சமிளகாய் இஞ்சி பூண்டு
சீரகம் கடுகு உளுத்தம்பருப்பு
கூடவே கத்திரிக்காயென
கூட்டணி வைத்துக்கொண்டது
சமையலறையில் உணவுக்கென
பரிமாறலுக்கான பின்பு
ஒதுக்கப்பட்டு குப்பையில்
சேர்ந்தன சனநாயகமெனும்
கருவேப்பிலைகள்.......

@@@

ஒரு ஏழைவீட்டின் மழை நாள் சில துயரங்களையும் சில மகிழ்ச்சிகளையும் கொண்டு நகர்வதை கவிதையாக படித்துவிடுவது சிறப்பு....

கஞ்சி மட்டுந்தான் காச்சிருக்கேன்
தொட்டுக்க ஏதாவது வாங்கிவரப்படாதாவென
கவலயோட கேக்கும் மனைவி

இன்னைக்கும் கஞ்சிதான
அலுக்கும் பெரியவள்

யப்பேய் பிஸ்கோத்து என கேட்டு
வெறுங்கை கண்டு முகம்
சுறுங்கும் சின்னவன்

இன்னைய தண்டல எப்படி
கட்டுவதென குழப்பத்தில்
நான்

சட சடவென பெய்தமழையில்
ஒழுகும் கூரைக்கு
கஞ்சியை மூடுகிறாள் மனைவி

ஒழுகா இடம் தேடி பதுங்கும்
பெரியவள்

ஐ மழையென குதித்து
கும்மாளமிடும் சின்னவன்

அப்பாடா இன்னைக்கு
தண்டல்காரன் வரமாட்டான்
பெரு மூச்சுடன் நான்

எது எப்படியோ
அந்த நேரத்திற்கான கவலைகளை
கழுவிவிட்டிருந்தது மழை.........

@@@

தூர் வாரும் கிணற்றில் ஒரு கிராமத்து கதையே உட்கார்ந்திருக்கிறது... என்னவொரு நயம்!

காத்து கருப்பு
அடிச்சதுன்னு ராமாயிக்கு
தைய்காவுல 
ஓதி வாங்கி
கழுத்துல கட்டுன
தாயத்து
பழனிக்கு போயி
ஆசையா யாருக்கும்
தெரியாம காதலிக்கு
தொரப்பாண்டி
வாங்கி தந்த
முருகன் டாலர் வச்ச
அலுமினிய சங்கிலி
தொலைஞ்ச
சொம்புக்கு ஐயனாகிட்ட
முட்டை வைப்பேன்னு
மண் தூவுன
ராமாயியோட
நசுங்குன
பித்தள சொம்பு
நாலு ஒடைஞ்ச
மண்சட்டி
துருப்பிடிச்ச
துரும்பு வாளி
கிழிஞ்சி நாரான
எட்டு மொழ சேல
தெக்கால
திருடுபோச்சுன்னு
குறியாடி சொன்ன
இத்தனூன்டு
செம்பு செல
கட்டி கட்டியா
கப்பிக்கல்லு இன்னும்
என்னென்னவோ
வந்து விழுந்தது
நூறடி
தோண்டியபின்பும்
வத்திய கெணத்துல
தண்ணியத்தவிர......

@@@

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதையை நம் முன் பேசிவிடுகிறது...  இதோ மேலும் சில அற்புதமான கவிதைகள்....

கால் கடுக்க
மூனு மைலு நடந்து
பாடம் படிக்க போனவதான்
செறுப்பு தைக்கும் அப்பனின்
வேர்வை அறிஞ்சவதான்
பூ கட்டும் ஆத்தாளின்
கை வலிக்கு இராவுல
களிம்ப தேச்சுவிட்டு
அழுதவதான்
எத பாத்து  மயங்கினாளோ
இராவோட இராவ மேஞ்சாதிக்காரனோடு
ஓடிப்போனா
தெரு ரெண்டுபட்டு
ஊரே பத்தியெறிஞ்சி
ஒரு வழியா முடிஞ்சது
அப்பனாத்தா தூக்குல தொங்குனதாவும்
அவ மூளியா நின்னதாவும்
காலம் கடந்து போக
அவ புள்ள மூனாப்பு படிக்கிறான்
இதோ சத்தமா....
சாதிகள் இல்லையடி பாப்பான்னு
அவளும் ரசிச்சிகிட்டு கட்டுறா
வவுத்து பொழப்புக்கான
#சாதிப்பூவ.....

@@@

தொண
மாட்ட காணாம
கத்துது செவல மாடு

ஓரமா கெடக்கு
எரிச்ச 
தாம்பு கவுறு சாம்பலா

மூலையா
மொடங்கி கெடக்கா
வள்ளி
கயித்து கவுறு அந்து

எத்தன
சொல்லியும் நிக்காத
கண்ணீர
எப்படி நிப்பாட்ட
பொலம்புறா மாமியா

முடியா காலத்தே
நானிருக்க
முன்னமே போனியே
ராசான்னு அவளும்
தம்புள்ளைய
எண்ணி அழ

வெதைக்க வாங்குன
கடனைடைக்க
வட்டி கட்டி மாளாம
மனமொடிஞ்சி
தொங்குன கவுறு
மாட்டோடது
அந்த தாலி
இவளோடது

கண்ணீர சுண்டி விட்டு
முந்தி உதறி சொறுகி
மாமியாவ
தொணைக்கழச்சி
மாட்டுல
ஒன்னா மாறி உழுவுறா
ஒழவ

மனசு கணக்க
அறுவட முடிஞ்சி
கடனடைச்சி
கடவுளுக்கும்
படைய வச்சி

இப்ப திருப்பித்தா
எம்புருசன் உயிரன்னு
கேக்குற உறுதியோட
முன்னங்கால
எடுத்து வைக்குறா
இன்னும் அழுத்தமா.....

@@@

அந்த கண்ணாடி
அழுக்காய் இருந்தாலும்
எப்போதும் எங்கள்
முகத்தினை அழகாகவே
காட்டும்

சிரிக்கும்பொழுது சிரிக்கும்
அழும்பொழுது அழுது
தவிக்கும்
ஆறுதல் படுத்தும்

எங்கள் ஆடைகளை
வெளுப்பாய் காட்டுவதில்
அதற்கு அத்தனை ப்ரியம்

தன் ரசம்போன
பக்கங்களை ஒரு போதும்
எங்களுக்கு காட்டுவதில்லை

இரவில் உறங்குமா
என்ற சந்தேகம்
எங்களுக்கு
நாங்கள் மட்டுமே உலகென
வாழ்கிறது அது

உடைந்த கண்ணாடியென
சிலர் வீதியில்
வீசியிருந்தனர் அதனை

சமயங்களில் அது
தனக்கு தெரிந்தவரென
மின்னி மறையும்
சிறு மின்னல் புன்னகையென

இனியேனும்
வீதியில் வீசாதீர்கள் பாவம்
அப்பாவெனும்
கண்ணாடிகளை......

@@@

முதன் முதலில்
பாடத்தில் பூஜ்ஜியம்
பெற்றதில் அழுதேன்

எனது பூஜ்ஜிய வரைவும்
தொடக்க புள்ளியில்
சேரும் பொழுது
ஒரு வாயினை போலவே
முடிந்திருந்தது

முடிவாய் உடைத்த
என் கொள்ளிப்பானையும்
ஒரு பூஜ்ஜியத்தை சுமந்து
வாய் பிளந்திருந்தது

பிறந்த பனிக்குடத்தை போலவே.......

@@@

எல்லை சாமிகள் காக்குமென
கொல்லையில் பிடித்துவைத்த
மண்சாமிகளும் மங்களமெனத்தான் இருந்தன
எங்கள் பெண்டிரை போலவே

குளத்துக்கு குளிக்கப்போய்
ஈர துணியோடு வருபவளுக்கு
தலை குனிந்து வழிவிடும்
ஆண் மனிதம்

கள் கடைகள் கூட
ஊருக்கு மறைவாய்தான்
குடித்து வருபவன் முகத்தினை
முக்காடு சூடியிருக்கும்

வேலி தாண்டியதில்லை
எந்த காளி மனங்களும்
தழைய தழையத்தான்
தழைத்துக்கிடந்தன பயிர்களும்
வாழ்க்கையும்

விவித பாரதியும் வர்த்தக
ஒலி பறப்புமென ரேடியோ பெட்டியில்
லயித்துக்கிடந்தது
கோவண சனம்

சாயந்திரம் கேட்கும்
டென்ட் கொட்டகையின்
ஒலி இசைக்கு
வரப்பு வழியே குறுக்கால
ஓடின வெள்ளி திரைகாண

ஆடி அசைந்து வந்து நின்ன
பேருந்தில் தொலையத்துவங்கின
கிராமத்து மொட்டுகள்

விஞ்ஞானம் மெய்ஞானம்
திண்றதில்
கரைந்து போகின இளகிய
மனங்கள்

படுக்கையறை காட்சிகள்
முற்றம் வரைவந்ததில்
முறை தவறிப்போகின
உறவுகளின் உன்னதம்

கருக்கலைப்புக்கு தப்பிய
பெண் சிசுக்கள் இன்னும்
பிறக்கின்றன
காக்க ஓர் அண்ணண் 
இருப்பானென.........

@@@

அழுக்கு பைக்குள்
கை விட்டு
எதையோ எடுத்து
வீசுவதுபோல்
பாசாங்கு செய்கிறான்
அவன்
குரைத்தபடி பின்னோடி
பின் முன்னேறியபடி
அந்த ஐந்தறிவு

கண்டு கடந்து
திரும்ப கடக்கையில்
அழுக்குப்பையில்
தலை வைத்து ஐந்தறிவும்
வெறுந்தரையில்
அழுக்கான அவனும்
சமயத்தில் புரிவதில்லை
இவர்களுக்கான மொழி..

@@@

இந்த அற்புதமான கவிஞனுக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருதினை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது நம் படைப்பு குழுமம்.

View

மாதாந்திர பரிசு

ஜெ.ப. செல்வம்

    

View

மாதாந்திர பரிசு

சுரேஷ்பாபு ராசேந்திரன்

View

மாதாந்திர பரிசு

அ.க இராஜாராமன்

View

மாதாந்திர பரிசு

ஜே ஜே அனிட்டா

View

கவிச்சுடர் விருது

ரிஸ்கா முக்தார்

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் – ஒரு அறிமுகம்
*************************************************** 
வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

வரிகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பது விடயமில்லை. அது தொடங்குமிடம் ஒரு தீ பந்தத்தையாவது எரியவிட்டு நகரவேண்டும். நமது  கவிஞர் ரிஸ்கா முக்தாரின் எழுத்துகளில் அதனை நாம் காணமுடிகிறது.

கவிஞர் ரிஸ்கா முக்தார் இலங்கைத்தீவின் புத்தளம் எனும் ஊரைச்சேர்ந்தவர். சமூகவியல் பட்டதாரியான படைப்பாளி தற்போது ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார். படைப்பாளி ரிஸ்கா முக்தார் அவர்களின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான கவிச்சுடர் விருதை, நமது படைப்புக்குழுமம் வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

வாசிப்பின் மீதும் ஈடுபாடு கொண்ட கவிஞரின் படைப்புகள் வெளி இதழ்களிலும் பிரசுரம் கண்டிருக்கிறது. மேலும் இவர் நமது படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
நேசத்தின் பெயரால் தண்ணீர் கேட்டு அருந்திவிட்டு சற்றே இளைப்பாறலாம் என்று வருபவர்களிடம் நீ உன் வீட்டு சாவியையே கொடுத்துவிடுகிறாய்..ஏன் இத்தனை அவசரம் உனக்கு? அப்படி வந்தவர்கள் உன்னிடம் சொல்லாமல் செல்லும் போது நீ தனிமையில் அமர்ந்து அதற்காக வருந்துகிறாய்! என தன் தோழி கடிந்து கொள்வதுபோல் ஒரு கவிதை.. சங்க இலக்கியத்தை மீட்டெடுத்து கொடுக்கிறது...

நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழைகிறார்..

அவர் உன்னிடம்
அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் 
வேண்டி நிற்கிறார்;
நீயோ அவருக்கு
பேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்..

ஒரு துளி கருணைக்காகத்தான் 
வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;
நீயோ அவர்மேல்
கருணையை 
பெரும் மழையென கொட்டித்தீர்த்து விடுகிறாய்..

நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
ஒரு விருந்தினராக
சற்றுநேரம் உன் வரவேற்பறையில் 
அமர்ந்து செல்லவே வருகிறார்கள்;
நீதான் 
அத்தனை ஆனந்தத்துடன்
உன் வீட்டுச்சாவியையே 
அவர்களிடத்தே ஒப்படைத்து விடுகிறாய்..

சகி..
நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழையும் போது..
நீ ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்..?
நீ ஏன் இத்தனை அமைதியிழக்கிறாய்..?

நேசத்தின் பெயரால் உள்நுழைந்தவர்கள்
ஒருநாள்
ஏதும் சொல்லாமல் திடீரென  உன்னிலிருந்து தொலைவாகிப்போய் விடுகிறார்கள்..

அப்போது உனை பற்றிக்கொள்கிறது;
நீங்கவே நீங்காத ஒரு வருத்தம்..
அப்போது உனை சூழ்ந்துக்கொள்கிறது;
விலகவே விலகாத  ஒரு இருட்டு..

இன்னும்
நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
வந்த வழியே திரும்பிச்செல்வதே இல்லை..

அவர்கள்
வெளியேறுகிறார்கள்;
உன் கண்ணீரின் வழியே..
உன் உடைந்த நம்பிக்கைகளின் வழியே..
உன் சிதைந்த கனவுகளின் வழியே..!!!
 
*
மரணமென்பது முகம் பார்க்கும் கண்ணாடி அது எப்போது உடையுமென்று யாருக்கும் தெரியாது... தெரியாது என்பதால்தான் தாமதங்கள் இங்கே முளைத்துவிடுகின்றன... மரணம் வந்து, தன் முன் நிற்பதாக கற்பனை கொள்ளும் கவிஞர்... அதனிடமே நீ ஏன் இத்துணை அவசரப்படுகிறாய்? எனக்கான இறுதி வேலைகள் நிறையவே இருக்கின்றன என பட்டியலிட்டு தாமதிக்க வைக்க விரும்பும் கவிஞரின் வரிகள் இதோ:

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

இறப்பதற்கு நான் 
சிறிதும் ஆயத்தமாகாவொரு நொடியில் 
முன் வந்து நிற்கிறதே.!!

இங்கே நான் செய்து முடிக்க எத்தனையோ மிச்சமிருக்கிறது..

கேட்காமல் விட்டு விட்ட மன்னிப்பொன்றை கேட்டுவிட வேண்டும்..
அன்பிற்கினியவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள வேண்டும்..
என் தவறுகளின் சாட்சியை இவ்வுலகிலிருந்து மொத்தமாய் அழித்திட வேண்டும்..
என் நினைவுகளை மிக அழகாய் செதுக்கிட வேண்டும்..
இத்தனை நாளும் உடனிருந்தவர்களுக்கு நன்றியேனும் சொல்லிடத்தான் வேண்டும்..

இப்படியாய்..
இன்னும் இன்னும் எத்தனையோ இருக்க..

கலைந்திருக்கும்
ஆடையினைக்கூட ஒழுங்குப் படுத்திக் கொள்ள
அவகாசம் தராமல் 
சட்டென முன்வந்து நிற்கிறதிந்த மரணம்..

என் அன்பிற்கினிய மரணமே!!
சற்றே பொறுத்துக்கொள்..

என் இறுதி உணவை முடித்துக் கொள்கிறேன்..
என் இறுதி வார்த்தையை பேசிக் கொள்கிறேன்..
என் இறுதி கவிதையை எழுதி விடுகிறேன்..
என் இறுதி ஆடையை அணிந்து கொள்கிறேன்..
என் இறுதி கண்ணீரை சிந்திக் கொள்கிறேன்..

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

நான் ஆயத்தமாகும் வரையேனும்
கொஞ்சம் தாமதித்திட கூடாதா..?!!

*

காதலென்பது சந்திப்புகளில்தான் முழுமையடைகிறது. அப்படி சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை தவிர்ப்பதும் ஒரு காதலின் தயக்கம்தான். அல்லது ஊராரின் மொழிக்கண்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் சிறை. அப்படியிருந்தும் சந்திப்போமா? என்று காதலின் வினாவிற்குள் விழுந்தவள் அமைதியிழந்து கவிதைகளில் நுழைந்து கொள்கிறாள்...

அன்பே..
இந்நகரத்தில்
நாம் சந்தித்துக்கொள்ள
எந்தத்தடையும் இல்லை
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதற்காய் முன் வந்ததே 
இல்லை..

நமக்கான தூரமென்பது
சில மைல் தொலைவுகள்தான்
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதை கடந்துவர
நினைத்ததே
இல்லை..

நாம் இணைந்திருக்க வேண்டிய 
ஒரு தேநீர் மாலையை 
நீண்ட காலமாய்
புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம்..

இன்னும்
நாம்
சந்திக்கலாமென தேர்ந்தெடுக்கும் நாளொன்றில்..
நமக்கேதும் 
ஒரு அவசர வேலை வந்து விடுகின்றது..
அல்லது
பாதி வழியில் 
நமது  பாதைகள் முடிந்து விடுகின்றன..

எப்போதும் இப்படித்தான்!
நம் சந்திப்புக்கள்
அத்தனை தந்திரமாய் தவிர்க்கப்படுகின்றன..
அத்தனை மறைமுகமாய் மறுக்கப்படுகின்றன..

அன்பே..
நாம் 
ஒருவருக்கொருவர்
எவ்வளவோ
அர்த்தமற்றுப்போன 
பின்னாளில்..

ஒருமுறை நாம் சந்தித்துக்கொள்ளலாமா..? என நீ கேட்கிறாய்..

அது அத்தனை எளிய கோரிக்கைதான்
என்றபோதும்
அது என்னை சற்றே அமைதியிழக்கச் செய்து விடுகிறது!!!

மன்னிப்பு என்பது மனிதத்தின் மகத்தான மொழி... அது மொழியும் நேரம் காலம் கடந்துவிட்டது என்றால் அதனாலென்ன பயன் இருக்கமுடியும்? மன்னிப்பை பற்றி ஒரு சிறப்பான கவிதையாகவே இதை நாம் காண முடியும்...



மன்னித்து விடு என்பது அத்தனை எளிய வார்த்தை தான்..

நீங்கள் இதை கேட்கும் போது..
அவர்களின் வாழ்வில் பாதி முடிந்து போயிருக்கும்
அவர்களின் கண்களில் நீர் வற்றிப்போயிருக்கும்
அவர்களின் ஒளி தீபங்களோ எண்ணெய் தீர்ந்து அணைந்து போயிருக்கும்
அவர்களின் சிதையோ  முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகியிருக்கும்..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள்

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் தொக்கி நிற்பதா??
அது ஒரு வாழ்க்கையையே பற்றிக்கொள்வது அல்லவா..?!

அத்தனைக்கும் பின்பு
நீங்கள் கேட்கும் மன்னிப்பென்பது..

அவர்களுக்காக உங்களிடம் நீங்களே 
நீதி கேட்டு கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே
தண்டித்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களுக்கு நீங்களே 
சவுக்கடிகளை கொடுத்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே 
ஒப்புக் கொடுப்பது..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள் 

நீங்கள் பாதிவழியில் கைவிட்டு வந்த கரங்களை யாரோ ஒருவர் பற்றிக்கொள்ளும் வரை
நீங்கள் சுக்கு நூறாய் உடைத்திட்ட மனதின் துண்டுகளை
யாரோ ஒருவர் மீளிணைக்கும்  வரை..
நீங்கள் வளர்த்து வந்த விஷச்செடிகளை
யாரோ ஒருவர் வேரோடு பிடிங்கி எரியும் வரை
உங்களுக்கான மன்னிப்பென்பது சாத்தியமேயில்லை..

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் முடிந்து போவதா..?
அது ஒரு வாழ்க்கையாய் வாழ்ந்து தீர்ப்பதல்லவா..?!

இப்படித்தான் 
எப்போதோ தவறுதலாய் உதிர்த்த ஒரு வார்த்தைக்காக
ஜென்ம ஜென்மமாய்
நான் 
உதிர்ந்து கொண்டிருக்கிறேன்..

இன்னும் 
என் தேசத்தில் மன்னிப்பின் மேகங்கள் 
சூழவேயில்லை!!!

*
எழுதிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்... அவர்கள் இந்த சமூகத்தை திருத்திவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்... அப்படியெல்லாம் இல்லை அவர்கள் பைத்தியம் ஆகாமல் இருப்பதற்காக எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்... வித்தியாசமான பார்வைதான்...

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள் தங்கள் அன்பின் விஷத்தை 
மீண்டும் மீண்டும் பருகிக்கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் தங்கள் ஆறாக்காயத்தை 
மீண்டும் மீண்டும் திறந்துப்பார்க்கிறார்கள்..
அவர்கள் தங்கள் மீளாத்துயரை 
மீண்டும் மீண்டும் தேடிச்செல்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
துளி அன்பிற்காய்
மூடிய கதவுகளை ஓயாமல் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
ஒரு மன்னிப்பிற்காய் கண்ணீரோடு மண்டியிடுகிறார்கள்..
சிறு ஆறுதலுக்காய் காலங்காலமாய் காத்துக்கிடக்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள் 
பைத்தியக்காரர்கள்!!

இவ்வெழுத்துக்களால்
இறந்துக்கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையை உயிர்ப்பிக்க முடியுமென..
எல்லா அவமானங்களிலிருந்தும் வெகுதூரம் சென்றுவிட முடியுமென..
இன்னும்
இவ்வெழுத்துக்களால் 
ஒருவரை மனம் சிதறச்செய்து 
தன்னிடத்தே திரும்பி வரவழைக்க முடியுமென
அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்..

ஆம்..
எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
பைத்தியமென்பதால்
எழுதுகிறார்கள்..
இன்னும்
பைத்தியம் ஆகிவிடக்கூடாதென்பதற்காகவே
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!!!

*
மேலும் கவிஞரின் சில கவிதைகள்

அமைதியாய் ஒரு நேசத்தை அரவணைக்கத் தெரியவில்லை..
ஆர்ப்பாட்டமின்றி பிரிவொன்றை ஏற்கத் தெரியவில்லை..

உறுதியாய் யாரையும் நிராகரிக்கத் தெரியவில்லை..
தயக்கமின்றி எதையும் பேசத் தெரியவில்லை..

இதுதான் வேண்டுமென அடம்பிடிக்கத் தெரியவில்லை..
சுயத்தோடு வெறுப்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை..

நிதானமாய் ஒரு முடிவை எடுக்கத் தெரியவில்லை..
கண்ணீரின்றி நினைவுகளை கடக்கத் தெரியவில்லை..

முழுமையாய் யாரையும் வெறுக்கத்தெரியவில்லை..
எதிர்ப்பார்ப்பின்றி ஒரு நாளையேனும் எதிர்க்கொள்ளத் தெரியவில்லை..

இருந்தும்
அன்பே..

இந்த 
காலத்தையும்
காதலையும்
என்னைவிட அறிந்தவர் யாரென்ற
வெற்று கர்வத்திற்கு 
மட்டும்
குறைவேதுமில்லை!!!

*
இன்றைய நாளில் 
நீ சந்திக்கும் நபர்களில் 
நான் இரண்டாவது நபர்

இன்றைய நாளில்
நீ அணியும் ஆடைகளில்
நான் இரண்டாவது ஆடை

இன்றைய நாளில்
நீ விரும்பிக்கேட்கும் பாடல்களில்
நான் இரண்டாவது பாடல்

இன்றைய நாளில் 
நீ சுவைப்பவற்றில்
நான் இரண்டாவது தேநீர்க்கோப்பை

இன்றைய நாளில்
நீ சிந்தும் கண்ணீரில்
நான் இரண்டாவது துளி

சகி
இரண்டாம் தேர்வுகள் 
உன்னில் எதையும் உருவாக்கும் 
திறனற்றவை
எனினும்
அவை மாற்றுகின்றன
கொஞ்சமாய் 
உன் ரசனையை..

இன்னும்
இரண்டாம் தேர்வுகளென்பது
நீ இளைப்பாற தேர்ந்தெடுக்கும் 
ஒரு சிறு நிழல்
அவ்வளவே!!

எனினும்
எவருக்கும்
எவருடைய வாழ்விலும்
ஒரு இரண்டாந்தேர்வாக மட்டுமே
இருந்து விடும் 
துயரம்
வாய்க்காமலிருக்கட்டும்!!!

**

வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

அதிலொரு ஓவியம் 
தனிமையில் மூச்சடைத்து இறந்து போனது..
அதிலொரு ஓவியம் 
கண்ணீரில் ஆரம்பித்தது..
அதிலொரு ஓவியம் 
மீட்பாளரை தேடியலைந்தது..

அவளோ கனவுகளை விற்பவள்;
விற்க விற்க தீர்ந்து போகா கனவுகள் தான் அவளுடையன!!

இன்னும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் மகிழ்ச்சி ஒளிந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் நேசம் மறைந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் இதயம்
சிறை வைக்கப்பட்டிருக்கவும் கூடும்..

முன்னெப்போதோ ஒரு பொழுதில்..
வர்ணங்கள் கொடுத்து
அவள் கனவுகளை வாங்கி வந்ததாயொரு ஞாபகம்..

என் வர்ணங்களைப் பெற்று அவளொரு ஓவியம் தீட்ட துவங்கினாள்..

வர்ணங்களற்ற தேசத்தில்..
ஓவியம் வரைபவளின்
இதயத்திலும்
துளி வெளிச்சம் எஞ்சியிருக்கக்கூடும்..
இருள் பற்றிய பயமேதுமின்றி!!

**
இது காதலில்லை!!
அதனாலென்ன??

பிடித்த நிறத்தில் உடையணியச்சொல்லி
கேட்டுக்கொள்ளலாம்..
உரிமையாய் விருப்பு வெறுப்புக்களை
பகிர்ந்து கொள்ளலாம்..
விளையாட்டாய் இருவரின் பாஸ்வேர்ட்களையும்
மாற்றிக்கொள்ளலாம்..

இது காதலில்லை!!
அதனாலென்ன???

யாரின் செல்ஃபிக்கோ ஹார்ட்டின் விட்டதற்காய்
கடுப்பாகி ஓஃப் லைன் போகலாம்..
நீண்ட காத்திருப்புக்குப்பின் பதிலளிக்கப்படும் குறுஞ்செய்திக்காய்
கோபப்படலாம்..
நள்ளிரவில் அழைப்பெடுத்து பேசச்சொல்லி
இம்சை செய்யலாம்..

இருந்தும்..
நிச்சயமாய் 
இது காதலில்லை!!
அதனாலென்ன??
**

ஒவ்வொரு தொலைபேசியிலும் இருக்கக்கூடும்..
அழிக்க முடியா
அழைக்கவும் முடியா 
சில எண்கள்...

இறந்து போனதோர் உறவோ..
விலகிச் சென்றதோர் நேசமோ..
மறந்து போனதோர் தோழமையோ..
என யாரோவொருவரின் ஞாபகத்தை தேக்கி வைத்திருக்குமிந்த எண்களை கடந்து போதலென்பது அத்தனை எளிதல்லவே..

ஒரு அழைப்பென்பது வெறும் எண் மட்டும் தானா..?
 
அது..
யாரோவொருவரின் உயிரை..
யாரோவொருவரின் நேசத்தை..
யாரோவொருவரின் நினைவை..
யாரோவொருவரின் வாழ்வையல்லவா சுமந்தலைகிறது..

அறியாமல்..
எத்தனை எண்களை..
எத்தனை அழைப்புக்களை..
எத்தனை எத்தனை குறுஞ்செய்திகளை..
அலட்சியமாய் நிராகரித்திருப்போம்..

உறவுகளை தொலைத்து விட்டு இப்போதிந்த எண்களை கட்டிக் கொண்டு அழுவதால் ஏதும் மாறிடக் கூடுமா..?

இல்லை..
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டவர்கள்
இனி ஒருபோதும் நம்மை அழைக்கப் போவதில்லை...
அவ்வளவே!!!

**

இப்போதெல்லாம்..
வாழ்தல் அத்தனை சுவாரஸ்யப்படவில்லை..

அந்திநேர மழை..
பயணத்துணையாய் வந்த நிலா..
கையோடு ஒட்டிக்கொண்டதொரு பட்டாம்பூச்சியின் வண்ணங்களென எதுவும் ரசிக்கும் படியாய் இல்லை..

எதிர்ப்பார்த்திருந்ததொரு சந்திப்பு..
மெல்லியதாய் ஒரு தலைகோதல்..
உயிர்த்தொடுமொரு குழந்தையின் முத்தமென எதுவொன்றும் என்னை சலனப்படுத்துவதேயில்லை..

தோழா..
வாழ்தலென்பதொரு கலை;
அது எல்லாருக்கும் வசப்படுவதில்லை..

ஆம்..
நான் இருக்கிறேன்..
வாழ்தலின் கணங்களில் நின்று 
மரணத்தின் வாசனையை நுகர்ந்தபடி
இருந்தும் இல்லாமலும் இருந்துக் கொண்டிருக்கிறேன்...!!!

**

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு புன்னகையில் உயிர் வளர்க்க..
ஒரு தலைகோதலில் சோகம் ஆற்ற..
ஒரு குறுஞ்செய்தியில் நலம் கேட்க..
ஒரு பின் தொடரலில் நேசம் உணர்த்தவென..

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒவ்வொரு துன்பத்திலும் யாரோவொருவர் துணை நிற்கிறார்..
ஒவ்வொரு பயணத்திலும் யாரோவொருவர் அறிமுகமாகிறார்..
ஒவ்வொரு தொலைபேசியிலும் யாரோவொருவர் இணைப்பிலிருக்கிறார்..

ஆம் எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..

எல்லா கவிதைகளும் யாரோ ஒருவரால் படிக்கப்படுகின்றன..
எல்லா கரங்களும் யாரோவொருவரால் பற்றப்படுகின்றன..
எல்லா நினைவுகளும் யாரோவொருவரால் சேகரிக்கப் படுகின்றன..

இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் யாருமில்லாதவரென எவருமே இல்லை..

இங்கே எப்போதும் எல்லோருடனும் எவரேனுமொருவர் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்...!!!


.........

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

நீ தொலைத்த புன்னகைதனை 
நான் தேடித்தருகிறேன்..
நீ மறக்கத்துடிக்கும் பெருஞ்சோகமொன்றை 
நான் மறக்கச் செய்கிறேன்..
நீ பாதிவழியே விட்டு வந்த கனவொன்றை 
நான் மீட்டுத் தருகிறேன்..

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் துன்பம் தோய்ந்த பக்கங்களை
நான் எரித்து விடுகிறேன்..
உன் சாலைதனில் உதிரா விண்மீன்களை
நான் பூக்கச்செய்கிறேன்..
இன்னும் புறக்கணித்தவர்களையும் புன்னகைத்துக் கடக்க 
நான் கற்றுத்தருகிறேன்..

தவிர
இந்த இரவுகள் வெறுமையிலானவை..
இந்த விடியல்கள் சாபம் சுமந்தலைவன..
இந்த உலகமோ வெறும் பொய்களாலானது!!

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் இரவுகளை கனவுகளால் நிரப்பித் தருகிறேன்..
உன் விடியல்களை புன்னகையால் உயிர்ப்பித்து நகர்கிறேன்..
மேலும் உன் உலகத்தை 
மெல்லிசைக் கொண்டு மலர வைக்கிறேன்..

நேசமென்பதொரு கலை
நேசமென்பதொரு கனவு
நேசமென்பதொரு மெல்லிசை..

எனினும் 
உண்மையில்..
உன் நேசமற்ற பொழுதுகள் 
நரகத்தை அணுகுபவை..

அதற்காகவேனும் ஒப்புக்கொள்..
இது தான் நேசமென!!!

**

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்கள் மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது  நம் படைப்பு குழுமம்.

View

மாதாந்திர பரிசு

கரு. கிருஷ்ணமூர்த்தி

View

Showing 581 - 600 of 727 ( for page 30 )