வணக்கம். படைப்பு ‘தகவு’ எண்பத்திரண்டாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவுடனான நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. உலக சினிமா பகுதியில் ‘தி கலர் ஆஃப் போம்கிரானேட்ஸ்’ திரைப்படம் அலசப்பட்டுள்ளது. கவிதைக்குள் கலந்திருக்கும் கதை பகுதியில் கவிஞர் இளம்பிறை குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வானவில் வண்ண மின்னல் பகுதியில் வெற்றி குறித்த மனநிலைகள் விளக்கி எழுதப்பட்டுள்ளன. தமிழ் நிலத்து வீரமங்கையரில் மணியம்மையார் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த உலகை ஆளும் பொய்கள் குறித்த எள்ளல் கட்டுரை, கவிதை நூல் விமர்சனம், கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எண்பதுகளின் தொடக்கத்தில் இதழாளர்கள் எழுதியுள்ள கடிதங்கள் போன்றன இவ்இதழில் இடம்பெற்றுள்ளன.