logo

அன்றாடம்


நூல் பெயர்                        : அன்றாடம்

 

நூல் வகைமை                   : கவிதை

 

ஆசிரியர்                    :  விக்ரமாதித்யன்

 

பதிப்பு                          :  முதற் பதிப்பு -  ஏப்ரல், 2025


 

பக்கங்கள்                  : 168

 

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ  230

கற்பனைத்திறனையும், உணர்ச்சிகளையும், ஆழமான அர்த்தங்களையும் இலக்கியத்தில் புகுத்தி அதை சுருங்கச் சொல்வதே கவிதை. அதன் நுட்பத்தையும் உத்தியையும் உணர்ந்தவன் கவிஞன். கவிதை உலகம் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும், மிகப்பெரியதாகவும் இருக்கலாம், ஆனால் அது வாசகர்களுக்கு சிறந்த நுண்ணறிவு , மூல உணர்ச்சி மற்றும் வளமான கற்பனைகளையும் கொண்டு வரும் பொக்கிஷம். வாசகர் அல்லது வாசிப்பவர் மீது ஒரு கவிதையின் விளைவை அதிகரிக்கவும், ஒட்டுமொத்தமாக அந்தக் கவிதையை மேலும் மறக்கமுடியாததாக மாற்றவும், பல்வேறு வகையான கவிதை பாணிகள் உலவும் இக்காலத்திலும் தனக்கென தனி பாணியில் தனித்தன்மையுடன் எழுதவும் முடியுமெனில் அதுவே கவிஞர் விக்ரமாதித்யன். அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கவிதை உலகில் பிரகாசித்துவரும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் புதிய கவிதைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கி இருப்பதே ‘அன்றாடம்’ எனும் இந்நூல்.

தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் புதிய வரவாக, சமீபகாலத்தில் அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து முதற் பதிப்பாக இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.