logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 221 - 240 of 761

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • மீனாட்சி சுந்தரம்

0   713   0  
  • June 2022

மாதாந்திர பரிசு

  • ஜெயகண்ணன்

0   723   0  
  • June 2022

கவிச்சுடர் விருது

  • மு.முபாரக்

0   824   0  
  • June 2022

மாதாந்திர பரிசு

  • ம.ஜீவிதா அரசி

0   575   1  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • குடந்தை அனிதா

1   708   1  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • அ.உமர் பாரூக்

0   493   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • நேசன் மகதி

0   489   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • கருவேல் பாண்டியன்

0   560   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • கருப்பையா பெருமாள்

0   510   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • பா.கெஜலட்சுமி

0   503   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • கே.ஏ. இரவி

0   505   0  
  • May 2022

கவிச்சுடர் விருது

  • வணவை தூரிகா

0   910   1  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • குளோரி சக்தி

0   606   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • நிலவை பார்த்திபன்

0   607   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • அம்பேத்கர் கிட்டு

0   848   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • சிவசந்திரன்

0   503   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • ம.சூர்யா திருமால்

0   691   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • தமிழ்கவி அபி

0   821   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • விஜயலட்சுமி சண்முகம்

0   521   0  
  • May 2022

கவிச்சுடர் விருது

  • ரத்னாவெங்கட்

0   772   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

மீனாட்சி சுந்தரம்

View

கவிச்சுடர் விருது

மு.முபாரக்

இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியை சேர்ந்த கவிஞர் மு.முபாரக் அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப் படுகிறோம்..

முது நிலை தமிழ்+ கூட்டுறவு பட்டயப் படிப்பு படித்த கவிஞர் தற்போது கூட்டுறவு வங்கி செயலாளராக திருச்சி மாவட்டத்தில் பணி புரிகிறார்.

இவரது கவிதைகள் படைப்பின் தகவு கல்வெட்டு இதழ்கள் உள்பட பல்வேறு இலக்கிய சிற்றிதழ்களிலும், ஜனரஞ்சக இதழ்களிலும் வெளி வந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு குங்குமம் இதழ் நடத்திய போட்டியில் வெற்றிபெற்று கவிஞர் வைரமுத்துவிடம் அவர்களிடம்  பரிசும், 2020 ஆம் ஆண்டு படைப்பு குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுடன் விருதும் பெற்றுள்ளார்.

நமது  படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருது, 2022ஆம் ஆண்டு இயக்குனர் திரு லிங்குசாமி அவர்கள் நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ  போட்டியில் சிறப்பு பரிசு2016 ஆம் ஆண்டு  திரு.அப்துல் கலாம் நினைவு பரிசு என பல விருதுகளும் பெற்றுள்ளார்.

கவிஞரின் முதல் கவிதை நூலானா காட்டு நமது படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளிவந்து பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம் :

 

...

 

 

 

 

அவசர அவசரமாய்

சிலுவை பற்றிய கவிதையொன்றை

கேட்கிறாய்,

கொஞ்ச நேரம் காத்திரு...

நேசித்தவர்களால்

என் கைகளில் அறையப்பட்ட

ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!

 

***

 

காசில்லாத போது கேட்கப்படுகிறது

கொடுத்த கடன்,

பசியில்லாத போது தரப்படுகிறது உணவு,

சோர்ந்து போன நேரங்களில்

திணிக்கப்படுகிறது,

கடினமான வேலை,

அவநம்பிக்கையில் வாழும்

போது நிகழ்கிறது துரோகம்,

நம்மை நமக்கே பிடிக்காத

போது

செலுத்தப்படுகிறது புது புது

குற்றம்,

கையில் குடையில்லாத போது

ஓயாமல் பெய்கிறது மழை,

ஆறுதல் தேடி அலைகின்ற போது,

அழுகின்றது பச்சிளம் குழந்தை,

கையிருப்பு குறைவாகயிருக்கும் போது அதிகரித்திருக்கிறது விலைவாசி,

இன்றோ நாளையோயென உயிருக்கு

போராடிக்கொண்டிருக்கும் போது நிகழ்கிறது...இயற்கைச் சிற்றம்,

எப்படி இக்கவிதையை முடிப்பதென திணறிக்கொண்டிருக்கும் போது தொடர்கிறது ...

பேனாவின் மௌனம்!

 

***

 

நீண்டதூரம் நடக்கக்கூடாது

வெயிலில் அலையக்கூடாது

என்ற மருத்துவரின்

அறிவுரைகளை காற்றில்

பறக்கவிட்டு விட்டு

ஆட்டோக்காரன் கேட்ட தொகை

அதிகமென வெயிலில்

நடந்து வரும் அப்பாவின்

கைகளில்

பிள்ளைகளுக்கான தின்பண்டம்!

 

***

 

காலொடிந்த

பறவையொன்றை

வீட்டுக்கு அழைத்து வந்தேன்

அழகாகயில்லையென்கிறாள்

மனைவி,

அருவருப்பாயிருக்கிறதென்கிறான் மூத்தமகன்,

ஓடி ஒளிந்து கொள்கிறான்

இளையமகன்

வாங்கிய இடத்திலே  கொடுத்திடுங்களென்கிறாள்

மகள்,

சார் உங்களுக்கு இது எதுக்கும் பயன்படாதென்கிறாள் வேலைக்காரி,

தேவையில்லாத வேலை உனக்கெதுக்கென்கிறார் அப்பா,

அவசர அவசரமாய்

என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு

காயத்திற்கு மருந்தை தேடிக்கொண்டிருக்கிறாள்...அம்மா!

 

 

***

 

இது தான்

நான் குடிப்பது கடைசி

என அப்பா சொன்ன

எண்ணிக்கை நூறை

தாண்டியிருந்தது...

 

மகனுக்கு பள்ளிக்கு கட்ட

வேண்டிய நூற்றி ஐம்பது

ருபாய் கட்டணத்தை

செலுத்துவதற்காக சொன்ன

தவணை நூற்றி ஐம்பதை

தாண்டியிருந்தது...

 

பெரியமனுஷி ஆகிவிட்ட

மகளுக்கு

தாவணி வாங்கி தருவதென்பது

கானலாகவே மாறியிருந்தது...

 

வயதான அம்மாவின்

மருத்துவ செலவு செய்ய

முடியாமல்

இன்னும் இருக்கும் ஆயுளை

முன் கூட்டியே குடித்திருந்தது...

 

வீட்டிற்கு சீதனமாய் வந்த

மனைவியின்

பொருட்கள் எல்லாம்

கடன் வாங்கியவர்களிடம் அடைக்கலமாயிருந்தது...

 

அதிகமான போதையில்

நான்கு சக்கர வாகனத்தில்

மோதி கொண்டதில்

இரண்டாக

இருந்த கால்களின் எண்ணிக்கை

ஒன்றாகியிருந்தது....

 

பள்ளிகட்டணம் செலுத்த

முடியாததால் பள்ளிக்கு

முன்பு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த மகனும்,

துணிக்கடை ஒன்றில்

தாவணி விற்றுக் கொண்டிருக்கும் மகளும்

மதுக்கடையைக் கடக்கும் போது

செத்து செத்து பிழைக்கிறார்கள்...

அப்பாவைப் போலவே!

 

**

 

என் மீதான கோபத்தில்

கையில் கிடைத்த

பொருட்களை எல்லாம் வீசிக்கொண்டிருக்கிறாய்...

வீசிய

பொருட்களையெல்லாம்,

உன் அருகிலேயே

மீண்டும் மீண்டும் எடுத்து

வைத்துக்கொண்டிருக்கிறது...

என் காதல்!

 

***

 

மழையில் நனைவது

பிடிக்கும்

வானவில்லை பிடிக்கும்

சுற்றி வரும்

வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்,

அதிகாலையில் புல்லின் மீது

அமர்ந்திருக்கும்

பனித்துளியைப் பிடிக்குமென,

எழுதிய கவிதையை

கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்...

கணவனுக்கு பிடிக்காதென!

 

**

 

மரணத்தை விட

கொடுமையானது

வேறொன்றுமில்லையென்கிறாய்,

நேசிப்பவர்களின்

மௌனம் இருக்கிறதென்கிறேன்,

மௌனமாக

கடந்துபோகிறாய்!

 

**

 

அப்பாவின் அவசர வேலை

தடைபட்டிருந்தது,

அம்மாவின் வீட்டு வேலைகள்

தேடலாகியிருந்தது,

தாத்தாவின் கையிலிருந்த

நாளிதழ் நான்காகியிருந்தது,

பாட்டியின் பக்தி

திசைமாறிக்கொண்டிருந்தது,

யாராவது குழந்தையின்

தொலைந்து போன டெடிபியரை

கண்டுபிடித்து கொடுங்களேன்!

 

**

 

காணாமல் போன கடிகாரத்தை

தேடிக்கொண்டிருந்தேன்

கிடைத்ததும்,

காணாமல் போன நிமிடங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்!

 

**

 

திரையில்

கொலைகளை சாதாரணமாய் செய்பவன்

ஒரு எறும்பை தெரியாமல்

மிதித்ததற்கு

வருந்திக்கொண்டிருக்கிறான்...

திரையில் மக்களுக்கு

கோடி கோடியாய்

அள்ளிக் கொடுத்தவன் பசிக்குதென கையேந்திய சிறுமியை

கண்டும் காணாமல் கடக்கிறான்,

ஒவ்வொரு மேடைகளிலும்

கடவுளில்லையென பேசிக்கொண்டேயிருப்பவன்

தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நாளில் காக்கச் சொல்லி கடவுளிடம்,

மனமுருகி

பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறான்,

நேர்மை நேர்மையென பேசிக்கொண்டிருந்தவன்

இலஞ்சப் பணத்தை கையில் கொடுக்காமல் கூகுள் பே' யில்

அனுப்பி வைக்குமாறு சைகை செய்கிறான்,

நிமிடத்திற்கு நிமிடம்

நிறமாற்றிக் கொள்ளும் உலகத்தில்

பல ஆண்டுகளாய்

யாரோ ஒருவருக்கு கொடுத்த

வாக்குறுதிக்காய் இன்னும்

ஒரு ரூபாய்க்கு

இட்லி விற்றுக்கொண்டிருக்கிறாள் பாட்டியொருத்தி!

 

***

 

என்னைக் காயப்படுத்துவதற்கு

கல்லொன்றை

எடுத்திருந்தான் ஒருவன்,

கடுஞ்சொல்லொன்றை

எடுத்திருந்தான் ஒருவன்,

துரோகமொன்றை எடுத்திருந்தான்

ஒருவன்,

வஞ்சமொன்றை எடுத்திருந்தான் இன்னொருவன்,

எல்லாவற்றிலும் தப்பித்த நான்,

பொய்யான அன்பொன்றில்

விழுந்து என்னை நானே

காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன்!

 

**

 

எதுவுமே

தெரியாமலிருந்த

என்னை

கவிஞனாக்கிவிட்டு,

எல்லாம் தெரிந்த நீ

கவிதையாகி விட்டாய்!

 

**

 

அப்பாவை

புதைத்துவிட்டு

வீட்டை நோக்கி பயணிக்கையில்

எதிரே வருகிறான்...

தன் தந்தையின்

தோளில்

அமர்ந்த படி,

என் வயதுடைய ஒருவன்!

 

**

 

சலசலத்து ஓடும் நதியில்

மௌனமாய்

நீர் அருந்திவிட்டு

கடந்து போக எத்தனிக்கும்

பறவைக்கான கவிதையொன்றில்

மீன்கள் வருகின்றன

உதிர்ந்த பூக்கள் வருகின்றன

வேண்டாமென தூக்கியெறிந்த உடைகள் வருகின்றன...

இறுதியாய் வேடன் வரும் போது கவிதையை தூக்கியெறிந்து விட்டேன்...நான்!

 

***

 

ஏதேதோ செய்கிறது...

மரம் வெட்டுபவனை

குயில்பாட்டு!

 

***

 

 

இன்றே வாழ்வின்

இறுதி நாளென அறிந்தால்

கோவிலுக்கு செல்கிறார்கள்,

பிடித்த மழையில் நனைகிறார்கள்,

திரைப்படத்திற்கு  செல்கிறார்கள்,

பூங்காக்களுக்கு

செல்கிறார்கள்,

தான தர்மங்கள் செய்கிறார்கள்,

விலகியிருப்பவர்களிடம்

நட்பாய்

சேர்ந்து நடக்கிறார்கள்,

அக்கம் பக்கத்தினரிடம்

அன்பை பொழிகிறார்கள்,

பிடித்த

பயணம் செய்கிறார்கள்,

நேசித்தவர்களை பார்க்கச்செல்கிறார்கள்,

தாம் செய்த தவறுகளுக்காய்

வருந்துகிறார்கள்,

இறுதி நாளென்பது ஆரம்பித்து வைக்கிறது..வாழ்வை!

 

 

***

 

என் மீது

கோபமாகயிருக்கும்

போதெல்லாம்

ஒரு அச்சமுமில்லை...

அன்போடு இருக்கிறாய்

ஆயிரம் ஆயிரம் அச்சங்கள்!

 

 

**

 

அவசர அவசரமாய்

மேய்ந்து கொண்டிருக்கிறது ...

மரணத்தை,

சற்று நேரத்தில்

பலி கொடுக்கப்படவிருக்கும் ஆடு!

 

**

 

சிறு எறும்பின் மீது கூட

அன்பு காட்ட வேண்டுமென்ற

காட்சியை படமாக்குவதற்குள்

பல எறும்புகளை கொன்றிருந்தார்...

புத்தன் வேடமிட்ட நடிகர்!

 

 

**

 

உன் கவிதையில் வந்த

தேவதையும்

என் கதையில் வந்த தேவதையும்

ஒரு நாள்

சந்தித்துக்கொண்டார்கள்...

என்ன பேசிக்கொண்டார்களென அறிய

ஒரு கவிதையோ கதையோ

இப்போது

எழுத வேண்டியதாகயிருக்கிறது!

 

**

 

என்னிடம்

காகிதமில்லாத போது

பெரும் மழை!

 

**

View

மாதாந்திர பரிசு

ம.ஜீவிதா அரசி

View

மாதாந்திர பரிசு

குடந்தை அனிதா

View

மாதாந்திர பரிசு

அ.உமர் பாரூக்

View

மாதாந்திர பரிசு

கருவேல் பாண்டியன்

View

மாதாந்திர பரிசு

கருப்பையா பெருமாள்

View

மாதாந்திர பரிசு

பா.கெஜலட்சுமி

View

கவிச்சுடர் விருது

வணவை தூரிகா

ந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் வணவை தூரிகா அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.   .

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சார்ந்த கவிஞரின் இயற்பெயர் மா.பெருமாள் .

பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைவது கவிஞருக்கு மிகவும் பிடித்திருந்ததால் பெரிய ஓவியராகும் கனவு இருந்தது, பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவனாக  தேர்வாகியிருந்தாலும் அவரது தந்தையார் இறந்து விட்டதால் கல்வியை தொடர முடியாத சூழலால் படிப்பை  நிறுத்தி விட்டு வேலைக்கு போக வேண்டிய சூழல் வந்து விட்டது,தொடர முடியாத  கல்விக்கு மாற்றாக புத்தக  வாசிப்பை தனது  நேசிப்பாக  தேர்ந்தெடுததுக் கொண்ட கவிஞர்  நிறைவேறாத தனது  ஓவியராகும்  கனவுக்கும் தூரிகா என்ற பெயரை வைத்து ஆறுதல்படுத்திக் கொண்டார் . பின் நாளில் அதையே தனது ஊர் பெயரின் சுருக்கமான வணவையுடன் இணைத்து வணைவை தூரிகா என்றும்  தனதுப் பெயரை புனைப் பெயராக சூட்டிக் கொண்டார்.

முதல் கவிதை, விகடன் பவழ விழா போட்டியில் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முத்திரை கவிதையாக பிரசுரமானது என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தினமணி,கணையாழி காலச்சுவடு போன்ற பத்திரிகைகளிலும் வெவ்வேறு பல சிறு பத்திரிகைகளிலும் பிரசுரமாகி கவிஞரை அடையாளம் காட்டின….

சந்தன நகர் கவிஞர் மன்றம்,குடில் இலக்கிய வட்டம் போன்ற வேறு பல உள்ளூர் அமைப்புகள் நடத்திய  கவியரங்கங்களும் எழுதும் தூண்டுதலை தனக்குப் பின் நாட்களில்  உருவாக்கித்  தந்ததாகவும், முகநூலுக்கு வந்தப்பின்தான்  எழுத்தார்வம் இன்னும் அதிகமானதாகவும் , குறிப்பாக எழுதும் தூண்டுதலுக்கு படைப்பு குழுமம் போன்ற முக நூல்  குழுக்களின் செயல்பாடுகளும் அவை தூண்டி விட்ட ஆர்வமும் குறிப்பிடத்தக்கதுஎன்றும்  கவிஞர் குறிப்பிடுகிறார்.

ஒரு கன்னமும் மறு கன்னமும், கறி கடைக்காரனின் சைவ மெனு கார்டு என்ற இரண்டு கவிதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

 

இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்:

 

பட்டாம் பூச்சிகள் மென்மையான சிற்றினம். அதன்  சிறகுகளும் அதன்  உடலை சுமக்கும் அளவிற்கே மிகவும் மென்மையானது. அதன் முதுகில் சுமைகளையேற்றிவிடாது பறக்க சொன்னால் அதன் நிலை என்னவாகும்?  சிறகுகள் தானாக உதிர்ந்து விடும். ..நம் குழந்தைகளின்  பள்ளி வாழ்க்கையும் அப்படியான ஒன்றாக மாறிவிட்டதென்று வேதனையுடன் வடிக்கும் கவிதை காலப் பதிவு..

.

மதிப்பெண் பொருட்டு.

ஆளுக்கு கொஞ்சமென

பிய்த்துக் கொன்ட பின்...

சிறகுகள் தொலைந்து

பறத்தல் மறந்த பட்டாம்பூச்சிகள்

வண்ண சீருடையணிந்து

பள்ளி வாகனத்தில் பறக்கின்றன...

அம்மண

புழுக்களாய் மாறி...!

 

              💐

மிகவும் அற்புதமான கவிதை. குழந்தைகள் கனவில் சிரித்து விளையாடி, பின்னர் உதடு பிதுக்கி தேம்பியழும் காட்சிகளை நாம் கண்டிருப்போம். அந்த கனவினுள் நுழையும் கவிஞர், அக் குழந்தைகள் கடவுளுடன் விளையாடுவதாக வர்ணிப்பில் இலயித்த கவிஞர் அதே சமயங்களில் அக்குழந்தைகளில் சிலர் வண்புணர்வுக்கு ஆளாவதையும் வேதனையுடன் பகிர்கிறார்.

 

கைகளையும் கால்களையும்

அடிக்கடி

ஒழுங்கற்று

மாற்றி மாற்றி '

வைத்துக்கொண்டு உறங்கும் குழந்தைகள்

கனவில்

ஒழுங்கற்ற கிறுக்கல்களை

மாற்றி மாற்றி

அழித்தழித்து

ஓவியமாக வரைந்து

விளையாடிக் கொண்டிருந்தனர்...

 

இருட்டு மர நிழலில்

நின்று ரசித்த

சாதியறியா கடவுள்

ஆர்வம் கூடி

பொறுமையிழந்து

கைகுலுக்கி தானும்

விளையாட்டில்

கலந்து கொள்கிறார் ...

 

ஒவியங்கள்

அலுத்த பின்

கிச்சு கிச்சு விளையாட்டு

தொடங்குகிறது

சிரிப்பும் சந்தோசமும்

மெல்ல மெல்ல கூடி

அளவை கடக்கும்   தருணத்தில்...

 

தூக்கம் சிதறிய குழந்தை

சிணுங்க தொடங்க...

அசதியில் ஆழ் உறக்க

அம்மாவை

உலுக்கி விட்டு

திரும்பி படுக்கிறார் அப்பா..

 

பதறிய அம்மா

குழந்தையை

இழுத்தணைத்து

தட்டியபடியே

உறக்கம் தொடர ...

 

ஒளிந்து கொன்ட

கடவுள்

விட்ட இடத்திலிருந்து

மறுபடியும்

விளையாட்டை தொடரும்

மனநிலையை

இடம் மாற்றி

இடம்பெயர்கிறார்

அடுத்த

குழந்தையை தேடி ...

 

இரவின்

இன்னொரு திசையில்

அதே கனவில்

மனித முகமூடி கிழித்தெறிந்த

சீழ் உமிழும் மிருகங்கள்

வேட்டையாடிக் கொன்டிருந்தன

வன்புணர் வெறியில்

கடவுள்களை...!

                  💐

என்னதான் சண்டைகளும் சலசலப்புகள் இருந்தாலும்கடல் கடந்த வேலை நிமித்தமாகவோ, அல்லது நாள் கடக்கும் பயணப்  பிரிவின் நிமித்தமாகவோ  கையசைத்து விடை பெறும் போது காதலர்களிடம்    ஊடல்கள் மறைந்து நேசம் பூப்பதை அழகாக விவரிக்கிறார் கவிஞர்

 

உருண்டோட

தவித்து நிற்கும்

கண்ணீரிலிருந்து தொடங்குகின்றாய்

உன் கையசைப்பை

"போய் வா "என்ற படி

 

அனிச்சையாய்

கையசைக்கிறேன் நானும்

கண்ணீரை அடக்குவதில்

கவனம் செலுத்தியபடி.. |

 

இனிதே

முடிவுக்கு வந்து விட்டன

முந்தைய

சண்டைகளும்

ஊடல்களும்...!

             💐      

 

மேலும் கவிஞரின் சில கவிதைகள்:          

 

மாபெரும்

முழு இரவை

விழுங்கியது...

 

மிகச்சிறிய

முழு நிலவு ...!

              💐

 

ஓடும் ரெயிலின்

ஆளில்லா பகுதிகளில்

பயணம் செய்வோர்

தயவு செய்து

விழித்திருக்கவும்...

 

விற்பனை

பொருட்களுடன் வந்து

வாங்கும் படி

கெஞ்சி நிற்கும்

பார்வையிழந்த வியாபாரிகளிடம்

"ஆளில்லை "என்றேனும்

சொல்லியனுப்ப...!!

                💐        

மூத்திர நெடி

மூக்கை துளைத்தாலும்

போர்வையை எளிதில்

புறந்தள்ள முடியாது...

 

மலம்

ஜலம்

அருகிலிருந்தாலும்

உண்பதில் முகச்சுழிப்பு

இருக்கவே இருக்காது...

 

ஆயுதம் காட்டி

அடக்க முயலும் போதும்...

அழுது அகிம்சையில்

ஜெயித்து விட்டால்

ரசித்தே ஆக வேண்டும்

 

இயல்பு மாறி

வில்லனாகும் தருணங்களில்

விளையாட்டு காட்டி தான்

மறுபடியும்

கதாநாயகனாக மாற்ற

வேண்டி வரும்

 

சுத்தமாக புரியாது

உளறலாகக் தான்

இருக்கும்

இருந்தும்

செம்மொழிக்கும் மேலான

அந்தஸ்து கொடுத்தாக

வேண்டி வரும்

 

சுகமன்றி எதுவும்

சுமையல்ல நண்பர்களே-

 

ஆனால்

 

கொடுஞ்சிறை என

தெரிந்தும்

பணம் கொடுத்து

சீருடை விலங்கணிவித்து

கதற கதற

பள்ளியில் தள்ளி

தாய் மொழியை

மறக்கடித்த

அந்த

பைத்தியகாரதனத்தை தவிர...!

              💐

 

பெற்றாகிவிட்டது

கொல்ல மனமில்லை

ஊனக் கவிதைகள்...!

                💐

 

மெளன விசும்பல்களால்

நிரம்பி வழிகிறது

மயானம்...!

 

               💐

 

ஆட்டு இரத்தம்

விழுந்து துடித்தது

ஈ....!

          

                 💐

 

ஆச்சரியமாய் இருந்தது

எப்போது இவர்

இங்கு வந்தார் என

 

கசாப்பு கடையில்

தொங்க விட்டிருந்தார்கள்

 

பக்கத்து மேசையில்

ஒரு இதயம் மூளை

இரண்டு கிட்னி

குடத்தில் கொஞ்சம் ரத்தம்

 

அசைந்தார்

உயிர் இருந்தது

 

இன்னும்

எவ்வளவு பாக்கியிருக்கு...

என பேசவும் செய்தார்

 

இன்னும் ஆறு கிட்னி

மூனு இதயம் மூளை எல்லாம் வரனும்

ரத்தம் அளவு பாக்கனும்

அப்ப தான் வட்டியே

எவ்வளவு கழிஞ்சிருக்கன்னு

சொல்ல முடியும் என்றான்

மேசையருகில் இருந்தவன்

 

பக்கத்து அறையிலிருந்து

அத்தனையும் கொன்டு வந்து

பரப்பினான் வேலையாள்

எட்டிப் பார்த்தேன்

அவருடைய மனைவியும்

குழந்தைகளும்

தொங்கிக் கொண்டிருந்தனர்

 

பரிசோதித்தான்...

 

எல்லாம் நிறைய

அடி வாங்கி ரிப்பேராகி கெடக்கு

மதிப்பு கம்மி தான்

கால்வாசி வட்டிக்கு கூட தேறாது

என்ன செய்யலாம் என

அதிகார தோரனையோடு கேட்டான்

 

தொங்கிக்கொன்டிருந்தவரும்

அவர் குடும்பமும்

நீண்ண்ண்ட...நேரம்

கெஞ்சி வாய்தா கேட்டனர்

 

மறுப்பதாய் மறுத்து

பின்

இரக்கம் காட்டுவதாய் நடித்து

ஒரு வழியாய்

வெற்று தாளில்

கையெழுத்து வாங்கினான்

எல்லோரிடமும்

 

இன்னையிலேர்ந்து

இந்த இதயம் மூளை ரத்தமெல்லாம் என்னோடது

நான் உங்களுக்கு வாடகைக்கு

தந்திருக்கேன்

ஒழுங்கு மரியாதையா

உழைச்சி சம்பாதிச்சி

என் கடனை தீர்க்கும்

வழிய பாருங்க என கூறி

அனைத்தையும் எடுத்து

முகத்தில் எறிந்தான்...

 

மகிழ்வுடன் பொறுக்கியெடுத்து

அவரவருடையதை

பொருத்திக்கொன்டு

நீங்க நல்லாருக்கனும்  சாமி

என வாழ்த்தி

வெளியேறினர்

 

ஊதுவத்தி மணம் கமழ

பூமாலைக்கு நடுவே

ஆசீர்வதித்து கொன்டிருந்தனர்

எல்லா சாமிகளும்...!

                  💐

 

சிரித்துக்கொன்டே அழுகிறாள்

மாற்றுத்திறன் மழலையிடம்

விளையாடும் தாய்.

                    💐

 

கால் சதத்தை கடந்தும்

எண்ணித்தீராத

எண்ணிக்கையில் நிறைந்த

காணாமல் போன

விவசாய கிணறுகளின் நீரோடு தான் எங்களின் பால்ய குதூகலங்களும் நிரம்பியிருந்தன

 

ராசமூட்டு கிணறு

சோடாகாரன் கிணறு

குள்ள கிணறு...என

ஒவ்வொரு கிணறுக்கும்

வெவ்வேறு பெயர்களே

விலாசங்கள்

 

தாயின் கருவறைக்கு பின்

கிணற்றின் கருவறைகள் தான் எங்களின் அம்மணத்தை ஆராதித்து

இதய துடிப்பை மேம்படுத்தி

ஆரோக்யத்தை அப்டேட் செய்திருந்தது

 

ஒவ்வொரு நாள்

வெவ்வேறு கிணறு என

எங்களின் விருப்பத்திற்கேற்ற

கருவறைகளில் இடம் மாறி மாறி

குதித்து வளர்ந்த காலமது

 

விடுமுறையில்

கிணறுகளில் வகுப்பறைகள்

இடம் பெயர்ந்திருக்கும்

 

பள்ளிக்கூட மணியோசையோ

அப்பாவின் புளியஞ்சிமிறோ

கிணற்றுகாரரின் அதட்டலோ

நினைவிற்கு வராத வரை

பசியெடுத்து

உடல் வெளுத்து

கண்கள் சிவந்தாலும்

கிணறு எங்களுக்கு சலிக்காது

கிணறுக்கும் எங்களை சலிக்காது

 

கிராமம் நகரமானபோது...

 

வணிக வளாகத்தின்

கழிவு நீர் தொட்டியாக...

 

சினிமா தியேட்டரே

ஒரு

கிணற்றின் கல்லறையாக

 

ஊற்றுறங்காத இடங்கள்

மூத்திர சந்துகளாக...

இப்படி...

 

இது தவிர

 

வடிந்தறியாத ஒரு கிணறை

உடைந்த குட்டிச்சுவரையும்

குப்பைகளையும் கொட்டி

உயிரோடு கதற கதற

புதைத்தழித்த

கண்ணீர் கதை தனி...!

 

கடந்த காலத்தின் எச்சமாய்

சுடுகாட்டு  ஓரம் ஒதுங்கியிருந்ததால்

உயிர் பிழைத்திருக்கிறது

இவ்வொரு கிணறு

 

எவ்வளவு தான் அடித்தாலும்

உதைத்தாலும் ஆரத்தழுவும் தன் நீர்க்கரங்களோடு பழங்கதை பேசியபடி

கிணறும் நானும்

என் மகளுக்கு

நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தோம்

 

இறுதியாக

 

பரஸ்பரம் இருவரும்

விடை பெற்று வீடு திரும்பிய போது...

 

பிரிய மனமின்றி

உலரா ஈரத்தோடு

உடன்  வந்து விட்டிருந்தது கிணறும்...!!

            💐

 

தமிழில் பேசியதற்காக

வகுப்பறையில்

ஐந்து ரூபாய்

அபராதம் கேட்டதாக

பயந்து தயங்கி

கேட்டாள் மகள்

 

பத்து ரூபாய் கொடுத்தேன்

தப்பில்லாம பேசனும்

என வாழ்த்தி...!

          💐

 

நிலைக்கண்ணாடியின்

பூ மீது

தலை சாய்த்து

அழகு பார்க்கிறாள்

விதவை...!

           💐

 

விளையாடிய அசதி

சவப்பெட்டிக்குள் உறங்குகிறது

தச்சனின் குழந்தை

.

View

மாதாந்திர பரிசு

குளோரி சக்தி

View

மாதாந்திர பரிசு

நிலவை பார்த்திபன்

View

மாதாந்திர பரிசு

அம்பேத்கர் கிட்டு

View

மாதாந்திர பரிசு

சிவசந்திரன்

View

மாதாந்திர பரிசு

ம.சூர்யா திருமால்

View

மாதாந்திர பரிசு

தமிழ்கவி அபி

View

மாதாந்திர பரிசு

விஜயலட்சுமி சண்முகம்

View

கவிச்சுடர் விருது

ரத்னாவெங்கட்


நமது படைப்பு குழுமத்தின்  இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை கவிஞர் ரத்னா வெங்கட் அவர்கள் பெறுகிறார் என்பதில் பெருமை அடைகிறோம்.
முதுகலை வணிகவியல், இளங்கலை கல்வியியல் படித்துள்ள கவிஞர் அவர்கள் புதுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். அமைதியான குணமும், தனிமை விரும்பியுமான கவிஞர் புத்தகங்களின் மீது அளவற்ற காதல் கொண்டவர்.

கவிதைகளே தனது முகவரி என்று பெருமையுடன் சொல்லும் கவிஞரின் சங்க இலக்கியக் காதலின் வெளிப்பாடாக முல்லை முறுவல் என்ற முல்லைப்பாடல்களின் தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.

பலரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற கவிஞரின் "காலாதீதத்தின் சுழல்" கவிதை தொகுப்பு படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளியானது. அவரது இரண்டாவது கவிதை தொகுதி "மீச்சிறு வரமென" என்ற கவிதை தொகுப்பு பரிதி பதிப்பக வெளியீடாகவும் வந்துள்ளது. மூன்றாவது தொகுப்பிற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கும் நூல்களின் தோழி கவிஞர் ரத்னா வெங்கட் அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றுமே அன்பின் சூழலைப் பேசக்கூடியதாக இருப்பதே சிறப்பு! இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்.:

கணவன் மனைவி உறவென்பது அன்பினால் பின்னப்படுகிறது. அவை அப்படியே காலம் முழுக்க  நகர்ந்துவிடுகிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இசையின் ஆரோகணம் அவரோகணம் போன்று ஏற்ற இறக்கங்களில் இசைக் குறிப்புகள் எழுதுகிறது. அப்படியானவொரு இசைக்குறிப்பாக நகர்கிறது இந்தக் கவிதையும். எழுத்துகளையும் வார்த்தைகளையும் மனைவி ஆயுதங்களாய் எடுத்து பிரயோகித்தாலும் கணவன் சாகசமாய் அதனை எதிர் கொள்கிறான். ஒரு கட்டத்தில் உக்கிரத் தாண்டவம் முயலும் அவளின் கோபத்தை அவனின் சமாளிப்பும் , பசபசப்பு வார்த்தைகளும் அமைதியாக்கி சரணடைய வைக்கிறது. இது ஒரு பாசாங்கில்லாத கவிதை.

  

பின்னெப்போதைக்குமான 
சந்தர்ப்பங்களை 
தகர்த்தெறிய 
நம் பாதங்கள் நடந்த
இணைப்புப் பாலத்தை 
கொளுத்தவென 
ஆவேசங்கள் முட்டி மோத
எழுத்தைக் கையிலெடுக்கிறேன்

நாண் விடுத்த அம்பாய் 
இலக்கின்றி இறைபடும்
வார்த்தைகளை
சாகசமாய்த்தான் 
எதிர் கொள்கிறாய் 

அத்தனைக்கும் 
அழுத்த இராக்கதனாய் 
பதிலளிக்க மறுக்கும் 
உன் திடத்தை 
கிழித்துக் கோர்த்து 
மாலையாகத் தோளில் சூடுகிற 
வெறி உந்தித் தள்ள
கூர் தீட்டிய நகங்களை 
பொருத்திக் கொள்கிறேன் 

விரித்த கூந்தலும் 
பிதுங்கிய நாவுமாக 
கோரத் தாண்டவமே 
இதற்கான முடிவென 
அடியெடுக்கையில்
பிம்பத்தின் உக்கிரம்
தாளாது
துகள் துகளாகிறது கோபம்

அனர்த்தமே அனர்த்தமே 
அன்புதானடி  உன் ஆயுதமென
பசப்புகிற பச்சாதாபத்தை 
மென்று துப்புகிற இயலாமை
உபாயமென கைக்கொள்கிறது 
உதவாத தன்னிரக்கத்தை

மடை உடைய வீழ்வதை
எதுவுமே நடவாத 
தோரணையில் புறக்கணித்து
குப்பியில் அளந்து தரும்
மருந்தாய் உனதிருப்பு 
உயிர் காக்க மட்டுமென
உயர்வு நவிற்சியாய்ப்
பகடி பேசுகிறாய் 

உமிழத் துடிப்பதை 
அடக்கி குமுறுகிற எரிமலை
உறுமிப் பார்க்கிறது மனதில்
கக்கி விட்டால்...?
அத்தனை கற்களையும்
அத்தனை சாம்பலையும் 
பாதுகாத்து என்ன செய்வாய்?
 
அனல் விழுங்கிப் புதைத்து
காதலெனப் பெயர் சூட்டி அவிந்து
செயலற்ற ஒன்றென நிற்பதெல்லாம் 
இம்மையிலும் மறுமையிலும்
வெம்மையில் உன்னை 
உருகவிடாதிருக்கும் 
பொருட்டிலேயே....

**********
பெண் என்பவள் எப்போதும் இளகிய மனம் கொண்டவள். அவளின் மனக்கதவுகள் காற்றிலடித்துக் கொண்டேயிருக்கும். ஆனாலும் பத்திரமாக பூட்டியிருப்பதான பாவனை முகம் அபிநயிக்கும். அன்பை மொத்தமாக குழைத்து வைத்திருப்பாள். அதில் கொஞ்சம் இடம் மாறும் போது இயலாமை இழுத்து வைத்து வாதம் செய்யும். இங்கு தான் இறந்துவிட்டதாகவே கதறியழுகிறாள் ... யாரும் சட்டை செய்யவேயில்லை! மகன் இடம் பெயர்கிறான். மகள் இடம் பெயர்ந்துவிட்டாள். தாய்மை அழுகிறது . அது அவர்கள் யாருக்கும் புரியவேயில்லை.இறந்தவளிடம்தான் கணவன் இஞ்சி டீ கேட்கிறான்... ஒரு உயிர் துடிப்பான கவிதை...



ஒரு விபரீத விநாடியில் 
நான் மரித்துப் போனேன் 

புதைப்பதா எரிப்பதா 
என்ன செய்ய 
அனர்த்தமாக யோசிக்கையில்
துளிகள் உடைந்து தெறிக்க 

அம்மா ஏன் அழுகிறாய் 
எனத் திகைத்த மகனிடம்
நீ  வேறிடம் போகிறாய் அல்லவா 
என்னை விட்டு என்றேன்
புரியாது விலகினான் 

அம்மா என்ன பிரச்சினை 
உனக்கு இப்போது
பெண்ணுடைய அலைபேசி
அதிர்ந்து அழைத்தது கேள்வியாக 
நீ அருகில் இல்லையில்லையா
தங்கம்...
அதனால் இருக்கலாம் 
அக்கறையும் எரிச்சலும் 
கலந்த படபடப்பு சிறிது நேரம் 
பிறகு 'டொக்' 
புளித்துப்போன அமைதி

நான் இறந்ததை 
யாருக்கெல்லாம் அறிவிக்க...?
அவசரமாக தொடர்பு எண்களைத்
தேடி அழைக்கப் போன
அபத்தத்தின் நடுவே
எனக்கு டீ தரலையா
கணவரின் குரல் 
இஞ்சி சேர்த்தா...?  எழுந்தேன் 

தேநீர் கொதிக்கையில் 
உடன் குமிழிட்டது நினைவு
யாருக்காக மரித்தேனோ 
அந்தப் பெயர் நினைவில்
வரவேயில்லை 

எங்கே அந்த நினைவு  
சூட்டுக்கோலிட்டு இழுத்தால் 
இழுத்துப் பார்த்தேனே....
எரியத்தான் எரிகிறது?
பின்...
எப்படி இறந்தேன்?
எதற்காக இறந்தேன்?
எவருக்காக இறந்தேன்?

நிலைக் கண்ணாடியில் 
பார்த்தால் தெரியுமில்லையா? 
சதைப் பிண்டம் 
கோளமாகத் தெரிய 
நரம்பதிர்ந்த துடிப்பில் 
வெடித்துச் சிதறியது 
அடைத்துப் போன இதயம்

ஏன் இப்படி அழுகிறாய்? 
எல்லோரும் கேட்கையில் 
சைகையில் கதறுகிறேன்
நான் இறந்தது தெரியலையா?

யாருக்காக எதற்காக இறந்தாய்?
பதிலிறுக்க இயலாத கேள்வியால் துளைக்கிறார்கள் 

நினைவில்லையே....
யாருக்காக இறந்தாலென்ன
நான் இறந்தது உங்களுக்கு முக்கியமில்லையா?

தோள் குலுக்கி உதடு பிதுங்க 
அனைவரும் உச்சுக் கொட்டி நகர்ந்த நொடியில் 
நான் உண்மையாகவே 
மரித்துப் போனேன்.

************** 
தடுமாற்றம் என்பது இடறலின் ஒரு வகை. அது எங்கும் எப்போதும் எவ்விடத்தும் நிகழலாம். அதை யாரும் எளிதில் கடந்துவிடலாம்... ஆனாலும் காலத்தின் நமுட்டு சீண்டல் எள்ளலின் சாமர்த்தியாகும் போது உடைந்து போகிறது மனசு.. சாதாரண நிகழ்வுதான் என்றாலும்...

ஒரு தடுமாற்றம் என்பது
கை கொட்டிச் சிரித்துப் 
பார்க்க விழையும்
காலத்தின் நமுட்டு சீண்டல்தான்
சுழற்சியின் தந்திரம்தான் 
கால் தடுக்கி விழ வைக்கும்
எள்ளலின் சாமர்த்தியம்தான் 

உதறி நடக்க
சரித்திர நிகழ்வாக
சாத்தியம் உண்டுதான் 
உருகி வீழ்ந்து 
சாக்காடு சேரும் வரையில் 
விடேன் என இடறும் 
விஷ முள்ளாக்காத வரையில்

ஒரு தடுமாற்றம் என்பது
சாதாரண நிகழ்வுதான் 

#ரத்னாவெங்கட்
[25/05, 13:14] JINNA PADAIPU: கரணம் மாறியதில் 
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள் 
அபரிமிதமான வாஞ்சையுடன்
 
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?

தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என
***************
தள்ளிச்சென்ற சுயநலம் ஒரு முறை திரும்பிப் பார்த்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்!  ஒப்புவித்தலின் முழுமையை உணராத சுயநலம் கைவிட்டதால் வட்டச்சுழல்கள் கைமாற்றி மடியேந்திக் கொள்வது காலத்தின் கடமையென்பதை அறியுமா? சிறப்பான பொருள் வடிவம்: 

கரணம் மாறியதில் 
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள் 
அபரிமிதமான வாஞ்சையுடன்
 
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?

தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என

***********
இரந்து பெறுதல் காதலென்பேன், இரந்து மருகுவேன், இரந்து இழிபடவும், இறக்கவும் செய்வேன். நீயே இவ்வுலகென்று இதயம் வரிந்து கட்டிய பிறகு நீதானே வாசலாகவும் இருப்பாய்!  ஒப்பு கொடுக்கும் காதலுக்கு வடிவம் கிடையாது.  பண் இசைக்கும் அழகான பாணத்தியின் விரல்கள் இதோ:

அரூபத்தின் முழு வடிவாக 
ஆதியற்ற அந்தமாக
இருதயத்தின் மொழியுடன்
இணையாத இசையாக

பிளவின் கசிவாக 
பிரியத்தின் வலியாக
உறங்கா அடிமனதில்
ஓலமிடும் நிசப்தமாக

உதிரக் கடைசலில் 
ஒதுங்கிய மூன்றாம் துளியாக
கன்னமிட்டுப் பதுக்கி
ஒறுத்திடும் உணர்வாக

கனவுகள் நீட்டித்த 
காலப் ப்ரமாணமாக
கள்வெறியின் பித்தாக
காமம் உடைத்த காதலாக

எதை நினைந்து 
வேண்டுகிறேனோ
அது நீயாக
எதை மறக்கத் 
துடிக்கிறேனோ
அந்த வதையாக
உயிர்த்திருக்கிறாய்
எது எனதல்லாததோ 
அதுவாக  இருந்து
என்னை 
இரந்து பெறவும் 
இரந்து மருகவும் 
இரந்து இழிபடவும்
இரந்து இறக்கவும் 
பணிக்கிறாய்...பேரன்பே 

நீயின்றியும் அமைவதில்லை இவ்வுலகு

 

View

Showing 221 - 240 of 761 ( for page 12 )