logo

முடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020


முடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020
============================================
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியின் முடிவுகள் இதோ காணொளி வழியாக அதுவும் நடுவரின் நேரடி ஒளிபரப்புடன்.

வாகை சூடிய அனைவருக்கும் சான்றிதழும், பரிசுக்குரிய பணமும் நாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் விழாவில் நேரடியாக  வழங்கப் படும். சான்றிதழ் மட்டும் (சாப்ட் காப்பியை) இங்கே கூடிய விரைவில் நடுவரின் கையொப்பத்துடன் பதியப்படும். அதன் ஒரிஜினலை விழாவில் விழா நாயகர்களின் கைகளால் வழங்கப்படும் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறோம்.

சமூக நலன் கருதி இப்போட்டியை படைப்பு குழுமத்துடன் இணைந்து நடத்த முன்வந்த தமிழக காவல்துறை மற்றும் அதன் அங்கத்தினர்களான 
1) திரு. ராஜேஷ் தாஸ், இ.கா.ப, 
கூடுதல் காவல் துறை இயக்குநர், 
அமலாக்கம்,
சென்னை.

2) திரு. ச.மணி,
காவல் கண்காணிப்பாளர், 
அமலாக்கம்,
சென்னை.
ஆகிய இரு அதிகாரிகளுக்கும் படைப்பு குழுமம் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இந்த போட்டியை நடுவராக இருந்து நடத்திக் கொடுத்த மதிப்புக்குரிய கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு படைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை உங்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற அனைத்து தோழர் தோழமைகள் அனைவருக்கும் 
படைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும், உங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்...
இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும்  தமிழக காவல்துறை மற்றும் படைப்பு குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...

இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...
அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. மேலும் வெற்றி பெற்ற கவிதைகள் அனைத்தும் இந்த மாதம் படைப்பு தகவு கலை இலக்கிய திங்களிதழில் பிரசுரமாகும்.

இப்போட்டி நல்லபடியாக வெற்றி பெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியையும் அன்பையும் தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் தெரிவித்து கொள்கிறது...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
என்றும் சமூக அக்கரையுடன்,
தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Manivel Sukumar Avatar
    Manivel Sukumar - 4 years ago
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • அச, பிரபு @ ஜனனன்பிரபு Avatar
    அச, பிரபு @ ஜனனன்பிரபு - 4 years ago
    மிக்க மகிழ்ச்சி, தேர்வு செய்தவருக்கும்,தேர்வானவர்களுக்கும்...வாழ்த்துகள்..

  •  Ameerjaankaadhar  Avatar
    Ameerjaankaadhar - 4 years ago
    அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது மனம்... ~கா.அமீர்ஜான்

  • காஞ்சி. மீனாசுந்தர் Avatar
    காஞ்சி. மீனாசுந்தர் - 4 years ago
    பரிசு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • Nagalakshmi N Avatar
    Nagalakshmi N - 4 years ago
    மதிப்புக்குரிய கவிஞர் மேத்தா அவர்களின் பாராட்டும் பரிசும் பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • ப.தாணப்பன் Avatar
    ப.தாணப்பன் - 4 years ago
    வெற்றி பெற்ற கவித் தோழமைகளுக்கு இனிய வாழ்த்துகள். புத்தாக்கத்திற்காக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட கவிஞர்களின் பட்டியலை வெளியிட்டால் ஆறுதலாக இருக்கும்

  • Suruliandavar Avatar
    Suruliandavar - 4 years ago
    மகழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • அருண்அழகு Avatar
    அருண்அழகு - 4 years ago
    வாழ்த்துகள் தோழர்களே

  • தங்க. ஆரோக்கியதாசன் Avatar
    தங்க. ஆரோக்கியதாசன் - 4 years ago
    வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள். புத்தகத்துக்கு தேர்வு பெற்ற கவிஞர்களின் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள்.

  • a.muthuvijayan a.muthuvijayan Avatar
    a.muthuvijayan a.muthuvijayan - 4 years ago
    அனைவருக்கும் நல்வாழ்த்துகள் அகதா கதிரவன் சோமுசக்தி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • கவிஞர் கவி செல்வா Avatar
    கவிஞர் கவி செல்வா - 4 years ago
    வெற்றிப் பெற்ற மூன்று கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டு சான்றிதழ்களைப் பெறும் எட்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். என் தோல்வியே எனக்கு வெற்றி..நான் தோற்றாலும் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்திய ஆயிரக்கணக்கான என் ரசிகர்களுக்கு என் சிகரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும். படைப்பு குழுமத்திற்கும் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் நன்றி.

  • Rohith sairam Avatar
    Rohith sairam - 4 years ago
    வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள் .

  • Chokkappa G Avatar
    Chokkappa G - 4 years ago
    போட்டியில் பரிசு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துள் பரிசு பெறாத கவிஞர்கள் அனைவரும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள்.

  • Sembaruthisembaruthi Avatar
    Sembaruthisembaruthi - 4 years ago
    வாழ்த்துகள்

  • ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா Avatar
    ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 4 years ago
    பரிசுப் பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இனிய வாழ்த்துகள். எந்தொரு விசியத்தையும் தீவிரத்துடன் எடுத்துச் செல்லும் படைப்பு குழுமத்திற்கு மார்ந்த வாழ்த்துகள்.

  • சக்திஅருளானந்தம் Avatar
    சக்திஅருளானந்தம் - 4 years ago
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • செந்தில்குமார் அமிர்தலிங்கம் Avatar
  • agatha Senthil Avatar
    agatha Senthil - 4 years ago
    நெடுநாளைய கனவு இன்று நனவாகியது.விஷம் நுரைக்கும் கோப்பைகள் என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதை முதல் பரிசு ரூ 10000 பெற்றிருக்கிறது.போட்டியின் முடிவுகளை மிக மூத்த கவிஞர் மு.மேத்தா அவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து ரசித்து விமர்சனம் செய்துள்ளது பேருவகையாக இருக்கிறது.கடந்த 3 வருடங்களில் ஏராளமான கவிதைப்போட்டிகளில் வெற்றிபெற்றாலும் முதல் பரிசு எட்டாக்கனியாகவே இருந்தது.வாழ்க்கைக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும். என்னை,என் எழுத்துக்களை பண்படுத்தியது படைப்புக்குழுமமே.தொடர்ந்து எனது கவிதைகளை விமர்சித்தும், ஊக்கப்படுத்தியும் வந்ததை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.படைப்புக்குழுமத்தின் தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்களுக்கும்,குழுமத்தின் சக படைப்பாளிகளுக்கும்,என்னுடன் பரிசு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும்,வாழ்த்துக்கள்

    Geetha shanker Avatar
    Geetha shanker - 4 years ago
    வாழ்த்துக்கள்

    ப.தாணப்பன் Avatar
    ப.தாணப்பன் - 4 years ago
    இனிய வாழ்த்துகள்

    கவிஞர் கவி செல்வா Avatar
    கவிஞர் கவி செல்வா - 4 years ago
    வாழ்த்துகள் சகோதரி

    அ. வேளாங்கண்ணி Avatar
    அ. வேளாங்கண்ணி - 4 years ago
    மனமார்ந்த வாழ்த்துகள் மேடம்