ம.இராதா
கவிதை வரிசை எண்
# 299
"ஏமே செல்லம்மா நேத்து எங்க போயிட்டீங்க/
நீயும் உம்மவ தங்கம்மாவும்?"/
அது ஒன்னியுமில்லக்கா ! என் எசமானியம்மா/
பாரதியம்மா வூட்டுக்குப் போய்ட்டோம்/
அவுங்க ஊட்டுல பார்ட்டியாம்/
நேத்து ஏதோ பொம்பளைங்க நாளாமே/
அத்த கொண்டாடுறோம் /
வேல இருக்கு வான்னாங்க!"/
"ஆஹான்..வேல முடுஞ்சுதா?/
ஏதாச்சம் இஸ்பெசலா குடுத்தாங்களா?"/
"இல்லக்கா ....ஊருக்குப் போன ஐயா வன்ட்டாரு/
அம்மாவ அடிச்சி ஊட்டுக்கு வெளில தள்ளீட்டாரு/
பங்சன் பாதிலயே நின்னுடுச்சு/
துட்டும் கெடைக்கல நாஷ்டாவும் துன்னல"/
"ஏமே அந்தம்மா என்ன நம்பள மேரியா?/
இஸ்கோலுக்குப் போயி துட்டு சம்பாரிக்கல?/
அதுக்கும் நம்ப கெதிதானா?/
சரி உடுமே! ஊட்டுக்கு ஊடு வாசப்படி/
ஒம் மச்சானையும் ராத்திரிலேர்ந்து காணோம்?"/
"நேத்து நாங்க ஊட்டுல இல்லல்ல?/
குடிச்சிட்டு எங்கியாவுது உயுந்து கெடக்கும்.../
போய்த் தேடிக் கூட்டியாரேன் வரேங்க்கா!"/
அனைவருக்கும் இனிய உலக மகளிர்தின வாழ்த்துகள்.....!!!???
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்