தி. சங்கீதா
கவிதை வரிசை எண்
# 300
யார் நீ..?
பொம்பள பிள்ளையா...
அட..! மகாலஷ்மி பிறந்திருக்கே..!
என்ன நிறந்தான் கொஞ்ச கம்மி...!
படிப்புதானே வேணும்...படி படி...!
வாத்தியாரே தப்பா பேசினா
வெளிய மட்டும் சொல்லிறாத..!
கல்லூரி கதவு திறந்திருக்கா..?
தாலி கயிறும் காத்திருக்கு..!
டிகிரி முடிச்சுட்டா
திருமணம் நிச்சயம்..!
திருமணம் முடிஞ்சதா..!
அப்பா பெயர் வேண்டாம்..!
அவர் பெயர சேர்த்துக்கோ..!
வங்கி நிறையும் வருமானமா..!
ம்...பொருளாதார சுதந்திரம்..!
இரவு வீடு செல்லும் வழியில் மட்டும்
'பெப்பர்ஸ்ப்ரே' துணைக்கிருக்கட்டும்...!
நல்லா சமைப்பியாமே..?
என்ன எல்லாம் சமைக்க தெரியும்..!
ஓ..! பிள்ளைகளுக்கு பிடித்தது மட்டும்..!
சரி... யார் நீ..?
என்றால் என்ன சொல்லுவாய்...?
எல்லாம் வல்ல பெண் என்றா..?
சரிதான்..!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்