L. MADHUMATHI
கவிதை வரிசை எண்
# 297
மாண்புமிகு மகளிர்
கரு. பெண் கல்வி
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்.
கவிஞர் பாரதியின் கனிவான கனவு வரிகள்.
பெண்மை வரமா?சாபமா?எப்போது? எப்படி?
அடுப்பூதும் பெண்களுக்கு (படிப்பு) கல்வி எதற்கு என
முன் ஒரு காலத்தில் முழங்கினராம் முன்னோர்.
தவறு❌ அடுப்பு ஊதும் போது ஒரு படி பூ எதற்கு?
இந்த வரிகள் தான் இன்று வரை நமக்கு சாபம்.
எல்லாம் இயந்திர மயம் இப் பூவுலகில்.
கருவைச் சுமக்க ஆண்மையை பறைசாற்ற மட்டுமே பெண் வேண்டும்.
இதற்கு இயந்திரம் கிடையாது . கண்டுபிடிக்கவும் முடியாது.
கடவுள் தந்த மேன்மையான உறவு தாய்மை.
தாய்மை முழுமையடைய தரமான கல்வி வேண்டும்.
தாலி என்னும் வேலி இட்டு தன் வசப்படுத்தி
தன் போக்கில் வாழ்ந்து தரத்தை தவிக்க விட்டு காணாமல் போனோர் எத்தனை பேர்?
கட்டாந்தரையிலும் மொட்டுக்கள் பூக்கும் ஒரு
கூட்டுக்கிளியாய் வாழவா பெண்ணாய்ப் பிறந்தோம்?
பல்லாயிரம் கப்பம் கட்டி மணவாழ்க்கை வேண்டாம்.
பல்லாயிரம் தந்தாலும் பகடியாகத்தான் வாழ்க்கை.
அவளுக்கு கல்வியைக் கொடு. பல கோடி பெருக்குவாள்.
கடைசி வரை கன்னியாக கூட வாழட்டும். கல்வியை மறுக்காதே.
வாழாவெட்டியாய் தாய் வீடு தஞ்சமடைவதை விட
முதிர்கன்னியாய் வாழ்ந்தாலும் முழு 🌏நிலவாய் வாழட்டும்.
கல்விக்குப் பின் கன்னிகா தானம் நடக்கட்டும்.
கல்வி என்னும் அட்சயப்பாத்திரம் ஏந்தி கரைசேர என் சமூகமே அனுமதி கொடு.
பெண்மையை வாழ விடு
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள் நாளும் வளர வழி விடு.
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்