Varshini Thangaraj
கவிதை வரிசை எண்
# 293
தாய்மை
என் கருவில் நீ உதித்த நாளில் என் கவலை நான் மறந்தேன்
மசக்கை ,மயக்கம் கண்டாலும் என் மடிமீது உன்னை கிடத்தும் நாளுக்காக ஏங்கினேன்
இளவரசனோ இளவரசியோ உன் முகம் காண நாட்களை எண்ணினேன்
மொழியறியா என் செல்வத்திற்கு பெயர்கூட சூட்டி விட்டேன்
"அம்மா" என்று யாரேனும் அழைக்க கேட்டால் கூட என்னை அறியாமல் புன்னகைபூக்கிறேன்
உன் கண்ணில் என் சாயல் தெரிகிறதா என்று தேடிப் பார்க்கிறேன்
உன் முகம் பார்க்க ஏங்கி இருக்கிறேன்
உன் முதல் அழுகுரல் கேட்பதற்கு காத்திருக்கிறேன்.
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்