logo
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்

ச. மங்கையர்க்கரசி

கவிதை வரிசை எண் # 294


பெண் பெருந்தெய்வம் தெய்வ வடிவளித்துத் தேரிலேற்றிச் சிறப்புச் செய்வதாய் சிந்தனையில் பதியவைத்து செப்புச்சிலையென்றும் சின்ன இடையென்றும் அன்ன நடையென்றும் வார்த்தைகளில் வண்ணம் கூட்டி எண்ணங்களில் பின்னேற்றி சின்ன புத்தியால் பெண் எனும் பெருநெருப்பை சொற்போர்வையிட்டு அதன் ஒளி வெம்மை வெளிப்படா கண்களறியா கல்வேலியால் கடினப் பட்ட மனங்களால் கைப்படுத்தி காலங்கள் கடத்தப்படினும் பெருங் குவியல் உணர்வுகள் குன்றென ‌விழுமிய விம்மும் இதயமும் ஈர நெஞ்சமும் பனியென திண்மையும் குளுமையுமாய் கரைதலும் கடினப் படுதலுமான ஒரு மொத்தக் கலவையாய் காதலும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் புள்ளினமாய் பறந்து படும் விடுதலையுணர்வும் புன்னகைக்கும் விழிகளும் இரக்க மென்மையேறிய இனிய இதழ்களும் வலியேற்றம் கொண்ட திண்ணிய எண்ணங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தப் பெருங் கூட்டாய் சீற்றமும் ஏற்றமுமான உயரிய உன்னதம் உள்ளொளி யாய் ஒளிர்ந்துக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரித்து அடங்கும் ஆழத்தைக் கைக்கொண்டாய்! சிறகுகளைச் சிதைக்கும் சிறுமதியாளர் சிங்காரவார்த்தைப் ‌ பிரவாகத்தில் மூழ்கிச் சிக்கித் திணறாமல் சீறி எழும்பிப் பிரளயமாய் பேரூழிக் காற்றாய் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி வளர்ந்து ஒளிப்பிழம்பாய் பரிமாணம் கொள்வீர் எம் பைந்தமிழ் பெண்டிரே! …...ச. மங்கையர்க்கரசி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • சொ.கோட்டீஸ்வரன். Avatar
    சொ.கோட்டீஸ்வரன். - 3 years ago
    ஒளிர்வாய் பெண்மையே அருமை வாழ்த்துகள். 💐💐💐💐💐 சொ.கோட்டீஸ்வரன்.

  • கா.தபசும் Avatar
    கா.தபசும் - 3 years ago
    தங்களின் சொல் ஆளுமையும் நடையும் சிலிர்ப்பூட்டுகிறது.. அகத்தினில் அக்னி பிறக்கிறது🔥🔥🔥