Sathya k
கவிதை வரிசை எண்
# 292
1...பெண்ணியம்
பெண் ஆண்ணின் தேவைக்கு பாவை அல்ல
மகளாய் தோன்றி சகோதரியாக மனைவியாக,தாயாக,
ஒரு பிறவியில் இறைவி அவள்
ஆதி மனிதன் பெண்மையை கொண்டாடினான்
பாதி மனிதன் பெண்மையை பாந்தாடினான்.
நவீன மனிதன் பெண்மையை
சந்திரனில் தடம்பதிய வைத்தான்
கரண்டி பிடித்த கைகளில் கணினியை ஒப்புவித்தான்
கட்டிலுக்கு மட்டுமே என்றவன்
பல கட்டிடங்களையும் ஆளும் சிம்மாசனத்தில் அமர்ந்தி அழகு பார்த்தான்
உலகம் எங்கும் மூன்றில் நீரும் ஒன்று நிலமாக இயங்க பெண்மை இன்று பலவாக உருமாறி உலகாளுகிறது
2..காதல்
மருதாணி இட்ட அவள் கைகளை என்னிடம் காட்டினாள்
நானோ அந்த மருதாணி இடாத உன் கையிலுள்ள இடத்தால் தான் மருதாணிக்கே அழகு என்றேன்
வெட்கத்தில் சிவந்தன அவளின் கண்ணங்கள் மருதாணி இடமாலேயே
3.அப்பா
அன்னையின் அன்பு ஆறுதல்
அப்பாவின் அன்பு ஆற்றல்
தனக்கு என எந்த எதிர்பார்ப்பு இல்லா ஜீவன் கடைசி மூச்சு வரை தன்னைச்சேர்ந்தவரின் நலனே முதல் மூச்சு என்று வாழும் தெய்வம்
க.பொற்கலை
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்