logo
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்

செ.ரஞ்சிதா லெனின்

கவிதை வரிசை எண் # 240


கனவொன்று அரும்பிய காலகட்டத்தில் தான் கல்யாணம் நடந்தேறியது அவளுக்கும் அவனுக்கும் கனவே இலக்காக முகை வடிவம் எய்தியபோது அதை எட்டி விடும் முயற்சியில் மூழ்கிப் போனாள் அவள் இலக்கு வெறியாகி மொட்டாக பரிணமிக்கும் முன் அவள் கருவறையில் மலரொன்று பூத்தது மலர்தான் குழந்தையாக வளர்ந்து அலர்ந்ததே தவிர அவள் கனவு 'வீ' என வாடிப் போனது காலம் கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமல்ல இலக்கையும் ஆறப்போட்டு செம்மலாய் உதிர்த்து விடுகிறது மலர்ந்து மணம் பரப்பாமல் மண் தொட்டு உதிர்ந்து போன கனவுகளை சுமந்து வாழும் பெண் பூக்கள் எத்தனையோ..???

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.