logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

இ.டி.ஹேமமாலினி

சிறுகதை வரிசை எண் # 98


ஒரு ஜீவன் வாடுது! "என்னடி ஒரே அழுகை? விட்டுத்தள்ளுவீயா? என்றாள் தாய் கனகா" அதான் நான் அப்போவே சொன்னேன் இதெல்லாம் நமக்கு ஆகாது தேவையில்லை என்று.. கேட்டியா ? அதெப்படி கேப்பே? நான் என்ற அகந்தை வந்து விட்டது என்றால் பிறர் சொல்வது கேட்க முடியாது என்று தாய் கனகா புலம்பியப டி சமையல் கட்டில் கடுகு தாளித்து சட்னியில் கொட்ட.. கடுகை விட பட் பட் என்று பொரிந்து த்தள்ளினாள்.." தந்தை ஒன்றும் புரியாமல் என்ன நடக்குது ஆத்தாளும் மவளும் காலங்காத்தால சமையல் கட்டில் ? என்று மெதுவாக வந்து பார்க்க... தன் மகள் சினேகா கண்ணை கசக்கியபடி சுவற்றில் சாய்ந்து கொண்டு நிற்க தாய் கனகா கொட்டி தீர்க்கிறாள் சினேகாவை.. தந்தை காமேஷ் மகளிடம் என்ன ? என்ன? என்று செ கையில் கேட்க தாய் கண்ணில் பட்டது கணவரின் செய்கை .. ஆமா எதுக்கு அவ கிட்ட கேட்டுக்கிட்டு என்னிடமே நேரடியா கேளுங்க உங்க பொண்ணு எதுக்கு நீலி கண்ணீர் வடிக்கிறா என்று என்றாள் கோபமாக கனகா.. ம்ம் ம்ம் சொல்லு என்ன ஆச்சி சொல்லு... உங்க பொண்ணு இப்போ யூட்யூப் சேனல் ஒன்னு தொடங்கி கொஞ்ச நாள் ஆச்சு.. ஆமா அதுக்கு என்ன அது ஆரம்பிக்கும்போதே சொன்னாள் என்னிடம்.. என்றார் தந்தை காமேஷ். "ஆமா ஆமா உங்க ஆசீர்வாத த்துல தான் ஆரம்பிச்சா அது எனக்கும் தெரியும் ..அப்போ நீங்களே அவளுக்கு ஆறுதல் சொல்லுங்க எனக்கு என்ன? என்று வாஷிங் மெஷினில் துணி எடுத்து போட்டு ஸ்விட்ச் ஆன் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல.. என்னடா கண்ணா என்ன ஆச்சு? அப்பாஆ ..அப்பாஆ நல்லா தான் போயிட்டு இருந்துச்சு நல்லா ஃபாலோவேர்ஸ், வியூ வேர்ஸ் இருந்துச்சு பா ஆனா சிலர் கண்ட படி பேசுறாங்க பா.. அது அப்படிதான் சில வக்கிர புத்திகள் இப்படி வந்து ஏதாச்சும் போட்டுட்டு போகும் அத்துக்கா நீ கவலைப்படுறே? ச்சே ச்சே கண்ணு இதுக்கெல்லாம் நாம அஞ்சக் கூடாது அதுக்கு போயி அழுது கண்ணீரை வீணாக்கலாமா? என்று முதுகுல தட்டி ஆறுதல் சொல்ல.. கேவி கேவி அழுதாள் மீண்டும் சினேகா.. சரி காட்டு என்ன கமன்ட் போட்டிருக்காங்க என்று பார்க்கிறேன் என்று தந்தை காமேஷ் கையில் வைத்திருந்த மொபைல் போன் வாங்கி கமன்ட் படிக்க முயல... அப்பா அப்பா வேணாம் என்று மடக்கினாள் .. நில்லுடா பார்க்கிறேன் என்று மொபைலை பிடுங்கி பார்க்க முயல.. அப்பா நானே சொல்றேன் என்று சினேகா வாசித்து காட்ட.. ஏய் நாயே உனக்கு எதுக்கு இந்த வேலை ? ஏய் குண்டு முதலில் போயி உன் உடம்பை குறை எக்ஸர்சைஸ் பண்ணு மூதேவி நாயே.... என்று தாறு மாறாக வாயில் படிக்க முடியாத சொற்கள் எல்லாம் ரிவ்யூ போட்டிருக்கு ஒரு பரதேசி .. சினேகாவை இறுக்கி அணைத்து தந்தை காமேஷ் சொன்னார் . இந்த உலகம் முழுவதும் இது போன்ற ஆட்க்கள் இருக்காங்க அதில் சிலர் மட்டும் தான் எந்த பேச்சுக்கும் போகாமல் அவங்க அவங்க வேலையை பாத்துட்டு இருப்பாங்க இதுக்கு போயி கவலை பட்டு அழுது உன் உடம்பை கெடுத்துக்காத கண்ணு.. அதெல்லாம் அந்த காலம் யாராவது ஏதாவது சொன்னா அழுது பின் வாங்கி மூலையில் முடங்கி கிடப்பது தள்ளி விட்டு போயிட்டே இருக்கணும் கண்ணு.. இன்று யார் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் எழுதலாம் நானே ராஜா நானே மந்திரி நீ எந்திரி என்று காலரை தூக்கிவிட்டு திரியும் கபோதிகள் அதிகம். நம்ம வேலை என்னமோ அதை தெளிவா ஒழுங்கா செய்து கொண்டு வாழ்ந்து ஜெயிக்க வேண்டும் ..அடுத்தவங்க அதை சொன்னாங்க இதை சொன்னாங்க என்று முன் வைத்த காலை பின் வைக்க கூடாது . அப்போ தான் சினேகா அழுகை குறைந்து தன்னம்பிக்கை யோடு சிரிக்க ஆரம்பித்தாள் .. உங்க அம்மா இன்னும் அப்படியே தான் அதை செய்யாதே வேணாம் என்று முடக்கு வாதம் செய்வாள் .. நாம ஒரு செயலில் இரங்கிட்டா அது நேர்வழியில் ஜெயிக்காம திரும்பக் கூடாது சரியா? கமன்ட் ஆஃப் பண்ணி வை இனி அந்த தொல்லையும் வாரது .இப்படி நித்தம் நித்தம் பல ஜீவன் வாடுது..நீ என்ன மோ ஒரு ஜீவன் வாடுது என்று உன்னை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்க? "போவியா அங்குட்டு " நீ தைரியமா ஜமாய் என்று வாழ்த்தினார் தந்தை காமேஷ்! இ.டி. ஹேமமாலினி .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in