Akshaya Periyasamy
சிறுகதை வரிசை எண்
# 89
தலைப்பு: அவள்
நகரத்தில் வாழும் ஒவ்வொருவரின் காலையும் இப்படிதான் இருக்கும் போல. ரயிலின் சத்தம் தான் அங்கு அதிக மனிதர்களுக்கு அலாரம். பரபரப்பு என்பது அவர்கள் கண் விழிப்பு தொடர்ந்தே ஆரம்பிக்கிறது. காக்கா குளியல் தான் தினமும். அலமாரியில் துணிகளை புரட்டி ஒன்றை தேர்வு செய்வது என்பது வருங்கால கணவன் மனைவியை தேர்வு செய்வதை விட கடினமானது. முக்கியமான பொருள்கள் அப்போது தான் மறைந்து கொண்டு கண்ணா மூச்சியாடும். காலை உணவு என்ற ஒன்று உள்ளதை எச்சரிக்கும் விதமாக முன்பெல்லாம் குக்கர் விசில் வரும் ஆனால் இப்போது ப்ரேட் டோஸ்டரின் பீப் சத்தம் தான் கேட்கிறது. படியில் இறங்கி வர சோம்பேறி பட்டு, கஷ்ட பட்டு தேய்த்த சட்டையை லிப்டில் கசக்கி வெளியே வரும்போதுதான் தெரியும் ஐ.டி. கார்டை மறந்தது. இந்த உலகத்தில் அறிவு இல்லாமல் வாழ்வது சுலபம் ஆனால் ஐ.டி. கார்டு இல்லாமல் வாழ முடியாது. மீண்டும் பல படி எரி வீட்ற்குள் சென்று ஐ.டி. கார்டை கழுத்தில் கட்டிக்கொண்டு, பல பேருந்தை பிடித்து அலவலகத்துக்கு சென்று வேலை பார்த்து மதிய உணவு இடைவேளை வரும்போதுதான் தெரியும் மதிய சாப்பாட்டை மறந்தது என எதை நோக்கி ஓடுகிறோம் என தெரியாமல் ஓடும் மனிதர் கூட்டத்தில் நானும் ஒருவன் நீங்களும் ஒருவர் கயல் விழியும் ஒருவர்.
கயல்விழி ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்கிறாள். இன்று காலை மூச்சிரைக்க ஓடி வந்தும் வழக்கமாக வரும் பேருந்தை பிடிக்க முடியவில்லை. இரவு செல்போனில் வீணாக ரீல்ஸ் பார்க்காமல் இருந்திருந்தால் காலையில் நேரமாக எழுந்திருக்கலாம் பேருந்தை பிடித்திருக்கலாம். இப்போது அடுத்த பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். சிறிது நேரத்திலே ஒரு பேருந்து வந்தது ஆனால் அதுவோ நாம் ஊருக்கு போகும் போது நமது துணிமணிகளை ஒரே பையில் அடைத்து விட வேண்டும் என துணிக்கையில் பை ஒரு பக்கம் மட்டும் கனமாகி தொங்குவது போல் காலையில் வேலைக்குப் செல்லும் அத்தனை பேருக்கும் இந்த பேருந்து தான் என ஒரு பக்கமாக சாய்ந்து அணத்திக் கொண்டே வந்து நின்றது. உள்ளே மூச்சு கூட விட முடியாது என தெரிந்தும் வேறு வழி இன்றி பேருந்தில் ஏறினால் கயல். சற்று நேரத்தில் அவள் இறங்கும் நிறுத்தம் வந்தது இவ்வளவு நேரம் கூட்டத்தில் நின்றது கூட பரவாயில்லை ஆனால் இதிலிருந்து வெளியே இறங்குவதற்குள் ஒரு போர்க்களமே நடந்து விட்டது. பேருந்து நிறுத்தத்திலிருந்து அலுவலகத்திற்கு ஒரு பத்தடி தூரம் இருக்கும் வேகவேகமாக நடைமேடையில் நடந்த சென்று, அப்பாடா என அலுவலக இருக்கையில் அமர்ந்தால். சிறிது நேரத்தில் உயர் அழுவலர் கூப்பிடுவதாக அழைப்பு வந்தது. உயர் பதவியாளர் அழைப்பதே வேலையில் குறை சொல்வதற்கும் திட்டுவதற்கும் தான். ஆனால் ஏற்கனவே காலையிலிருந்து கடுப்பு, இப்போது இவர் குறை சொல்வதை கேட்பது என்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலத்தான். வழக்கமாக இன்றும் குறை சொன்னார் அலுவலர், கோபம் தலைக்கேறியது கயலுக்கு கடும் கோபத்துடன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். இந்தக் கோபத்துக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது எப்போதும் நமக்கு மேல் உள்ளவர்களிடம் அடங்கிப் போகும், கீழ் உள்ளவர்களிடம் ஆக்ரோஷப்படும்.
எப்போதும் இல்லாமல் இன்று மேரி காபிக் கொண்டு வந்ததும் அது கை தவறி கயலின் மேசையில் ஊற்றியதும் கயலின் கோபம் எல்லை மீறியதும் "உனக்கு கண்ணு தெரியவில்லையா கபோதி" என வார்த்தையை தெளித்ததும் சிறிது நேரத்திற்குள் ஒரு புயல் அடிப்பது போல் நடந்து விட்டது.
மேரி, அவளுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண வார்த்தை தான் ஏதோ கோபத்தில் சொல்லியிருப்பாங்க இல்ல தெரிஞ்சே சொல்லி இருந்தாலும் நாம யாரு அதை எதிர்த்து கேட்க அவங்க படிச்சவங்க அப்படித்தான் இருப்பாங்க என எதார்த்தமாக கடந்து சென்றாள். மேரியை பற்றி வர்ணிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அவளுக்கு வயது ஒரு 60 இருக்கும். ஆனால் இன்னும் ஒழுங்காக புடவை கட்ட தெரியாது. எப்போதும் அவளது கால் அளவை விட பெரிய அளவில் தான் அவள் செருப்பு இருக்கும். மாலையில் சூரியன் மறையும் போது ஆங்காங்கே அதன் பழுத்த சிவப்பு நிறம் தெரிவது போல் இவளுக்கும் ஆங்காங்கே நரைத்த கூந்தல். அவள் முழுசாக கருப்பு என்ற சொல்லிவிட முடியாது ஆனால் மா நிறத்திற்கும் கருப்புக்கும் இடையே ஒரு நிறம். அவள் கண்களைப் பார்த்தாலே தெரியும் இவள் குழந்தை என்று. கயலும் மேரியும் ஏற்கனவே பேசி இருக்கிறார்கள் கயல் நிறைய நேரங்களில் அவளோடு அன்பாகவே பழகி இருக்கிறாள். ஆனால் இந்த பாலா போன கோபத்தினால் மேரி போன்ற ஒரு நல் உள்ளத்திடம் இப்படி நடந்து கொண்டது கயலுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. மேரியிடம் எப்படி போய் பேச போகிறோம் எனக் கவலையோடு சாப்பிடாமல் டிபன் பாக்ஸை துறந்தபடியே உட்கார்ந்து இருந்தாள். இப்போது மேரிக்கும் உணவு இடைவேளை தான் ஆனால் மேரி போன்றவர்கள் சாப்பிடுவதற்கு தனி அறையெல்லாம் கிடையாது அவர்கள் எப்போதும் வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் சாப்பிடுவார்கள். வேற்றுமை என்பது இங்கு கூட நிறைந்து இருக்கிறது.
மேரிக்கு எந்த கஷ்டமாக இருந்தாலும் சிரித்துக் கொண்டே தான் தினமும் பேசுவாள். மேரியின் குடும்பம் பற்றி எல்லாம் கயலுக்குத் தெரியாது, ஆனால் அவள் கயிலை பாப்பா பாப்பா என்று செல்லமாக அழைப்பது இவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் மேரியிடம் போய் பேச சென்றாள்.
"அக்கா என்னை மன்னித்து விடுங்க, கோவத்துல என்ன பேசறதுன்னே தெரியாம பேசிட்டேன் அக்கா ரொம்ப சாரிக்கா" என அழுகும் கட்டத்துக்கு போய்விட்டால் கயல்.
மேரிக்கு இதெல்லாம் புதுசாக இருந்தது, இதுவரை அவளை யாரும் மரியாதையாக கூட அழைத்தது கிடையாது நம்மிடம் வந்து மன்னிப்பு கேட்கிறதே இந்த பாப்பா "நீ அழாத கண்ணு நான் தப்பா எல்லாம் நெனச்சுக்கல. நான் பண்ணது மட்டும் ரைட்டா முன்னையே கை கரண்டுல வச்ச கம்பி மாதிரி ஆடுதே எனக்கு எதுக்குப்பா இந்த வேலை. இல்ல, நான் கொண்டு போறேன்னு வந்து உன் பொழப்பை கெடுத்துட்டேன் உன் இடத்துல நான் இருந்திருந்தா இன்னும் பெரிய பிரச்சனை ஆயிருக்கும்.நான் அதெல்லாம் தப்பா நினைச்சுக்கல பாப்பா நீ என்ன வையாம வேற யார் என்ன வையப் போறா சொல்லு" என வாஞ்சையோடு ஆதரித்தாள் மேரி.
அவளின் அந்த எதார்த்தமான சிரிப்பில் ஒரு விதமான அன்பை உணர முடிந்தது. அந்த அன்பே இவளை அங்கிருந்து கிளம்பச் சொல்லவில்லை மீண்டும் மேரியிடம் பேச வைத்தது. விளையாட்டாக "உங்க கணவர் கூடவா உங்களை திட்ட மாட்டாரு" என்றால் கயல். அதற்கும் மேரி லேசாக சிரித்தால்.
"வெட்கப்படாமல் சும்மா சொல்லுங்க மேரி அக்கா."
"இதில் வெட்கப்பட என்ன இருக்கு கழுத ஒரு மலடிக்கு எதுக்குமா புருஷன் கல்யாணம் வெட்கம் எல்லாம்"
கயலுக்கு இந்த பதில் ஏமாற்றத்தை தந்தது, என்ன இது சமாதானம் படுத்த வந்து மீண்டும் சண்டை போட்ட கதையாகி விட்டதே என முழித்துக் கொண்டு இருந்தாள்."பொண்ண பொறந்த தவிற வேற தப்பு ஒன்னும் நான் செய்யல பாப்பா, மூணு பொம்பள பிள்ளைகளை கூட வச்சு உழைக்கத் துப்பில்லாத எங்கப்பன் எங்களை விட்டுட்டு ஓடிப்போயிட்டான். எங்க அம்மா தான் எங்கள வளத்துச்சு மானத்தை வித்தாச்சும் வயித்த காப்பாத்தனும்னு, எங்க அம்மா கஷ்டப்படா, ஆனா மானம் போச்சு வயிறு நம்பல ,அங்க இங்கனு வேலை செஞ்சு கடன வாங்கி எங்க மூணு பேத்தையும் கல்யாணம் செஞ்சு,கொடுத்துட்டுதான் செத்துப் போவேன்னு சொன்னா ஆனா காலரா வந்து தூக்கிட்டு போச்சு.
அந்தக் காலரா என்னையும் கொண்டு போயிருந்திருக்கலாம் ஆனால் என்ன செய்ய அந்த எமராஜனுக்கும் பொம்பளப்புள்ள தேவையில்ல போல. சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து எங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதுங்க. என்ன கட்டிக்கிட்டு போனவனோ நான் வெறும் வயிறுனு தெரிஞ்சதும் அத்துவிட்டு போயிட்டான். 17 வயசுல தாலியத்து விடத்து நாதியத்து வீதியில நின்னேன். அந்த இடத்துல ஒரு ஆம்பள புள்ள இருந்திருந்தா ஒரு எடுபுடி வேலையாச்சும் கிடைத்திருக்கும். ஆனா நான் பொம்பள புள்ள நாள சுகத்த விக்கத்தான் கை வந்துச்சு. அப்போ முடிவு எடுத்தேன் பாப்பா உசுரே போனாலும் மானம் தான் பெருசுன்னு. வேலை இல்லாம வீடு இல்லாம ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுவதே பெருசா இருக்கும் நிறைய கஷ்டப்பட்டுட்டேன். அங்கங்கன்னு ஓடி கடைசியா மெட்ராசுக்கு வந்தேன். இங்கதான் எங்க அம்மா போல ஒரு மனுஷி என்ன தன் மகளை போல பாத்துக்கிட்டா, அவ கூடவே தங்க வச்சுக்கிட்டா அவளோடையே நானும் வேலைக்கு போவேன் ஒரு நாள் அவளும் போய் சேர்ந்துட்டா, கொடுத்து வச்சவ. இப்போ நான் தனியாத்தான் இருக்கேன் எனக்கு இப்ப அறுவது வயசு ஆகுது ஒவ்வொரு ராத்திரியும் நாளைக்கு விடியாமல் அப்படியே மேல போயிட்டா நல்லா இருக்கும்னு தான் நினைப்பேன் பாப்பா" சிரித்துக் கொண்டே என்னை பார்த்தார்.
என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.
"ஐயோ நான் ஒரு கிறுக்கி என் கதைய சொல்லி உன்ன அழுக வச்சுட்டேனே பாப்பா", என கண்ணை துடைத்து விட்டால்.
இப்படி ஒரு வாழ்க்கையை கயல் மட்டுமல்ல யாருமே கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
மேரிக்கு ஆறுதல் சொல்ல தனக்கு எந்த தகுதியும் இல்லை என கயல் எண்ணினால். அதனால்தான் அவள் முகத்தை கூட ஏறிட்டு பார்க்க முடியாமல் திரும்பி வந்து விட்டால்.
இரவு வேலை முடிந்ததும் பேருந்து நிலையத்தை நோக்கி மேரி நடந்து போவதை பார்த்தால் கயல். ஒரு மூன்று அடி உயரம் நரைத்த கூந்தல் சுருங்கிய தோள்கள் உள்ள சாதாரண பெண்மணி ஆனால் இவள் வாழ்க்கை ஒரு சாதனை. கயல் மேரிடும் ஓடி சென்று,"அக்கா நான் உங்க வீட்டுக்கு இன்னைக்கு சாப்பிட வரவா "என உரிமையோடு கேட்டாள்
"பாப்பா எங்க ஊட்டுல கருவாடு தான் இருக்கும் அதுவும் இந்த சிறுக்கி ஓட நீ ஏன் பாப்பா சாப்பிடணும்" என சங்கடப்பட்டாள்.
அலுவலகத்தில் நீங்க போடுறகாப்பியை தான் குடிச்சிறுக்கேன், இன்னைக்கு உங்க சமையல் எப்படி இருக்கும்னு சாப்பிட்டு பார்கிறேன், வாங்க போகலாம் என அவள் கைகளை கட்டிக்கொண்டாள். மேரி வீட்ற்க்கு போகும் பேருந்திற்க்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். கயலுக்கு தெரிந்த பெண் எதிர்பாராமல் அந்த வழியாக வந்தாள்.கயலிடம் பேசுகையில் யார் இவர் என மேரி அக்காவை கேட்டாள். கயல் சற்றும் யோசிக்காமல் எனது அம்மா என்றால்.மேரியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்