Hemavathy Hema
சிறுகதை வரிசை எண்
# 87
தலைப்பு -சாந்தினி🌷🙏...
கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக அமர்ந்து அரட்டை+பாட சம்பந்தமாகவும் சிலர் பேசுகின்றனர்... "சாந்தினி மட்டும் எப்போதும் போல தனித்தே அமர்ந்து இருக்கிறாள்.
அவளை வட்டமிடாத கண்களே
கிடையாது என்றே கூறலாம்..
அத்தனை அழகும் ஒருங்கே குடி இருந்த மாதிரி இருந்தாள் சாந்தினி.அதனால் சில பெண்கள் பொறாமை படுவதும் உண்டு.ஏக்கமும் காதலும் நிரம்பிய ஒரு பார்வை அவளை தொடர்ந்து
வருகிறது.
அருகில் வந்தும் உட்கார தயங்கி நின்றான் பிரசாத்.முழுபெயர் கிருஷ்ண பிரசாத். என்ன என்பது போல பார்த்து விட்டு புத்தகத்தில்
தன்னை'புதைந்து கொள்கிறாள் சாந்தினி. உன் கிட்டகொஞ்சம்பேசணும்.
நேரம் இல்லை.நேரம் இல்லையா ' விருப்பம் இல்லையா? எப்படி வேணா
நினைத்து கொள்ளலாம்.அது
உங்க விருப்பம்.நான் படிக்க
வேண்டும்.என்னோட மனம் தெரிந்தும் கூட உதாசீனம் செய்வது சரியா சாந்தினி? நான் படிக்க வந்து இருக்கேன்.
நாங்க எல்லாம்? எனக்கு தெரியாது.முகத்தில் அடித்த மாதிரிபதிலசாந்தினியிடம்.
"ஏன் என்னை வெறுக்கிறார் சாந்தினி. காதல் கத்திரிக்காய் எனக்கு பிடிக்காது என்று சொல்லவில்லை."படிக்க வந்தால் முதலில் கருத்தை படிப்பு மீது வைக்க வேண்டும்.
உங்க அப்பா மாதிரி எங்க அப்பா கோடிஸ்வரன் இல்லை.
ஏழை விவசாயி.எனக்காக நிலத்தை அடமானம் வைத்து நான் ஆசைப் பட்டேன் என்கிற' ஒரு காரணமாக படிக்க வைத்து கொண்டு இருக்கிறார். நான் படித்து நல்ல வேலை தேட வேண்டும்.
எங்க குடும்ப சூழ்நிலையை மாற்ற வேண்டும்.
உங்களுக்கு படிப்பு ஒரு பொழுது போக்கு. ஜேஸிப்பியில் அள்ளுவது மாதிரி பணத்தை அள்ளி உங்க அப்பா அனுப்பி வைக்க கஷ்டம் தெரியாமல் பார்ட்டி என்று ஜாலியாக இருக்கும் நபர் நீங்க. அதனால் ஒதுங்கி
போறேன்.
என்னை இதற்கு மேலும் தொல்லை செய்ய வேண்டாம் னு தயவுசெய்து புரிந்து கொள்ளுங்க. என்னை பார்த்து என் கண்களை பார்த்து சொல்லு சாந்தினி!
என்னை உனக்கு பிடிக்கவில்லை என்று.எப்படி சொல்ல முடியும்.பாயிண்ட்டை
தொட்டு கேள்வி கேட்கும் போது..
அழகான இளைஞன்.நல்ல குணம் உள்ளவன் தான்.பணக்
-காரன் என்கிற ஒரு காரணம்
தான் விலகி போகும் சாந்தினி. " நான் என்ன செய்தால் என்னை விரும்புவே
சாந்தினி.மனதில் தேக்கி வைத்து இருந்த காதலையும் அன்பையும் ஒருங்கே கலந்து,
தாக்கமாக பிரசாத்தின் கேள்வி...
சாந்தினி மனதை சற்றே அசைத்து பார்த்தது.உங்க அப்பா வருமானத்தை எதிர் பாராமல் ' சொந்த காலில் நிற்க பழகுங்க முதலில்.
வேலை தேடுங்க.நான் வேலை
தேடுவதாக? ஆயிரம் பேர் எங்க நிறுவனத்தில் கைகட்டி
நிற்கும் போது!! ஆ... இதைத் தான் நமக்கு பொருந்தாது என்று விலகி போகிறேன்.
பணம் தேவை தான்.பணமே வாழ்க்கை இல்லை.தேவைக்கு மேல் இருக்கும் பட்சத்தில் திமிர் ' ஆணவம், சர்வாதிகார போக்கு
தான் மிஞ்சும்.அன்பும், பாசமும் நிறைந்த வாழ்க்கை '
" போதும் என்கிற நிறைவோடு வாழ நினைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அது மாதிரி வாழ்க்கையை தான் நான்விரும்புகிறேன்
. என் வழியில் குறுக்கே வராதீங்க.உங்களால் பணம் இல்லாமல் வாழ முடியாது.என் உயிரே நீ தான். உனக்காக எதையும் துறக்க நேர்ந்தால்
ஏற்று கொள்வேன்.என்னை நம்பு சாந்தினி. சாந்தினி உள்ளம் இலகுகிறது. ஆனாலும் வெளிக் காகாட்டி கொள்ளாமல் '"எனக்காக உங்க பாதையை மாற்றி கொள்ள தயாராக' இருக்கலாம்.
உங்க பெற்றோர் விரும்ப மாட்டார்கள்.அவங்க மனதை புண் படுத்தி ஒரு வாழ்க்கை தேவையா யோசிக்க பிரசாத்.எனக்கு அம்மா இல்லை சாந்தினி.இந்த வார்த்தை சாந்தினி மனதை'
அசைத்து விட்டது.ஸாரி' பிரசாத்.இளகிய மனதோடு தன் வருத்தத்தை தெரிய படுத்துகிறாள் சாந்தினி...
அம்மா இல்லாத உங்க மீது
அதிக பாசத்தை கொட்டி வளர்த்து இருக்கும் அப்பாவுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் தானே.அவரை மனம் வருந்த
செய்யாதீங்க பிரசாத். இல்லை
படித்து கொண்டே பார்ட் டைம்
ஜாப் தேடப் போறேன் சாந்தினி.
எனக்கு நீ வேணும். தர்ம சங்கடமாக நெளிந்தாள் சாந்தினி." தனககாக பணத்தை துச்சமாக தூக்கி எறிந்து விட துணியும் பிரசாத்.
உழைக்க முன்வருகிறான்..
இது போன்ற அன்பான கணவனை தானே ஒவ்வொரு பெண்ணும் விரும்ப முடியும்..
இனி மறுக்க முடியாது.
எனக்கு அடுத்த வருடம் படிப்பு முடியும். " இந்த வருட கேப்பில் எப்படியும் தேர்வாகி விடுவேன்.
எங்க அப்பா கடனை தீர்த்து நிலத்தை மீட்டு என் அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும் பிரசாத். தாரளமாக செய் சாந்தினி.உன் மனதின் ஓரத்தில் எனக்கு ஒரு இடம் இருந்தது என்றால் போதும்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் காத்து கொண்டு இருப்பேன்.
சரி முதலில் உங்க முடிவில் நிலையாக இருக்க வேண்டும்.
சரியென்று தலையை ஆட்டி விட்டாள் சாந்தினி என்று சுற்றி சுற்றி வரக்கூடாது.
சரிதானா..ஆஹா என் காதல்
ஜெயித்து விட்டது போதும்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான் பிரசாத்.சாந்தினி பிரசாத் காதல் வளருகிறது.
பிரசாத் ' சொன்ன படி பார்ட் டைம் ஜாப்தேடிக்கொண்டான்.
படிப்பு முடிந்ததும்நல்லவேளை தேடி வந்தது.. சாந்தினி அறிவுரை காரணமாக நன்றாக படித்ததால் முன்னேற்றம். இரண்டு வருடங்கள் முடியப் போகிறது.
காதல் என்றதும் கண்ட இடத்தில் சுற்றி திரியாமல்'
தங்கள் கடமையில் சிரத்தை ஆக இருந்தனர்.
பிரசாத்தின் அப்பா நிறுவன பொறுப்பை ஏற்றுக் கொள்ள
வற்புறுத்தி வந்தார்.தனியே பணி புரிவதுபிடிக்கவில்லை.
பெரிய, பெரிய கோட்டீஸ்வர சம்மந்தம் தேடி வருகிறது. மகனை திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்தம் செய்கிறார். தந்தையிடம் தன்
காதலை வெளிப் படுத்த தயக்கம்.
தந்தை பிரித்து விடுவாரோ? "இல்லை சாந்தினிக்கு ஆபத்து வருமோ என்கிற பயம் வேறு ஆட்டி படைக்கிறது ' பிரசாத் மனதில்.சாந்தினி தன்
குடும்ப சூழலை ஓரளவுக்கு மீட்டெடுத்து விட்டாள்.தன்
வீட்டில் பிரசாத்தை விரும்புவதாக சொல்லியும் விட்டாள்.
கிராம சூழலில் யாருமே காதல் என்றதும் ஆஹா என்று
உடன் படுவது கிடையாது... "கிராமம் என்று மட்டும் இல்லை எதிர்ப்பு தான் முதலில் கிடைக்கும். சாந்தினி குடும்பமும் மறுப்பு தெரிவித்தது." சாந்தினி விளக்கம் சொன்ன பிறகு மகள் மீதான நம்பிக்கையும் சேர்ந்து அவளுடைய காதலுக்கு பச்சை கொடி உயர்த்த பட்டது.
எங்குமே காதலுக்கு சம்மதம் கிடைத்து விடுவதில்லை.
"சாந்தினி முறையாக காதலை'
கையாண்ட விதம் அவளை வெற்றி பாதையில் அழைத்துச் சென்றது எனலாம். பிரசாத்தை சந்தித்து தன் வீட்டில் சம்மதம் கூறியதை தெரிவித்தாள்.
எங்க அப்பா சம்மதிக்க மாட்டார் என்றுநினைக்கிறேன்
சாந்தினி.. சாந்தினிகோபமாக
பார்க்க , இரு சாந்தினி அவசரப் பட்டு பேசி விடாதே. உங்க அப்பா அம்மா முன்னிலையில் திருமணம் செய்து கொள்வோம்.பிறகு எங்க அப்பா முன்னாடி போய் நிற்போம்.
எங்க அம்மா அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது பிரசாத்.ஆரம்பமேசொன்னேன். சொந்த பந்தங்கள் ஒருமாதிரி கேலி பேசி அவமான படுத்த தயங்க மாட்டார்கள். காதல் திருமணம்
செய்ய ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். தீர யோசித்து முடிவு செய்யுங்க.
கொஞ்சம் டைம் எடுத்து கொள்ளுங்க தவறில்லை.
ஆனா முரண்பாடு இருந்தால் சரி படாது பிரசாத்." நான் எங்க
அப்பாகைகாட்டும்மாப்பிளள
யாரா இருந்தாலும் கழுத்தை நீட்ட வேண்டியது தான். "பிரசாத் மிரண்டு போகிறான்.
வேதனை மிகுந்த முகத்தோடு அகலும் பிரசாத்தை பார்த்து வேதனை பட்டது சாந்தினி உள்ளம்.
ஒரு வாரம் கடந்த நிலையில் பிரசாத் ' பரப்போடுஓடி வருகிறான். சாந்தினி அப்பாவுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்காங்க.
நீயும் உடன் வா.பிளீஸ்.உடம்பு
குணம் ஆகட்டும் பிரசாத் பிறகு நம்ம விஷயம் பற்றி
யோசிக்கலாம்.
இல்லை சாந்தினி அப்பா '
நிலமை டேஞ்சர் தான் தகவல் வந்திருக்கிறது. "சாந்தினி பெற்றோர் முகத்தை பார்க்க '
சரிமா, நானும் உடன் வரேன் என்று கிளம்பி விட்டார் பூபதி.
நெஞ்சில் பாரத்தை சுமந்து
அசவரமாக பிளைட் டில் போய் இறங்கினார்கள். வீடு போய்
சேரும் முன்பே "ரகுபதி உடல் '
ஹாலில் பிரீசர் பாக்ஸில்.
அப்பா என்கிற கதறலோடு' தந்தை உடலருகே போய் அழுகிறான்." முப்பத்தி எட்டு வயது இளம் பெண் ஒருத்தி ஆறு வயது சிறுவனுடன் பரபரப்புடன் பிரவேசித்தாள்.
"அந்த சிறுவன் அச்சு அசல் பிரசாத் சிறுவயது போட்டோ
ஜெராக்ஸ் போல இருந்தான்.
அனைவரின் பார்வையும் அந்த இளம் பெண் மீதும்' சிறுவன் மீதும் மொய்கிறது.
சாந்தினிக்கு, உடனே புரிந்து
போனது. "செகரட்டரி ஒருவர் அந்த பெண்ணை வேறு ஒரு இடத்தில் அழைத்து போய் அமர வைத்தார். ஏன் இங்கே
வந்தாய். அந்த பெண் இந்தியில் நான் எப்படி வராமல் இருக்க முடியும்?
அசிங்க படுத்த வந்து இருக்கியா?
என் மகனுக்கு தந்தை அவர்.அவரோட முகத்தை என் மகனும் நானும் கடைசியாக பார்க்க உரிமை இல்லையா?
உரிமை போராட்டம் நடத்த
நீ என்ன தாலி கட்டிய மனைவியா? பின் தொடர்ந்து வந்த சாந்தினி விக்கித்து நின்றாள். இளம் பெண் வாழ்க்கையை பாழாக்கி விட்டு இறந்து போனாரா?
ரகுபதி மீது ஆத்திரம் தான் வருகிறது.பணத்திமிர் தான் காரணமா? நீங்க போங்க நான் பார்த்து கொள்கிறேன்.
நீயாருமா தமிழில் கேள்வி.இந்த வீட்டு மருமகள் '
ஆணித்தரமாக பதில் கொடுத்தாரள் சாந்தினி.அந்த
மனிதர் விழித்து விட்டு முதலில் இந்த பெண் போக வேண்டும்.
முடியாது.அவள் போக மாட்டாள். நீங்க போய் வேலையை பாருங்க. "அந்த பெண்ணிடம் ஆதாரம் இருக்கா என்றதும் இரு போட்டோவை காட்டுகிறாள்..
ஒன்று மாலை மாற்றிக் கொள்வது. அடுத்து சிறுவனை இருவரும் மடியில் வைத்து கொண்டு போட்டோ.
அவளை அனைத்து கொண்டு பயம் வேண்டாம்.இது பத்திரம் என்று எச்சரிக்கை செய்தாள் சாந்தினி. பிரசாத்தை அழைத்து சுருக்கமாக விஷயம் சொல்லபடுகிறது.
அதிர்ந்து போனான் பிரசாத்.
எல்லாமே முடிந்தது.வீடு
அமைதி காக்க முக்கியமான ஆட்கள் குழுமி இருந்தனர்.
உயில் படிக்க பட்டது.ரகுபதியின் பரம்பரை
சொத்து' மற்றும் "ரகுபதி ஈட்டிய சொத்து அனைத்தும்
பிரசாத் பெயரில் உயிராக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.அவரது உடல் நிலை அறிந்து செயல் பட்டு இருக்கிறார் என்பது புரிந்தது.
சில லட்சங்கள் மட்டும் அந்த பெண்ணுக்கு ஊதியம் என்ற
பெயரில் எழுதப்பட்டு இருந்தது." சாந்தினி உள்ளம் உலைக்களமாககொதிக்கிறது. அனைவருக்கும் போன் பிறகுபிரசாத் உங்க முடிவு என்ன? என் உயிரே நீதான்
சாந்தினி.எனக்கு சொத்து வேண்டாம்.
அவசரம் வேணாம் பிரசாத்.உங்க அப்பா எழுதிய உயிலில் உடன் பாடு இல்லை
எனக்கு. இந்த சிறுவனை பாருங்க.பிரசாத் வாரி அணைத்துகொண்டான்.
இவனும் இந்த வீட்டு வாரிசு தான். உங்க அப்பா செய்த
பாவத்தை நீங்க நிவர்த்தி செய்ங்க பிரசாத்.
உங்கள் சொத்தை பாதியாக இவன் பேரில் எழுதுங்க. நிறுவன பொறுப்பை ஏற்று
பர்சன்டேஜ் கணக்கில் லாபத்தை பகிர்ந்து கொடுங்க.
பணம் அவசியம்.தேவைக்கு மேலே அடுத்தவங்க உழைப்பு உறிஞ்ச படக்கூடாது.
உன் விருப்பம் போல் ஆகட்டும் சாந்தினி.மகளை பெருமிதமாக பார்த்தார் பூபதி.
நல்லதொரு நாளில் இனிதாக"
நடைபெற்ற திருமண விழா.
பிரசாத் 'சாந்தினி பூரிப்பில்...
முடிந்தது..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்