logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

தமிழ்மகள்

சிறுகதை வரிசை எண் # 86


காதலர் தினம் மைதா நிறம், ஆலிவ்பழ மயிர், பீட்ருட் உதடு, அவரைக் கண்கள் சுரக்காய்ப் போன்று மேடு பள்ளங்கலோடு மெல்லிய இடை அவளுக்கு. காந்தி அவளுக்குப் பிடிக்காது.ஆனாலும் கதர் புடவைதான் உடுத்துவாள். கோயில் கருவறையில் வீசும் வாசம் அவளுக்கு. என்னையும் அறியாமல் எனக்குள் குடிவந்து விட்டாள் அந்த கொள்ளை(கொலை)க்காரி. பலமுறை படையெடுத்தும் கண்டுபிடிக்க இயலவில்லை எங்கே சுழன்று செல்கிறது அந்த சூறாவளி என்று. கரு நீல இருசக்கர வண்டியில் வருவது மின்னலா, மின்மினியா என்று அறியுமுன்னே மறைந்துவிடுவாள். வழக்கம்போல் மணி 8.30 அவள் வரும் நேரமாகிவிட்டது. அவசரமாய் ஆயத்தமானேன், இன்று எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும். அம்மா!!! ஆபிஸுக்கு கிளம்புரேன். சத்தம் கேட்டதும் சட்டென்று ஓடிவந்தால் பக்கத்து வீட்டில் இருக்கும் என் அக்கா. தம்பி!!இருடா என்றபடி. இவன இன்னக்கி மட்டும் பள்ளியில் விட்டுவிடு என்று வண்டியில் ஏற்றினாள். என்னக்கா நீ வேற என்று சொல்லிய வாய் மூடும் முன் கையில் இருந்த இட்லியை பிட்டு வாயில் போட்டால் எனக்கும் அவனுக்குமாக. எனக்கும் கோவம் வரும் என்று எனக்கே அன்றுதான் தெரிந்தது. கோவம் வியர்வையாக வெளியேற வேகமாக கிளம்பினேன். பள்ளி வாசலிலேயே பரங்கிக்காய் உடைப்பது போல அவனைப் பையோடு வீசிவீட்டு விருட்டென வண்டியை திருப்பினேன். விசில் ஊதிய வாட்ச்மேன் சார்!!! லேட் ஆய்டுச்சு பிரின்சிபாலைப் பார்த்து பையனை விட்டுட்டு போங்க என்றார். சர்க்கரை வியாதிக்காரன் போல், மண்டை சர்ர்ர்ர் என்று சுத்தியது எனக்கு. தார் ஊத்தும் வண்டியைப் போல தரதரவென்று இழுத்துச் சென்றேன் அவனை. முதல்வர் மூக்காலேயே முறைத்துப் பார்த்தார். இதான் லாஸ்ட் வார்னிங் க்லாஸ்ல டீச்சர்கிட்ட காரணக் கடிதம் எழுதிக் கொடுத்துட்டு விட்டுட்டுப் போங்க என்றார். வகுப்பு வாசலிலேயே விட்டுவிட்டு வந்த என்னைப் பார்த்து சீறியது அந்த பூனை. மாமா மிஸ் கூப்பிடுராங்க. கோவம் உச்சமடைய மனது கொச்சை சொல் விட வாயில் எச்சிலை விழுங்கியவனாய் என்னடா….ஆஆ என்று எகிறியப்படி எட்டிப் பார்த்தேன். இழுத்துவிட்ட ஊஞ்சள் போல் உய்ய் என்று பறந்தது என் மனம். ஆமாம் என் மின்னல் தான். அவனது வகுப்பு ஆசிரியையாம். ஏன் லேட் என்றாள் சாரிங்க இன்னைக்கு (உன்னை பார்க்க) நேரத்துக்கு வரமுடில என்று கேள்வியையே பதிலாகச் சொன்னேன். (இரட்டை அர்த்தத்தில்) நீங்க யாரு? என்றாள். மாமா என்றேன் (உனக்கும் தான்) இதுவும் இரட்டை அர்த்தத்தில் தான். பின்ஸிபாலைப் பார்த்திங்களா என்றாள். பார்த்தேனே… என்ன சொன்னார் . காதல் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னார் என்றேன் பதட்டத்தில். என்ன என்று அதட்டுவதாய் இருந்தது அவளின் கருவிழிகளின் மொழி. மன்னிக்கனும் கராணக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னார் என்றேன். ம்ம்ம்ம் என்றவள் பிறப்புச் சான்றிதல் வேண்டும் குடுத்தனுப்புங்க என்றாள். நானே கொண்டு வருகிறேன் என்றேன். இரண்டடி வைத்தப்பின் மணிமாமா!!! என்றாள் (மணிகண்டன் அவன் பெயர் மணிமாறன் என் பெயர்) படபடவென்று பத்திலக்க எண்ணைக் கொடுத்து அவங்க அம்மாவ எனக்கு கால்பன்ன சொல்லுங்க என்றாள். காலில் மெட்டி இல்லை, நெற்றியில் கும்குமம் இல்லை, கழுத்தில் கயிறு இல்லை, சற்று அடர்த்தியான தங்கச்சங்கிலி மட்டும்தான். ECGஐ விட வேகமாக ஆராய்ந்தது கண்கள் எப்போ விடியும் என்று பிறப்புச் சான்றிதழைக் கொடுக்கப் பறந்து போனேன். இரண்டு நாளில் அக்கா மகன் பிறந்த நாள் விழா. காதலர் தினமும் தான். அவளுக்குச் சிறப்பு அழைப்பு விடுத்தாள் அக்கா.பத்திலக்க எண் என்மனதில் பாசுரமாய் பதிந்து போனது. சுழற்ற நேரம் வந்தது. மறுமுனையில் தேவாராமாய் ஒலித்தது அவள் குரல். ஹலோ…. பர்த்டே பார்ட்டிக்கு ட்ரஸ் கோடு ஊதா என்று அக்கா சொல்ல சொன்னதாய் நானே கதை அளந்தேன். உங்களுக்கு பிடித்த நிறமா? என்று என் பதில் அறிய ஆவளற்றவளாய் டப்பென துண்டித்தாள் தொடர்பை. எப்படி கண்டுபிடித்திருப்பாள் என்று அன்றிரவு மொட்டை மடியில் அமர்ந்து மூன்று நண்பர்களும் ஆராய்ச்சி செய்தோம். மூன்று மணி நேரத்திர்க்குப் பின் விடையை கண்டறிந்தோம். அவள் தான் டீச்சர் ஆச்சே. டீச்சருக்கு எல்லாம் தெரியும். மறுநாள் மாலை கடலே கரைத் தாண்டி வந்தது போல் வந்தாள், அவளுக்கே உரித்தான ஊதா நிற கதர்புடவையில். அவளைத்தவிர அத்துனையும் இருளாய் இருந்தது எனக்கு அம்மா உட்பட. நண்பர்கள் மச்சான் ம்ம்ம் என்றனர் ஓம்காரமாய். விழா விஷேசமாய் முடிந்தது. பரிசளித்து, பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவள் வருகிறேன் என்று விடைபெற்றாள். வீதிவரை விட்டுவிட்டு வா என்றாள் அக்கா அத்துனையும் புரிந்தவளாக. வீதி ஓரத்தில் வைத்திருந்த அவளின் இருசக்கர வண்டிவரை என்னை இழுத்து வந்தது அவளின் வாசமும் பாசமும். சரி கிளம்புரேன் குழந்தைங்க காத்துகிட்டு இருப்பாங்க என்றாள். கல்யாணம் ஆயிடுச்சா??? நரம்பறுந்த வீணையாய் நடு நடுங்கியது என் குரல். அழகுக்கு ஒரு பெண்ணும். ஆசைக்கு ஒரு ஆணுமா இரண்டு பசங்க இருக்காங்க என்றாள். இடியும் மின்னலும் இணைந்து இடைவிடாது தாக்கியதுப் போலிருந்தது. அவள் விட்டுப் போனதோ நான் வீட்டுக்குப் போனதோ யாதொன்றும் இன்றுவரை எனக்கு நினைவில்லை. அவளை மறக்க மறுத்தது மனம். தண்டனையை உடலுக்குக் கொடுத்தேன். இரண்டு மாதங்கள் கழித்து அவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி நலமா? நீங்கள் கேட்ட ஜோடிப் புறாக்கள் வந்திருப்பதாக கடைக்காரார் சொன்னார். நீங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுக்க தெரியாது என்று சொன்னது எனக்கு நினைவு இருக்கிறது. வேண்டுமானால் நானும் கூட வருகிறேன் என்று அனுப்பியிருந்தால். இணையத்தை விட வேகமாக புறப்பட்டேன். பாதி வழியில் போதி மரம் கண்டவனாய் இல்லை இனி அவளைப் பார்க்க கூடாது என் வாழ்வைக் கெடுத்த பாவி அவள் என்று சிறுமூளை சதி செய்ய வண்டியை அலுவலகம் பக்கமாக விரட்டினேன். எனக்கு மாற்றம் வேண்டும். (ஊருக்கும் மனதுகும் தான் ) கேட்ட பத்தே நிமிடத்தில் காகிதங்கள் தயார் ஆனது. அதற்காகவே காத்திருந்தார்கள் போல. செல் நம்பரை மாற்றிவிட்டு சென்னைக்குப் போய் சேர்ந்தேன். காலங்கள் உருண்டோடின காயங்கள் மட்டும் வடுவாய் இருந்தது. மறுநாள் என் மகளின் பள்ளியில் மாறுவேடப் போட்டி. மகளுக்கு புடவை வாங்க மனைவி அலையாய் அலைந்தாள். புடவை உனக்கா அவளுக்கா? கடையிலேயே இல்லாத டிசைன் உனக்கு மட்டும் எப்படி கிடைக்கும் என்று கடிந்துக்கொண்டேன். அரைமனதோடு ஒன்றை வாங்கி வந்தாள். மகளுக்கு அலங்காரம் செய்து போட்டிக்கு அழைத்துச் சென்றோம். போன இடத்தில நடுவரைக் காட்டி என்னங்க !! இந்த மாதிரி புடவை தான் தேடினேன் என்றாள். எட்டு ஆண்டுகளாய் துடிக்க மறுத்த, மறந்த என் மனம் எல்லாவற்றுக்குமாய் துடிக்க ஆரம்பித்தது. ஆம் அவளேதான் என் மனதை கொன்ற கொ(ள்ளை)லைக்காரி. என்னை சுதாரிப்பதற்குள் அவளிடம் விறுக்கென்று இழுத்துச் சென்றாள் ஏதும் அறியாத என் இல்லாள். அதே கோவில் வாசம், கதர் புடவை, அவளுக்கே உரித்தான உடுத்தும் நேர்த்தி. மேடம் இந்த மாதிரி புடவைதான் என் மகளுக்காக தேடுனோம் நானும் என் வீட்டுக்காரரும். இந்த ஒரு வயசு பையன வச்சுகிட்டு. கிடைக்கவே இல்லை. என்று என் குடும்பத்தை அவளை அறியாமலே அரை நிமிடத்தில் அறிமுகப் படுத்திவிட்டாள் என் அப்பாவி மனைவி. புடவை மிகவும் அழகாக இருக்கு என்றாள் என் (இவள்). உங்களை விட அல்ல என்பதை பதிலாக்கினாள் என் (அவள்). அவள் கண்கள் என் பக்கம் திரும்பவே….. இல்லை. என் கண்கள் அவள் பக்கமிருந்து திரும்பவே….. இல்லை. போட்டியில் என் மகளுக்குத்தான் முதல் பரிசு. என் மகள் என்பதால் தேர்ந்தெடுத்து இருப்பாளோ? சிறிய சலனம் எனக்கு. அழுகின்ற மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே நிற்கிறேன் மகளை அழைத்து வாங்க என்றாள் மனைவி. மனதைக் கட்டுப்படுத்தி மகளை அழைக்க மேடை அருகேச் சென்றேன். ஓஓ!!!!!!! இவங்க உங்க இளவரசியா? என்றாள். முதல் பரிசு என் மகளின் திறமைக்குத் தான் முடிவானது எனக்கு. நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்கத் துடித்தது உதடு. துணிவில்லை என்றது மனது. வீட்ல பசங்க நலமா? என்றேன். வெளி நாட்டில் மருத்துவம் படிக்கிறாங்க என்றாள். பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் சென்று விட்டனர் குழந்தைகள் அவள் மட்டும் இன்னும் இளமையாக மாறியிருந்தாள். சரி கிளம்புறோம். உங்களை அழைக்க கணவர் வருவாரா? என்றேன். கணவரா??? வழக்கம் போல முத்துப்பற்கள் முப்பதிரண்டையும் பதிலாக காட்டினாள். எட்டு ஆண்டுகளில் ஏதாவது அசாம்பாவிதம் நடந்திருக்குமோ? என்று சாரிங்க என்றேன் சலனத்தோடு. அட நீங்க வேற… எனக்கு கல்யாணமே ஆகல என்றாள் அவளுக்கே உரித்தான அசால்டான தோரணையில். ஏசுவின் முள் முடியை என் உடம்பு முழுவதும் ஏற்றியது போலிருந்தது. நீங்க தானே இரண்டு குழந்தைகள் இருக்காங்கனு சொன்னீங்க என்றேன் வார்த்தையே வராத வாயால். ஆமா சொன்னேன். தாயாக இருக்க தாரமாக அவசியம் இல்லையே என்று சிரிப்பை சிதறிவிட்டு என்னை சிந்திக்க விட்டாள். அன்றும் இன்றும் அவள் அப்படியே இருந்தாள் அறிவாளியாய். நானும் அப்படியே இருந்தேன் கோமாளியாய். விழி முழுவதும் தேடல்கள் இருந்த போதும் நிதானமாய் வழியில் விட்டுவிடவா என்றேன். அன்றும் வழியில் தான் விட்டுச் சென்றீர்கள் என்று வார்த்தைகளின் வாள் கொண்டு அறுத்தெறிந்தால் என் வாக்கியங்களை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 8.30 மணிக்காக காத்திருந்தேன். அன்றிரவு நோயாளியின் இரவாக நீண்டிருந்தது என் மனதுக்கு. அலுவலகம் சென்றதும் அக்காவை தொடர்புக் கொண்டேன். ஒரே வினா அவள் யார்? ஐம்பது நொடிகள் மௌனத்திற்குப் பிறகு திருமண வாழ்க்கையால் தற்கொலை செய்துக்கொண்ட அக்காவின் குழந்தைகள். திருமணம் செய்யாமல் தாயாகி வளர்க்கிறாள் என்றாள். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு, பதறிய காரியம் சிதறும், கண் கெட்டப்பிறகு கதிரவன் வணக்கம் என்று அத்துனை பொன் மொழிகளின் பொருளும் அன்றுதான் புரிந்தது எனக்கு. கொலைகாரன் நான்தான். என் மனதை கொன்றபாவி. இரண்டு கைகளும் என் தலையில் அடித்துக்கொண்டது. அடிவாங்கியது மூளை தனது முட்டாள் தனத்துக்காக. தொலைப்பேசி ஒலித்தது மறுமுனையில். இன்று காதலர் தினம் கதர் புடவை வாங்கித்தருவதாக சொன்னீங்களே நியாபகம் இருக்கா. வாங்க சீக்கிரம் என்றாள் மனைவி. கதர் புடவை கட்டியவளை மனதில் சுமந்து கதர் புடவை கட்டியவளுக்கா வாங்க கனத்த இதயத்தோடு கடைக்குச் சென்றேன். ஆயிரம் புடவையை புரட்டிய பின்னும் ஒப்பவில்லை மனைவிக்கு. மூலைக்கு முட்டு கொடுத்தவனாய் அமர்ந்தவனை அழைத்தாள். வந்து செலக்ட் பன்னுங்க என்று. கண்களைத் தேய்த்தவனாய் சென்றவன் சட்டென்று கடல் ஊதா நிற புடவையைக் கண்டான். இதை எடுத்துக்கோ. அட ரொம்ப அழகா இருக்கு இதயே குடுங்க என்றாள் மனைவி. சாரி மேடம் அத வாங்கிடாங்க என்றார் வியாபாரி. அட அவங்களுக்கு வேற கொடுங்க அண்ணா. நீங்களே பாத்திங்கலே இவங்களுக்கு ஒரு மணி நேரமா ஒன்னுதான் புடுச்சுருக்கு என்றவனிடம் இல்ல சார் அவங்க எல்லா காதலர் தினத்துக்கும் கடல் ஊதா நிற புடவைதான் கட்டுவாங்களாம். எதோ செட்டிமென்டா இருக்கும் போல என்று வியாபாரி சொல்லி முடிக்கும் போது என்னாச்சு என்று என்ற குரளைக் கேட்டு நடந்ததை ஒப்பித்தார் வியாபாரி. அய்யோ மேடம் நீங்களா! அதானே இவ்வளவு நல்ல புடவையை எடுத்து வச்சது யாரா இருக்கும்னு யோசிச்சுட்டு இருந்தேன்.கேக்க கூடாது தான் உங்க பொருள் தான்.. ஆனா எனக்கும் அதான் புடுசுருக்கு நான் வச்சுக்கவா என்று பள்ளி மாணவியாய் மாறிபோனாள் என் மனைவி. ச்சேச்சே அதலாம் ஒன்னும் இல்ல. இது என் காதலர் தின பரிசா வச்சுக்கோங்க என்று தானம் செய்தால் அவள் என்னையும் சேர்த்து. அவள்தான் ஆசிரியை ஆச்சே. அங்கு காதலர்கள் மறித்துப்போயினர் காதல் மட்டும் மலர்ந்திருந்தது. மீண்டும் ஒருமுறை காதலர் தினத்தில்……..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.