logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

V.MARISELVI (SESU.MANISELVI)

சிறுகதை வரிசை எண் # 82


வெ.மாரிச்செல்வி (செசு.மணிசெல்வி) யார் அந்த குரல் விடியற்காலை மணி 02.30-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்ட மதியை தற்செயலாக கவனித்தான் பிரபு, என்ன உருண்டுட்டு வார? – என்றான். ஒன்னுமில்லங்க என்றபடி திரும்பிப் படுத்தாள். வாய்தான் ஒன்னுமில்ல என்றாலும் மனது அதையே நினைத்துக் கொண்டிருந்தது. ஆம், காமாட்சி அக்காவின் இறப்புக்கு சென்று வந்த இருநாட்களாகவே அவள் சரியில்லை. வேலையிலும் கவனம் செல்லவில்லை. என்னவென்று சொல்ல முடியாத கலக்கம் அவளைத் தொடர்வதை உணர்ந்தாள். விடியும் பொழுதிpல் எப்படியோ கண்ணயர்ந்தவளை நவீன அலாரம் அடித்து எழுப்பியது. சிவந்த கண்களுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்தாள். மனதின் சோர்வு உடலில் தெரிந்தது. காலைப்பரப்பு வெளியில் தொடங்கியிருக்க தானும் எழுந்து தன் கடமைகளில் மூழ்கினாள். அன்று என்ன சமைத்தாலோ நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லும் மகள் அலியா, பரபரத்தான் என்னம்மா நீ இன்னம் கிண்டிகிட்டுருக்க எனக்கு ளுஉhழழட டீரள வந்துரும். இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேற போமா என்று கோவித்தபடி அப்பாவிடம் புகார் தொடுக்க சென்றான். ஆயா, அம்மாவப் பாருப்பா இன்னமும் எதுவும் ரெடி பண்ணாம நிக்கிறாங்க, எனக்கு லேட் ஆவுது என்று படபடத்தான். பிரபு மகனை சமாதானம் செய்தார். என்னப்பா அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல போல அதனால லேட் ஆயிருக்கும் அதுக்காக கோவுச்சிக்கிறதா நம்மா அம்மாதான, என்றான் மழுப்பியவாறு மகனின் கோபம் இரட்டிப்பாக விருட்டென்று ளுஉhழழட பேக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். இது எதுவும் தெரியாமல் வாரம் காலேஜ் டூர் முடித்து வந்திருந்த மகன் பிரகாஷ் அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் எப்போதும் மகனை சமாதானம் செய்யும் மாலதி இன்று எதுவும் சொல்லாது சோபாவில் சென்று இலைபோல் அமர்ந்தது பிரபுக்கு வித்தியாசப்பட்டது, என்னம்மா, என்னாச்சு உனக்கு ? ஏன் ? ரெண்டு நாளா இப்படியிருக்க உடம்பு ஏம் சரியில்லையா ? நாம கொஞ்சம் வெளில போயிட்டு வருவோம் என்ற மெல்ல கேட்டான் பிரபு. இல்லங்க, ஓண்ணுமில்ல நான் என்ன பண்றேனு எனக்குத் தெரியல, உங்க வேலை, பசங்க படிப்பது ஊர்ல இருந்து கிளம்பி இங்க செட்டிலாகிட்டே பெருசா ஊர்த் தொடர்பும் இல்லாம போச்சி எனக்குனு நீங்க 3 பேரு மட்டும் உலகமாகிட்டு. சரி இப்ப அதுக்கு என்ன அலுவலகத்துக்கு நேரமாவதை மறைத்துக் கொண்டு பொறுமையாக கேட்பது போல் சற்று எரிச்சலடைந்தான். காமாட்சி அத்தை 2 மகன்களைப் பெத்தவளாக 2 பேரும் நல்லாதான் இருக்காங்கக இருந்ததையும் மாமா போனப்பிறகு அவங்க வாழ்க்கை மாறுவதை யாரும் கண்டுக்கல அப்படி ஏன் நெனக்கிறே அவங்க பிள்ளைகளை அவங்க நல்லாதான பாத்துக்கிட்டாங்க. ஆமாங்க இருந்தாலும் அவங்க தனிமைதான் அவங்கள இந்த நெலமைக்கு கொண்டு வந்துருக்கு போன தேட சரிம்மா அப்படியே வச்சுக்கு வோடம் அதுக்கு நீ ஏன் இப்படி உக்காந்துருக்க, ஆபிஸ்க்கு வேறடைம் ஆச்சு…….. அலியா எப்படி கோபிச்சுட்டுப் போறான் ….பாத்தீங்களா ? ஏய், அவன் என்ன மாறிப் பொசுக்குனு கோபம் வந்துடும். இதெல்லாம் பெரிசாக்கிட்டு என்றவாறு அலுவலகத்துக்கு கிளம்பினான் பிரபு. மாலதியின் மனதில் எண்ண அலைகள் வீசத் தொடங்கின. தனக்கெனச் செய்த ஏதோ ஒன்று இருப்பதே உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் சிறந்தது என்பதை உணர்ந்தவளாய் சுயதொழில் புரியும் தோழி சீதாவின் எண்ணை அலைபேசியில் தேடத் தொடங்கினாள். மணி 12-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது லட்சுமியின் எண்ணம் எங்கோ சென்றது பாப்;பா தண்ணிதாம்மா அகிதூக்கு தண்ணிதாம்மா என்ற குரல் அவளை எழுப்பியது போல உணர்ந்தாள். காலம் பின்னோக்கு நுகர்ந்தது. அவள் வயது 12 அவ்வூர் வளர்ச்சிகள் பெரிது ம் இல்லாத கிராமம். அதுதான் அவளது சொந்த ஊர் விடியலில் காட்டுக்கு கிளம்பும் கரிசல் நிலம் அவளது பெற்றோரும் அவ்வூரில் கரிசல் காட்டு வேலை செய்து வந்தனர். “ஏ லெட்சுமி நம்ம பொன்னம்மா அக்கா கூட போய் விளையாடிட்டு இரு, அம்மா வூட்டுக்கு போய்ட்டு வந்துரேன்” “சரிம்மா” லட்சுமிக்கு என்னம்மா என்றாள் உயில் எப்போதும் பள்ளிக்கூடம் லீவு நாட்களில் பொன்னம்மா அக்கா வீடே கதி என்றிருப்பாள். ஒரு நாள் இரவு லட்சுமி தூங்கி விட்டதாக எண்ணி அவளது அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டாள். “ஏய் இனிமே புள்ளைய அந்த பொன்னம்மா வீட்டுக்கு அனுப்பாத’ “ஏனாம், அவதான் புள்ளைய பாத்து;கறா, எதுக்கு அனுப்பக்கூடாதாம்?” ஒனக்கு சொன்னா புரியாது விட மாட்ட, அது ஒண்ணுமில்லடி அந்த பொன்னம்மா வேத்து சாதிப் பயல பாக்குதாம்” அட என்ன நீங்க இப்படி பேசுறீய அது தங்கமான புள்ள அதெல்லாம் பண்ணாது. நீங்க வேற ஏய் கோட்டி சொன்னாக் கேளுடி அந்த புள்ளதான் காட்டுல அதே பேச்சுதான். ஆஸ், அப்படியாக்கும் எதுக்கு அப்படி பண்ணனும் தெரியலியே, ஆமா ஊருக்குள்ள நடக்குறதுலாம் ஒன்னக் கேட்டுட்டுதான் நடக்குதாக்கும். சொன்னா கேளு இனிமே விடாதே எங்க அக்கா வீட்ல கொண்டு விடு புரியுதா சரி சரி ஆமா இவுக அதிக அக்கா அப்புடியே புள்ளய பாத்து கிழிச்சிட்டாலும், நாம இருக்கப்பவே பண்டத்த எடுத்து ஒழிச்சு வப்பா என்று அங்களாய்;த்தபடி படுத்தாள் வீராயி. உறங்குவதுபோல் படுத்திருந்த லட்சுமிக்கு எதுவும் புரியவில்லை. எனினும் நாளை தான் பொன்னம்மா அக்கா வீட்டுக்குப் போகவில்லை எனபதும். அத்தை வீட்டுக்குப் போக போகிறோம் என்பதும் சற்று கவலையைத் தந்தது. இரண்டு நாட்களாக லட்சுமி பொன்னம்மா அக்காவைப் பார்;க்கவில்லை பிறகொருநாள் மாலை விளையாடுவது போல பொன்னம்மா அக்கா வீட்டுப் பக்கம் சென்றாள். ஏதோ சண்டை நடப்பது போல தெரிந்தது. பொன்னம்மா அக்காவின் அழுகுரலும் கேட்டது, எட்டிப் பார்த்தவள் கூட்டத்தில் தனது பெரியப்பா, ஏய் இங்க எங்க வந்த என்று கேட்ட கரகரப்பான குரலில் மீண்டு வீட்டுக்கு ஓடிவிட்டாள். பின்பு பொன்னம்மா அக்கா வீட்டுப்பக்கம் கூட லட்சுமி போகவில்லை அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது லட்சுமியின் வீட்டின் எதிர்முனையில் ஊர்ப் பெரியவர்கள் கூடியிருந்தனர். “ஏம்பா அந்த பிள்ள பண்ணதுக்கு இதைதான் பண்டனையா” ஆமா சித்தப்பா இல்லனா இவலமாறி இன்னமும் நாலு பேரு கௌம்பிருவாங்க டேய் வேணான்டா சொல்லி வேற கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அதெல்லாம் சரிப்படாது அததான், இவளப்பாத்து இருக்குற ஊரு கெட்டுரும். இதான் முடிவு சரிப்பா, அது பொன்னம்மாட்டயே சொல்லிடுவோம், ஏம்மா நீ பன்னது தப்பு, நாங்களா உன்ன ஒன்னும் பண்ணமாட்டோம் நீயா இந்த மருந்த குடிச்சிட்டு நாண்டுடு, அதான் சரியா இருக்கும். என்றபடி கூட்டம் களைந்தது. பொன்னம்மா அக்காவும் ஆங்காரம் எடுத்தவளாய் அந்த மருந்தை மடக் மடக்கென்று குடித்து முடித்தாள். இத்தனையும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியை வீராயி மிரட்டி படுக்கவைத்தாள். சிறிது நேரத்தில் பொன்னம்மா அக்கா பாப்பா தண்ணி வேணும் அக்காக்கு எனது கதறுவது கேட்டது. லட்சுமி எழுந்திருக்கப் போனாள். அம்மா அதட்டினாள். பேசாம படுக்கமாட்டா உங்க அப்பனும், பெரியப்பனும் நம்மள கொன்னு போட்ருவான்ங்க சொன்னாக் கேளு என்று உறங்க வைத்தாள் வீராயி எனினும் “பாப்பா தண்ணி குடும்மா என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்படியே லட்சுமியும் தூங்கிப் போனாள். மறுநாள் காலை அருகில் அம்மாவைக் காணாது வெளியில் தேடியபோது பொன்னம்மா அக்கா இருந்த இடம் வெறுமையாகக் கிடந்தது. நாட்கள் நகர்ந்தது. ஊருக்குள் பொன்னம்மா ஆவியாக அலைவதாக அரசல் புரசலாகப் பேசத் தொடங்கினாள். இரவில் ஒப்பாரி மற்றும் அழுகுரல் கேட்பதாகவும் கூறினர் ஒருநாள் நள்ளிரவில் லட்சுமிக்கும் அந்த அழுகுரல் கேட்டது. ஆனால் கண்களைத் திறக்க அஞ்சி அம்மாவின் சேலையை இறுகப்பற்றினாள். அப்போதுதான் அம்மா விழித்திருப்தை உணர்ந்தாள் அம்மாவும் அவ்வழுகுரல் கேட்டுள்ளது. பதறியபடி அப்பாவிடம் “என்னய்யா இது இப்புடி அழுவுது என்றாள். அவரும் மிரண்டுதான் போயிருந்தார் பேசாம படுடி நீ வேற, ஏதாவது கேட்டுக்கிட்டு என்று சமாளித்தார். விடியல் நெருங்க நெருங்க அழுகைச்சத்தம் காற்றோடு கரைந்தது. காட்டுக்கு கிளம்பிய அம்மா லட்சுமியிடம் எதிர்த்த மனையில் போய் வெளையாடப் போகாத என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினாள் நாட்கள் நகர்ந்தது லட்சுமுp பருவ வயதை அடைந்தாள். வயதுப் பெண்களுக்கு பொன்னம்மா அக்கா கதையை இன்றும் கிலியைத் தந்தது. அவ்வப்போது இரவில் பொன்னம்மா அக்கா குரலில் பாப்பா தண்ணி கொடுப்பா என்ற சத்தம் லட்சுமிக்கும் கேட்டது. ஆனால், அது அவளுக்கும் பழகிவிட்டது. அச்சம் மாறி அவலம் புரியத் தொடங்கியது. முதல் அக்குரல் அவளுக்கு அணுதாபத்தைத் தந்நது. லட்சுமிக்கு திருமணமும் முடிந்தது. மாப்பிள்ளை பட்டினத்துக்காரர். அவருடன் அவளும் வடமாநிலத்துக்குக் குடிபெயர்ந்தாள். கால ஓட்டத்தில் பொன்னம்மா அக்கா கரைந்து போனாள். ஊருக்கு செல்வதும் அபூர்வமானது. அந்த மனையில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியதோடு பொன்னம்மா அக்கா பற்றிய நினைவும் பெயர்ந்தது லட்சுமிக்கு ஒரே மகள் காயத்திரி, பஞ்சாபில் கல்லூhயிpல் படித்துக் கொண்டிருக்கிறாள். பஞ்சாபி டாக்டர் ஒருவனை விரும்புவதாக வந்து சொன்னாள். அவளது அப்பா சுந்தரம் அந்த டாக்டரைப் பற்றி விசாரிச்சுட்டு சொல்றேன்மா என்றார். பின்னர், லட்சுமியிடம் நல்ல பையன், நல்ல குடும்பம், ழுமு தான் என்றார். லட்சுமி அதிர்ந்தாள். அவளுக்கு பொன்னம்மா அக்காவின் நினைவு எட்டிப்பார்த்தது. வேணாங்க ஊருல தெரிஞ்சா என்னாகுமோ என்று பதறினாள். கோட்டி ஊர்க்கரங்களுக்கு என்ன தெரியும் சும்மாக் கெட என்று அதட்டினார். அனைத்தும் பேசி முடித்து, அன்று மாலை நிச்சயமும் முடிந்தது. லட்சுமியின் பெரியப்பா, அப்பா அனைவரும் வாழ்ந்த சொந்த ஊரிலேயே எளிமையாக பூ வைக்கும் படலம் நிறைவடைந்தது. மெல்ல மெல்ல நிகழ்விற்கு திரும்பிக் கொண்டிருந்த லட்சுமிக்கு, பாப்பா தண்ணி குடும்மா, குரல் சற்று அதிர்வைத் தந்தது. “பொன்னம்மா அக்கா அன்னைக்கு ஒனக்கு நான் தண்ணி தரல, இன்னைக்கு என் பொண்ணுக்கு அந்த நெலம இல்ல, காலம் மாறிடுச்சு, ஆனா உனக்கு நடந்தத மாத்த முடியாது” என்று கூறிய போது அவளது கண்ணீரில் தலையணை நனைந்தது. இனி பொன்னம்மா அக்கா குரல் யாருக்கும் கேட்காது என்பது மெல்ல விளங்கியது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.