அம்மையார் ஹை நூன் பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி
கழுவேற்றம் -2025
சரண்மனோன்
பொழுது எந்த நேரமென்றில்லை..
நினைத்தால் கருக்குகிறது..நினைத்தால் வெயிலடிக்கிறது. அன்று சற்று மேலதிகதிகமாகவே வெளிச்சமும், கருக்கலும்,மாறிமாறி ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.
அங்காத்தாள்,நால்ரோடு அண்ணாச்சி கடையில் மளிகைப் பொருட்கள்வாங்கிக் கொண்டிருந்தாள். அவற்றை ஒரு
குச்சிப் பையில்வைத்துவிட்டு ,பணத்தை கொடுத்து, மீதிச் சில்லறைக்கு கறிவேப்பிலை வாங்கிக் கொண்டிருந்த போது,பக்கத்துவீட்டு சிறுவன் ஓடி வந்தான்.
" அம்மாயி.. நற்பவி அக்கா வந்துருக்கு." "அப்படியா.. " என்று சில கணங்கள் திகைத்தவள்,
"நான் வேற வீட்ட பூட்டி சாவிய கொண்டு வந்துட்டேன்.. ரெண்டு பேரும் வெளிலநின்னுட்டிருக்காங்களா."
"இல்லம்மாயி.. அக்கா மட்டும்தான் வந்திருக்கு.." " அக்கா மட்டுமா.. இந்த புள்ள போன் கூட பண்ணலையே.."
மனசுக்குள் ஏதோ இடரியவாறு குச்சிப் பையைதூக்கிக்கொண்டு ஊர்வழித்
தடத்தில் வேகமாக நடந்தாள். கூடவே சிறுவன் ஓடி வந்தான்.
" அம்மாயி.. பருப்புஒப்பிட்டு சுடும் போது எனக்கு ஒண்ணு கொடுப்பீங்களா.. அப்பாகிட்ட காசு வாங்கித் தரேன்.."
"காசு என்னடாகாசு....உனக்கு சும்மாவே தர்றேன்.."
வெயில் தணிந்து கரு மேகங்கள் சூழ்ந்த நேரம் ,காற்று பிசுபிசுவென சுழன்றடிக்கத் தொடங்கியது. புங்க மர இலைகளும், தெருவோரம் விழுந்து கிடந்த பிங்க் நிற மந்தாரைபூக்களும் ,காற்றின் வேகத்தில் அலைக்கழிந்தது. மேகங்கள் இடறியது.
கண்ணுக்கு தெரியாத பகல் மின்னல் ஒளிர்ந்து காதை அடைத்தது.
ஒரு வீட்டுவாசலில் கட்டிலில் படுத்திருந்த ஒரு மூதாய்,,"வெறும் காத்து தான் வீசது.. . கொடியில காயற துணியெல்லாம் எடுக்க வேண்டாம்.. வர்ரமழையும் நின்னுரும்.." என்றாள்.
திருப்பத்தில் நுழைந்து தன் வீட்டை அடைந்த போது வாசலில் சோர்வாய்
ப்ரீப் கேஸோடு நின்றிருந்தாள் நற்பவி.
"பாவி மகளே.. ஒரு போன் பண்ணா என்ன போயிரும்.."
"எதுக்கு ? 'எல்லாம் சரியா போயிரும் அங்கயே கிட'னு, ஞானாபதேசம் பண்ணவா.."என்றாள் சலிப்பாக.
இடுப்பிலிருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்தாள் அங்காத்தாள். இருவரும்உள்ளே சென்றனர். கூட வந்த சிறுவனை காணவில்லை.வானம் இடிக்கக் தொடங்கியதால் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த நற்பவி தன் ஆடைகளை களைந்து, மூலையிலிருந்த மூங்கில்கூடைக்குள் வீசிவிட்டு ஒரு நைட்டி எடுத்து அணிந்து கொண்டாள்.
இவள் கிச்சனுக்குள் சென்று தேநீர் வைத்து கொடுத்தாள்.
அதேநேரம்வாசலில்சைக்கிளை
நிறுத்திய அவளின் அப்பா, ஒப்பிட்டு டின்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தார். இவளைக்கண்டு
" எப்படா வந்தே.." என்று கேட்டுக் கொண்டே கைகால்கள், முகம் அலம்பி விட்டு வந்தார்.சீக்கிரமே இருட்டிவிட்டது.
" பவி தோசை வார்க்கட்டுமா..?" என்றாள் இவள்
"வேண்டாம்மா.. ராகிரொட்டி சுடு.. மழைக்கு அதுதான் தோதா இருக்கும்.
என்றதும் , சீக்கிரமே தயாரித்து கொடுத்தாள்,
சற்றுநேரத்தில் இருவருக்கும் தட்டில்
சுடச்சுடபரிமாறினாள். அதை இருவரும் ருசித்து சாப்பிட்டனர்
சாப்பிட்டு முடித்து படுக்கையை உதறி விரித்து , ஃ பேனை சுழலபட்டு, பெட் லைட்டை மட்டும் எரியவிட்டு படுத்தனர்.
ஆனால் யாரும் தூங்கவில்லை. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். வெளியே மழைபெய்யத் தொடங்கியது. மேலும் மேலும் வலுத்துக் கொண்டே சென்றது. இரவு மின்னல் ஊரையே மிரட்டியபடி வெளிச்ச நர்த்தனம் ஆடத் தொடங்கயது.
இரண்டாம் நாள். அங்காத்தாள்,விடியற்காலை நீண்ட நோம் கழித்துத்தான் கண்விழித்தாள்.
கணவர் நேரமே எழுந்து குளித்து விட்டு, கிளம்பியிருந்தார். எப்.எம்.மில் ஆர்ஜே செல்வராஜ் பக்திப்பால் வார்த்துக் கொண்டிருந்தார்.
" அங்காத்தா... இன்னிக்கு சரக்கு தீர்த்து போச்சு.. தேங்காப் ஒப்பிட்டு, போடணும்.."
"மழைபெய்ஞ்சு வாசல் பூராவும் நச நசன்னு கிடக்கு.. அதை சரி பண்ணவே பொழுதாகும்.. இன்னிக்கு முடியாது சாமி.." என்றாள்.
" நான் போட்டுத் தரேன்ப்பா.." என்றாள் நற்பவி. . கண்களை திறக்காமலே.!
அவர்களுக்கு ஒப்பிட்டு விற்பதுதான் தொழில். கடலை பருப்பை ஊறவைத்து , பிறகு உலர்த்தி சீனிசேர்த்துஅரைத்துதோசைக்
கல்லில் வார்த்து எடுப்பதுதான் ஒப்பிட்டு. கடலைப்பருப்பிற்கு பதிலாக தேங்காய் சிதறலை சேர்த்தால் தேங்காய் ஒப்பிட்டு.
இவ்வகை இனிப்பு திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் பிரசித்தம். திருச்சி டூகோவை மெயின்ரோட்டில் அனைத்து பலகாரக் கடைகளிலும் இது கிடைக்கும். கோவைநெடுஞ்சாலையில் காரில் போகிறவர்கள், வருகிறவர்களின் பிரத்யேக வாங்கு பொருள் இது.
நற்பவியின் தந்தை , விற்பனை செய்யும் முறை வேறுவிதமானது..,வீட்டில் தயாரித்து அவற்றைடின்களில் அடுக்கி,சைக்கிளில் வைத்துசந்தை சந்தையாக சென்று விற்பதுதான் அது.
அன்று அங்காத்தாள், ஒப்பிட்டு தயாரிக்க முடியாதென்று கூறினாலே தவிர, காலை உணவு முடிந்த பிறகு.எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யத் தொடங்கினாள்.
நற்பவி,' நான் செய்கிறேன்' என்று கூறினாலே தவிரகண்களைத் திறக்க வேயில்லை. இடையில் அவள் உடலைத் தொட்டு பார்த்த அங்காத்தாள் ,
" ஏண்டி.. இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி கிடக்கிறே.. சாயந்திரம் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரலாம்.." என்றாள். இப்போதெல்லாம் அவள் கால நேரங்களை ,ஸ்கூல் பிள்ளைகள்
யூனிஃபார்மோடு போவதையும், வருவதையும் வைத்துக் கணிக்கிறாள்.
அன்று சாயந்திரம் ஒரு ஸ்கூல் சிறுவனை அழைத்தாள். அது நேற்று கடை வீதியிலிருந்து இவளை அழைத்து வந்த சிறுவன். நேற்றேஅவன் கேட்டுக் கொண்டபடி,புதிதாகசுட்டிருந்தஒப்பிட்டை அவனுக்கு கொடுத்து அழகு பார்த்தாள்.
மாலை கணவர் வந்ததும் இருவரும் சேர்ந்து, நற்பவியை தாரணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தனர். அதற்கு பிறகு நற்பவி ஓரளவு தேற்றமாய் இருக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் நாள் . அன்று சங்கடஹர சதுர்த்தி.காலையிலேயே அந்த ஊர் இளைஞர்கள் வசூல் வேட்டையில் மூழ்கியிருந்தனர். அன்று இரவு கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். அதற்காக தங்களால் இயன்ற நன்கொடையை தருமாறு வசூல் செய்வார்கள்.
அங்காத்தாள்,, வழக்கம் போல் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை தந்தாள்.
அன்று கோயிலுக்கு செல்ல வேண்டியிருப்பதால் வீட்டை கழுவி துப்புரவு செய்தனர். மஞ்சள் வெயில் நேரம் நற்பவி குளித்து தயாரானாள்.
கூர்தல் உலர்த்தி நீண்ட நோம் வாரி அடக்கி ரப்பர் பேண்ட் போட்டு, நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டிருந்த போது, வாசலில் நிழலாடியது. தொடர்ந்து,
" வாங்க மாப்பிள்ள .. ஊர்ல எல்லாம் சௌக்யமா..?" என்ற அம்மாவின் குரல். வெடுக்கென்று திரும்பினாள்.
அவள் கணவன் கமலேஷ் உள்ளே நுழைத்து கொண்டிருதான். அவள் முகத்தை திருப்பிக் கொண்டு உள் அறைக்குள்சென்றாள்.
நாற்காலியில் அமர்ந்து சற்று நேரம் இவளிடம்பேசிக் கொண்டிருந்தவன் பிறகு மெல்ல எழுந்து நற்பவி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
" எங்க ரெடியாகிட்டிருக்க..அய்யோடா.. எவ்ளோ அழகா இருக்கே..?"
உதட்டை சுழித்தபடி.,அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
"ரெடியான பவிசோட அப்படியே கிளம்பு.. ஊருக்குப்போகலாம்.. |"
"......................….."
" சொல்றேனில்ல.." என்றபடி மெல்ல அவள் கையை பற்றினான். அடுத்த விநாடி அவன் கன்னத்தில்பளாரென அறைந்தாள்.
"ஒழுங்கா போயிரு.. அவ்வளவுதான் மரியாத.." என்றவள். வெளிப்புறம் திரும்பி." எதுக்கும்மா ரோட்ல போறவனையெல்லாம் வீட்டுக்குள்ள விட்ற.." என்று கத்தினாள்.
சில கணங்கள் உறைந்து போனவன், அவள் வெறுப்பை தகிக்க முடியாமல் மெல்ல நடந்து வாசல் புறம் வந்தான். தலையை குனிந்தபடி ,செறுப்பை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அங்காத்தான்,உள்ளே சென்று அவளை ஏறிட்டாள். அவள் இவளின் மார்பில் முகம்புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்!
"அம்மா.. அவன பார்த்ததுல மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்மா.."
"அப்ப கிளம்பு.. சங்கடஹர சதுர்த்திக்கு போயிட்டு வந்துடலாம்.." என்றாள்.
இரவு கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்தனர். ஊரோடு சேர்ந்து தக்காளி சாதம், சக்கரைப் பொங்கல், சுண்டல் சாப்பிட்டதில் மனசு நிறைந்தது. கோவில் பிரசாதங்களுக்கென பிரத்தியேக சுவை இருக்கிறது. ஒரு வேலை அப்படி தோன்றுவதாகவும் இருக்கலாம். எப்படியாயினும் அந்த ஒரு புள்ளியில் மனசும் வயிறும் ஒரு சேர நிறைகிற அதிசியமாகத் தான் இருக்கிறது.
நான்காம் நாள் , எப்போதும் ரேஷன் கடைக்கு சென்றாள்,அரிசியை தூக்கி வருவது அவளுக்கு சிரமமாய் இருந்தது. கணவரிடம் கேட்டாள்,
" அந்த இத்துப் போன அரிசிக்காக வந்திட்டிருந்தா ஐநூருரூபா வேலை கெடுது.. முடிஞ்சா வாங்கு இல்லைனா விட்டுத் தொலை.. அதனால வர்ர யோகம் போனா போகுது." என்றார்.அதனாலேயே சில மாதங்கள் வாங்கமலே போவதும் நிகழ்ந்தது.
இப்போது நற்பவி இந்ததால் அந்தக்கவலை இருக்கவில்லை. அவ ளுக்கென்று சைக்கிள் இருக்கிறது. அதில் அனாயசமாக ரேஷன் கடைக்கு கிளம்பினாள். .பொருட்கள் வாங்கி, சைக்கிளில் கட்டிக் கொண்டிருந்த போது தான் ஊர் ஜனங்கள் அவளை விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.
" என்ன. பவி... நாலு நாளா இங்க இருக்க.. வீட்டுக்காரர விட்டுட்டு வர என்ன காரணம்.." அடிக்கிற வெயிலை விட விசாரிப்புகள் தான் அவளை வாட்டியது.
" அம்மா நீ நடந்து வா.. நான் முன்னால போறேன்.."
என சைக்கிளில் ஏறி வேகமாய் விரட்டி தப்பித்து வந்து வாசலில் நின்றாள்..
அப்பாடா என்றிருந்தது. ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி கொத்திப் பிடுங்குகிறார்கள். குறிப்பாக அக்கறையான விசாரிப்பு போல தெரிந்தாலும் ,இவளுக்குள் எரியும் நெருப்பில் பலரும் குளிர்காய விரும்புவதாகவே அவள் உள்ளுணர்விற்கு தோன்றியது.
மேலும் ஐந்தாம் நாள் அவளின் மாமனாரும், மாமியாரும் அவள் வீட்டிற்கு, சமாதானம் பேச வந்திருந்தனர். அவர் எதுவுமே பேசவில்லை. அவர்கள் எவ்வளவோ பேசியும்,நற்பவி மனம் அசைந்து கொடுக்கவில்லை. அவர்கள் பேச்சு தோல்வியில் முடிந்தது.வேறு வழியின்றி தளர்த்து போய்கிளம்பினர்
தொடர்ந்து ஏனைய நாட்களில் ,
நற்பவி யின் விடியல் இங் கேயே நிகழத் தொடங்கியிருந்தது..
அக்கம் பக்கத்தினர் விசாரிப்புகளுக்கு அவள் மனம் பழகத்தொடங்கிவிட்டது. மௌனம் அவளுக்கு கவசம் போல இருந்தது.
தாய் மண்ணிலிருந்து, பிடுங்கப்பட்ட ஒருசெடியை,மீண்டும்அம்மண்ணிலேயே நட்டது போல் வேர்விடத் தொடங்கி விட்டாள்.
அன்றாட வேலைப் பணிகளில், அப்பாவிற்கு பருப்பு ஒப்பிட்டு தேங்காய் ஒப்பிட்டு தபாரிக்க ஒத்தாசை செய்தாள்.
இவ்விதமாய்சில சங்கடஹர சதுர்த்திகள் கடந்தன .
ஒரு நாள் பிற்பகல் நேரம் அவள் வீட்டு முன், ஒருடிராவல் பஸ் வந்து நின்றது.
அவள் கணவன் வீட்டினர் இந்த முறை உறவினர்களையெல்லாம் திரட்டி பஞ்சாயத்து பேச வந்திருந்தனர்.
பெற்றோர்,அவர்களை வரவேற்றனர். அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து ஹாலில் அமர்ந்தனர். வழக்கமான உபசரிப்புகள், பரஸ்பர விசாரிப்புகள்
அரங்கேறின. நடுக்கூடத்தில் மத்தியஸ்தராக அமர்த்திருந்த ஒரு பெரியவர்,பேச்சை தொடங்கினார்.
"இதோ பாருங்கம்மா.. குடும்பத்துல மனஸ்தாபம் வர்றது சகஜம்... எந்தக் குடும்பத்துலபிரச்னைஇல்லைங்கிறீங்க. ஏதோ சின்னஞ்சிறுசுக கோவிச்சுக்கிட்டா நாமதான் சேர்த்து வைக்கனும்.. அத விட்டுட்டு நாமளே எரியிர தீயில எண்ணெய் ஊற்றுகிற மாதிரி நடக்க கூடாது.. ! என்றார். கூட வந்தவர்களும் அதை ஆமோதித்தனர்.
அவர்களே நீண்ட நேரம். தத்துவங்கள். மேற்கோள்கள் என பேசி தீர்த்தனர். இறுதியாக பெரியவர் கூறினார்.
"நாங்களும் பல தடவை முயற்சி பண்ணி பார்த்துட்டோம்... இப்ப பல வகைலபேசியும்பார்த்துட்டோம்.
நீங்க பிடி கொடுக்க மாட்டேங்கறீங்க.. சரி அப்படி என்ன தான் பிரச்சனைனு சொன்னாதானே தெரியும்..?"
என்றார். மற்றவர்களும் அதை வலியுறுத்தபாயில்அமர்ந்திருந்த அங்காத்தாள் எழுந்துவந்தாள்.
"வேண்டாம்மா." என நற்பவி தடுத்தும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் பேசத்தொடங்கினாள்.
"ஐயா.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கிறேன்.. இப்ப நீங்க எல்லோரும் இந்த வீட்டுக்குள்ள எந்த வழியா வந்தீங்க.."
சிலகணங்கள் புரியாமல் திகைத்தவர்,
"இதென்னம்மா கேள்வி.. முன் வாசல் வழியாகத்தான்.."
"ஆனா நற்பவியின் கணவர் பின்வாசல் வழியா வழையனும்னு நினைக்கிறார்." என்றவள் தொடர்ந்து.
"அவர் நிறைய படிச்சவர்.. மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்பவர்.. அவருக்கு அது சரியா இருக்கலாம் ஆனா ," குரல் தழுதழுக்க,,"எங்க பொண்ணு உடம்பு தாங்காதய்யா.. டாக்டர்கிட்டப் போய் உண்மை தெரிஞ்சப்ப என் ஈரக் குலை நடுங்கிட் போச்சு." என்றவள் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு பேச்சை தொடர்ந்தாள்.
"இன்னிக்கு தலைமுறை எவ்வளவோ மாறியிருக்கலாம்.. அதுக்காக வித்தியாசம் வேணும்னு. சாப்பாட்டை வாயில சாப்பிடாம வேற ஏதாவதுல சாப்பிடுவமா.. இதுதான் நாகரிக வளர்ச்சியா.... பழங் காலத்துல
கொலைகாரங்களையும் திருடர்களையும் குத்துகம்பை நட்டு அதுல கழுவேற்றம் செய்வாங்களாம்.. உங்க புரையேறிப்போன சீரழிவுக்கு எந்த தப்பும் செய்யாத எம்பொண்ணுக்கு ஏய்யா அப்படிப்பட்ட தண்டனைய கொடுக்கிறீங்க.." என்றவள்
கைகூப்பியவாறு,
" தயவு செஞ்சு எல்லோரும் கிளம்புங்க. நீங்க லட்ச லட்சமா சம்பளம்வாங்கலாம்...
ஏரோபிளேன்லபறக்கலாம்..ஆனா.இயற்கைக்கு மாறானசம்பிரதாயங்களும், பின்வாசல் கலாச்சாரங்களும் எங்களுக்கு ஒத்துவராது.. . அப்படிப்பட்ட காட்டுமிராண்டி வாழ்க்கை எங்களுக்கு தேவையில்லை..." என்று முடித்தாள்.
நற்பவியின்கணவன் கமலேஷ் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான். மற்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. நற்பவியின் தந்தை எழுந்து அமைதியாக ஒப்பிட்டு டின்களை கட்டி , தெருவில் இறங்கி, சைக்கிளைஉருட்டத் தொடங்கினார்.. சாலையின் இருமருங்கிலும் மந்தாரைப் பூக்கள் பிங்க் நிறத்தில்பூத்திருந்தன! *
இக்கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் என்னுடைய கற்பனையே. இக்கதையில் தவறுகள் இருர்தால் திருத்தி 'அம்மையார் ஹை நூன் பீவி நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு 'தேர்வு செய்ய வேண்டுகிறேன்.
கதை தேர்வு செய்யப்பட்டால், 'சரண்மனோன்' என்றஎன்னுடைய புனை பெயரில் பிரசுரிக்கவும்.
இயற்பெயர் மற்றும் முகவரி:
C. ஈஸ்வரமூர்த்தி,
சரண்மனோ சலூன்,
கீரனூர் சாலை. நால்ரோடு,
பரஞ்சேர் வழி (அஞ்சல்)
காங்கயம் (வழி)
திருப்பூர் மாவட்டம்.Pin - 638701,
செல்: 9043036670
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்