Karthikeyan M.B
சிறுகதை வரிசை எண்
# 75
நம்மைச்சுற்றி
சிறுகதை
எப்போதும், எல்லோருக்கும் நல்லவனாக யாரும் இருக்க முடிவதில்லை என்று தனுக்குள்ளேயே அலுத்துக் கொண்டு சரவணன் அலுவலகம் கிளம்பிக் கொண்டுயிருந்தான். சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்த அவன் மனைவி மதுமிதா சரவணனை அழைத்தாள். ஏங்க! சீக்கீரம் வாங்க! உங்களுக்கும், ரேவதிக்கும் சாப்பாடு கட்டியாச்சு. எனக்கும் அலுவலகத்திற்கு நேரமாகுது சீக்கீரம் சாப்பிட்டு கிளம்புங்க என்று காலை நேரத்திற்குரிய டென்ஷனில் பரபரப்பாக இருந்தாள்.
சரவணனுக்கும், மதுமிதாவிற்கும் கல்யாணமாகி 15 வருடங்கள் ஆகி விட்டது. ரேவதி அவர்களுடைய மகள் 9ம் வகுப்பு படித்துக் கொண்டுயிருக்கிறாள்.
இருவரும் வேலை செய்வதால், ஓரளவுக்கு பொருளாதார நெருக்கடியின்றி அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டியிருந்தது. சரவணன், மது கத்தியது ஏதும் காதில் வாங்கமலேயே அவன் வேண்டா வெறுப்பாக ஏதோ தனக்குள் முனுமுனுத்தவாறு எந்த வேலையையும் ஆழ்ந்து செய்யாமல் அலுத்துக் கொண்டுயிருந்தான்.
இதையெல்லாம் பார்த்த மதுவிற்கு சரவணன் மேல் பயங்கர கோபம் வந்தது.
ஏங்க! டைம் ஆகுதுங்க, என்னங்க பன்றிங்க! எல்லாம் வேலையையும் தப்பு தப்பா செய்றீங்க என்ன தாங்க உங்களுக்கு பிரச்சனை, நேத்து இரவிலிருந்தே நீங்க சரியில்ல தங்களுக்குள்ளேயே எதையோ பேசிக்கிறிங்க. எதையோ பறி கொடுத்தா மாதிரி விட்டத்த பாத்து அப்படியே படுத்து கிடக்கறீங்க. எனக்கு டைம் ஆகுது. என்று மது காட்டு கத்து கத்தினாள்.
அப்போது தான் சரவணனுக்கு முகத்தில் தண்ணியடித்து மயக்கம் தெளிந்தது போல், சாரி. மது. ஒன்னுமில்ல நீ ஆபிஸ் கிளம்பு, மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். ரேவதியை சீக்கீரம் School ல விட்டுட்டு நான் ஆபிஸ் போகிறேன். Ok ok என்றான்.
சட்டென்று மது சரவணன் கையை பிடித்து நிறுத்தி நீங்க ஒன்னும் இன்றைக்கு சரியில்ல. ரேவதிக்கு School லீவு. அவ பாட்டி வீட்டுக்கு போயுடுவா. என்னாச்சு உங்களுக்கு, கொஞ்சம் வெளியே சொல்லி தொலைங்க என்று மீண்டும் சுத்தினாள்.
ஒன்னுமில்லடி ஆபிஸ்ல எனக்கும் சுந்தருக்கும் ஒரே சண்டை வேற ஒன்னுமில்லை நீ கிளம்பு என்றான். இவ்வளவு தானா Office பிரச்சனைய ஏன் வீட்டில காட்டறீங்க. அதுவுமில்லாம சுந்தர் உங்களோட Best dear நண்பராச்சே.எல்லாம் காலபோக்கில் சரியாகிடும் போங்க போய் வேலையை பாருங்க என்று சொல்லி விட்டு மது அலுவலகம் சென்று விட்டாள்.
சரவணன் ரேவதியை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு தன் டுவிலர் வாகனத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி பயணமானான் அந்த வண்டி தான் சாலையின் முன்னே சென்று கொண்டு இருந்தது. ஆனால் அவன் மனம் சுந்தரின் நட்பை பற்றியும் அவர்களின் செயல்களை பற்றியும் பின்னோக்கி சென்றது.
சரவணனும், சுந்தரும் இணைபிரியா நல்ல நளர்பர்கள் இருவரும் ஒன்றாக படித்து ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி இருவரும் ஆளுக்கொரு மகள் பெற்று நல்ல வண்ணம் பாசாமாய் வளர்த்து வருகிறார்கள்.
இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காத ஒரு புரிதலான நட்பை மாண்புடனும், புரிதலுடனும் பழகி வந்தார்கள். பெரும்பாலும் சனிக்கிழமை சாயங்கால வேலைகள் இருவருக்கும் உடையதாய் தான் இருக்கும். சரவணன் சுந்தர் வீட்டுக்கு போய் வருவான், சுந்தரும் சரவணன் வீட்டுக்கு போய் வருவான்.
எத்தனையோ வைத்துள்ளார்கள். பிரச்சனைகளை இருவரும் முன்னிருந்து தீர்த்து
இருவருக்குள்ளும் அவரவர் மேல் அப்படியொரு நம்பிக்கை இருவரும் சொந்த வீடு கட்டிக் குடியேறி வாழும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அவரவர்கள் கடந்த துன்பங்களை, அவமானங்களை, பரஸ்பரம் இருவரும் செய்த உதவிகளை விரல் விட்டு எண்ண முடியாது.
இப்படியெல்லாம் வளர்ந்து வந்த அந்த நட்பில் இப்போது ஏன் இந்த விரிசல்?
சரவணன் சட்டென்று வண்டியை நிறுத்தினான். அருகேயிருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்து ஏதோ யோசனையில் மூழ்கினான். ஏன் இப்படியெல்லாம் சுந்தர் பேசினான்? என்னை ரொம்ப மரியாதையில்லாம பேசி விட்டானே! ஏன் அவனுக்கு என் மேல இவ்வளவு கோபம் என்று ஒரு இனம் புரியாத குழப்பத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டுயிருந்தான். அவனுக்கு அலுவலகம் போகவே விருப்பமில்லை, அலுவலகம் சென்றால் சுந்தரை பார்த்தாக வேண்டும். பேசியாக வேண்டும், சரவணனுக்கு ஏனோ அவனை இன்று பார்க்கவே மனமில்லை. அலுவலகம் இன்று லீவு போட்டு விட்டான். எங்கெங்கோ சுற்றினான், சினமாவுக்கு போனான். ஏனோ அந்த படத்திலும் அவனுக்கு மனசு ஒட்டவில்லை.
ஆயிரம் கேள்விகள் அவனுள். ஏன் சுந்தர் என்னிடம் இப்படி பேசினான்?ஏதோ இன்றோடு இந்த நட்பே முறிந்து விடும் அளவுக்கு என் மேல் கோபம் கொண்டு பேசிவிட்டான். எத்தனை பிரச்சனைகளை சமாளித்து நாங்கள் கடந்து போயிருப்போம்.
என்ன காரணமாக இருக்கும். சரவணன் மண்டையில் ஏதோ சுத்தியில் வைத்து அடித்தது போல் உணர்ந்தான்.
சாயங்காலம் ஆனது வழக்கம் போல் வீட்டுக்கு வருவது போல் தன் வீட்டுக்கு சரவணன் வந்து கொண்டுயிருந்தான்.
அவன் அலைபேசி ஒலித்தது.
சரவணன் எடுத்தான்.. எதிர் முனையில் சுந்தரின் அழைப்பு.
எடுக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்வி சரவணனுக்கு ஆயிரம் இருந்தாலும் என் நண்பன் என்று முடிவொடு சரவணன் Call அட்டென்ட் பண்ணினான். சொல்லு!
ஏன் இன்னிக்கு Office வரல! என்றான் சுந்தர்..
வர பிடிக்கல! ஆதான் வரல! சரவணன்.
சரி அது உன் இஷ்டம், இப்ப நாம வழக்கமா சந்திக்கிற இடத்துல தான் நான் இருக்கேன். உன் கிட்ட கொஞ்சம் பேசனும், சார் கொஞ்சம் வர முடியுமா? என்றான் சுந்தர்.
இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம். இப்ப என்ன பேச வேண்டியிருக்கு அதான் நேத்தே நிறைய பேசிட்ட என்னைய, எடுத்தெரிஞ்சு பேசிட்ட, இப்ப என்னயிருக்கு இன்னும் பேச? என்றான் சரவணன்.
முடியுமா? முடியாதா? இதுக்கு மட்டும் பதில் சொல்லு நான் பேசியாகனும். சுந்தர்
சரி சரி வர்றேன் என்று தன் பைக்கை திருப்பி அவர்கள் வழக்கமாக சந்திக்கும் பார்க்குக்கு சென்றான். அங்கு சுந்தர் சரவணனுக்காக காத்துக் கொண்டுயிருந்தான். பூங்காவில் மெல்லிய காற்று வீசி கொண்டுமிருந்தது. அந்த ஆலமரத்து கீழே உள்ள பெஞ்சில் சுந்தர் உட்கார்ந்திருந்தான்.
அவனை நோக்கி சரவணன் அருகில் சென்றான். இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள வில்லை.
என்ன விஷயம் சொல்லு என்றான் சரவணன். சுந்தர் உடனே பேசு ஆரம்பித்தான்.
நான் நேத்து உன்னிடம் அப்படி எடுத்தெறிஞ்சி பேசியதற்கு உன் கிட்ட Sorry சொல்ல மாட்டேன். நான் ஏன் அப்படி நடந்து கிட்டேன்னு எனக்கு தெரியல். ஆனா ஒன்னு இனிமே நம்ம நட்பு மேலே தொடர வேண்டாம். நீ உன் வேலையை பாரு. நான் என் வேலையை பார்க்குறேன் என்றான் சுந்தர்.
சரவணன் தன் நெற்றியை சுருக்கினான். ஏன் என்ன? இப்படியொரு திடிர் முடிவு இத்தனை வருஷத்துல நாம யாரும் இப்படியொரு சந்தர்ப்பத்தை கடந்துயிருக்க மாட்டோம். அப்படி என்ன ஆயிடுச்சு இப்போ? காரணம் சொல்ல முடிஞ்சா சொல்லு. இல்லென்னாலும் பரவாயில்ல. நமக்குள்ள ஒரு break உனக்கு தேவைபடுது. எனக்கும் நீ எடுத்தெரிந்து பேசியதற்கு என்னால் உன்னை மன்னிக்க முடியாது.
உடைந்தது உடைந்தது தான், என்று சத்தமாக கத்தி விட்டு விருட்டென்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தான் சரவணன். அவன் பைக் எழுப்பிய மண் புழுதி அடங்கும் வரை அவன் புள்ளியாய் மறையும் வரை சரவணனையே பார்த்துக் கொண்டியிருந்தான் சுந்தர்.
இரவு வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு மகள் ரேவதியையும் தூங்கிவிட்டாள் என்று முடிவு செய்துக் கொண்டு தன் மனைவியிடம் சொல்லிவிட்டு தன் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்து அசுவாசமாய் ஆல்கஹால் தண்ணியடித்துக் கொண்டுயிருந்தான் சரவணன். சிறிது நேரத்தில் மதுமிதா மேலே வந்தாள். அவனருகில் உட்கார்ந்தாள். இந்த ஆல்கஹால் சாப்பிட்டா நாளைக்கு காலையில் உங்க பிரச்சனையெல்லாம் சரியாகிடுமா? உங்க நண்பர் பழைய மாதிரி உங்க கிட்ட பேச ஆரம்பித்து விடுவாரா? என்று கேட்டாள்.
அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மனசு சரியில்ல. உனக்கு ஒன்று தெரியுமா? இன்னிக்கு நான் ஆபிஸ் போகல. சினிமாவுக்கு போனேன். கண்டபடி ஊர் சுற்றினேன். எனக்கு சுந்தர் மேலே செம கோபம் ஏன் அப்படி என் கிட்ட நடந்து கிட்டான்னு எனக்கு புரியல. சாயங்காலம் கூட பேசனும்னு சொல்லி அழைத்து இனிமே நம்ம நட்பை தொடர வேணான். உன் வேலையை பாரு என்று பைத்தியகாரதனமா உளறுகிறான். நான் என் மனசுல எப்படியெல்லாம் அவனை உயர்வா வைச்சிருக்கேன் என்று தெரியுமா என்று திரும்ப திரும்ப அதையே பேசிக் கொண்டுயிருந்தான்.
உடனே மதுமிதா, ஏங்க சுந்தர் அப்படி பேசறதுக்கு நான் தான் காரணம், அது உங்களுக்கு தெரியுமா என்றாள்.
சரவணனுக்கு ஆல்கஹால் போதை முழுதும் இறங்கியது என்னது நீ காரணமா! என்று கோடி கேள்விகளுடன் அவள் கண்களை பார்த்தான்.
என்னடி சொல்ற! எனக்கு விளக்கமா சொல்லு என்று கத்தினான்.
நான் சொல்றத பொறுமையாய் கேளுங்க, Please என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் மது. உடலெல்லாம் வியர்த்து நரம்புகள் புடைத்து போய் இருந்த சரவணன் சற்று அமைதியானான்.
சொல்லு என்னவாச்சு சொல்லு என்று மெதுவாய் கேட்டான்.
ஒன்னுமில்லை நீங்க கடந்த வாரம் வியாழன், வெள்ளிக் கிழமை Office audit க்காக வெளியூர் போயிருந்தீங்க இல்ல.
ஆமாம் போயிருந்தேன், சரவணன் நெற்றி சுருங்கியது. மனம் வேகமாய் எதை எதையோ யோசித்தது. மேல சொல்லு என்றான். அப்ப உங்க நண்பர் சுந்தர் காலைல கரெக்டா 9 மணிக்கு இங்க நம்ம வீட்டுக்கு வந்தாருங்க.
வந்து! மீண்டும் உஷ்ணமானான் சரவணன்.
நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க. நம்ம மகள் ரேவதியை School ல டிராப் பண்றேன்னு வந்து உட்கார்ந்திருந்தார்ங்க என்றாள் மது..
அப்புறம் என்னவாச்சு?
வேற ஒன்னும் இல்லிங்க. அப்புறம் நான் அவரு மூஞ்சில அடிச்சா மாதிரி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் டிராப் பண்ணிடேறேன்னு சொன்னேன்.
உடனே அவரு என்ன நினைச்சாருன்னு தெரியல. உடனே கிளம்பி போய்ட்டாருங்க என்றான் மதுமிதா.
சரவணனுக்கு மிகவும் கோபம் வந்தது. இது தான் காரணமா? சுந்தர் என்கிட்ட இப்படி நடந்துக்க அதான் நேத்து திங்கிட்கிழமை நான் ஆபிஸ் போனதும் அப்படி என்கிட்ட நடந்து கிட்டான். அடியே! நானும் அவனும் எப்பேர்பட்ட நண்பர்களுன்னு உனக்கு தெரியாதா? எவ்ளோ சொல்லியிருப்பேன் அவன பத்தி அப்படியிருந்தும் நீ அவன சந்தேகபடற என்று கத்தினான். அவன் ஒன்னும் சபலபடற ஆளு இல்லடி நம்ம மகள் அவன் மகள் மாதிரி டீ என்று கூச்சலிட்டான். எல்லாம் முடிஞ்சு போச்சே ஏன் இப்படி நடந்து கிட்ட என்று கேட்டான் மதுமிதாவிடம்.
ஏங்க. ஊர் உலகம் கெட்டுகிடக்கு நான் யாரையும் நம்பி நம்ம மகளை அனுப்ப மாட்டேன். தினமும் டீவில, பேப்பர்ல வர்ற நியூஸ் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்னை என் நிலைமையில் இருந்து யோசிங்க. நம்ம பொன்னு சின்ன பெண் இல்ல வயசுக்கு வந்த பெண். நான் யாரையும் நம்ப மாட்டேன். அது உங்க Best நண்பரா இருந்தாலும் என்று கத்தி விட்டு உடனே கீழே சென்று விட்டாள் மதுமிதா.
சரவணனுக்கு ஒன்னும் புரியவில்லை இந்த விஷயத்தை சுந்தரிடம் எப்படி புரிய வைப்பது அவனை எப்படி அணுகுவது. இந்த மதுமிதா ஏன் இப்படி நடந்துக் கொண்டாள்? அவள் பார்வையில் அவள் சரிதானோ என்று மீண்டும் குழப்பமடைந்தான்.
மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் அலுவலகம் கிளம்பி போனான் சரவணன்.
போகும் வழியில் அந்தவொரு மருத்துவமனை வாயிலில் சுந்தரின் மனைவி நிற்பதை பார்த்தான். வண்டியை நிறுத்தினான்.
அவளிடம் சென்றான். அவன் தன்னருகே வருவதை கண்டு அவள் சற்று புன்முறுவல் புரிந்தாள்.
என்னம்மா? என்னாச்சு! எங்கே சுந்தர் என்று கேட்டான்.
ஒன்னுமில்லை அண்ணா?அவர் ஆபிஸ் போயிட்டார். எனக்கு தான் கொஞ்சம் வயிற்று வலி, அதான் டாக்டர்கிட்ட வந்தேன். Checkup எல்லாம் பண்ணியாச்சு. ஒரு problem ம் இல்ல வீட்டுக்கு போகனும், அதான் ஆட்டோ கூப்பிட இங்க நின்னுக்கிட்டுயிருந்தேன். நீங்க வந்தீங்க என்றாள்.
வாமா நானே உன்னை டிராப் பண்றேன் என்று அழைத்தான் சரவணன்.
வேண்டாம்னா, வேண்டாம் என்று உடனே தடுத்தாள் அவள்.
ஏன்மா? நான் உன்னை வீட்ல விடுறதல எனக்கு என்னம்மா சங்கடம் வா மா போகலாம் என்றான் சரவணன்.
இல்லன்னா? அவருக்கு உங்க கூட பைக்ல வீட்டுக்கு வந்தேன்னு தெரிஞ்சா ரொம்ப கோப படுவார்னா.
ஏன் எதுக்கு நான் என்ன வேறு ஆளாமா? நம்ம குடும்பத்துல நானும் ஒருத்தன் தானம்மா என்னவாச்சு உனக்கு. நான் சுந்தருக்கு போன் பன்றேன் என்று அலைபேசியை எடுத்தான்.
ஐயோ வேண்டாம்னா, நீங்க உங்க மனசுலயே வைச்சீங்க. நீங்க எங்க வீட்டுக்கு அவர் இல்லா நேரத்துல வந்து போனாலே, அவரு ஆயிரம் கேள்வி கேட்பாருன்னா. நீங்க எங்க உட்கார்தீங்க நம்ம பொன்னு என்ன பண்ணிக்கிட்டுயிருந்தா காபியா, عا கொடுத்தியான்னு ஆயிரம் கேள்வி கேட்பார்ன்னா . அதெல்லாம் டிராப் பண்ண வேண்டானா நான் போயிடுறேன். என்று சொல்லி விட்டு ஆட்டோவில் பறந்தாள் சுந்தரின் மனைவி.
சரவணனுக்கு ஆயிரம் சமட்டியால் தன் தலையில் யாரோ அடித்தது போல் உணர்ந்தான். தன் பைக்கை எடுத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி போனான். அவன் மனதில் மீண்டும் அதே கேள்வி "எப்போதும், எல்லோருக்கும் நல்லவனாக யாரும் இருக்க முடிவதில்லை".
ம.பா.கார்த்திகேயன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்