K. Vijayalakshmi
சிறுகதை வரிசை எண்
# 111
தாயுமானான்..
---------------------------
ஊரே விழாக்கோலமாக இருந்தது.தனம்
வீட்டு வேலைகளை வேகமாகச் செய்து விட்டு இரண்டாவது படிக்கிற மகனுக்காகக் காத்திருந்தாள்..
மகன் வந்ததும் தாவியணைத்து முத்தத்தோடு டீப்போட்டு பிஸ்கெட் கொடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் சேலை வியாபாரி ரவி வீட்டுக்குள் நுழைந்தார்.
பார்க்கவே பாவமாக இருந்தது ரவிக்கு.தனத்தை காதல் திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லை அவளை அவளின் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளாமல் ஊரையேக் காலி செய்து விட்டு போய் விட்டனர்
என்னைக் கட்டிக் கொண்டு கஷ்டத்தை மட்டுமே சுமக்கிறாள்.
வேதனையோடு இருந்த ரவியை என்னங்க! மறுபடியுமா?
விடுங்க எல்லாம் சரியாகும்.இந்த வருசம் பாருங்க கவலையெல்லாம் மறையப்போகுது எனக் கூறிக்கொண்டே சூடான டீயைக் கொடுத்து விட்டு கோவிலுக்குக் கிளம்பத் தயாரானாள்.
என்னமோ போம்மா
மனசே சரியில்லை சலித்துக் கொண்டு தறி நெய்ய ஆயத்தமானான் ரவி.
கும்மியடிப்பவர்கள் வாங்க.மைக்கில் கூப்பிடவும் தனம் தான் முதல் ஆளாய் தயாரானாள்.
மகன் மற்ற பிள்ளைகளோடு விளையாட்டில் நுழைந்தான்.
சேலை விற்பதில் தனிக் கலையைக் கற்றிருந்த ரவியின் வீட்டிற்கு அலுவலகம் செல்லும் பெண்கள் வாடிக்கையாளர்கள்.
வந்தவர்களில்ஒருவர் மட்டும் புதியவர்.வீட்டின் அழகு சுத்தம் கண்டு எப்படி இவ்வளவு அழகாய் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
குழம்பு மணம் பசியைத் தூண்ட அண்ணா வீட்டில் யாருமில்லையா?
ஒருநாளும் உங்கள் மனைவியைப்பார்த்ததில்லையே எனக் கேட்க மங்கலான சிரிப்பு.
எல்லாமே நான் தான் என்றார் ரவி.
புதுக்கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் வெளியூர் செல்லத் தயாராக இருக்க தனத்திற்கு இருமனதாக இருந்தது.
மகனையும் ரவியையும்
விட்டு விட்டு மூன்று நாட்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து விட்டுக் கிளம்பினாள்...
போகும் வழியில் பாட்டு பக்தி பரவசமாய் ஒலிக்க தனம் மட்டும் அம்மனை வேண்டிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டிருக்க வண்டி ஒரு குலுங்கு குலுங்குவதை அனைவரும் உணர ...
சேலை எடுக்க வந்தவர்களிடம் ரவி கதையாய் கூறினார்.எல்லாமே முடிந்தது.
என் உயிரைத் தவிர.மகன் நல்ல வேலையில் இருக்கிறான்.கார் பெரிய வீட்டோடு திருமண மாகி சென்னையில் குடி.
என்னால் இந்த ஊரை விட்டுபச் செல்ல முடியாமல் இந்த சேலையை விற்றுத் தீர்க்கிறேன்.
காலையில் எழுந்ததும் ஊரே வாயிலும் வயிற்றில் அடித்து அழுத கோலம்..
தீர்த்தக் குடத்தோடு தடம் புரண்ட வேனில் ஐந்து பெண்கள் இறந்து போனார்கள்.
அதில் தனமும் தான்.கால்கள் நொறுங்கி மூச்சை விட்டிருந்தாள்.
மகனைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் இருந்த ரவிக்கு இடியாய் இறங்கியது அவள் இறப்பு செய்தி..
மாண்டவர் மறுபடியும் வருவாரோ?அழுது புரண்டு இன்றோடு 20ஆண்டுகள் ஆகி விட்டது.மகனை தாயின் பிரிவு தெரியாமல் வளர்த்து ஆளாக்கி விட்டேன்.
அவள் நினைவுதான் எல்லாமே..
மூச்சு விடாமல் வந்த அலுவலகப் பெண்ணிடம் கூறிவிட்டு கண்ணீரை மறைக்க வேறு சேலை எடுத்துப் போட நகர்ந்தார் ரவி.
பெண்களே ஆச்சரியப் படும் அளவிற்கு வீட்டை சுத்தமாகவும் நல்ல சமையலால் தன் மகனையும் வளர்த்து ஆளாக்கி விட்ட
நடுத்தர வர்க்க அப்பா..
மனைவியின்
நினைவாக ஒரு புகைப்படம் கூட வைக்க வில்லை.இறந்ததையே நம்பாமல் வருடங்களை நகர்த்திக் கொண்டிருக்கும் தாயுமானவன்.
(முற்றும்)
விஜி கல்யாணி
கோவை.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்