நள்ளிரவில் ஒரு இளம்பெண் ... - சி.பி செந்தில் குமார்
ஒரே ஒரு வரி பேட்டில மொத்த மீடியாக்களும் , பப்ளிக்கும் பரபரப்பா பேசிக்கொள்ளும் டாபிக் தமிழ் நாட்டையே உலுக்கி விட்டது . பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணம், ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா? என டைரக்டர் ஒரு சினிமா பட விழாவில் பேசியது சென்சேஷனல் நியூஸ் ஆனது
டைரக்டர் லக்கிகிங் தொட்டதெல்லாம் பொன் ஆன காலகட்டம், அவரது ஒவ்வொரு படங்களுமே வெள்ளி விழாதான். அதுக்கு முக்கியமான காரணம் அவர் பெண்களை மதித்து படம் எடுத்ததே , பெண்களின் பிரச்சனைகளை மையமாகக்கொண்டே அவரது ஒவ்வொரு படக்கதைக்கருவும் இருக்கும், அவரோட இயற்பெயர் என்ன?னு அவரோட அம்மாவே மறந்திருப்பாங்க , எல்லாப்படங்களும் ஹிட் ஆனதால் அவருக்கு லக்கி கிங் என்பது ஆகு பெயர் ஆனது அவரது பட வசனங்களும் பெண்களின் முன்னேற்றத்தைப்பற்றியும், பெண்கள் பெருமை பேசுவதாகவும் தமிழ்க்கலாச்சாரம் , பண்பாடு இவற்றைப்பற்றியதாகவே இருக்கும்
என் முன்னாள் காதலி உங்க இந்நாள் மனைவி ஆகலாம் சார், ஆனா உங்க இந்நாள் மனைவி என் காதலி ஆக முடியாது சார் என ஒரு பட க்ளைமாக்சில் அவர் வைத்த வசனம் செம ஹிட்டு . பாடம் சொல்லித்தர்ற வாத்தியார் தன் கிட்டே படிக்கும் மாணவியை லவ் பண்றது தப்பு, அந்தப்பொண்ணே தானே வலிய வந்து தன் காதலைச்சொன்னாலும் ஏத்துக்கக்கூடாது ஏத்துக்க மாட்டான் என் பட நாயகன் என்ற கருத்தில் அவர் சொன்னவை மக்களால் கொண்டாடப்பட்டன. சார் , ஐ லவ் யூ என முதலில் அந்தப்படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டு பின் டைட்டிலில் கூட ஆசிரியர் - மாணவி உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது என டைட்டிலை மாற்றியவர்
சிறந்த வசனகர்த்தா , சிறந்த திரைக்கதை என பல விருதுகளைக்குவித்தவர் , இவரைப்பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியே ஆகனும், பெண்களும் ரசிக்கின்ற கில்மாக்காமெடியை , அரசல் புர்சலான இரட்டை அர்த்தக்காமெடியை அசால்ட்டாக பெண்களும் ரசிக்கும்படி சொன் னவர் ,. சினிமா உலகில் டபுள் மீனிங் காமெடியை ஆபாசமாக , வல்கராக சொன்னவர்கள் பலர் உண்டு , ஆனா எல்லாரும் ரசிக்கும்படி சொன்னவர் இவர் ஒருவரே , இப்படிப்பட்ட டைரக்டர் தான் இப்போ சர்ச்சைல சிக்கி இருக்கார்.
முதல்வன் படத்துல அர்ஜூன் - ரகுவரன் பேட்டி மிக பிரபலம் , அதற்கு இணையான அல்லது அதைத்தாண்டிய ஒரு பர பரப்பை இந்த பேட்டி உருவாக்கியது , லைவ் ஷோ.....
பேட்டி எடுப்பவரும் அல்பசொல்பமானவர் இல்லை. மாநில முதல்வர் ல இருந்து நாட்டின் பிரதமர் வரை கேள்விக்கணைகளால் துளைத்து எடுப்பவர் . இவர் கிட்டே ஏண்டா வந்து மாட்டிக்கிட்டோம் என நடுங்குபவர்கள் பலர் .கிராஸ் கொஸ்டீன் கேட்பதில் மன்னி. மன்னன் விஜயசாந்தி போல பாடி லேங்க்வேஜ் ,படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு தெனாவெட்டு
வணக்கம் வைக்கறது , இண்ட்ரோ இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டு டைரக்டா மேட்டருக்கு போவோம்
”சார் , நாம 2019 ல இருக்கோம், இன்னும் நாம வந்து ஒரு பாலியல் வன்முறை நடந்ததுன்னா தப்பு செஞ்சவனைக்கண்டிக்காம ஊசி இடம் கொடுத்தாதான் நூல் நுழைய முடியும்னு அந்தக்கால பழமொழியை உதாரணம் காட்டிட்டு இருக்கமே? இது அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசறதா ஆகாதா?”
” நீங்க வெறும் பழமொழியை மட்டும் எடுத்துக்கிட்டு பேசுனா நான் சொன்னது தப்பா தான் தெரியும். அந்த விழா என்ன பட விழா? அந்தப்படத்தோட கதை என்ன? அதைப்பத்தி படத்தோட டைரக்டர் என்ன பேசுனாரு , இதை எல்லாம் கவனிச்சிருந்தா இந்த கேள்விகளே எழுந்திருக்காது. பெண்களிடையே விழிப்புணர்வு பெருகனும், கொஞ்சம் அவங்க ஏமாந்தாக்கூட பாதிப்பு ஏற்படும்,அப்படி ஏமாந்த ஒரு பெண்ணோட கதை தான் படமா எடுக்கறாங்க அப்டிங்கறப்போ அந்த கதைக்கு ரிலேட்டடா பேசுனதை குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசுனதா திருப்பி விடறது மீடியாவோட பசி தான் , வேற என்ன?
என் கேள்வி என்னான்னா ஒரு தப்பு நடக்குது , அதுல பாதிப்புக்குள்ளானவங்க பக்கம் நாம நிற்கனுமா? இல்ல பாதிக்கப்பட்ட ஆள் கிட்டே நீ ஏன் இந்த டைம்க்கு இங்கே வ்ந்தே? உன் மேல தப்பு இருக்குனு அவங்க மேல குற்றம் சாட்டனுமா?
பாதிக்கப்பட்டவங்களை நான் குற்றம் சொல்லலையே? இதை தவிர்த்திருக்கலாம்னுதான் சொல்றேன்
இல்லையே? பொண்ணுங்க தெருவுல நடக்கறப்போ ஃபோன் பேசிட்டு போறாங்க , தனக்குத்தானே சிரிச்சுக்கறாங்க , இதை எல்லாம் அவங்க தவிர்க்கனும், கிளாமரா டிரஸ் பண்ணக்கூடாது , டிக் டாக் பண்ணக்கூடாது....
இருங்க இருங்க , டிக் டாக் பத்தி இந்த விழாவில் நான் பேசவே இல்லையே?
வேற ஒரு பேட்டில சொல்லி இருந்தீங்க
அத ஏன் இங்கே கொண்டு வந்து கனெக்ட் பண்றீங்க? அது தனியா பேசுவோம், இப்போ 2 நாள் முன்னாடி கூட ஒரு பொண்ணு டிக்டாக்ல 2000 ரூபா மதிப்புள்ள பிராண்ட் பிரா வாங்குனேன், அதை எல்லாருக்கும் தெரியற மாதிரி போடுவேன் அது என் இஷ்டம் நீங்க யார் கேட்கறதுக்குனு ஒரு வீடியோ போட்டுச்சு , நான் எல்லாம் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க சேலை ஜாக்கெட் ல ஃபுல் கவரா வரும்போது எப்பவாவது பிரா பட்டை வெளில தெரிஞ்சா சூசகமா சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டேனு சொல்வோம் , டக்னு அவங்க அதை அட்ஜஸ் பண்ணிக்குவாங்க ,. ஆனா இப்போ வேணுன்ம்னே பிரா வெளில தெரியற மாதிர் போட்டுக்கறாங்க , என்னத்தை சொல்ல ?
அப்போ பொண்ணுங்க என்ன டிரஸ் போடனும்?? எப்படி அதை எஸ்டாபிளிஸ் பண்ணனும்? அல்லது பண்ணக்கூடாது?னு நீங்கதான் ஐ மீன் ஆண்கள் தான் தீர்மானிக்கனுமா?
அப்படி நான் சொல்லைலைங்க, நீங்க ஒரு நிருபரா மீடியா ஹிட்ஸ் ஏத்திக்கறதுக்காக கண்டபடி கேள்வி கேட்கறீங்க , கொஞ்சம் என்னை பேச விட்டாத்தானே? எனக்கும் ஒரு மக இருக்கா , நான் ஒரு பெண்ணோட அப்பாவா சமூக பிரக்ஞை உள்ள ஆளா பேசறேன், இப்போ பொள்ளாச்சி சம்பவத்துல கொடூரமான சம்பவங்கள் நடந்திருக்கு , குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படனும், அதுல எல்லாம் மாற்றுக்கருத்தே இல்லை , யாரும் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குல ,அந்த ஆடியோ டேப் ல “ அண்ணா உங்களை நம்பித்தானே வந்தேன் , இப்டி பண்றீங்களே”னு அந்த பொண்ணு கதறும்போது அந்த மாதிரி இடத்துக்கு அந்தப்பொண்ணு போறதுக்கு முன்னால கொஞ்சம் யோசனை பண்ணி இருக்கலாமே? ஜாக்கிரதை யா இருந்திருந்தா அதை தவிர்த்திருக்கலாமேனுதான் சொல்றேன்
அப்பக்கூட நீங்க பொண்ணு மேலதான் தப்பு சொல்றீங்க , அந்தப்பொண்ணு அவனை நம்புனது தப்புங்கறீங்களா? ஒரு அண்ணனா நண்பனா நம்பிதானே போய் இருக்கு , அந்த நம்பிக்கை தப்புங்கறீங்களா? ஏன் அவனைக்கண்டிக்கலை?
இப்போ பொதுவா பெண்களை ஜாக்கிரதையா இரு , ராத்திரி 9 மணி ஆனா வெளில எங்கேயும் இருக்காதே வீட்டுக்கு வந்திடுனு பொண்ணுங்க கிட்டே தான் அதிக அக்கறை எடுத்து சொல்வோம், ஆண்கள் பற்றி கவலைப்படறதில்லை
அதைத்தாங்க நான் ஏன்?னு கேட்கறேன். ஒரு எச்சரிக்கைன்னா 2 தரப்புக்கும் பொதுவா தானே இருக்கனும், ஆண் கிட்டெயும் சொல்லலாமே? நைட் 9 ஆனா வீட்டுக்கு வந்து சேர்னு
காந்திஜி அந்தகாலத்துலயே என்ன சொல்லி இருக்காரு? நள்ளிரவில் ஒரு பெண் எப்போ தனியா பயம் இல்லாம நடக்கிறாளோ அப்போதான் உண்மையான சுதந்திரம் நம்ம நாட்டுக்கு கிடைச்சதா அர்த்தம்,னாரு , அப்ப இருந்து இப்போ வரை நாம அப்படி சுதந்திரமா நடக்க முடியலையே?
அப்போ காந்திஜி பெண்களை வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போகாதேன்னு சொன்னாரா?
அப்படி சொல்லலையே?பெண்களை ஜாக்கிரதையா இருந்துக்கோன்னாரு , ஒரு துறவியா இருந்தாலும் தனிமைல ஒரு பெண்ணைப்பார்த்தா அவன் தூண்டப்படுவான்னு ஒரு இத்தாலியப்பழமொழி இருக்கு, அதனால அந்த மாதிரி சூழ்நிலையை பெண்கள் தவிர்க்கலாம்னுதான் சொல்றேன்
மீண்டும் மீண்டும் நாம பெண்களை தடை பண்றதுலதான் இருக்கோம், நீ வீட்லயே இரு நீ ,ஜாக்கிரதையா இரு , அவ்ளோதான், ஆண்களை ஒண்ணுமே சொல்றதைல்லை , நீ தப்பு பண்ணாத , நீ பெண்களை மதிக்கக்கத்துக்கோ அப்டினு ஆண்களுக்கு ஏன் அட்வைஸ் பண்றதில்லை?
நைட் டைம்ல வெளில போகவேணாம்னு சொல்லலை,நைட் 10 மணிக்கு மேல வெளில போக வேண்டிய சூழல் வந்தா ஒரு பாதுகாப்போட போ அப்பா அண்ணன் இப்டி யாரையாவது துணைக்குக்கூட்டிக்கோனு சொல்றோம் , இது தப்பா? நைட் டைம்ல தனியா ஒரு பொண்ணு போனா எதிர்ல வர்றவங்களுக்கு என்னடா? இந்தப்பொண்ணு தனியாப்போகுதேனு தப்பான ஒரு எண்ணம் வர்லாம் இல்லையா?
அதைத்தான் நான் ஏன்னு கேட்க்றேன்.தனியா ஒரு பொண்ணு போனா நீ ஏன் தப்பா பார்க்கறே?னு ஆண்களைத்தானே கேள்வி கேட்கனும்?நீ ஏன் தனியாப்போனேனு பொண்ணை நோக்கித்தானே நம்ம கேள்விகள் கிளம்புது
குற்றவாளிக்கு சாதகமா யாரும் இங்கே பேசலைங்க, அப்டி தப்பு செஞ்சவன் தண்டிக்கப்பட்டே ஆகனும்கறதுல மாற்றுக்கருத்தே இல்லை.ஆனா தப்பு ந்டக்கற் மாதிரி ஒரு சூழலை ஏற்படுத்தாம பொண்ணுங்க ஜாக்கிரதையா இருக்கனும்கறேன்
இப்போ ஹைதராபாத்ல ஒரு சம்பவம் நடந்தது, டூவீலர்ல போனப்போ பெட்ரோல் இல்லாம வண்டியை நிறுத்துனப்ப சிலர் வந்து உதவி பண்ற மாதிரி நடிச்சு அவளை ரேப் பண்ணி இருக்காங்க , இதுல அந்தப்பொண்ணோட தப்பு என்ன?
நைட் டைம் ட்ராவல் பண்ரப்ப ரிசர்வ் விழுந்ததுமே பெட்ரோல் அடிச்சிருக்கலாம், அல்லது பெட்ரோல் ஃபுல்லா இருக்கா?னு செக் பண்ணி இருக்கலாம்
சரி , உன் அப்பா உன் பாதுகாப்புக்காக செல் ஃபோன் வாங்கி தந்திருக்காரு. அதுல நீ ஏன் யார் கிட்டயோ குசு குசுனு ரகசியமா பேசறே சிரிக்கிறேனு கேட்டிருக்கீங்க , இதை ஏன் ஆண்கள் கிட்டே நீங்க கேட்கலை , மறுமுனைல பேசுனது ஒரு ஆண் தானே? அவன் மட்டும் பேசலாமா?
யாருக்கு இதனால பாதிப்பு வருதோ அவங்க கிட்டேதான் பேச முடியும். இப்போ ஃபேஸ்புக்ல எத்தனை பேர் லைக் போடறாங்கனு பாத்துக்கிட்டு ஓப்பன் பண்ணி வெச்சிருக்கு ஒரு பொண்ணுன்னா அதுல லைக் போடறவன் எத்தனை பேர் கெட்டவனா இருப்பான், அவன் சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருக்கலாம்,இதுல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்
திரும்பவும் நீங்க பெண்களை ஃபேஸ்புக் வர்றது தப்புனு அவங்களைத்தானே குற்றம் சொல்றீங்கம் ஏன் லைக் போடற கமெண்ட் போடற ஆண்களை குற்றம் சொல்லலை?
அய்யோ , ஃபேஸ்புக் வர்றதை தப்பு சொல்லலைங்க ஃபேஸ்புக்ல தன்னோட ஃபோட்டோவை ப்ரொஃபைல் பிக்சரா வெச்சிருக்கறவன் தன் உண்மையான முகவரியை பகிர்ந்தவன் , ஃபோன் நெம்பர் கொடுத்தவன் இப்படி யாராவது இருந்தா பேசி பழகறதுல தப்பு இல்ல நாளைக்கு ஒரு பிரச்சனை நடந்தாக்கூட அவன் இடத்துக்கு போய் கேட்கலாம், அட்ரஸ் தெரியாது , ஆள் யார்னே தெரியாது , ஃபோன் நெம்பர் தெரியாது அப்டிங்கற அனானி கூட சேட் பண்ணிட்டு ஏமாந்து கடைசில இப்படி நடந்து போச்ச்சுனு சொன்னா அதுக்கு யார் பொறுபு ?
சரி ,நாம் தெரிஞ்சவன் கிட்டே தான் பேசனும் தெரியாதவங்க கிட்டே பழகக்க்கூடாது அது தப்புனு அட்வைஸ் பண்றோம், இதெல்லாம் சரி , ஆனா ஆண்கள் கிட்டே “ நீ ஏன் யார்னே தெரியாத பொண்ணுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கறே? ஏன் லைக் போடறெ? உன் நோக்கம் என்ன? இப்டி அவனைக்கேட்க தவறிடறமே? பிரதமரோட முதல் சுதந்திர தின உரைல பேசுனதைக்கேட்டீங்களா? சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா பொண்ணுங்க வீட்டுக்கு வந்தாச்சா?னு தான் பாக்கறோம், என்னைக்காவது ஆண்கள் வீட்டுக்கு வந்தாச்சா?னு பார்க்கறமா? என் லேட்டா ஆண்கள் வந்தா அதைக்கண்டிக்கறதில்லை? கண்டுக்கறதில்லை ?மாற்றம் அங்கே இருந்து அல்ல ஆரம்பிக்கனும்?
ஏங்க கற்பழிப்புகள் ஆண்களுக்கா நடக்குது? பெண்கள் தானே பாதிக்கப்படறாங்க ?
அப்டி இல்லைங்க , ஆண் குழந்தையோட பெற்றோர்களும் அவங்களை கண்காணிக்கஞும்,, அவனால யாருக்கும் பாதிப்பு இல்லைங்கறதை உறுதி செய்யனும்
அது பெற்றோர்களின் மெண்ட்டாலிட்டி பொறுத்தது, நீங்க நல்லா கவனிச்சுப்பாருங்க வீட்டுக்கு தன் மகனோட ஃபிரண்ட்ஸ் யாராவது வந்தா அவங்களோட சேர்ந்து நீ கெட்டுப்போய்டாதனு அவங்க மேல தான் தப்பு சொல்வாங்க , தன் மகன் நல்லவனா தான் இருப்பானு நம்பிக்கை , காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுங்கற மாதிரி
அது தப்புன்னு நீங்க நினைக்கலையா?எப்படி எங்க மகள் பாதுகாப்பா இருக்கனும்னு நினைக்கறமோ அதே போல மகனும் தப்பான ஆள் ஆகிடக்கூடாதுனு நினைக்கனும் இல்லையா?
ஆமா, ஆனா தன் மகள் தப்பான ஆள் கிட்டே மாட்டிக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை இருக்கும்
ஆனா ஒரு தப்பு நடந்தா அந்த தப்பை செஞ்ச ஆண் வீட்டில் பெற்றோர்கள் கவனிக்கலைன்னுதானே அர்த்தம்?
என் வீட்ல எல்லாம் நைட் 9 மணி ஆகிட்டா ஆளைக்காணோமேனு தேடுவாங்க லேட்டா வீட்டுக்கு வந்தா அடி பட்டையைக்கிளப்பிடுவாங்க ஆனா இப்போ காலம் மாறிடுச்சு
பெண்கள் முன்னே எல்லாம் கட்டுப்பாடா இருந்தாங்க , இப்போ ரோட்ல பசங்க கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கறது தப்புனு சொல்லி இருக்கீங்க
அப்படி சொன்னது என்ன தப்பு? 4 பேர் பார்த்தா தப்பா நினைப்பாங்க
சரி தப்பா நினைச்சா என்ன ஆகும்?
தவறான கண்ணோட்டத்துல அந்தப்பொண்ணு பார்க்கப்பட வாய்ப்பு இருக்கு,ஆண்கள் கிட்டே நாம் அட்வைஸ் பண்றோம், நீ தங்கையா நினை , அக்காவா நினை அப்டினு கற்பிக்கறோம்
ஆணோட தவறான பார்வை யை தவிர்க்க பொண்ணுங்க மாடர்ன் டிர்ஸ் போடக்கூடாது கிளாமரா டிரஸ் போடக்கூடாது.அப்டினு தடை போடறது எந்த விதத்துல சரி?
நான் பொண்ணுங்க டிரஸ் பற்றி அப்படி ஒரு கருத்து தெரிவிக்கவே இல்லையே? நீங்களா க்ரியேட் பண்ணி சிக்க வைக்கப்பார்க்கறீங்க
ஒரு தவறான ஆண் பெண் குழந்தைனு பார்க்கறதில்லை , வயதான மூதாட்டிஞு பார்க்கறதில்லை அவன் தப்பு செஞ்சுடறான், ஆனா நாம பொண்ணுங்க டிரஸ் பத்தித்தானே விவாதிக்கிறோம்?அவன் செஞ்ச தப்ப பத்தி யாரும் பேசறதில்லை, இவ ஏன் அப்டி டிரஸ் பண்ணிப்போனா அப்டினு பெண்களைத்தானே குற்றம் சொல்றோம்?
கிளாமரா டிரஸ் பண்றதுக்கும் , செக்சியா டிரஸ் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு,
ஃபுல் கவர் பண்ணி டிரஸ் போடறவங்களை ஆண் தவறான கண்ணோ ட்டத்துல பார்க்கறதில்லைனு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
அப்படிப்பட்ட ஆண்களும் இருக்காங்க, நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கனும், சில பெண்கள் முதல் பார்வையிலேயே இவன் தவறான் ஆண்னு கெஸ் பண்ணிடுவாங்க, சிலரால அது முடியறதில்லை, மாட்டிக்கறாங்க
சரி விழாவில் நீங்க பேசுன அடுத்த பாய்ண்டுக்கு வருவோம். ஆண் தப்பு பண்ணா ஐ மீன் ஒரு சின்ன வீடு வெச்சிருந்தா அதனால பெரிய பாதிப்பில்லை , அவன் பாட்டுக்கு சின்ன வீட்டுக்கு போய்ட்டு வந்து இந்த மனைவியையும் கவனிச்சுக்குவான், ஆனா ஒரு பெண் வேற ஒரு ஆள் கூட கனெக்சன் ல இருந்தா அவ புருஷனை, குழந்தையைக்கொலை பண்ணக்கூட அஞ்சறதில்லை அப்டினு சொல்லி இருக்கீங்க, அப்போ ஆண் தப்பு செய்யலாம், ஆனா பொண்ணு தப்பு செய்யக்கூடாதுனு ஆண்கள் பண்ற தப்பை நியாயப்படுத்தற மாதிரி பேசி இருக்கீங்க
நீங்க பேப்பர்ல நியூஸ் எல்லாம் பார்க்கறதில்லை போல., ஒரு ஆண் எப்போ கொலை செய்யறான்? தன் மனைவி வேற ஒருத்தன் கூட தொடர்புல இருக்கறதை நேர்ல பார்த்துட்டா ஆவேசத்துல கொலை பண்றான், சின்ன வீடு வெச்சிருந்தா அதை மெயிண்ட்டெய்ன் பண்றதுக்காக மனைவியைக்கொலை பண்றதில்லை , ஆனா ஒரு பொண்ணு வேற ஒரு கனெக்சன் வெச்சிருந்தா கணவனைக்கொலை செஞ்சுடறா
சின்ன வீடு வெச்சிருக்கற்தே ஒரு க்ரைம் தானே? அதுல போய் அவன் மனைவியைக்கொலை பண்ணலைனு சர்ட்டிஃபிகேட் கொடுக்கறீங்க ?
அப்டி இல்லை , நீங்க குதர்க்கமாவே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க, ஒரு பெண் தவறு செஞ்சா அவ எக்ஸ்ட்ரீம் லெவல்க்கு போய்டறா. கள்ளக்காதலன் இருந்தா இனி புருசன் இருக்கறது இடைஞ்சல். குழந்தை இருந்தா ஆபத்துனு கொலை பண்ணத்துணியறா, இந்த மாதிரி நியூஸ் வரும்போது பெண்கள் இந்த மாதிரி பண்றதை ஜீரணிக்கக்கஷ்டமா இருக்கு
அப்போ ஆண்கள் பண்ற தப்பை ஜீரணிச்சுக்கலாமா?
ஆண்கள் தப்பு பண்றது எதிர்பார்த்ததுதான் , ஆனா பெண்கள் தப்பு பண்றது எதிர்பாராதது இல்லீங்களா?
அப்போ ஆண்கள் தப்பு பண்ணலாம் , பெண்கள் தப்பு பண்ணக்கூடாது?
நீங்க என்னை ஆணாதிக்கவாதினு சொல்லிட்டு பெண்ணாதிக்கவாதியா உங்களை வெளிப்படுத்திக்கிறீங்க , இப்போ டாஸ்மாக் வாசல்ல ஒரு பொண்ணு தண்ணி அடிச்ட்டு மப்புல விழுந்து கிடந்ததா ஒரு நியூஸ் படிச்சேன் , ஸ்கூல் பொண்ணுங்க க்ரூப்பா தண்ணி அடிச்சதை வாட்சப் ல பார்க்கறப்ப அதிர்ச்சியா இருக்கு, இதே ஆண்கள் பண்ணா நமக்கு அது பழகிடுச்சு , பெண்களும் இப்போ ஆரம்பிச்சு இருக்காங்கனு தான் அதிர்ச்சியா இருக்கு, இப்போ நியூஸ் சேனல்ல ஒரு பொண்ணு டாஸ்மாக்ல லைன்ல நின்னு சரக்கு வாங்கறதை ஃபோகஸ் பண்ணி காட்றான், இதைப்பார்க்கும் ம்ற்ற பெண்கள் அட, இது சகஜம் ஆகிடுச்சு போலனு அவங்களும் பப்ளிக்கா வாங்க ஆரம்பிக்க மாட்டாங்களா?
இந்த மாதிரி ஆண்களும் பெண்களும் சரக்கு அடிகக்றதுல அல்லது அந்தப்பழக்கம் ஏற்பட அதிகரிக்க சினிமாவும் ஒரு காரணம்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?
சினிமாங்கறது வாழ்க்கை தான் வாழ்க்கைல இருக்கறதைத்தான் சினிமால காட்றோம், சில நேரங்கள் ல என்ன ஆகிப்போகுதுன்னா எங்கேயோ நடக்கற ஒரு விஷயத்தை சினிமாவா எடுக்கும்போது அதைப்பார்க்கற எல்லாருமே ஓ இப்படி எல்லாம் இருக்கா?னு அவனும் தெரிஞ்சுக்கறான், அதனால இதை சொல்லலாமா? வேணாமா? இதனால பலர் மனம் பாதிக்கப்படுமா? அபடிங்கறக்தை எல்லாம் ஒரு படைப்பாளி தான் தீர்மானிக்கனும்.
அப்போ நீங்க ஒரு பொறுப்பான படைப்பாளியாத்தான் இருந்து இருக்கீங்களா?
அதை ஜனங்க கிட்டே கேட்டுத்தெரிஞ்சுக்குங்க , சினிமாலயே நடக்காத சம்பவங்கள் பல வாழ்க்கைல நடக்குது, ஒரு வாரம் முன் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் வெட்டிங் ஷூட் நடத்தி அதை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணி இருக்காங்க, ரொம்ப நெருக்கமான ஃபோட்டோஸ், மேரேஜ் க்கு முன்பே அதை அப்டேட் பண்றாங்க . எங்க காலத்துல எல்லாம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனாலும் ஃபோன்ல கூட பேச விட மாட்டாங்க இப்போ ம்காலம் மாறிடுச்சும், கோயில் சினிமா பீச்னு கூட்டிட்டுப்போய் பேசறாங்க , ஆனா இந்த வெட்டிங்ஷூட் ஓவரோ ஓவர்ங்க , திடீர்னு ஏதொ ஒரு காரணத்தால கல்யாணம் நின்னு போனா பாதிப்பு யாருக்கு? வேற மாப்ளை மறுபொஅடி கட்டிக்கிட்டாக்கூட அவன் என்னஎன்ன கேள்வி எல்லாம் கேட்பானோ? புரியாத புதிர் ரகுவரன் கேரக்டர் மாதிரியோ ,. கல்கி பிரகாஷ் ராஜ் கேரக்டர் மாதிரியோ ஒரு கணவன் அமைஞ்சா அந்தப்பொண்ணோட வாழ்க்கை க்ளோஸ்
அதனால பொண்ணுங்க தான் ஜாக்கிரதையா இருக்கனும்க்றீங்க?
ஆமா அதுதான் அவங்களுக்கும் நல்லது , இந்த சமூகத்துக்கும் நல்லது
பேட்டியை முடிச்ட்டு வீட்டுக்கிளம்பிய பெண் நிருபர் காரில் வீட்டுக்குப்போகும்போது “ எப்படியாவது இயக்குநரை மடக்கி மன்னிப்புக்கேட்கவைக்கனும்னு எம் டி கொடுத்த டார்கெட்டை முடிக்க முடியாம போச்சே என்ற கவலையோடு யோசித்த போது செல் ஃபோனில் ரிங்க் அடித்தது
எஸ்
டியர் , செகண்ட் ஷோ சினிமா க்குப்போன நம்ம பொண்ணு இன்னும் வீடுனதிருமபலை , எனக்கு பயமா இருக்கு, அவ செல் ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு, கவலையா இருக்கு, அவளுக்கு அதிக மா சுதந்திரம் கொடுத்து செல்லமா வளர்த்திட்டம்னு பயமா இருக்கு என்றார்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்