Kaviyarasu
சிறுகதை வரிசை எண்
# 114
காலத்தால் பூத்த காதல்
அன்று மதியம் 12 மணி பதினேழு வயது இளைஞன் கையில் பலத்த காயத்தோடு ஒரு தனியார் மருத்துவமனையில் நுழைகிறான். உடல் காயமடைந்து அவனுக்கு கண்ட காட்சியினால் மனமும் காயமடைந்து கண்களில் கண்ணீர் கரைபுரள தொடங்கியது கடலாக.
வயிற்றில் பிள்ளையும், கண்களில் கண்ணீரும் உடைய அவளின் கோலத்தை கண்ட அவன், முதன் முதலில் வருத்தப்பட்டான் எதற்கு கண்களோடு பிறந்தோமென்று. அன்று ஒரு நாள் அரசு ஆரம்ப பள்ளியைக் கடந்து நடுநிலைப் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன், அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாக. மாணவர்கள் புதிது புதிதாக வகுப்பில் சேர எங்கள் வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஒரே கூட்டில் வாழும் தேனீக்களைப்போல.
அன்று தமிழ் பாடவேலை மாமல்லபுரம் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாலை நேரத் தென்றல் மதியின் முகம் பெற்று, முல்லையின் உடல் பெற்று பெண்ணாக பிறந்தது போல் கையில் ஒரு நோட்டும் புத்தகத்தோடும் வகுப்பிற்கு வந்தால்.
அவள் பெயர் காவேரி என்றும் அவள் ஊர் கன்னியாகுமரி எனவும் தெரிந்து கொண்ட நான் அவளோடு பழக ஆரம்பித்தேன்.கைகளில் எப்போதும் நோட்டு புத்தகம் வைத்துக்கொண்டிருக்கும் அவளின் கண்களில் ஏதோ கவலை இருப்பது தெரிந்தது.வகுப்பில் முதல் மாணவியாக வரும் அவளின் வாழ்க்கையில் வறண்டு போன பாலைவனமாக ஏதோ ஒரு நிகழ்வு இருப்பதை கண்டுணர்ந்தேன். அவளுடன் நெருக்கமாக பேசிப்பழக எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது.
அன்று மாலை சிவப்பு நிற கதிரவன் மறையும் நேரம் சிவன் பூங்காவில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் உண்மைகள் வெளிவர தொடங்கின மோரின் மீது படர்ந்த வெண்ணையைப் போல.
அவள் என்னிடம் கூறத்தொடங்கினாள்.நான் வீட்டுக்கு ஒரே ஒரு பெண், ஒரு கூட்டு கிளியைப் போல சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்தோம்! ஒரு நாள் எங்க அப்பா வெளியே போனாரு ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல.திடீரென்று ஒரு போன் கால் வந்துச்சி எங்க அப்பாவ மருத்துவமனையில் சேர்த்து வச்சிருக்காங்கனு, நாங்களும் சென்று பார்த்தோம். ஆனா அவருடைய உடலைமட்டும் தான் பார்க்கமுடிந்தது.அம்மா ஏற்கனவே இதய நோயாளி அப்பா செத்த சோகம் தாங்க முடியாம மாரடைப்பு வந்து செத்துட்டாங்க.
கொஞ்ச நாள் வீட்டிலேயே சோகமாய் அடஞ்சுகெடந்த என்னை எங்கமாமா சென்னைக்கு அழைச்சிட்டுவந்து பள்ளிக்கூடத்தில சேர்த்துவிட்டாரு, யார்கிட்டயும் அதிகமா பேசாத என்னிடம் நீயே வந்து பேசி பாசம் காட்டியது மனதுக்கு புது உறவு கிடைச்ச மாதிரி இருந்துச்சு,எங்க அப்பம்மா கூட இருக்கிற மாதிரி உணர்ந்தேன் என்றால் கண்களில் கண்ணீரோடு.கண்ணீரை துடைத்தபடி நீ எதுக்கும் கவலைபடாத நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் என்று கூறிய ஆறுதலோடு இருவரும் வீடு திரும்பினோம்.நாட்கள் நகர்ந்தன, காவேரியின் மீது எனக்கு காதல் ஏற்பட்டது.பல நேரங்களில் நானும் அவளும் தனியே இருந்தும் என்னால் காதலை சொல்லமுடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இறுதியில் வகுப்பு முடிந்து இருவரும் வீடு திரும்பும் வேளையில், முன்னே செல்லும் அவளை அழைத்தேன்.பௌர்ணமி நிலவென ஒளிந்த அவளின் முகத்தில் தீட்டப்பட்டக் கத்தியை போல் இரு கண்கள் என்னை காதலின் கண்ணியில் சிக்க வைத்தது. அவளின் கைகளைப் பிடித்தபடி என் காதலை அவளிடம் சொன்னேன் அவளின் கணவன் என்ற உரிமையோடு. இருவருக்கும் இடையில் இருந்த காற்று விலகிப் போனது கட்டியணைத்த காதலின் காரணமாக.
பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்து கொண்டிருந்த காலத்தில் எப்படியோ காவேரியின் காதல் அவங்க மாமாவுக்கு தெரிஞ்சிடிச்சு.அவரு காவேரியிடம் நீ காதல் செய்தால் இனி பள்ளிக்கு அனுப்பமாட்டேன் என்று கூறிவிட்டார் என என்னைப் பார்த்த கடைசி சந்திப்பின்போது கூறிவிட்டு மௌனமாக கடந்து சென்றால் நதியைப்போல.
கனத்த மனதோடும், வலிகளோடும் நாட்கள் நகர்ந்தன.பத்தாம் வகுப்பு முடிந்து அவள் வேறு பள்ளிக்கு சென்று விட்டாள் என் இதயத்தை திருடிக்கொண்டு.அடுத்து அவளை பார்க்கவே இல்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பாள் என எதிர்பார்த்தேன், பட்டம் பகலில் படிகளை துடைத்து சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக மருத்துவமனையில் ...
முத்தத்துடன் அவளை கட்டி அணைத்த நான், என்ன நடந்தது என வினவினேன்...
நான் 11 ஆவது படிக்கும் போதே எங்க மாமா என்ன கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு எனக்கு வாக்கப்பட்டவன் ஒரு குடிகாரன் என் உடம்புக்கு ஆசைப்பட்டு என்னை கர்பிணியாக்கிவிட்டு வேறு பெண்ணை நோக்கி சென்று விட்டான். அவன் விட்டு சென்ற பிறகு நான் இறந்து விடலாம் என எண்ணினேன். வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு செத்துப் போக எனக்கு மனசு வரல. வைத்து பசிய ஆத்த வேலையை தேடுனன் அப்பதான் யாரோ ஒரு புண்ணியவா இங்க வேலை இருக்கிறதா சொன்னாரு அப்பத்துல இருந்து இங்க வேலை செய்து எப்படியோ தனியா வாழ்ந்துட்டு வரனு சொல்ல. அவன், அவள் கைகளைப் பிடித்தபடி "உணர்வுகள் எல்லாம் இந்த இளம் வயது இருக்கும் வரைதான் அதுக்கப்புறம் அன்பு ஒன்றுதான் வாழ்க்கைய வழிநடத்த தேவைப்படும்".நம்ம கிட்ட அந்த அன்பு நிறையவே இருக்கு. "நான் உன்ன கல்யாணம் பன்னிக்கிறன்" என வாக்குறுதி அளித்தான். அப்போது காவேரி, "நீ ஒரு மேல் வகுப்பு பிரிவைச் சார்ந்தவன் நானோ மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண். என்னை திருமணம் செய்தால் உன் சமூகம் உன்னை வெட்டி போட்டு விடுமே"என்றால் அதற்கு அவன், "சாவு எப்போ வேண்டுமானாலும் வரலாம் அதற்காக நான் கவலைப்பட மாட்டேன் இந்த உடம்பை விட்டு உயிர் போச்சினா இது வெறும் குப்பைதான உடல் அழிந்தாலும் அழியட்டும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்"என்றான்.
அரசமரத்து அடி சாமி முன்னிலையில் காவிரிக்கு தாலியை அணிவிக்கிறான். ஆசிர்வாதம் வாங்கலாம் என அம்மாவிடம் செல்லும்போது அம்மா கதவை அடைத்து விடுகிறாள். தாயின் கதவுகளே மூடப்படும் போது அங்கே திறக்க கதவுகள்
எங்கே? அவர்கள் எங்களை ஒதுக்கி தனிமை படுத்தினாலும் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் எனக்காக அவளும் அவளுக்காக நானும்....
காதல் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல அது உடலையும் தாண்டி உயிருடன்.... உயிரின் உணர்வுடன் ஒன்றி நிற்பது உடலைத் தாண்டி உயிரை நேசிப்போம்.
நன்றி!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்