logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

பொன் .குமரேசன்

சிறுகதை வரிசை எண் # 112


நட்பதிகாரம் கள் ஆறாய்ய் பெருகி ஓடியதால் உண்டான போதையோ இல்லை கள்ளூறும் பெண்களின் கண்களுக்காய் காத்திருக்கும் காளையர்களின் போதையோ எது எப்படியோ வெள்ளிமலை நாடு வெற்றி கொண்டாட்டத்தில் களித்துக் கொண்டிருந்தது . மகிழ்ச்சியையும் போதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது .போதை தரும் எல்லா விஷயங்களும் மகிழ்ச்சியே. அது பெண்ணாக இருந்தால் என்ன கள்ளாக இருந்தால் என்ன எல்லாமே கிடைத்துவிட்ட வெள்ளிமலை நாட்டில் கேட்டால் தான் தெரியும் போதை என்றால் என்ன என்று திகட்ட திகட்ட அரசன் சந்தோச விருந்தளித்தார் . "இளவரசரே... ஊரே மகிழ்ச்சி கூத்தாடி கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏதோ யோசனையாகவே உள்ளீர்களே ?இளவரசனின் ஆருயிர் நண்பனும் ஆயுதப் படையின் பொறுப்பாளனும் ஆகிய பார்த்திபன் இளவரசனை நோக்கி கேள்வி கேட்டான். கள்ளுண்ட போதையில் கண்களை ஒருபுறம் சாய்த்து இளவரசன் வீரேந்திரன் வினோதமாய் சிரித்தான் . பார்த்திபன் குழப்பமாய் நோக்க .."நீ என் நண்பனா ?இல்லை ஆயுதப்படை பொறுப்பாளனா?"பானையில் இருந்து கள் அவனது அகன்ற மார்பில் வழிந்தோட இளவரசன் சிரிப்புடன் கேட்டான் . "இரண்டும் தான் இளவரசே"!! "இல்லை ..பார்த்திபா உனக்கு பலமுறை நான் சொல்லி இருக்கிறேன் .அரசவையில் என்னை இளவரசரே என்று அழை .ஆனால் தனித்திருக்கும் வேளையில் நீ என் ஆருயிர் நண்பன் .அதை மறந்து விடாதே. சொல் .நீ இப்போது என் நண்பன் என்றால் என் மகிழ்ச்சிக்கான காரணத்தை உன்னிடம் பகிர்வேன் .ஆயுதப்படை பொறுப்பாளர் என்றால் இப்பொழுதே இவ்விடம் விட்டு நகர்ந்து விடு " கள்ளுண்ட மயக்கம் இளவரசனுக்கு ஏறிப் போய்விட்டது அதைப் புரிந்து கொண்ட பார்த்திபன் "சொல்லடா ..என் ஆருயிர் நண்பனே உன் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் ?" "உனக்கு தெரியவில்லையா அடி முட்டாளே ...இந்தக் கள்ளா என் மகிழ்ச்சிக்கு காரணம் ...இல்லவே இல்லை கள்ளாவது குடித்தால் தான் போதை ஏற்றும் .அவளின் கள்ளூறும் பார்வை பட்டதுமே உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு போதை ஏறி விட்டதடா.. அது உனக்கு தெரியவில்லையா என் முட்டாள் நண்பனே ..?மகிழ்ச்சி உச்சந்தலைக்கு ஏற புலம்பித் தள்ளினான் வீரேந்திரன் . "யார் நண்பா அந்த கள்ளி ...உங்கள் உள்ளம் கவர்ந்த வள்ளி... இப்பொழுதே சென்று அள்ளி வந்து விடலாம். சொல்லடா என் ஆருயிர் நண்பனே " "எத்தனையோ நாடுகளை படையெடுத்து ..எத்தனையோ சிற்றரசுகளை வீழ்த்தி எத்தனையோ ..அந்தப்புர பெண்களைப் பார்த்து வந்திருக்கிறேன் .ஆனால் இவளைப் போர் அழகியை நான் கண்டதில்லை .அவளைப் பார்த்தது முதல் எனக்கு புத்தி இல்லை.அவளை மணம் முடித்து என் அருகினில் அமர வைக்க தான் எனக்கு எனக்கு ஒரு வழி கிடைக்குமா சொல்.. பார்த்திபா சொல்"" கள் மயக்கம் பாதி பெண்மயக்கம் பாதி என காதல் அடுக்கு மொழிகளில் உளறிக் கொட்டினன் இளவரசன் வீரேந்திரன். "ஆருயிர் நண்பனே ...உனக்காக நான் ஏதும் செய்வேன். நீ மன்னனாக ஆணையிட்டாலும் சரி... நண்பனாக கேட்டுக் கொண்டாலும் சரி.. சொல் உன் உள்ளம் கவர்ந்த அந்த கள்ளி யார் ?முருகனுக்கு ஏற்ற அந்த வள்ளி யார்? " "நாம் இப்மோது வென்றோமே அந்த பொன்மலை நாட்டின் ... வீரேந்திரன் சொல்லி முடிப்பதறகுள் "இளவரசியா "என்று இடை புகுந்தான் பார்த்திபன். "என்ன தோழனே ..ஏன் இந்த அவசரம் "வினோத சிரிப்புடன் கேட்டான் வீரேந்ததிரன். "ஒன்றுமில்லை நண்பா ..உன் மனம் கவர்ந்தவள்யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு ஆர்வம் தான் வேறொன்றுமில்லை "என்றான் பார்த்திபன். சரி..நீ இளவரசியிடம் தானே மனதை பறிகொடுத்து விட்டாய்? இளவரசனிடம் கேட்டான் பார்த்திபன் . " என் மனதை பறிகொடுத்து விட்டேன் .நான் பறிகொடுத்தது இளவரசியின் பணிப்பெண்ணிடம்,இளவழசிக்கு இணையான அழகவள்" "தோழனே என்ன சொல்கிறாய் ?ஒரு இளவரசன் ஒரு பணிப்பெண்ணை விரும்புவதா? அரசர் ஏறறுக்கொள்வாரா? நண்பனின் உணர்வை உற்சாகப்படுத்துவதா இல்லல. இதன் பின்வரும் விளைவுகளை நினைத்து அச்சப்படுவநா என இரு தலை கொள்ளி எறும்பாய் தவித்து போனான் பார்த்திபன். கள்ளுண்ட மயக்கத்தில் உளறிக்கொண்டே தூங்கிப்போனான் இளவரசன் வீரேந்திரன். ஏறிய போதை ஓட்டைப்பானையில் இருந்து இறங்கிய நீர் போல் சட்டென இறங்கியது பார்த்திபனுக்கு. இளவரசி மேல் ஈர்ப்பு என்று கூறி இருந்தால் கூட என் அன்பை தியாகம் செய்திருப்பேனே? இனி அரசனுக்கு நான் என்ன பதில் கூறுவது? பார்த்திபனின் உள்ளம் போல் கூடாரமும் இருள ஆரம்பித்ததது. நாளைய பொழுது நன்றாய் விடிய வேண்டும் என இறைவனை நினைத்தபடி குறட்டைவிட்டு தூங்கும் நண்பனை பார்த்தபடி தூங்காமல் இருந்தான் பார்த்திபன். மறுநாள் காலை சூரியன் வழக்கமான பிரகாசத்துடன் ஒளிரவில்லை .நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை மன்னனிடம் சென்று படைத்தளபதி கூறிவிட்டதால் அரசவையே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது அரசன் முன் இளவரசனும் ஆயுதப்படை தளபதி பார்த்திபன் நிறுத்தப்பட்டிருந்தனர் .மன்னன் கோபத்தில் இருவரையும் நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்தார் . "நம் நாட்டின் பெருமை என்ன ...எதிரி நாட்டு இளவரசி மேல் மையல் என்று கூறியிருந்தால் கூட நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்... போயும் போயும் ஒரு பணிப்பெண்ணின் மீது உனக்கு மோகமா? உனக்கு வெட்கமா இல்லை ?வார்த்தைகளில் தீக்கங்குகளை தடவி இளவரசன் மீது எறிந்தார் மன்னன் . எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் இளவரசன் . "என்ன பார்த்திபா ...உன் நண்பனுக்கு நீ அறிவுரை கூற மாட்டாயா ...?இல்லை நீயும் அவனுடன் உடந்தையா..? உக்கிர பார்வையில் மன்னன் கேட்க திக்கு முக்காடிப்போனான் பார்த்திபன் . "என்ன இருவரிடமிருந்து ஒரு வார்த்தை பதில் வரவில்லை" கேட்டுவிட்டு மன்னன் இளவரசன் வீரேந்திரனை தீர்க்கமாக பார்த்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீரேந்திரன் "மன்னா ...பிரியம் என்பது எப்போது யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு எதிரி நாட்டு பணிப்பெண் மேல் பிரியமாய் இருப்பது தவறாக எனக்கு படவில்லை .நான் அவளை மணம் முடித்துக் கொண்டால் அவள் இந்த நாட்டின் இளவரசி ஆகிவிடுவாள்அப்புறம் அவளும் நமக்கு சமம் தானே ? "வீரேந்திரா "கோபத்தில் கர்ஜித்தார் மன்னன் .சிங்கத்தின் கர்ஜனைப் போல் அரசவை எங்கும் அது எதிரொலித்ததது. "இதுதான் உன் முடிவா ..? "ஆம் மன்னா நான் அந்த நாட்டை அவர்களுக்கே திருப்பி வழங்கப் போகிறேன் ." "அது என் உயிர் இருக்கும் வரை முடியாது வீரேந்திரா" "அதுவரை நான் காத்திருப்பேன் மன்னா "இதுதான் உன் பதிலா ..? "இதுதான் என் உறுதியான முடிவு . "அப்படி என்றால் என் முடிவையும் நீ கேட்டுக் கொள் .நீ அவளைத்தான் மணமுடிப்பாய் என்றால் அவளையே மணந்து விட்டு அந்த நாட்டின் இளவரசன் ஆகிவிடு .நான் இங்கு ஒரு இளவரசனை நியமிக்க போகிறேன்" அவன்தான் இனிமேல் இந்நாட்டின் இளவரசன். எனக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உரிமை கொண்டாட நீ இந்த நாட்டிற்குள் வரக்கூடாது. இதற்கு நீ ஒத்துக் கொள்கிறாயா?" "மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் ..மன்னா "வார்த்தைகளில் தெளிவு இருந்தது. முகத்தில் பிரகாசம் இருந்தது வீரேந்திரனுக்கு இதை சொல்லும் பொழுது . "அமைச்சர்களே நாட்டு மக்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள் .இனிமேல் நமது நாட்டின் இளவரசன் எனது அன்புக்கு பாத்திரமான ஆயுதப்படை தளபதி பார்த்திபன் தான் " இதைக் கேட்ட பார்த்திபன் ஒரு கணம் திகைத்துப் போனான். "மன்னா ... என்ன இது.? உங்களை எதிர்த்து பேசுகிறேன் ...என்று தவறாக நினைக்க வேண்டாம். என் ஆருயிர் நண்பனின் சிம்மாசனத்தை பறித்து விட்டேன் என்ற அவர் பெயர் எனக்கு எப்போதும் வேண்டாம். இதை நான் ஏற்றுக் கொள்ளமுடியாது" பயத்தில் உளறிக் கொட்டினான் பார்த்திபன். "இது மன்னனின் ஆணை . நீ என் மேல் வைத்திருப்பது உண்மையான அன்பு என்றால் நீ இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் ." "மன்னா ...நான் உங்கள் மீது அளவு கடந்த மரியாதை,அன்பு வைத்திருக்கிறேன் ...அதற்காக ..." பார்த்திபன் வார்த்தையை முடிக்கும் முன்னே மன்னன் குறுக்கிட்டான். "இதோ பார் ...பார்த்திபா... நீ உன் நண்பன் வீரேந்திரன் மீது வைத்திருப்பது உண்மையான அன்பு என்றால் உண்மையான நட்பு என்றால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இல்லையேல் உங்களுடைய நட்பு பொய் என்று நான் நினைப்பேன். சொல் நீ அவன் மேல் வைத்திருப்பது உண்மையான நட்பா?" "ஆம் மன்னா....என் உயிர் இருக்கும் வரை எனக்கு ஒரே நண்பன் தான் அந்த ஒரு நண்பனும் வீரேந்திரன் தான்." ""அது உண்மை எனில் இந்த இளவரசர்பட்டத்தை நீ ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்"" "மன்னா ...வேறு ஏதாவது வைத்து என்னை மடக்கி இருக்க நீங்க நினைத்திருந்தால் அது முடிந்திருக்காது.என் நட்பை வைத்து விட்டீர்கள் .இனி நான் என்ன பதில் சொல்வது. என் நட்பு உண்மையான நட்பு என்பதை புரிய வைக்க இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன் மன்னா"" "இதுதான் நீ மன்னனுக்கு கொடுக்கும் மரியாதை .நீ இந்த நாட்டில் என்றும் மகிழ்ச்சியாய் இருப்பாயடா என் பார்த்திபா ...."இன்று மன்னன் கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார். பார்த்திபன் ஒருவித கலக்கத்துடன் வீரேரேந்திரனைப் பார்த்தான் . ""இளவரசே என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்க வைத்து விட்டீர்களே ..நான் என்ன செய்வது...? இதில் ஏதேனும் உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா இளவரசே ...கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் வீரேந்திரனை பார்த்துஅழ ஆரம்பித்தான். """அட முட்டாள் நண்பனே நீ இந்நாட்டிற்கு இளவரசன் என்றால் என்னை விட சந்தோசப்படுபவர்கள் யாராக இருப்பார்கள் ..என் நட்பை நீ சந்தேகப்படுகிறாயா உன்னை விட இதில் எனக்கு தானடா மிக மகிழ்ச்சி..." "என்னை விட நீ இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் நன்றாக காப்பாய் என எனக்கு தெரியும். என் நண்பா அது தவிர என் காதலை சேர்த்து வைக்கும் புண்ணியமும் உனக்கு கிடைக்கும். எனவே எவ்விதமான கலக்கமும் இன்றி இதை ஏற்றுக் கொள் "என்று கூறி பார்த்திபனை ஆரத்தழுவிபுன்னகையுடன் விடைபெற்றான் வீரேந்திரன். .கண்களை துடைத்து விட்டு தனக்காக நாட்டையே விட்டுக் கொடுத்த நண்பனை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன் . யாரும் இல்லை என்பதை சுற்று முற்றும் பார்த்து தெரிந்து கொண்டு மெதுவாக அரசனுடைய அறைக்குள் நுழைந்தான் வீரேந்திரன் . "வா ..வீரா.. உன் வருகைக்காக தான் நான் காத்திருந்தேன் இப்பொழுது உனக்கு மகிழ்ச்சியா ?" "மிக்க மகிழ்ச்சி தந்தையே ...பார்த்திபன் பொன்மலை நாட்டு இளவரசியின் மேல் பிரியம் கொண்டான் என்பது எனக்கு தெரிந்து விட்டது .இளவரசிக்கும் சம்மதம் வேண்டுமென்றால் இவனும் ஒரு நாட்டின் அரசனாக வேண்டும் இல்லையா தந்தையே .... அதனால்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் .சாதாரணமாக கொடுத்தால் அவன் வாங்கிக் கொள்ள மாட்டான் .எனக்காக எவ்வளவோ செய்த பார்த்திபன் இந்த நாட்டை ஆள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தையே ....என்னை புரிந்து கொண்டு என் மனதை புரிந்து கொண்டு எனக்காக இந்த நாடகம் நடத்திய உங்களுக்கு மிக்க நன்றி தந்தையே" 'உன் நல்ல குணத்திற்கு நீ எங்கிருந்தாலும் நன்றாய் இருப்பாய் வீரேந்திரா...வெற்றியுடன் என்றும் மகிழ்ச்சியாய் இரு ...உன் மனம் கவர்ந்த அவளை மணந்து கொண்டு அந்த நாட்டின் இளவரசனாக வாழ்வாங்கு வாழ்வாயடா மகனே ..." என்று கூறி ஆறத் தழுவிக் கொண்டான் மன்னன். அன்றைய விடியல் வெள்ளி மலை நாட்டிற்கு பிரகாசமாய் இருந்தது . -------+++++++++++++++++++++++++++++++------ பொன்.குமரேசன் 1/97,மாதுளங்காய்த்தோட்டம் ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம்-638751 செல்லிடப்பேசி:9965617764 என்னைப்பற்றி நான் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.அவ்வப்போது சிறு பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதும் பழக்கம் உண்டு .கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு . இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சுக்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன். இது ஏற்கனவே அச்சிலோ மின்னிதழிலோ கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படிப்பு என்று உறுதி அளிக்கிறேன் . மேலும் இந்த படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தலுவலோ இல்லை என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன் . நட்பதிகாரம் கள் ஆறாய்ய் பெருகி ஓடியதால் உண்டான போதையோ இல்லை கள்ளூறும் பெண்களின் கண்களுக்காய் காத்திருக்கும் காளையர்களின் போதையோ எது எப்படியோ வெள்ளிமலை நாடு வெற்றி கொண்டாட்டத்தில் களித்துக் கொண்டிருந்தது . மகிழ்ச்சியையும் போதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது .போதை தரும் எல்லா விஷயங்களும் மகிழ்ச்சியே. அது பெண்ணாக இருந்தால் என்ன கள்ளாக இருந்தால் என்ன எல்லாமே கிடைத்துவிட்ட வெள்ளிமலை நாட்டில் கேட்டால் தான் தெரியும் போதை என்றால் என்ன என்று திகட்ட திகட்ட அரசன் சந்தோச விருந்தளித்தார் . "இளவரசரே... ஊரே மகிழ்ச்சி கூத்தாடி கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஏதோ யோசனையாகவே உள்ளீர்களே ?இளவரசனின் ஆருயிர் நண்பனும் ஆயுதப் படையின் பொறுப்பாளனும் ஆகிய பார்த்திபன் இளவரசனை நோக்கி கேள்வி கேட்டான். கள்ளுண்ட போதையில் கண்களை ஒருபுறம் சாய்த்து இளவரசன் வீரேந்திரன் வினோதமாய் சிரித்தான் . பார்த்திபன் குழப்பமாய் நோக்க .."நீ என் நண்பனா ?இல்லை ஆயுதப்படை பொறுப்பாளனா?"பானையில் இருந்து கள் அவனது அகன்ற மார்பில் வழிந்தோட இளவரசன் சிரிப்புடன் கேட்டான் . "இரண்டும் தான் இளவரசே"!! "இல்லை ..பார்த்திபா உனக்கு பலமுறை நான் சொல்லி இருக்கிறேன் .அரசவையில் என்னை இளவரசரே என்று அழை .ஆனால் தனித்திருக்கும் வேளையில் நீ என் ஆருயிர் நண்பன் .அதை மறந்து விடாதே. சொல் .நீ இப்போது என் நண்பன் என்றால் என் மகிழ்ச்சிக்கான காரணத்தை உன்னிடம் பகிர்வேன் .ஆயுதப்படை பொறுப்பாளர் என்றால் இப்பொழுதே இவ்விடம் விட்டு நகர்ந்து விடு " கள்ளுண்ட மயக்கம் இளவரசனுக்கு ஏறிப் போய்விட்டது அதைப் புரிந்து கொண்ட பார்த்திபன் "சொல்லடா ..என் ஆருயிர் நண்பனே உன் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் ?" "உனக்கு தெரியவில்லையா அடி முட்டாளே ...இந்தக் கள்ளா என் மகிழ்ச்சிக்கு காரணம் ...இல்லவே இல்லை கள்ளாவது குடித்தால் தான் போதை ஏற்றும் .அவளின் கள்ளூறும் பார்வை பட்டதுமே உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு போதை ஏறி விட்டதடா.. அது உனக்கு தெரியவில்லையா என் முட்டாள் நண்பனே ..?மகிழ்ச்சி உச்சந்தலைக்கு ஏற புலம்பித் தள்ளினான் வீரேந்திரன் . "யார் நண்பா அந்த கள்ளி ...உங்கள் உள்ளம் கவர்ந்த வள்ளி... இப்பொழுதே சென்று அள்ளி வந்து விடலாம். சொல்லடா என் ஆருயிர் நண்பனே " "எத்தனையோ நாடுகளை படையெடுத்து ..எத்தனையோ சிற்றரசுகளை வீழ்த்தி எத்தனையோ ..அந்தப்புர பெண்களைப் பார்த்து வந்திருக்கிறேன் .ஆனால் இவளைப் போர் அழகியை நான் கண்டதில்லை .அவளைப் பார்த்தது முதல் எனக்கு புத்தி இல்லை.அவளை மணம் முடித்து என் அருகினில் அமர வைக்க தான் எனக்கு எனக்கு ஒரு வழி கிடைக்குமா சொல்.. பார்த்திபா சொல்"" கள் மயக்கம் பாதி பெண்மயக்கம் பாதி என காதல் அடுக்கு மொழிகளில் உளறிக் கொட்டினன் இளவரசன் வீரேந்திரன். "ஆருயிர் நண்பனே ...உனக்காக நான் ஏதும் செய்வேன். நீ மன்னனாக ஆணையிட்டாலும் சரி... நண்பனாக கேட்டுக் கொண்டாலும் சரி.. சொல் உன் உள்ளம் கவர்ந்த அந்த கள்ளி யார் ?முருகனுக்கு ஏற்ற அந்த வள்ளி யார்? " "நாம் இப்மோது வென்றோமே அந்த பொன்மலை நாட்டின் ... வீரேந்திரன் சொல்லி முடிப்பதறகுள் "இளவரசியா "என்று இடை புகுந்தான் பார்த்திபன். "என்ன தோழனே ..ஏன் இந்த அவசரம் "வினோத சிரிப்புடன் கேட்டான் வீரேந்ததிரன். "ஒன்றுமில்லை நண்பா ..உன் மனம் கவர்ந்தவள்யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு ஆர்வம் தான் வேறொன்றுமில்லை "என்றான் பார்த்திபன். சரி..நீ இளவரசியிடம் தானே மனதை பறிகொடுத்து விட்டாய்? இளவரசனிடம் கேட்டான் பார்த்திபன் . " என் மனதை பறிகொடுத்து விட்டேன் .நான் பறிகொடுத்தது இளவரசியின் பணிப்பெண்ணிடம்,இளவழசிக்கு இணையான அழகவள்" "தோழனே என்ன சொல்கிறாய் ?ஒரு இளவரசன் ஒரு பணிப்பெண்ணை விரும்புவதா? அரசர் ஏறறுக்கொள்வாரா? நண்பனின் உணர்வை உற்சாகப்படுத்துவதா இல்லல. இதன் பின்வரும் விளைவுகளை நினைத்து அச்சப்படுவநா என இரு தலை கொள்ளி எறும்பாய் தவித்து போனான் பார்த்திபன். கள்ளுண்ட மயக்கத்தில் உளறிக்கொண்டே தூங்கிப்போனான் இளவரசன் வீரேந்திரன். ஏறிய போதை ஓட்டைப்பானையில் இருந்து இறங்கிய நீர் போல் சட்டென இறங்கியது பார்த்திபனுக்கு. இளவரசி மேல் ஈர்ப்பு என்று கூறி இருந்தால் கூட என் அன்பை தியாகம் செய்திருப்பேனே? இனி அரசனுக்கு நான் என்ன பதில் கூறுவது? பார்த்திபனின் உள்ளம் போல் கூடாரமும் இருள ஆரம்பித்ததது. நாளைய பொழுது நன்றாய் விடிய வேண்டும் என இறைவனை நினைத்தபடி குறட்டைவிட்டு தூங்கும் நண்பனை பார்த்தபடி தூங்காமல் இருந்தான் பார்த்திபன். மறுநாள் காலை சூரியன் வழக்கமான பிரகாசத்துடன் ஒளிரவில்லை .நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை மன்னனிடம் சென்று படைத்தளபதி கூறிவிட்டதால் அரசவையே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது அரசன் முன் இளவரசனும் ஆயுதப்படை தளபதி பார்த்திபன் நிறுத்தப்பட்டிருந்தனர் .மன்னன் கோபத்தில் இருவரையும் நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்தார் . "நம் நாட்டின் பெருமை என்ன ...எதிரி நாட்டு இளவரசி மேல் மையல் என்று கூறியிருந்தால் கூட நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்... போயும் போயும் ஒரு பணிப்பெண்ணின் மீது உனக்கு மோகமா? உனக்கு வெட்கமா இல்லை ?வார்த்தைகளில் தீக்கங்குகளை தடவி இளவரசன் மீது எறிந்தார் மன்னன் . எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் இளவரசன் . "என்ன பார்த்திபா ...உன் நண்பனுக்கு நீ அறிவுரை கூற மாட்டாயா ...?இல்லை நீயும் அவனுடன் உடந்தையா..? உக்கிர பார்வையில் மன்னன் கேட்க திக்கு முக்காடிப்போனான் பார்த்திபன் . "என்ன இருவரிடமிருந்து ஒரு வார்த்தை பதில் வரவில்லை" கேட்டுவிட்டு மன்னன் இளவரசன் வீரேந்திரனை தீர்க்கமாக பார்த்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீரேந்திரன் "மன்னா ...பிரியம் என்பது எப்போது யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு எதிரி நாட்டு பணிப்பெண் மேல் பிரியமாய் இருப்பது தவறாக எனக்கு படவில்லை .நான் அவளை மணம் முடித்துக் கொண்டால் அவள் இந்த நாட்டின் இளவரசி ஆகிவிடுவாள்அப்புறம் அவளும் நமக்கு சமம் தானே ? "வீரேந்திரா "கோபத்தில் கர்ஜித்தார் மன்னன் .சிங்கத்தின் கர்ஜனைப் போல் அரசவை எங்கும் அது எதிரொலித்ததது. "இதுதான் உன் முடிவா ..? "ஆம் மன்னா நான் அந்த நாட்டை அவர்களுக்கே திருப்பி வழங்கப் போகிறேன் ." "அது என் உயிர் இருக்கும் வரை முடியாது வீரேந்திரா" "அதுவரை நான் காத்திருப்பேன் மன்னா "இதுதான் உன் பதிலா ..? "இதுதான் என் உறுதியான முடிவு . "அப்படி என்றால் என் முடிவையும் நீ கேட்டுக் கொள் .நீ அவளைத்தான் மணமுடிப்பாய் என்றால் அவளையே மணந்து விட்டு அந்த நாட்டின் இளவரசன் ஆகிவிடு .நான் இங்கு ஒரு இளவரசனை நியமிக்க போகிறேன்" அவன்தான் இனிமேல் இந்நாட்டின் இளவரசன். எனக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உரிமை கொண்டாட நீ இந்த நாட்டிற்குள் வரக்கூடாது. இதற்கு நீ ஒத்துக் கொள்கிறாயா?" "மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் ..மன்னா "வார்த்தைகளில் தெளிவு இருந்தது. முகத்தில் பிரகாசம் இருந்தது வீரேந்திரனுக்கு இதை சொல்லும் பொழுது . "அமைச்சர்களே நாட்டு மக்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள் .இனிமேல் நமது நாட்டின் இளவரசன் எனது அன்புக்கு பாத்திரமான ஆயுதப்படை தளபதி பார்த்திபன் தான் " இதைக் கேட்ட பார்த்திபன் ஒரு கணம் திகைத்துப் போனான். "மன்னா ... என்ன இது.? உங்களை எதிர்த்து பேசுகிறேன் ...என்று தவறாக நினைக்க வேண்டாம். என் ஆருயிர் நண்பனின் சிம்மாசனத்தை பறித்து விட்டேன் என்ற அவர் பெயர் எனக்கு எப்போதும் வேண்டாம். இதை நான் ஏற்றுக் கொள்ளமுடியாது" பயத்தில் உளறிக் கொட்டினான் பார்த்திபன். "இது மன்னனின் ஆணை . நீ என் மேல் வைத்திருப்பது உண்மையான அன்பு என்றால் நீ இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் ." "மன்னா ...நான் உங்கள் மீது அளவு கடந்த மரியாதை,அன்பு வைத்திருக்கிறேன் ...அதற்காக ..." பார்த்திபன் வார்த்தையை முடிக்கும் முன்னே மன்னன் குறுக்கிட்டான். "இதோ பார் ...பார்த்திபா... நீ உன் நண்பன் வீரேந்திரன் மீது வைத்திருப்பது உண்மையான அன்பு என்றால் உண்மையான நட்பு என்றால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இல்லையேல் உங்களுடைய நட்பு பொய் என்று நான் நினைப்பேன். சொல் நீ அவன் மேல் வைத்திருப்பது உண்மையான நட்பா?" "ஆம் மன்னா....என் உயிர் இருக்கும் வரை எனக்கு ஒரே நண்பன் தான் அந்த ஒரு நண்பனும் வீரேந்திரன் தான்." ""அது உண்மை எனில் இந்த இளவரசர்பட்டத்தை நீ ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்"" "மன்னா ...வேறு ஏதாவது வைத்து என்னை மடக்கி இருக்க நீங்க நினைத்திருந்தால் அது முடிந்திருக்காது.என் நட்பை வைத்து விட்டீர்கள் .இனி நான் என்ன பதில் சொல்வது. என் நட்பு உண்மையான நட்பு என்பதை புரிய வைக்க இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன் மன்னா"" "இதுதான் நீ மன்னனுக்கு கொடுக்கும் மரியாதை .நீ இந்த நாட்டில் என்றும் மகிழ்ச்சியாய் இருப்பாயடா என் பார்த்திபா ...."இன்று மன்னன் கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார். பார்த்திபன் ஒருவித கலக்கத்துடன் வீரேரேந்திரனைப் பார்த்தான் . ""இளவரசே என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்க வைத்து விட்டீர்களே ..நான் என்ன செய்வது...? இதில் ஏதேனும் உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா இளவரசே ...கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் வீரேந்திரனை பார்த்துஅழ ஆரம்பித்தான். """அட முட்டாள் நண்பனே நீ இந்நாட்டிற்கு இளவரசன் என்றால் என்னை விட சந்தோசப்படுபவர்கள் யாராக இருப்பார்கள் ..என் நட்பை நீ சந்தேகப்படுகிறாயா உன்னை விட இதில் எனக்கு தானடா மிக மகிழ்ச்சி..." "என்னை விட நீ இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் நன்றாக காப்பாய் என எனக்கு தெரியும். என் நண்பா அது தவிர என் காதலை சேர்த்து வைக்கும் புண்ணியமும் உனக்கு கிடைக்கும். எனவே எவ்விதமான கலக்கமும் இன்றி இதை ஏற்றுக் கொள் "என்று கூறி பார்த்திபனை ஆரத்தழுவிபுன்னகையுடன் விடைபெற்றான் வீரேந்திரன். .கண்களை துடைத்து விட்டு தனக்காக நாட்டையே விட்டுக் கொடுத்த நண்பனை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன் . யாரும் இல்லை என்பதை சுற்று முற்றும் பார்த்து தெரிந்து கொண்டு மெதுவாக அரசனுடைய அறைக்குள் நுழைந்தான் வீரேந்திரன் . "வா ..வீரா.. உன் வருகைக்காக தான் நான் காத்திருந்தேன் இப்பொழுது உனக்கு மகிழ்ச்சியா ?" "மிக்க மகிழ்ச்சி தந்தையே ...பார்த்திபன் பொன்மலை நாட்டு இளவரசியின் மேல் பிரியம் கொண்டான் என்பது எனக்கு தெரிந்து விட்டது .இளவரசிக்கும் சம்மதம் வேண்டுமென்றால் இவனும் ஒரு நாட்டின் அரசனாக வேண்டும் இல்லையா தந்தையே .... அதனால்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் .சாதாரணமாக கொடுத்தால் அவன் வாங்கிக் கொள்ள மாட்டான் .எனக்காக எவ்வளவோ செய்த பார்த்திபன் இந்த நாட்டை ஆள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தையே ....என்னை புரிந்து கொண்டு என் மனதை புரிந்து கொண்டு எனக்காக இந்த நாடகம் நடத்திய உங்களுக்கு மிக்க நன்றி தந்தையே" 'உன் நல்ல குணத்திற்கு நீ எங்கிருந்தாலும் நன்றாய் இருப்பாய் வீரேந்திரா...வெற்றியுடன் என்றும் மகிழ்ச்சியாய் இரு ...உன் மனம் கவர்ந்த அவளை மணந்து கொண்டு அந்த நாட்டின் இளவரசனாக வாழ்வாங்கு வாழ்வாயடா மகனே ..." என்று கூறி ஆறத் தழுவிக் கொண்டான் மன்னன். அன்றைய விடியல் வெள்ளி மலை நாட்டிற்கு பிரகாசமாய் இருந்தது . -------+++++++++++++++++++++++++++++++------ பொன்.குமரேசன் 1/97,மாதுளங்காய்த்தோட்டம் ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம்-638751 செல்லிடப்பேசி:9965617764 என்னைப்பற்றி நான் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.அவ்வப்போது சிறு பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதும் பழக்கம் உண்டு .கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு . இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சுக்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன். இது ஏற்கனவே அச்சிலோ மின்னிதழிலோ கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படிப்பு என்று உறுதி அளிக்கிறேன் . மேலும் இந்த படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தலுவலோ இல்லை என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன் .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.