Kamala
சிறுகதை வரிசை எண்
# 106
ஆசிரியர் தினம்
பழனி,வேலு,புகழேந்தி மூவரும் நண்பர்கள். பள்ளி நாட்களில் வால் பசங்க எனும் பட்டப் பெயரோடு பள்ளியை ஒரு கலக்கு கலக்கியவர்கள். ஆண்டுதோறும் மார்ச் 23 நால்வரும் எலியட்ஸ் பீச்சில் சந்திப்பது வழமை.
பழனி, "டேய் வேலு, புகழ் உங்க இரண்டு பேருக்கும் ஒரு நியூஸ். நேற்று நான் வடபழனி முருகன் கோவிலில் நம்ம வகுப்பாசிரியர் அருணாசலம் சாரைப் பாத்தேன்"
"அப்டியா, என்னடா சொன்னார்? நாமெல்லாம் ஞாபகத்ல இருக்கோமா?"
"ஆமாங்கடா, நாம எல்லாரையும் ரொம்ப விஜாரித்தாருடா. நாம மூவரும் சொந்த வீடு, வாசல், காரென்று வசதியா இருப்பதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப் பட்டாருடா"
"அவர் இப்ப எங்க இருக்கார்டா?" புகழ்
"அதே வாடகை வீட்லதான். ரொம்ப இளைச்சிருக்கார். கொஞ்சம் கஷ்டத்தில இருக்காப் போல இருக்குடா குடும்பம்"
வேலு, "எனக்கு ஒரு ஐடியாடா. நான் சொல்றது சரின்னா கைகொடுங்கடா. இல்லைனா நானே பாத்துக்கறேன்"
"அட சொல்லுடா வேலு"
செப்டம்பர் ஐந்தாம் தேதி சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நண்பர்கள் மூவரும் கலைந்தனர்.
செப்டம்பர் ஐந்தாம் தேதி வாசலில் கார் சத்தம் கேட்டு அருணாசலம் சார் கதவைத் திறக்கிறார். மூன்று நண்பர்களையும் ஒன்றாகப் பார்த்து, "வாங்க, வாங்க" என அழைக்கிறார்.
நண்பர்கள் பழக்கூடைகள், இனிப்பு பெட்டிகள், புத்தாடைகள் கொணர்ந்து வீட்டின் கூடத்தில் வைத்தபடி, "வணக்கம் சார்... எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேம்பா. என்ன விஷயம்? எல்லாரும் ஒன்றாக வந்திருக்கீங்க?"
"சார் இன்னிக்கு ஆசிரியர் தினமில்லையா. அதனால உங்களைப் பார்த்து வணக்கம் சொல்லிட்டு ஒரு சின்ன அன்பளிப்பு தரலாம்னு வந்திருக்கோம்"
"அன்பளிப்பெல்லாம் எதுக்குப்பா? நீங்க எல்லாம் என்னை ஞாபகம் வெச்சு பாக்க வந்ததே போதும்"
"சார் நாங்களெல்லாம் இன்னிக்கு வாழ்க்கைல இந்தளவு வெற்றியோட இருக்கோம்னா அதற்கு ஏணி நீங்கதான் சார். உங்க அறிவுரைகள், கண்டிப்போடு கூடிய கனிவுச் சொற்கள் தான் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தது சார். அதனால மறுக்காம இந்த வீட்டு சாவியை வாங்கிக்கோங்க சார். பக்கத்து தெருவில ஒரு மூன்று படுக்கையறை ஃப்ளாட் உங்க பேர்ல வாங்கியிருக்கோம் சார்", என்று வணங்கினர்
அருணாசலம் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தை வராமல் தடுமாற, " சார் நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம். இது எங்க கடமைதான். எங்களால் ஆன சிறு காணிக்கையாக இதை உங்களுக்குத் தரோம். ஏத்துக்கோங்க சார்" என்றனர் ஒருமித்த குரலில்.
ஆசிரியர் தன் மாணவர்களுக்கு ஆசி கூறி வழியனுப்பினார்.
கமலா பார்த்தசாரதி
சென்னை 600 033
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்