logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

கே.கல்பனா

சிறுகதை வரிசை எண் # 104


*கடந்து சென்ற நாட்கள்* நான் அன்றொருநாள் என் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன் செல்லும் வழியில் ஒரு பூனை ஒரு வீட்டின் வெளி பகுதியில் சன்னல் கம்பிகளுக்கிகடையில் அதன் தலை மாட்டிக்கொண்டு வெளியில் வர தெரியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பூனை தன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல் நான் உதாசீனமாக அந்த பூனை இருந்தால் என்ன செத்தால் எனக்கென்ன என்று போய்விட்டேன். நாட்கள் பல கடந்த பின் அன்று எனக்கு விடுமுறை..... நான் பலசரக்கு சாமான்கள் வாங்குவதற்காக கடைவீதி சென்று கொண்டிருந்தேன் அப்போது செல்லும் வழியில் ஒரு தண்ணீர் குழாய் மூடாமல் தண்ணீர் வீணாக போவதைக் கண்டும் குழாயின் வாயை மூடுவது நமது சமூக சிந்தனை என்றுக் கூட கருதாமல் கண்டும் காணாது போய்விட்டேன் சிறிது நாட்கள் அவ்வாறே கழிந்த பின்பு ஒரு நாள் அலுவலக ஆலோசனைக் குழுவிற்கு அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது வழியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார் அதில் நஷ்டப்பட்டால் இரண்டு உயிர்கள் அதையும் நான் கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்று விட்டேன். இவ்வாறு எனக்கென்ன என்று அனைத்தையும் உதாசீனப்படுத்தி கொண்டே போய்விட்டேன் கடைசியாக என் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன் என் பெயர் தனபாலன் எனது மனைவி பெயர் சரிதா எனக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை பெயர் விக்னேஷ் எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் முடிந்த பின்தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது என் மகன் விக்னேஷின் உடல்நிலை ஆரோக்கியம் சிறிது கவலைக்கிடமாகவே இருந்தது அவனுக்கு இடைக்கிடை காக்கா வலிப்பு வந்து விடும் அதனால் என்றும் அவனை பள்ளிக்கு நானும் எனது மனைவியும் தான் கொண்டு செல்வதும் திருப்பி அழைத்து வருவதுமாக இருந்தோம். அன்று ஒரு வியாழக்கிழமை எனக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி அதனால் எனக்கு சிறிது நேரம் முன்பாகவே அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது என் மனைவிக்கு அன்று உடல்நிலை சரியில்லை காய்ச்சல் ஆதலால் அவளுக்கு பள்ளிக்கு விக்னேஷ் உடன் செல்ல இயலவில்லை அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் மட்டும் அவனை பள்ளிக்கு தனியாக செல்ல சொன்னோம். பள்ளி எங்கள் வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் இருக்கும். அன்று அவன் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு பாதி தூரம் சென்றிருப்பான் அவ்வளவு தான் அவனுக்கு காக்கா வலிப்பு வந்துவிட்டது அவன் தரையில் விழுந்து தவித்துக் கொண்டிருந்தான். அதை கண்டும் காணாமல் எத்தனையோ நபர்கள் கடந்து சென்று இருக்கிறார்கள் சிறிது நேரம் கழிந்த பின் ஒரு அம்மா இடுப்பில் ஒரு குழந்தை கையில் ஒரு குழந்தையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். திடீரென இந்த காட்சியை கண்ட அந்த அம்மா அந்த வழியில் சென்ற மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் உள்ள ஓட்டுனரை அழைத்து ஒரு கை பிடிக்க கூறினார் பின் அவர் ஒரு அரசு மருத்துவமனையில் சென்று என் மகனை சேர்த்தார் பின்பு அந்த ஆஸ்பத்திரி நிர்வாகிகள் விபரம் அறிந்து காவல்துறையில் தெரிவித்தனர். காவல்துறையினர் அந்த பையன் வந்த வழியெல்லாம் விசாரித்து விலாசத்தை கண்டுபிடித்து பெற்றோர்களை கண்டுபிடித்து தந்தை தனபால் நான் என்பதை தெரிந்து எந்தன் அலுவலகத்தை நாடினார்கள். விவரம் கேட்ட அளவில் எனக்கோ ஒரு நிமிடம் மேனியில் மின்சாரம் பாய்ந்தது போல் ஆகிவிட்டது. பின்னர்....என்ன செய்ய....நானந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்று என் மகனை பார்த்து விட்டு அந்த மருத்துவரிடம் நன்றியை தெரிவித்தேன் அப்போது அந்த மருத்துவர் உங்கள் நன்றியை என்னிடம் தெரிவிக்க வேண்டாம் வெளியில் இரண்டு குழந்தைகளை வைத்து நின்றுகொண்டிருக்கும் அந்த அம்மாவிடம் சென்று கூறுங்கள் என்றார்..... அந்தம்மா மட்டும் உங்க மகனை இங்கு அழைத்துக் கொண்டு வர பத்து நிமிடம் தாமதம் ஆனாலும் கூட உங்கள் மகனின் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும் என்றார் மருத்துவர். என் கண்கள் நிறைந்தன...நான் உடனே ஓடிச்சென்று வாசலில் இருந்த அந்த அம்மாவை காணச் சென்றேன் .ஆனால் எங்க அந்தம்மாவை காணவில்லை ......அவர்கள் செய்த இந்த மிகப்பெரிய உதவிக்கு நான் நன்றி கூட தெரிவிக்கவில்லையே...அந்த நன்றியைக் கூட கூட எதிர்பார்க்காமல் அந்த அம்மா சென்று விட்டார்களே யாரோ முகம்கூட தெரியாத ஒரு நபர்... இன்று அவரில்லையென்றால்....அய்யோ நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்னால் "கடமையை செய் பலனை எதிர்பாராதே'' என்ற பழமொழிக்கு உதாகரணமாக நடந்த அவரை நான் என்ன சொல்லி பாராட்டுவது நமது நாட்டில் இன்னும் மனித நேயம் சாகவில்லை. ஆனால் நான் தான் செத்துப் போய் விட்டேன் உயிரோடு இருந்தும் நான் தான் நடைபிணமாக இவ்வளவு நாட்கள் வலம் வந்து கொண்டிருந்தேன். இவ்வளவு நாட்கள் எனக்கு என்ன என்று கண்டும் காணாமல் எத்தனை காட்சிகளை உதாசீனப்படுத்திவிட்டு கடந்து சென்றிருப்பேன் அன்றெல்லாம் நான் செய்த மாதிரி இந்தம்மாவும் இன்று செய்திருந்தாங்கன்னா என் மகனை நிலைமையை நினைத்துப் பார்க்கக் கூட என்னால் இயலவில்லை ஏதோ பெயர் தெரியாத தெரியாத ஒரு அம்மா என் அகக் கண்களைத் திறந்துவிட்டார். இனியாவது நான் வந்து சற்று மனிதனாக மனிதத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் நானே ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு நான் செய்த பாவத்தை கழுவ முதலில் அருகிலுள்ள அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவாவது நான் வழங்க வேண்டும்..... புறப்பட்டான் தனபால்!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.