logo

கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2020


கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2020
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும்
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் போட்டி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு செய்யும் நினைவாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்த நோய் பரவல் பற்றியும் அதனால் பாதிப்படைந்த உயிர்களுக்கு நாம் செய்யும் ஒரு கவியஞ்சலியாக இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூவாயிரம் ரூபாய்).

மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி-2020: ஒரு நபர் - 1000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு :ஆறு நபர்கள் - 6000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாகவும் நூல்களாகவும் பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: படைப்பு குழுமம்

போட்டி விவரம்:

தலைப்பு : கைகழுவிய காலம்

ஆரம்ப நாள் : 07-நவம்பர்-2020 இரவு மணி 12 முதல்

கடைசி நாள் :09-நவம்பர்-2020 இரவு மணி 12 வரை

போட்டி நடுவர் : கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

தலைப்பு விளக்கம்:
இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய இயலாமல் நாம் இருப்பதே இயற்கையின் நியதி. அப்படிப்பட்ட இயற்கையின் சீற்றமான இக்கால நோய் பரவல் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து வகையான நிலைகளையும், சமூக இடைவெளி, தனிமனித ஒழுக்கம், இயற்கைக்கு மாறுபட்ட வகையில் செய்யும் கலாச்சார சீர்கேடு மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் மறந்தது போன்ற இன்றைய சூழ்நிலையில் நாம் அடையும் துயரங்களையும், பிரிவுகளையும், பாதிப்படைந்த வாழ்வையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இழந்த நிம்மதியையும் விவரித்து சொல்லும் தலைப்பே இது. ஆதலால் இது முழுக்க முழுக்க காலமும் இயற்கையும் வாழ்வும் சார்ந்த நினைவுகளை சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இக்காலத்திற்கு எழுதும் நம் படைப்புகள் மூலம் வருங்காலத்திற்கு நாம் செய்யும் சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது. (கொரோனா நோய் பற்றி மட்டுமே விவரிக்கும் தலைப்பு இது அல்ல என்பதை நினைவில் கொள்க)

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 07-நவம்பர்-2020 ( ஞாயிறு மற்றும் திங்கள்)  ( 48 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.

2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.

3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 09-நவம்பர்-2020 (திங்கள் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. கவிதையை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம். இம்முறை மதிப்பெண்(லைக்) ஒவ்வொரு கவிதைக்கும் மக்களே தீர்மானிக்க இருக்கிறார்கள். இதன் முடிவில் அதிக மக்கள் வாக்கு பெறும் படைப்பாளிக்கு மக்கள் செல்வாக்கு மிக்க கவிஞர் என்ற அங்கீகாரமும் ஸ்பெஷல் சான்றிதழும் பரிசும் வழங்க இருக்கிறோம். இதுவரை யாரும் செய்யாத இந்த புது முயற்சியையும் அரவணைக்க வேண்டுகிறோம். மக்கள் செல்வாக்குமிக்க படைப்பாளி -2020 என்ற ஒரே ஒரு பரிசு மட்டும் மக்களால் தேர்வு செய்யப்படும் மற்றபடி போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.

6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''கைகழுவிய காலம்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும். இதில் அணிந்துரை எழுதப் போகும் கவிஞர் யார் யார் என்பதை பின்பு அறிவிப்போம்.

7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 10 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

8. கவிதைகள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படைப்பு இணையதளத்தில் மட்டுமே பதிய இயலும்.

9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 48 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

10.கவிதைகள் காலம் மற்றும் நோய்க்கொல்லி சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம். காலம் பற்றி சொல்லும் எந்த படைப்பும் ஏற்றுக்கொள்ளப்படும். எந்த கருவிலும் எழுதலாம் ஆனால் அது காலம் சம்பந்தமான கவிதையாக இருக்க வேண்டும்.

11. போட்டி முடியும்  நாளான 09-நவம்பர்-2020 (திங்கள் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மேல்) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ பொது மக்கள் மக்கள் பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் ஓட்டளிக்கும் ( லைக் கணக்கிலும்) உங்கள் மதிப்பெண் கணக்கிடப்படும் அது மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்று தரும்.

12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.


வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்    

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    கை கழுவிய காலம் கைகழுவியது கவிஞர்களே....

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    கை கழுவிய காலம் கைகழுவியது கவிஞர்களே....

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    Ennamuma ithai nampiddu erukeenge ....😄😄😄😄😄😄😄😄

  • வைஷ்ணவி Avatar
    வைஷ்ணவி - 3 years ago
    போட்டி முடிவுகள் எப்போது வெளிவரும்

  • R.Inbanila Avatar
    R.Inbanila - 3 years ago
    Result pathi update pannugka

  • ரா.சிலம்பரசன் Avatar
    ரா.சிலம்பரசன் - 3 years ago
    வணக்கம். கவிக்கோ பிறந்தநாள் பரிசுப் போட்டிக்குரிய கவிதைப் போட்டியின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    வணக்கம் கவிகளே 🙏🙏🙏

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    வணக்கம் ஐயா இன்னுமா கவிதையின் முடிவு அறிவிக்கவில்லை முடிவு அறிவிக்கும் தேதியாவது சொல்லுங்கள் ஏனெனில் ஏற்கனவே மார்ச் மாதம் இங்கு சிறுகதை போட்டிக்கு அனுப்பி இருந்தேன் அதன் முடிவும் தெரியவில்லை ....ஐயா🙏🙏🙏

  • ம.சுதா Avatar
    ம.சுதா - 3 years ago
    இதற்கு மின் சான்றிதழ் உள்ளதாங்க ஐயா? இதன் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் ஐயா???

    தாமோதரன் Avatar
    தாமோதரன் - 3 years ago
    புகழின் பின்னால் நீ போனால் அது பொய்மான்..! உன் பின்னால் புகழ் வந்தால் அது நிஜமான்..! அப்போது தான் நீ அதற்கு எஜமான் ..!

  • ம.சுதா Avatar
    ம.சுதா - 3 years ago
    அறிவிப்பு ....! தெரிவிப்பு....! காத்திருப்பதில் ஒரு சுகம்...! 🙏🙏🙏👍👏

  • குடியரசி  .  உ Avatar
    குடியரசி . உ - 3 years ago
    இந்த கைகழுவிய காலம் கவிதையின் வெற்றியை எப்பொழுது அறிவிப்பீர்கள் ஐயா 🙏🙏🙏

  • நா.மகாலிங்கம் Avatar
    நா.மகாலிங்கம் - 3 years ago
    போட்டி முடிவுகள் என்று வெளியிடப்படும் .....தெரியப்படுத்துங்கள்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    நடுவர் முடிவுகளை கொடுத்ததும் அறிவிப்பு வரும். இணையதளத்தில் அறிவிப்பு வரும் . தயவுசெய்து இணைந்தே இருங்கள் இணையதளத்தில். வாழ்த்துகள்

  • ம.சுதா Avatar
    ம.சுதா - 3 years ago
    வாய்ப்பிற்கு நன்றி...🙏 மனதின் கருத்தினை ... எழுத்துருவாக்கி... கவிதை படைப்பாக்க.... வாய்ப்பு அளித்தமைக்கு..... நன்றி........🙏🙏🙏

  • Saveitha Murthy Avatar
    Saveitha Murthy - 3 years ago
    மிக அருமை

  • Veeravel Avatar
    Veeravel - 3 years ago
    புதிதாக வருபவர்களால் விருப்பக் குறியீடும் பின்னூட்டமும் இட இயலவில்லை கவிதைக்கு உதவ முடியுமா ..?

  • மு.கோகிலா Avatar
    மு.கோகிலா - 3 years ago
    வணக்கம் , என்னுடைய கவிதை எண் 59 எனது கவிதையை படித்தவர்களால் likeசெய்ய முடியவில்லை வழி காட்டினால் நலமாக இருக்கும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    லைக் மற்றும் கமெண்ட் போடுபவர்கள் ரெஜிஸ்ட்டர் செய்து விட்டுதான் பதிவிட முடியும். யாரென்று தெரியாதவர்கள் தவறான வழியில் பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே இந்த முறை கடைப்பிடிக்க படுகிறது.

    Veeravel Avatar
    Veeravel - 3 years ago
    ரெஜிஸ்டர் ஆகவில்லை அனைத்து சுய விவரங்கள் தந்தும் கூட

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    ஆகிறதே... எல்லோருக்கும் அதே போலத்தான் ஆகிறது

  • Banū Avatar
    Banū - 3 years ago
    என்னுடைய பதிவு போட்டிக்கு உரியது அல்ல எப்படி சமர்ப்பிக்கவேண்டும் என்பதை உணர்த்துங்களேன் plz

  • Banū Avatar
    Banū - 3 years ago
    தயவுசெய்து படைப்பாளரகளின் கையில் தீர்ப்பு வழங்கசொல்லுங்கள்..! விரும்பும் பட்டன்களில் தீர்ப்பை வைக்க வேண்டாமே

  • வீக பொன்னையா Avatar
    வீக பொன்னையா - 3 years ago
    மதிப்பிற்குரிய. ஐயா. இதில் அதிகமாக விரூம்புவோரின் கவிதையைத் தேர்ந்தெடுப்பீர்களா நிர்வாகக் குழுகூடி பரிந்துரைக்கும் முடிவுதானே இறுதியானது ஐயா நன்றிகள் ஐயா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    நடுவர் மட்டுமே முதல், இரண்டாம் , மூன்றாம் மற்றும் சிறப்பு பரிசுகளை தேர்வு செய்வார். மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற ஒரே ஒரு விருது மட்டுமே மக்கள் தேர்வு செய்வார்கள்.

  • Safinapeer (Achu Dreamss) Avatar
    Safinapeer (Achu Dreamss) - 3 years ago
    என்னோட வரிசை எண் #74 Like போடவில்லை என்று கூறுகிறார்கள், Login an Error என்று வருதாம் தயவு செய்து இந்த சிக்கலை சரி செய்யவும்,மக்கள் பார்வைக்கு எத்தனை நாள் கவிதை இருக்கும்,கடைசி நாள் என்ன சகோ, இந்த Link சேர் செய்வதற்காக கேட்க்கிறேன்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    லைக் மற்றும் கமெண்ட் போடுபவர்கள் ரெஜிஸ்ட்டர் செய்து விட்டுதான் பதிவிட முடியும். யாரென்று தெரியாதவர்கள் தவறான வழியில் பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே இந்த முறை கடைப்பிடிக்க படுகிறது.

  • S. Maria Selvarani Avatar
    S. Maria Selvarani - 3 years ago
    ஜோ. ஜெயராஜ் வணக்கம் ஐயா என் கவிதை எண்#115. என் கவிதையை படித்தவர்கள் like comment செய்ய இயலவில்லை log in என்று open ஆகுவதாகவும் பின்னர் error என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறு linkல் சென்று like comment செய்வது என்பதை விளக்கினால் நன்று

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    லைக் மற்றும் கமெண்ட் போடுபவர்கள் ரெஜிஸ்ட்டர் செய்து விட்டுதான் பதிவிட முடியும். யாரென்று தெரியாதவர்கள் தவறான வழியில் பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே இந்த முறை கடைப்பிடிக்க படுகிறது.

  • வி.கல்பனாதர்மேந்திரா Avatar
    வி.கல்பனாதர்மேந்திரா - 3 years ago
    வணக்கம் ... எனது வரிசை எண் *249 .. விருப்பக் குறியீடு இடுவதற்கு, login fail , error என்று வருவதாக அனைத்து நண்பர்களும் கூறுகின்றனர்.. எதனால் என்று தெரியவில்லை... விவரம் அறிந்தால் மகிழ்வேன்...

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    லைக் மற்றும் கமெண்ட் போடுபவர்கள் ரெஜிஸ்ட்டர் செய்து விட்டுதான் பதிவிட முடியும். யாரென்று தெரியாதவர்கள் தவறான வழியில் பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே இந்த முறை கடைப்பிடிக்க படுகிறது.

  • பா.சிவகுமார் Avatar
    பா.சிவகுமார் - 3 years ago
    வணக்கம் ஐயா என் கவிதை எண்#158. என் கவிதையை படித்தவர்கள் like comment செய்ய இயலவில்லை log in என்று open ஆகுவதாகவும் பின்னர் error என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறு linkல் சென்று like comment செய்வது என்பதை விளக்கினால் நன்று நன்றி 🙏

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    லைக் மற்றும் கமெண்ட் போடுபவர்கள் ரெஜிஸ்ட்டர் செய்து விட்டுதான் பதிவிட முடியும். யாரென்று தெரியாதவர்கள் தவறான வழியில் பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே இந்த முறை கடைப்பிடிக்க படுகிறது.

  • பருத்தி இக்பால் Avatar
    பருத்தி இக்பால் - 3 years ago
    என் கவிதை எண் 271 ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதா ? அந்த எண்ணும் இல்லை. அந்த எண்ணிற்குரிய என் கவிதையையும் காணோம் ?

  • பருத்தி இக்பால் Avatar
    பருத்தி இக்பால் - 3 years ago
    என்னுடைய கவிதை எண் 271 ஆனால் உள் சென்று பார்த்தால் கவிதை எண் 271 இல்லையே . முதலில் அனுப்பி விட்டேன் பின்னர் மாற்றி அமைப்பதில் எழுத்தை ஒருவரியில சீர் படுத்தினேன்.ஆனால், என் கவிதைஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா ?

  • ரா.திவ்ய பாரதி Avatar
    ரா.திவ்ய பாரதி - 3 years ago
    போட்டியின் முடிவுகள் எப்போது வெளியாகும்

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    நடுவர் முடிவுகள் கொடுத்ததும்

  • Roshany Singarasa Avatar
    Roshany Singarasa - 3 years ago
    கவிதைகளுக்கான Like இட login செய்ய வேண்டுமா?...

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    ஆமாம்

  • Hanees Mohamed Avatar
    Hanees Mohamed - 3 years ago
    போட்டிக்கு எப்படி கவிதையை சமர்ப்பிப்பது.. என்னால் எதையும் காண முடியவில்லை

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    மேலே கவிதை சமர்ப்பிக்க என்று பட்டன் ஒன்று இருக்கிறதே அதை க்ளிக் செய்து சமர்ப்பிக்க

  • Hanees Mohamed Avatar
    Hanees Mohamed - 3 years ago
    போட்டிக்கு எப்படி கவிதையை சமர்ப்பிப்பது.. என்னால் எதையும் காண முடியவில்லை

  • Sujitha S Avatar
    Sujitha S - 3 years ago
    நடுவர் தேர்ந்தெடுத்த கவிதைக்கு மக்களால் அதிக வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தால், இரண்டு பரிசுகளும் ஒரே நபருக்கு வழங்கப்படுமா?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    அப்படியும் நடக்க வாய்ப்பிருந்தால் நடக்கும்

  • Sujitha S Avatar
    Sujitha S - 3 years ago
    ஒரு வரிக்கு, அதிகபட்சம் 3 வார்த்தைகளை மட்டுமே நிரப்ப முடிகிறது. நான்காவது வார்த்தை அடுத்த வரியில் சென்று இடம் பெறுகிறது. எனவே கவிதையின் வரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இப்போது என்ன செய்ய வேண்டும்? உதவுங்கள்.

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    பரவா இல்லை. அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • Roshany Singarasa Avatar
    Roshany Singarasa - 3 years ago
    என்னால் மேல் தரப்பட்டுள்ள linkஐ அழுத்தி கவிதையை சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் அதே விடயம் தென்படுகிறது.எனவே தகுந்த வழிகாட்டுதலை வழங்கி போட்டியில் பங்கு பெற ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அ. வேளாங்கண்ணி Avatar
    அ. வேளாங்கண்ணி - 3 years ago
    இன்னும் 58 நிமிடங்களுக்குப் பின் முயலுங்கள். அப்போது தான் போட்டி தொடங்கும்.

  • NADANA Avatar
    NADANA - 3 years ago
    பொதுவெளியில் fb, Twitter, insta போன்ற இடத்தில் பதிவிடப்படும் போட்டிக்கான கவிதைக்கு கிடைக்கும் like குகள் எவ்வாறு கணக்கிடப்படும்? போட்டியாளர் படைப்பு குழுமத்திற்கு எவ்வாறு தெரிவிப்பது?

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    கவிதையை இங்கே படைப்பு தளத்தில் மட்டுமே பதிவிட முடியும். இந்த லிங்கை எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம். இங்கு எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும் கவிதை வரிசை எண் உட்பட அனைத்து லிங்கும் வரும். அதில் லைக் பட்டன் மற்றும் கமெண்ட்ஸ் மற்றும் பார்வைக்கான அனைத்து வசதியும் இருக்கும். அதிலிருந்தே கணக்கிடப்படும். அதுவும் ஒரே ஒரு அதாவது மக்கள் செல்வாக்குமிக்க படைப்பாளி என்ற பரிசுக்கு மட்டுமே பொதுமக்களின் வாக்கு கணக்கில் கொள்ளப்படும். அதை தவிர்த்து மீதி அனைத்தும் நடுவர் அவர்களாலேயே தேர்வு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்க

  • Vijayakalyani Subhash Avatar
    Vijayakalyani Subhash - 3 years ago
    அருமையான தலைப்பு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • Sowmya . P Avatar
    Sowmya . P - 3 years ago
    Can we submit in English ? Can you give us the link to submit our works

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இதே அறிவிப்பில் நாளை இரவு 12 மணிக்கு சமர்ப்பிக்கும் பட்டன் ஓபன் ஆகும்

  • RAMVASANTH G Avatar
    RAMVASANTH G - 3 years ago
    கவிதையை எழுத்துவடிவில் பதிவிட வேண்டுமா அல்லது அச்சுவடிவில் பதிவிட வேண்டுமா

    Jinna Asmi Avatar
    Jinna Asmi - 3 years ago
    இந்த கருத்தை எப்படி எழுதி பதிவிட்டீர்களோ அதே போல எழுத்து வடிவில் பதிய வேண்டும் கவிதையையும். இங்கே அல்ல அறிவிப்பில் கவிதை சமர்ப்பிக்க என்ற பட்டன் நாளை ஓபன் ஆகும். அதை க்ளிக் செய்து பதியனும். வாழ்த்துகள்

  •  ஆர்.பூமாதேவி ஆர்.பூமாதேவி Avatar
    ஆர்.பூமாதேவி ஆர்.பூமாதேவி - 3 years ago
    கை கழுவிய காலம்....உண்மை தான்.

  • meiyan  nadaraj  Avatar
    meiyan nadaraj - 3 years ago
    காலத்திற்கேற்ற தலைப்புக்குக் கவிதை எழுத கைகழுவி அமர்ந்துவிட்டேன். கொரோனா காலத்திலும் போட்டி நடத்தும் படைப்புக்கு பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்

  • க.தங்கபாபு Avatar
    க.தங்கபாபு - 3 years ago
    #கைகழுவிய_காலம்! தலைப்பே... கவிதையெழுத வார்த்தை நிரம்பிய சொற்களுக்குள் கை நனைக்க வைத்து விடுகிறது! தொடர்ந்து படைப்பாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் உச்சி முகரும் #படைப்பு குழுமத்திற்கு... மனமார்ந்த பாராட்டுகள்! பேரன்புடன்.. #க_தங்கபாபு

  • ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா Avatar
    ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 3 years ago
    மிக சிறப்பு, போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இனிய வாழ்த்துகள்.

  • Nagalakshmi N Avatar
    Nagalakshmi N - 3 years ago
    சிறப்பு 👌 இனிய வாய்ப்பிற்கு நன்றி

  • ப.தாணப்பன் Avatar
    ப.தாணப்பன் - 3 years ago
    சிறப்பு. கவிக்கோவிற்கு செய்யும் கவிதாஞ்சலி

  • Rohith Sai Ram Avatar
    Rohith Sai Ram - 3 years ago
    போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிப்போம் தோழமைகளே!