logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்புக் குழும கவிச்சுடர் விருதினை  கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள சிறு கிராமம் ஒன்றை சேர்ந்த கவிஞர் , உயர்நிலைப் பள்ளி வரையில் தன் படிப்பை நிறைவு செய்தவர். தற்போது திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் ஆடை வடிவமைப்பாளராக பணி செய்து வருகிறார்.

 

இலக்கியங்களின் மீது தீராதப் பற்று கொண்ட கவிஞர்    சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே நண்பர்களுடன் சேர்ந்து "வானவில் கலை சபா" என்று ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் வழியாக  இரண்டு மேடை நாடகங்களை  இயக்கிய அனுபவமும் பெற்றவர்.

 

ஹைக்கூ கவிதைகளின் மீது அளவற்ற ஆர்வம் கொண்ட கவிஞர் இரண்டு முறை காணொளி வாயிலாக ஹைக்கூ கவியரங்கம் தலைமை ஏற்று நடத்தியும். பல்வேறு முகநூல் குழுமங்களின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட ஹைக்கூ போட்டிகளை நடுவராக இருந்து நடத்தியும் இருக்கிறார்.

 

சமீபத்தில் பூவரச பீப்பீயும் இரயில் சிறுவர்களும் என்ற ஹைக்கூ நூல் வெளியிட்டிருக்கும் கவிஞரின் ஹைக்கு கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும்  தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

 அவரது இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளையும் பரிசையும் பெற்றுள்ள கவிஞர் நமது  படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்….

 

ஹைக்கூ கவிதைகளின் முக்கிய அம்சமாகக் கருதப் படும் இயற்கையின் சூழலை அப்படியே கொடுத்து அதன் வழியாகப் பல்வேறு பரிமாணச் சிந்தனைகளை உருவாக்கும் கலை கவிஞருக்கு நன்றாகவே வந்திருக்கிறதுதேன் சீட்டு எனும் பறவை பூவைக் காட்டிலும் எடை மெண்மையானது..  அதன் அமர்வு பூவிற்கோ அதனைத் தாங்கும் காம்பு கொண்ட கிளைக்கோ வலிக்காது என்பதுதான் உண்மைஅதன் எடையால் சாய்ந்த கிளை அச்சிட்டு பறந்ததும் மீண்டும் தன் நிலைக்கே திரும்பி விடுகிறதாம்…. கவலைகளையும் சுமையாக நினைக்க வில்லையென்றால் அப்படித்தான் இல்லையா….

 

தேன் சிட்டு பறந்ததும்

தன் நிலைக்கு திரும்பும்

சாய்ந்த கிளை

 

பாஷோவின் பழையகுளம் என்ற கவிதையை நினைவுப் படுத்தும் ஒரு ஹைக்கூ இது…. இல்லை அதனை வாசித்த தாக்கம் கவிஞருக்குள்  இவ்வரிகளை பிரசவித்திருக்கலாம்தவளையொன்று குளத்தில் குதித்ததும் மீன் குஞ்சுகள் கலைந்து போகின்றன…. சில ஆரவாரங்கள் பெரும் இடரால் கலைவது போல் என்றும் கொள்ளலாம்அல்லது ஒரு இடர் வரும் போது முதலில் ஜாக்கிரதை உணர்வு அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்….

 

தவளை குதித்ததும்/

கூட்டத்தைக்கலைக்கும்/

மீன் குஞ்சுகள்/

 

 

கரும் மேகங்களின் இடையில் முகம் காட்டும் குளுமையான சூரியன் பார்ப்பதற்கே அழகாகத் தோன்றும்கவிஞரின் மன நிலையும் அப்படித்தான்பிரச்சனைகள் கலைந்தால் வாழ்வின் வெளிச்சம் சூரியனைப் போல் பிரகாசிக்கத்தானே செய்யும்….

 

கலையும் மேகங்கள்/

ஒளிந்து விளையாடும்/

சூரியன்/

 

 உழைப்பை அலட்சியம் செய்வதில் மனிதனை விட மகா கெட்டவன் யாரும் இருக்க முடியாது. இங்கு எறும்புகள் சிந்திக் கிடக்கும் பருக்கைகளை சேகரித்துதன் உணவு கிடங்கிற்கு எடுத்துச் செல்கின்றனஇதன் வழியாக விவசாயின் உழைப்பிற்கு கிரீடம் வந்து சேர்ந்து கொள்கிறதுஇந்த ஹைக்கூ வழியாக

 

விவசாயிகளின் உழைப்பு/

பெரிதும் மதிக்கப்படுகின்றன/

பருக்கைகளுடன் எறும்புகள் /

 

கவிஞரின் மற்றும் சில ஹைக்கூ கவிதைகள்:

 

வெள்ளையடித்த சுவர்/

பளிச்செனத் தெரியும்/

பறவையின் எச்சம்/

 

****

 

வேலை ஏதுமில்லை/

விவசாயம் செய்கிறார்/

சுடுகாட்டில் வெட்டியான்/

 

**”

 

தாழ்வாரத்து சிட்டுக்குருவிகள்/

தினந்தோறும் பசியை தீர்க்கின்றன/

நியாயம் விலை கடை அரிசி/

 

***

 சமைக்கும் அம்மா/

பசியோடு காத்திருக்கும்/

நாய்க்குட்டி/

***

தொடரும் சாரல் மழை/

பூமியை நோக்கி திரும்பும்/

மரக்கிளைகள்/

***

 

சாலை விரிவாக்கம்/

இன்னும் கொஞ்சம் நிலுவையில்/

வெட்டப்படும் மரங்கள்/

 

***

 

இரவு நேரப்பயணம்/

நேர் எதிர்த் திசையில் வரும்/

முழு நிலா/

***

 

இன்றைய பொழுது/

சில்லா சில்லறைகளுடன் முடிவடைகிறது/

யாசகனின் நகர்வலம்/

***

 

குறைந்து வரும் ஆயுள்/

மனம் தளராமல் நிமிர்ந்து நிற்க்கும்/

கவிஞனின் எழுதுகோல்/

***

அசையாத கடவுள்/

எல்லா திசைகளில் இருந்தும்/

பேராசைகளுடன் வேண்டுதல்கள்/

****

உயரமான மலை/

மெதுவாக நகர்கிறது/

நிழல்/

 

 

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.