வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தாறாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
தமிழில் வீரியமிக்க படைப்புகளைத் தந்த எழுத்தாளர் சி.எம்.முத்துவின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. குல தெய்வங்கள் என்ற பொருண்மையில் ஆதிரன் தன் கட்டுரையைத் தொடர்ந்திருக்கிறார். உலக சினிமா பகுதி இலட்சியத்தின் மீது வெறி கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வைச் சொல்லியிருக்கிற பெண்மையத் திரைப்படம் ஒன்றை அலசியுள்ளது. நம் புலப் பெயல் நீர் கட்டுரை வரிசையில் இவ்இதழில் 'சிலரதன் செவ்வி தலைப்படுவார்' கட்டுரை இடம்பெற்றுள்ளது. கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள் குறித்த மு.முருகேஷ் பகிர்வு இடம்பெற்றுள்ளது. தமிழ் நிலத்து வீரமங்கையரில் வேலு நாச்சியார் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எனத் தகவு நிறைந்திருக்கிறது.
Ratings & Reviews
No Review Found