logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 141 - 160 of 735

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • கந்தையா தில்லை விநாயகலிங்கம்

0   415   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • சுபி

0   440   0  
  • December 2022

மாதாந்திர பரிசு

  • மித்ரன்

0   529   0  
  • December 2022

கவிச்சுடர் விருது

  • ந.சிவநேசன்

0   1071   1  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • எஸ்தர் ராணி

0   448   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • மருதம்.ஷப.கஜலஷ்மி

0   445   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • திப்பு

0   572   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • ஜலீலா முஸம்மில்

0   428   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • யாழினி

0   501   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • ரமணி

0   391   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • மாலதி. திரு

0   712   0  
  • November 2022

மாதாந்திர பரிசு

  • ஸ்ரீதர் K கிரி

0   497   0  
  • November 2022

கவிச்சுடர் விருது

  • துளசி வேந்தன்

0   891   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • ரத்னா

0   415   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • மாலதி வெங்கடேசன்

0   512   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • அரூஸா ஜெவாஹிர்

0   543   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • காட்டுவா ராபி.மு

0   470   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • பவானி ரெகு

0   440   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • பகவதி பெருமாள் பிள்ளை

0   426   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

  • தயானி தாயுமானவன்

0   483   0  
  • October 2022

மாதாந்திர பரிசு

கந்தையா தில்லை விநாயகலிங்கம்

View

கவிச்சுடர் விருது

ந.சிவநேசன்

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறவர் கவிஞர்  ந.சிவநேசன் அவர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள ஆரியபாளையம் என்ற சிற்றூரில் தொடக்கப்பள்ளி  ஆசிரியராக பணி புரிகிறார்.

 

விவசாயத்திலும் கவிதையிலும் ஆர்வம் அதிகம் உள்ள கவிஞர்.  தனது இலக்கியம் மீதான ஆர்வத்தை கி.ரா, மேலாண்மை பொன்னுசாமி, சுஜாதா போன்ற ஆளுமைகளை வாசித்ததன் மூலம் துவங்கியதாகக் கூறுகிறார்.  இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'கானங்களின் மென்சிறை' படைப்பு பதிப்பகம் மூலம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுப்பை 'ஃ வரைகிறது தேனீ' என்ற ஹைக்கூ நூலாகவும் வெளியிட்டுள்ளார். 

 

கடந்த 12 வருடங்களாக கவிதைகள் எழுதி வரும் கவிஞரின் படைப்புகள்  காலச்சுவடு, படைப்பு தகவு, கல்வெட்டு, ஆனந்தவிகடன், புரவி, வாசகசாலை, கணையாழி, தி இந்து நாளிதழ், காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் தொடர்ந்து  வெளியாகி வருகின்றன.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ போட்டியிலும், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியிலும் இவரது ஹைக்கூக்கள் பரிசுக்குரியவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பல்வேறு இதழ்களிலும் போட்டிகளிலும் ஆசிரியரது சிறுகதைகள் தனிக்கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக படைப்பு குழுமம் நடத்திய ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2021ல் இவரது 'காக்காபொன்' சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. அதே போன்று அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021, அமரர் சேசஷாயி நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 மற்றும் மதுரை திருநங்கையர் ஆவண மையம் நடத்திய சிறுகதைப் போட்டி 2021 ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

 

இவரது கவிதைகள்:

 

சில கவிதைகள் பெரும் பாட்டுப் பாடி ஒன்றுமில்லாமல் போகும். சில கவிதைகள் குறுகிய குடிசையின்  வாசலாய் காட்டி ;  பெரும் வனத்தையே  வியக்கும் வார்ப்பினையள்ளிக்  கொடுக்கும்.  இதுவும் அப்படியொரு கவிதைதான். மாட்டின் மணிச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வைக்கோலை அள்ளுகிறாள் குடியானத்தி. ஆனால் அங்கு மாடு இல்லை. கூரையில் அதன் கழுத்துக் கயிறு மட்டும்  மாட்டியிருக்கிறது.  ஒன்று மாடு இறந்திருக்க வேண்டும். அல்லது விற்பனை செய்யப் பட்டிருக்க வேண்டும்அதை வாசிப்பவரின் யூகத்திற்கே விடுகிறார் கவிஞர். இப்போது மாடு என்பது மாட்டைத்தான் குறிக்கிறதா என்பதும் வாசிப்பவரின் மனவோட்டமே நிர்ணயம் செய்யும்….

 

1

மணிச்சத்தம் கேட்டு

ஓடிவந்து வைக்கோலை அள்ளினாள்

காற்றில் ஆடியது

கூரையில் மாட்டியிருந்த கழுத்துக்கயிறு

.

 

ஈன்ற மகவுக்கு தாயாக இருப்பவளை விட பன் மடங்கு மேலானவள் வளர்ப்பு தாய்.  சில வசதி படைத்தவர்கள் அவர்களின் சுகங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், சிலர் அவர்களின் பணிச் சுமைகளின் காரணமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள இயலாமல் வளர்ப்புத் தாதிகளை பணிக்கு அமர்த்துவதும் வழக்கம். பெயருக்குதான் அவள் தாதியே தவிர உண்மையில் அவளும் அக்குழந்தைக்கு ஒரு தாய்தான்.  அக் குழந்தைக்கு அம்மாவாகவே பாசத்தை ஊட்டும் ஒரு தாயின் மன நிலைதான் இக்கவிதை…..

 

2

வளர்ப்புத் தாயாக இருப்பதில் அவளுக்கு யாதொரு வருத்தமுமில்லை

வளர்ப்புத் தாயாக

பணியிலிருப்பது தான் வருத்தம்

 

தன்னை நேசிக்கும் ஒருவரின் வார்த்தைகளே மகிழ்ச்சியின் மன நிலைக்கு கொண்டு செல்லும் காலத்தில் , தன்னைக் கவர்வதற்காகவே   காதலி அனுப்பும் அவளின் வாட்ஸ் அப் புகைப்படங்களால் அவனின்   அழகு கூடுவதில் வியப்பில்லை என்கிறார் கவிஞர்….

 

3

காதலியின் வாட்ஸ்அப் பக்கத்தை

திறந்து

அனுப்பிய செல்பிகளை

எடுத்துப் பார்க்கும்

ஒவ்வொரு முறையும்

அழகு கூடிக்கொண்டே வருகின்றன.

 

அம்மாவின் தோடு என்றும் புதியதாகவே இருக்கிறதாம். அதற்கு காரணம் அது எப்போதும் அடகுக் கடையில் இருப்பதால்தான் என்கிறார் கவிஞர்.  அது ஏன் அங்கு போய் தன்னை புதிதாகவே வைத்துக் கொள்கிறது என்பதைதான் இக் கவிதை சூட்சமமாக சொல்கிறது.

 

4

அதிகநாள் அடகுக்கடை வாசம்

அம்மாவின் தோடு

எப்போதும் புதிதாய்.

 

 

விடுமுறைக்கு விடுமுறை கிராமத்துக்கு  வரும் நாட்களில் எல்லாம்  பாட்டியின் மூக்குத்தி பிரகாசிக்கிறதாம். ஆம். மற்ற நாட்களில் அவள் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளவே விரும்புவதில்லை. காரணம் அவளின் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் மட்டுமே அவளது அழகான உலகமெனும் போது  அவளது அலங்காரமும்  அப்போதுதானே மிளிரும். பாட்டியின் அழகு என்பது மூக்குத்தியில் மட்டும் மிளிர்வதில்லைஅவளின் அன்பு நிறைந்த மெனக்கெடல்களும்தான்.  பாட்டி இறந்த பிறகும், தன் உறவுகளை இன்னமும் தெய்வமாக இருந்து ஒன்று கூடச்செய்து அழகு பார்க்கிறாள் என்று கவிஞர் கூட்டு குடும்பங்களின் நேசத்தை நம்  கண்முன் நிறுத்துவது அழகு

 

5                               

தனிமை பூத்த நிலம்:

 

விடுமுறைக்கு விடுமுறை ஊருக்கு வரும் நாட்களில் மட்டும்

பாட்டியின் மூக்குத்தி அதிகம் பிரகாசிப்பதாகத் தோன்றும்

 

மூன்று மகன்களும்

வரும் நாளில்

தெருமுக்கில் கார் வளையும்போதே

நேராகிவிடும்

கூன் முதுகோடு கம்பீரமும்

 

கோழி நனைக்க சுடுதண்ணி

ஒருபக்கம் காய

குழம்பு செலவுக்கு அம்மியை இழுத்தரைப்பவளின்

கைகளில் அத்தனை தெம்பு

 

பேரன் பெயர்த்திகள் கண்டிராத புதுவகை தீனியெல்லாம்  அடுக்குப் பானையிலிருந்து

நிரம்பி வழிய

நகரத்துப் பண்டங்களை

நாசூக்காக ஒதுக்கிவிடுவாள்

 

பெருமழைக் காலங்களை சமாளித்தது போலவே

வயிறு காய்ந்த நாட்களில் வாரிசுகளை காத்த இரகசியமும் இரவு நேரக் கதைகளாகி

உறங்க வைக்கும்

எல்லோரையும்

 

விடைபெறும் நாளில்

பண்ணையம் பாழாய் போவது பற்றி புலம்பித் தீர்த்தாலும் ஊர் கண் படாமலிருக்க திருஷ்டி

சுற்றி அனுப்புவாள்

 

ஒரு வாரமாய் ஓடியொளிந்த ஒற்றைத் தனிமை மெல்ல எட்டிப் பார்க்க

அடுத்த பண்டிகையை  ஏக்கத்தோடு நினைத்தபடி சாய்வாள் கயிற்றுக்கட்டிலில்

 

இன்று

கிழவி மறைந்து ஆளுக்கொரு நினைவாய் அள்ளிப்போன பிறகும்

சொந்தம் வரும் நாளுக்காக

காரைவீட்டு மூலையில் காத்திருக்கிறது அவள்

ஊன்றி நடந்த கைத்தடி

 

வருடம் ஒருமுறை வந்திருந்து ஞாபகமாய் பொங்கல் வைக்க முடிவானது

வாரிசுகளுக்குள்

 

முன்பிருந்தே சாமிதான் அவள்..

இப்போதுதான் வணங்கத் தொடங்குகிறார்கள்!

 

கவிஞரின் பிற கவிதைகளையும் பார்ப்போம் :

                                      

6

அம்மாவின் சுண்டுவிரல் பிடித்து

கடைக்குப் போகும் போதெல்லாம்

மறுக்க மறுக்க

ஒரு ஆப்பிளை கையில் திணித்து

கன்னம் கிள்ளும் பழக்காரம்மா

இப்போது

கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறாள்

என் தொலைந்துப் போன பால்யத்தை.

 

 

 

7                                   

ஈரத்தின் வனம்:

 

மழை கொட்டிமுடித்த

வனாந்தரத்தின் மேல்

பூவாய் மலர்கிறது வானம்

மௌனத்தின் சாயத்தை

சொட்டவிட்டு தியானிக்கின்றன இலைகள்

அள்ளிமுடித்த இரகசியத்தின் முடிச்சவிழ

சட்டென பரவுகிறது

மேகங்களின் வாசம்

ஊறிய சருகுகளின் தாகத்தை

கசிந்து நிரப்புகிறது

ஈரத்தின் இசை.

 

 

 

8                           

அக்கறை :

நடை எப்போது திறக்குமென

நடந்தபடியே இருந்த

கிழவிக்கு

கடவுளை பார்க்கும் ஆவலை

புறந்தள்ளி

அன்னதானத்தை கேட்டு

முன்நிற்கிறது வயிறு.

உறவுகள் கைவிட்டதில்

உண்ணா நோன்பிருந்தும்

பிரசாதத்தை இலையில்

ஏந்தி நகர்கையில்

சர்க்கரைப் பொங்கலை மட்டும்

மடியில் பத்திரப்படுத்துகிறாள்

பேரனுக்கு

பிடிக்குமென!

 

 

9                        

தானியக் குதிர்:

 

நதி தொலைத்தவன்

கைகளில்

மீன் முட்டைகள்.

 

 

10                    

மின்சாரமில்லா இரவு:

 

இந்த இருட்டைப் பிழிந்து

கண்மை

செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாள்

என் மனைவி

இந்த நிலவை உருக்கி

ஐஸ்கிரீம் ஒன்றை

மூக்கெல்லாம்

ஈசிக் கொண்டிருக்கிறாள்

என் மகள்.

பாட்டி சொல்லிக்

கொண்டிருக்கும்

ராசா கதையை

கேட்டபடியே

கொறிக்கத் தோதாய்

இந்த நட்சத்திரங்கள்

சோளப்பொறிகளாய்

சிதறிக் கிடக்கின்றன

எனக்கோ போதும் போதும்

என்றாகிவிட்டது

இவற்றைப் பிடித்து

இக்கவிதைக்குள்

சிறை வைப்பதற்குள்.

 

 

11                 

பரிசு :

 

ஐஸ்கிரீம் ஒன்றை

நம்பி

உடன் வரும் சிறுமிக்கு

வழிகாட்ட

உங்கள் சுண்டுவிரல்

போதுமானதாய் இருக்கிறது.

ஆயுள் முழுதுமதன்

பால்யத்தின் நினைவுக் கோப்பையில் அந்தக் குளிர்ச்சி

பத்திரமாயும் இருக்கிறது...

பரிசுக்கு பதிலாக

கிடைக்கும்

அக்குழந்தையின் முத்தத்தை

குழந்தையின்

முத்தமாக மட்டும்

நீங்கள் பார்க்கும் வரை.

                       

12

நினைவின் பெண்டுலம்:

 

இறந்துவிட்ட

நண்பனின் முகநூல் பக்கத்தில்

நீண்ட நாள்களுக்குப் பிறகு

அவன் குழந்தையின் புகைப்படம்

பதிவேறியிருக்கிறது

 

சோகத்துக்கும் மகிழ்வுக்கும்

இடையே அலைவுறுகிறது

நினைவின் பெண்டுலம்

 

லைக் பட்டனுக்கும்

அழும் எமோஜிக்கும்

இடையில் விரல் தடுமாறிய

அந்த ஒரு கணம்

அவனுக்கே அவனுக்கானது.

 

 

 

 

13

தப்பிய வாழ்வு:

 

தொங்கும் புழுவின்

அருகில் வந்து

சிக்காமல்

தப்பிய மீனின்

கூடையளவு இன்பம்

காத்திருக்கும் தூண்டில்காரனின்

நதியளவு துக்கம்.

 

 

14

மழைப் பயணம்:

 

பேருந்திலிருந்து

இறங்கிப் போய்விட்டாள்

இரு மழைத்துளிகளை

காதில்

அணிந்தவள்

சன்னலோரக் கம்பியில்

ஆடுகின்றன

ஒரு நூறு ஜிமிக்கிகள்.

 

 

15

எது இலக்கியமெனத்

தொடங்கிய சண்டையிலிருந்து

பேச்சை முறித்துக் கொண்டவள்

புத்தாண்டுக்கு ஸ்மைலி அனுப்பியிருந்தாள்

அது

இலக்கியமாய் இருந்தது.

 

View

மாதாந்திர பரிசு

எஸ்தர் ராணி

View

மாதாந்திர பரிசு

மருதம்.ஷப.கஜலஷ்மி

View

மாதாந்திர பரிசு

ஜலீலா முஸம்மில்

View

மாதாந்திர பரிசு

மாலதி. திரு

View

மாதாந்திர பரிசு

ஸ்ரீதர் K கிரி

View

கவிச்சுடர் விருது

துளசி வேந்தன்

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கவிஞர் துளசி வேந்தன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.

பாஸ்கரன் கண்ணன் என்ற இயற் பெயர் கொண்ட கவிஞர் சிறந்த பட்டிமன்ற மேடைப் பேச்சாளரும் கூட. இவரது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும்.  பள்ளி, கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே முடித்தக் கவிஞர், பொறியியல் படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.

 பள்ளிக் கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளிலும்  பல பரிசுகளை வென்றிருக்கிறார்  , கல்லூரி படித்த  நாளில் தமிழ் தகையாளர் திரு நெல்லைக் கண்ணன் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக பல பட்டிமன்ற  மேடைகளில்  பங்கேற்றதுடன் விஜய் தொலைக்காட்சியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற  நிகழ்விலும் இறுதிவரை போட்டிக் கொடுத்த   போட்டியாளராகவும்  திகழ்ந்தார்.

 9 ம் வகுப்பு படிக்கும் போதே  அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் மானிலத்தின் சிறந்த பேச்சாளர் விருதினையும்  பெற்றுள்ளார். பின்னர் கவிதைகளின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கவிதைகளை எழுதத் தொடங்கிய கவிஞர்,  இன்று தன்னை கவிச்சுடர் பெறும் கவிஞராகவும்  நிலை நிறுத்திக் கொண்டார்.

கவிஞரின் முதல் கவிதை தொகுப்பான படித்துறை பித்தன் என்ற நூல் கலைமாமணி அய்யா எஸ் எஸ் பெருமாள் அவர்களின் அணிந்துரையுடன் நமது படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளிவந்தது. அடுத்து வெளிவரவிருக்கும் கவிதை நூலான பெறுநர் தேவதை வானவில் வீதி 143’ என்ற நூல் கலையியல் அறிவுரைஞர் கலைமாமணி ஜாஹீர் ஹுசைன் அவர்களின் அணிந்துரையுடன் படைப்பு பதிப்பகத்தின்  வெளியீடாகவே வெளி வருகிறது.

கவிஞருக்கு இனிய நல் வாழ்த்துகள்!

 இனி கவிஞரின் கவிதைகள் சிலவற்றை காண்போம்:

.பாவ புண்ணியம் கணக்கு என்பது என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி  இந்த கவிதை பேசுகிறது.  தன்னை வள்ளல் என்று சொல்லிக் கொள்பவன் கூட  அவனக்கான நியாயத் தராசில் பாவத்தின் அழுக்காகத்தான் உட்கார்ந்திருப்பான். ஒரு தர்மம் எப்போது நியாயப் படுத்தப் படும்?  இரக்கத்தின் பால் உதவும் கரங்களைத்தான் கடவுள் உடனே   பற்றிக் கொள்கிறான்! .  பிச்சைக்காரன் என்று யாரையும்  எள்ளலில் நகர்த்தி விட வேண்டாம்அவன் கடவுளாகவும் கூட  இருக்கலாம்

 

செத்த பிறகு

எனக்கானதொரு

நியாய தீர்ப்பு நாளில்,

ஒரு தராசின் முன்னே

நிறுத்தப்படுகிறேன்,

 

 கனக்குமென்

பாவமூட்டையை

முதுகில் தூக்கிவந்து,

ஒரு தராசு தட்டில்

வைக்கிறான் கடவுள்,

 

 எனது பெயர்

பொறித்திருக்குமொரு,

கறுப்புப் பெட்டிக்குள்,

தேடித்துழாவியெடுத்து

என் புண்ணியங்களை

இன்னொரு தட்டில்

அள்ளிக் கொட்டுகிறான்,

 

 அப்போதுதான்

கடவுளின் கைகளில்

கவனிக்கிறேன்,

 

அது,

வழக்கமாய்

பெருமாள் கோவில் வாசலில்,

நான் பிச்சைப் போடுமொரு

யாசகனின் கையிலிருக்கும்

பிச்சைப் பாத்திரம்,

 

 சட்டென்று,

சொர்க வாசல் திறக்கிறது,

 

கண்களை கூசும்,

அந்த ஒளிவெள்ளத்தில்

படியேறும்போது

உற்றுப் பார்க்கிறேன்,

 

அந்த யாசகனின் சாயலில்,

அப்படியே கடவுள்...

 

 

மரணம் என்ன என்பதைப் பற்றி பலரும் பல கோணங்களில் அணுகி இருக்கலாம். ஆனால் கவிஞரோ முடியுள்ள தலைக்கும், மொட்டை தலைக்கும் முடிச்சிட்டு பார்க்கிறார்இதோ கவிதை…. 

 

 

.பற்றியிழுத்து

வசப்படுத்த

மரணத்திற்கொன்றும்,

மயிரிருப்பதில்லை,

 

 அது யார் கைகளிலிலும்

சிக்காத,

இறைவனின் வழுக்கை...

 

 

பகுத்தறிவு சிந்தனைகளில் கவிஞரின் ஒவ்வொரு கவிதைகளுமே மிளிர்கின்றன. சிறிய கவிதைகள் என்று எதையும்  எளிதில் கடந்து விட முடியாது. சிலுவையின்  நிழலில் இளைப்பாறும் ஆட்டுக் குட்டியின் முதுகில் பிரம்படி என்பதில் இருக்கும் படிம யுக்தியாகட்டும், அய்யர் வீட்டு பூசை அறையை பூசி மொழுகினாள் சித்தாள், மாத விடாயின் வலியுடன் என்பதில் தீட்டு என்ற தீண்டாமையைப் பற்றி கேள்வி கேட்பதில் ஆகட்டும்,  ஒவ்வொரு கவிதைகளுமே வெவ்வேறு தளங்களில் பயணித்து வியப்பை தருகின்றனமற்ற கவிதைகளையும் வாசித்து உணருங்கள்….

 

 

 ஆணியில் தொங்கும்

அப்பாவின் சட்டைக்கு,

கொஞ்சம் இயேசுவின் சாயல்...

 

 

 நீராவி எஞ்சினாகிறாள் சிறுமி,

பார்வையற்றவர்கள்

ரயிலாகிறார்கள்...

 

 

.நனைபவர்களுக்காக

பெய்யும் மழையில்,

யார் யாரோ

குடைபிடித்துப்போகிறார்கள்...

 

 

குயிலமர்ந்து பாடிய

மரமாயிருக்கலாம்,

அந்த வீணை...

 

 

சிலுவை நிழலில்

இளைப்பாறும் ஆட்டின்

முதுகு முழுக்க

பிரம்படிகள்.

 

வெறிச்சோடிய ஊரடங்கில்

மெல்லத் தழுவுகிறாள் விலைமகள்

வெறும் வயிற்றை.

 

 

அய்யர் வீட்டு பூசையறை

பூசி மொழுகினாள் சித்தாள்

மாதவிடாய் வலியோடு.

 

 

நூறு கைகளை தூக்கி

ஒற்றைக்  காலில் நிற்கிற

சாமிதானே?,

ஒவ்வொரு மரமும்.

 

 

மழையில் நனையும்

நாய் குட்டியை பார்த்ததும்

வேகம் குறையும்

காரொன்றில்,

ஏறிக் கொள்கிறார்

"கடவுள்"...

 

 

தூக்கி விட யாருமில்லாமல்

தவிக்குமொரு பாதசாரியின்

பக்கத்திலேயே படுத்துக்கிடக்கிறார்,

சாலை ஓவியமாய் கடவுள்...

 

 

பேயின் பெயரால்

ஆணியடிக்கப்பட்ட மரங்களில்,

பயமில்லாமல் பறவைகள்.

 

 

வரம் தருவதை பிறகு

பார்த்துக்கொள்ளலாம்,

முதலில்

வனம் தரட்டும் கடவுள்,

"கோவில் யானைக்கு"...

 

 

இளைத்தால் அழகு

பெருத்தால் பேரழகு,

"நிலா"...

 

 

ஒரு அடைகாக்கும் சிறகிடம்

தோற்று ஓடிய

அடைமழைத்தானே நீ...!

 

 

இரண்டாவதுதான்

இயேசுவின் மரணம்,

முதலிலொரு மரம்...

 

 

தொலைந்த சூரியனை

இந்நேரம் மீட்டெடுத்திருக்கும்

இன்னொரு தேசம்...

 

 

தாராளமாய்

மண்டியிட்டு

யாசகம் கேட்கலாம்,

நி"தானத்தை"...

 

 

ஒரே நேரத்தில்

இரண்டு உளிகளில்

செதுக்குகிறது,

"மரங்கொத்தி அலகு"...

 

 

மீட்டெடுத்த கோயில் நிலத்தில்,

காட்டைப் பற்றி கனா காண்கிறது

"கோயில் யானை"...

 

 

கடவுளின் பெயரை

முணுமுணுத்துக்கொண்டே,

பிரம்பின் முன்

கைநீட்டுகிறது குழந்தை,

இப்போது

அடிவாங்குகிறார்,

"கடவுள்".

 

 

கையில் காசில்லாமல்

மருந்துக் கடை வாசலில்

நிற்கிறார் கடவுள்,

பார்க்கப் பரிதாபமாயிருந்தது,

அருகில் சென்று

என்ன வேண்டுமென்று

விசாரித்தேன்,

ஒரு வலிநிவாரணி மருந்து

வாங்க வேண்டுமென்று

சொன்னார்,

சரி நான் வாங்கித்தருவதாய் சொல்லி,

மருந்துச்சீட்டை வாங்கி பிரித்தால்

கொட்டையெழுத்தில் எழுதியிருக்கிறது,

"காலம்".

 

 

கருவறைக்குள்தான்

இருக்க வேண்டுமென்று

அவசியமில்லையே,

காற்றோட்டமான

வசந்த மண்டபத்தின்

கற்தூணொன்றில்

மறைந்துகொண்டு,

ஒரு குழந்தையோடு

விளையாடிக்கொண்டிருக்கலாமே

கடவுள்...

 

 

படிக்கத்தெரிந்த பட்டதாரி,

புத்தகத்தோடு

திரிகிறான்,

படிக்கத்தெரியாத பாமரனோ,

புத்தகமாகவே

திரிகிறான்...

 

 

அழிப்பான் வைத்திருக்காத

ஏழைக்குழந்தை,

முடிந்தவரை

பிழையில்லாமல் எழுதுகிறது...

 

 

அம்மாவிற்கு,

படைத்து வைத்த இலையிலிருந்து

குஞ்சுகளுக்கு எடுத்துப்போகிறது

காக்கையொன்று...

 

 

புயல் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல்

கப்பல்களை தயார் செய்கிறார்கள்,

"குழந்தைகள்"...

 

 

நாம் சந்தித்துக்கொண்ட

பூங்காவில்தான்,

வரிசையில் சறுக்கி

விளையாடுகிறார்கள்,

உன் குழந்தையும்,

என் குழந்தையும்...

 

 

அறைக்குள்

வந்துபோயிருக்கிறாள் அம்மா,

கழுத்துவரை

போர்த்தியிருக்கிறது போர்வை...

 

 

தகனம் முடிந்தபின்

நெருப்பு வைக்கிறது

"நினைவுகள்"...

 

 

அம்மாவின் பெயரெழுதிய

வெள்ளி சீர்த்தட்டு,

இப்போது,

அப்பாவின் பெயரெழுதிய

அடகுச் சீட்டாய்...

 

 

ஒரே ஒரு நீலச்சேலைக்கு,

எத்தனை முந்தானைகள்?

"நதிகள்"...

 

 

சம்பள நோட்டில்

காந்தியை விட

அழகாய் சிரிக்கிறான்

கடன்காரன்...

 

 

ஜெருசலேம் நகர வீதிகளில்,

சில்லிடவைக்கும்

சாரல் மழைத்துளிகளூடே,

காலாற

நடந்து கொண்டிருக்கும், 

இயேசுவும்,

பாலஸ்த்தீனத்து, 

பாலைவன மணற்பரப்பொன்றில்,

பேரிச்சம் மரத்தடியில்

அமைதியாய் அமர்ந்திருக்கும், 

நபிகளும்,

அயோத்தி ராமர் கோவில்

வளாகத்துள்,

அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்,

செங்கற்களின் பக்கவாட்டில்

படர்ந்திருக்கும் நிழலில்

பாய் விரித்து படுத்திருக்கும், ரங்கநாதரும்,

ஒரு சேர

அணிந்திருக்கிறார்கள்,

"புல்லட் ப்ரூப் ஜாக்கெட்".

ஜாக்கெட்டின்

பின்புற காலருக்குள்

பொறிக்க பட்டிருக்கிறது,

"MADE IN FEAR"

 

 

தோல்வியை போற்று மனமே

 

 எடிசன்!!! எடிசன்!!!

"சொல்"

உன் வாழ்வின் அற்புத தருணமெது?

"இந்த உலகின் முதல் மின்விளக்கை

நான் ஏற்றிவைத்த நொடிகள்"

 

 அப்படியா?

என்ன பார்த்தாய் அந்த நொடியில்?

 

 "அந்த அறைமுழுக்க, 

பிரசாகமாய் தெரிந்த

என் தோல்விகளை".....

 

 

விளக்கின் எந்த முகமும்,

முகம் சுழிப்பதே இல்லை,

கைம்பெண்

திரித்தத் திரியென்று....

 

 

எதிரே வரும்,

நெடியேறிய, 

சாதி நாற்றம்

தாங்காமல்,

 

 அக்குளுக்குள்,

மறைந்து

கொண்டது,

துண்டு...

 

 

பற்றறுத்து

கரும்போடு

போன பட்டினத்தாரோடு,

ஒருசேர போகிறது,

கரும்பின் சுவை..

 

 

பிரம்படிப் படுகையில்

நினைவு வந்தது

பதில் "காந்தி"யென்று...

 

 

அப்பா வாங்கி வந்த,

அரபு நாட்டு சென்ட்டில்,

நெடியேறும் வியர்வை வாசம்.....

 

 

மனிதப் பிணங்களே,

வெட்டியான் என்றால்

அவ்வளவு ஏளனமா?

அந்த வெந்தாடிக் காரனுக்குப்

பிறகு,

வெட்டியான் கையில்தான்

இருக்கிறது,

எல்லா சாதிக்காரனையும்

அடிக்கிற தடி.....

 

 

கருப்பு மேலேயிருக்கிறது,

வெள்ளை கீழேயிருக்கிறது,

இந்த பியானோ மட்டுமே,

உண்மையை வாசிக்கிறது....

 

 

ஓடி உழைத்து,

வியர்த்து,

வீடு வரும் அப்பாக்களின்

கந்தலலங்காரமும்,

கந்தனலங்காரமே!

 

~ (அவன்) ~

*மார்க்ஸ்!!! மார்க்ஸ்!!!*

*கனன்றெரியும் வயிற்றோடு, 

நானுனக்கு,

எதை பகிர்ந்து கொடுப்பேன்?*,

 

 ~ (மார்க்ஸ்) ~

"கவலை வேண்டாம் தோழரே",

"பசியை பகிர்ந்து கொள்வோம்",

 

 "வாருங்கள்!!!

நானும் பசித்திருக்கிறேன்"...

 

 

கழற்றிய பிறகும் பாரமாய்,

ஹெல்மெட்டில் முட்டி விழுந்த,

தும்பியொன்றின் நினைவு....

 

 

பூமொட்டுடையும்

சப்தத்தில் விழிப்பதுதான்,

"புத்தரின் பழக்கம்"...

 

 

View

மாதாந்திர பரிசு

மாலதி வெங்கடேசன்

View

மாதாந்திர பரிசு

அரூஸா ஜெவாஹிர்

View

மாதாந்திர பரிசு

காட்டுவா ராபி.மு

View

மாதாந்திர பரிசு

பகவதி பெருமாள் பிள்ளை

View

மாதாந்திர பரிசு

தயானி தாயுமானவன்

View

Showing 141 - 160 of 735 ( for page 8 )