logo

சும்மா இருக்கவிடாத காற்று


நூல் பெயர்                :  சும்மா இருக்கவிடாத காற்று  (கவிதைகள்)

ஆசிரியர்                    :  விக்ரமாதித்யன்

 

பதிப்பு                         :  முதற்பதிப்பு - 2024

 

பக்கங்கள்                  :  110

 

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ 150

இருளுக்கும் ஒளிக்கும் இடையில் இயற்கை இருப்பதைப்போல, எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இடையில் எழுத்தாளனின் வாழ்வு இருக்கிறது. இருள் போல இருக்கும் எழுத்தைக் கூட எழுத்தாளன் எழுதிய பின்பு அது இலக்கியமாக ஒளி பெற்று விடுகிறது. அவ்வொளியிலேயே இவ்விலக்கிய உலகம் ஜீவிக்கிறது. உயிர்களின் சிறப்பு மனிதன் என்பதைப் போல இலக்கியங்களின் சிறப்பு கவிதையாகிறது. அக்கவிதைகள் சமூகம் சார்ந்து இருக்கும்பட்சத்தில் அது வாழ்வியலாக வடிவம் பெறுகிறது. அப்படிப்பட்ட வாழ்வியல் கவிதைகளை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதே ‘சும்மா இருக்கவிடாத காற்று’ எனும் நூல்.

 

தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிடும் நான்காவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

அந்தாதி


0   228   0  
March 2024

ஊருங்காலம்


0   340   0  
March 2024

யாயும் ஞாயும்


0   1409   0  
April 2020

நீர்ப்பரணி


0   313   0  
February 2024