படைப்பு ‘தகவு’ மூன்றாம் இதழ் உங்கள் கண்முன் ஒளிவீசி விரிந்திருக்கிறது. எத்தனையோ உள்ளங்களில் நீங்காத இலக்கிய நினைவாக உள்ள சுகன் குறித்த எண்ண அலைகள் இவ்விதழிலும் நனைத்துச் செல்கின்றன. கவிஞர் புவியரசுவின் நேர்காணல் இவ்விதழில் வெளிவந்துள்ளது. ‘கற்றது தமிழ்’ என்னும் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. தன் அகம், சுற்றியிருக்கும் உள்ளங்களின் ஊசலாட்டங்கள், புனைவுலகக் கற்பனைகள் என இலக்கியவாதிகள் களம்கண்ட பல படைப்புகளும் உங்களுக்காய்...
படைப்பு ‘தகவு’ இரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கவிஞர் சல்மா தமிழின் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளி. கவிதைதான் அவரது களம் என்றாலும் மிகச் சிறந்த நாவலாசிரியராகவும் அறியப்படுகிறார். அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம். எல்லோருக்கும் ஒரே முகவரி அமைவதில்லை. மனித முகங்களை.. அவர்தம் முகவரிகளைத் தெளிவாய் முன்னிறுத்தும் மனித முகவரிகள் தொடர் ‘கொப்பையா’ என்னும் மனிதனை இவ்இதழில் அறிமுகப்படுத்துகிறது. மலையாளக் கவிஞர் சுகதகுமாரி ஒரு சமூகப் போராளியும்கூட. அவரது கவிதைகள் குறித்த அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நான் வாசிக்கிறேன் பகுதியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தான் வாசித்த கவிதைத் தொகுதி குறித்து அழகாய் எடுத்துரைக்கிறார். இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
ஊற்றெடுத்து உங்கள்முன் பிரவாகமாய்ப் பொங்கிஓட விழைகிறது படைப்பு தகவு இதழ். வாழ்க்கைக்கு ருசி கூட்டி உணர்வு ஊட்டி அறிவடையச் செய்வதில் இலக்கியத்திற்கு எப்போதும் பெரும்பங்குண்டு. மனத்தில் மலர்ச்சியோ, தளர்ச்சியோ உற்ற தோழமையாய்த் தோள் கொடுத்திடும் இலக்கியம். என் இலக்கியம்…என் மொழி.. என் இனம் என விரியும் வானத்தில்தான் நம்மைக் கண்டடைகிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கும் மின்னிதழ் வடிவத்தில் உங்கள் கருத்துக்கு விருந்தளிக்கத் தொடங்குகிறது ‘படைப்பு தகவு’. தமிழ் எழுத்துலகின் ஆகச்சிறந்த அடையாளங்களுள் ஒருவர் எழுத்தாளர் பொன்னீலன். மார்க்சியச் சிந்தனைகளில் தோய்ந்தவர். எளிய மனிதர்களையும் தனது வலிமையான படைப்புகளால் அறிமுகப்படுத்துபவர். அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிற்றிதழாளர் சுகன் தமிழுலகம் அறியப்பட வேண்டிய ஓர் ஆளுமை. வாழ்நாள் சாதனையாகச் சுகன் இதழை நடத்திக் குறுகிய காலத்திலேயே தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர். வெளிச்சத்தின் முகவரி என்ற பகுதியில் சுகன் குறித்த நினைவுகள் தொடர்ந்து இடம்பெறப்போகின்றன. முதலில் சுகனின் மனைவி தன் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார். ஹைக்கூ குறித்த தொடர், பெண்மொழி, கலகல கருத்து, நூல் விமர்சனம், 2017 இலக்கியத்துளிகள், பயணக்கட்டுரை, கவிஞர்கள் கலந்துரையாடல்.. இன்னும்.. சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
Showing 81 - 83 of 83 ( for page 5 )