logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 701 - 720 of 735

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • ராஜ் சௌந்தர்(றாம் சங்கரி)

0   1137   0  
  • March 2018

மாதாந்திர பரிசு

  • துரை. நந்தகுமார்

0   1176   0  
  • March 2018

மாதாந்திர பரிசு

  • பிரபுசங்கர்.க

0   1143   0  
  • March 2018

மாதாந்திர பரிசு

  • மா. காளிதாஸ்

0   1062   0  
  • March 2018

மாதாந்திர பரிசு

  • மதுரை சிக்கந்தர்

0   901   0  
  • March 2018

மாதாந்திர பரிசு

  • கி.சம்பத்குமார்

0   923   0  
  • March 2018

கவிச்சுடர் விருது

  • தேன்மொழி தாஸ்

0   1857   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • க. மகுடபதி

0   1091   1  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • சக்தி அருளானந்தம்

0   1062   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • நிவேதா சுப்பிரமணியம்

0   1189   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • ரா. ராஜசேகர்

0   963   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • சப்னா செய்ன்

0   1139   0  
  • February 2018

கவிச்சுடர் விருது

  • குறிஞ்சி நாடன்

0   1168   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • மதுசூதன். எஸ்

0   901   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • மலர்

0   886   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • சத்யா

0   893   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • ர மதன் குமார்

0   1216   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • வ முகிலழகி

0   915   0  
  • January 2018

கவிச்சுடர் விருது

  • ஸ்டெல்லா தமிழரசி ர

0   1213   0  
  • December 2017

கவிச்சுடர் விருது

  • கார்த்திக் திலகன்

0   1082   0  
  • November 2017

கவிச்சுடர் விருது

ராஜ் சௌந்தர்(றாம் சங்கரி)

கவிச்சுடர் ராஜ் சௌந்தர்(றாம் சங்கரி)  ஒரு அறிமுகம்
*******************************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி ராஜ் சவுந்தர்(றாம் சங்கரி) மதுரையில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் ராஜ் சவுந்தர். இவர் றாம் சங்கரி என்ற பெயரிலும் ஷெள என்ற பெயரிலும் பலவகையான படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு தந்து சிறப்பித்து உள்ளார் அது மட்டுமல்லாமல் சில இதழ்களில் கூட தொடர்ச்சியாக எழுதுகிறார்.

திரைத்துறையில் உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பல நிலைகளில் பணி புரிந்தாலும் அவரது கனவு இலட்சியம் சுய இயக்கத்தில் படம் எடுப்பதுதான்.. அதுவும் இப்போது நிறைவேறி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல நிலைகளில் விருதும் வாங்கி இருக்கிறார்.

பின் நவினத்தில் கதைகள் எழுதுவதிலும் ராஜ் சவுந்தர் சிறந்து விளங்குகிறார். இந்த ஆண்டில் அவரது திரைப்படம் மட்டுமல்ல, அவரது கவிதை தொகுதியொன்றும், சிறுகதைகளின் தொகுப்பும் நூலாக வர இருக்கிறது என்பதும் கூடுதல் செய்தியாகும்.

கவிச்சுடர் ராஜ் சௌந்தர் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************************

புதுக்கவிதைகளின் அடுத்தக் கட்ட நகர்வே நவீனம் மற்றும் பின் நவீனம் என்ற வடிவங்களாகும். காலத்தின் நகர்விற்கு ஏற்ப கவிதைகளும், தங்களின் அமைப்பின் வடிவங்களை மாற்றி.. தங்களின் இடத்தை உறுதியாகத் தக்க வைத்துக் கொள்கிறது. நவீனம் படிமங்களின் வழியாகவும் உருவகங்களின் வழியாகவும் சில நேரங்களில் நேரடியாகவும் கூட பேசுகிறது. நவீனமும் பின் நவீனமும் எளிதில் புரிந்துவிடுவதில்லை என்பது மிகவும் சரியான குற்றச் சாட்டுதான்.. எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதையின் தன்மைவிட்டும் எளிதில் அகன்றுவிடும் என்பதுதான் கவிதைகளின் வழக்காகும்.

அரூப ஓவியங்களைப் போல்தான் இந்த நவீனக் கவிதைகளும் அமைந்துவிடுகிறது. காண்பவர்களின் பார்க்கும் தன்மைக் கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் அரூப ஓவியங்கள்.. ஓவியனின் பார்வைக்கு ஒன்றாகவும் பார்ப்பவர்களின் பார்வைக்கு ஒன்றாகவும் மாறுபடும். இதே தன்மையை ஒத்ததுதான் நவீனக் கவிதைகளும்

எதையும் எழுதிவிட்டு இதுதான் நவீனம் என்று சொல்லிவிட்டு யாரும் நகரமுடியாது. அதற்கான பயிற்சியும் சிந்தனையும் வெவ்வேறானது. இப்போது, சிலர் அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பதற்காக நவீனத்தை ஒதுக்கிவிட்டுப் போவது புரியாமையையே காட்டும்.

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருது பெறும் றாம்சங்கரி நவீன கவிதைகளை வடிவமைப்பதில் ஒரு சிற்பியாகவே செயல்படுகிறார். சமூகத்தின் பிரச்சனைகளை அவர் சொல்லுகின்றவிதம் அருமையாக இருக்கும்.

ஒரு தந்தை , போன்சாய் போன்ற வளர்ச்சிக் குன்றிய தன் மகளுக்கு ஒரு செவ்வாய் கிழமையில் ஒரு கோழியை பரிசளிக்கிறான்.. அந்தக் கோழி ஞாயிற்று கிழமையே உணவாக சமைக்கப் படுகிறது.... அதை ருசிக்கும் அவள் ஒவ்வொரு கிழமையையும் கடந்து அதை ருசிக்கிறாள்... பிராய்லர் கோழிகளின் இறைச்சி குணத்தால் அவள் வயசுக்கும் வந்துவிடுவதாக கவிதை முடிகிறது...

அதுதான் இந்தக் கவிதை :

போன்சாய் மரம் போலிருக்கும்
தன் சின்னஞ்சிறு மகளுக்கு
அவள் விரும்பி உண்ணும்
பிராய்லர் கோழியையே
உயிருடன் பரிசளித்தான்.
ஒரு செவ்வாய் கிழமையில்..

பார்த்ததும் பிடித்துப்போன
அதன் மார்பை தான்
ஞாயிற்றுக் கிழமைக் காலையில்
ருசித்துத் தின்றாள்.

புதன்கிழமையெங்கும்
கேவிக் கொண்டிருந்த
அதன் தொண்டைப் பகுதியை
ஞாயிறு மதியத்திலும்

வியாழக்கிழையை
மருண்டபடி உருட்டிக் கொண்டிருந்த
அதன் கண்களை
ஞாயிறு மாலையிலும்

வெள்ளிக்கிழமையோடு
கட்டிப்பட்டிருந்த அதன் கால்களை
ஞாயிறு இரவிலும் தின்று தீர்த்தவள்

சனிக்கிழமை முழுவதும்
வாஞ்சையோடு தடவிக் கொடுத்த
அதன் சிவந்தக் கொண்டைய
ஞாயிறு நள்ளிரவில் விழுங்க
அது தொண்டை, மார்பு
அடிவயிறு கடந்து
கால்கள் வழி
செங்கதிர்களாய்
திங்கட்கிழமை அதிகாலையில் வழிகிறது..

பெரிய பெரிய
ஈமூக் கோழி பற்றிய கனவிலிருந்து
விழிக்கா வீட்டின் கதவுகளைத் தட்டி
தன் மகள் பெரிய பெண்ணாகிவிட்டாளென
தகப்பன்காரன் கூறிச் செல்ல,
ஒவ்வொரு வீடும்
நாட்டுக்கோழி முட்டை பற்றி
பெருங்கனவில் மூடிக்கொள்கிறது..

கேரளாவில் உணவை திருடியதற்காக அடித்துக் கொல்லப் பட்ட ஒரு ஏழையின் வலியை, பசியின் கொடுமையை இந்தக் கவிதையில் பதிவு செய்கிறார்...

கடும்பசியில் தான்
தற்கொலை முடிவெடுத்திருந்தேன்.
பூச்சிமருந்து குடித்தா,
தூக்கில் தொங்கியா,
தண்டவாளத்தில் தலை வைத்துச் சாவதாவென
பெருங்குழப்பத்தில்
திளைத்துக் கொண்டிருந்த எனக்கு
உங்களிடமிருந்து
பசிக்குக் கொஞ்சம் சோறு
திருடித் தின்றாலே
ஆதியிலிருந்து
இம்மரணம் நிச்சயமானதாய் உள்ளது.
இப்பொழுதும் கூட
இதையே பரிசளிப்பீரென
மிகவும் நம்புகிறேன். எப்பொழுதுமே.

வாழ்விடத்தை இழந்த ஒரு பறவையின் வலியில் இந்தக் கவிதை நகர்கிறது... அவன் இறந்த பிறகும் சுழலும் கண்களை அதன் உடைந்த முட்டைகளோடு ஒப்பிடும் கவிஞனின் பார்வை வித்தியாசமானது....

எப்பொழுதும்,
அவனையே சுற்றி வரும் பறவையொன்று
தன் கூரிய அலகால்
அவன் கட்டைக்காலில் முத்தங்களிடும்.
அக்கட்டைக்கால் வடிக்கப்பட்ட
மரத்தில் தான்
பிறந்து வளர்ந்திருந்தது இப்பறவை.
எப்பொழுதும்
பறவையை விரட்டியவாறே இருந்தவன்
அமைதியாய் இறந்து கிடக்கிறான்.
எத்தடையுமன்றி
அவனது கட்டைக் காலினைக்
கொத்தியபடி உள்நுழையும் பறவை,
அவன் இதயத்தை அடைகையில்..
திடுக்கிட்டு இமைகள் திறந்து,
இறத்தவனின் கண்கள்
சுற்றிச் சுழல்கின்றன.
ஒருவேளை,
இவைகள் தான்
மரத்தை வெட்டுகையில்
உடைந்து சிதறிய
இப்பறவையின் முட்டைகளோ?

இயக்குநர் கனவுகளோடு காலத்தையும் கடத்திவிட்டு வாழும் ஒரு சார்பு மனிதர்களின் வலியை அதன் வலியோடுவே வாழும் கவிஞனுக்குத்தான் புரியும்...அவரது வரிகள்..

இயக்குனர்,
ஃப்ரேமுகுள்ள வர்ற
அந்த நாய விரட்டுங்க ..
என்று மைக்கில் கத்தியதும்,
முதல் ஆளாய் ஓடிச் சென்று
நாயோடு மல்லுக்கு நிற்கும்
எழுபத்தி ரெண்டு வயதான
ஆறுமுகத்திடம் கேட்டால்;
தனக்கும் சினிமாவுக்குமான உறவு
ஐம்பது வருடங்களுக்கு மேலானது
என்பார்.
***

ஒரு விறகுவெட்டியின் வலியாக முடியும் இந்தக் கவிதை, அவன் மகளின் முதுகில் வரைந்த ஒரு செடியின் படிமத்தில் தொடங்குகிறது. படிமம் என்பது ஒரு காட்சி. அதில் இடம்பெறும் கூறுகளில் ஒன்று குறியீடு குறியீடாகும்போது, அக்காட்சிக்கு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன. அவ்வாறு படிமத்தை எப்படியெல்லாம் இக்கவிதையில் கையாண்டு இருக்கிறார் என்று பாருங்கள். மரங்களின் வலியை கோடாரியும் பின் நாளில் உணர்வதாக மறைமுக வசனம் நிறைத்த இந்தக் கவிதை மிகவும் சிறப்பானது...

விறகுவெட்டியின் மகளான அச்சிறுமி
தனது முதுகில்
விசித்திரமான சிறு செடியை
பச்சை குத்தியிருந்தாள்.
அதனை வளர்ப்பதற்காவே
தினமும் இருமுறை
குளிப்பதாகக் கூறுபவள்,
ஆடுமாடுகளுக்கு
தன் முதுகை காட்டியதேயில்லை.
முதுகில் இருந்தபடி
மூச்சிவிடும் அச்செடி
தமக்கு சுவையான
இரு கனிகளை தருமென
நம்பிக் கொண்டிருந்தவள்,
வானம் பொய்த்து
காணிகள் வறண்டு
நீரற்று போன நிலையில்
குளிப்பதை முற்றாய் நிறுத்தியிருந்தாள்.
பிறகு , அவளைப் போலவே
வாடத்துவங்கியது அச்செடியும்..
தாக மிகுதியில்
வறண்ட கிணற்றில் குதித்தவளை
பதினைந்து அடைமழை நாட்களில்
தொடர்ந்து பல இடங்களிலும்
தேடிக் கொண்டிருந்த விறகுவெட்டி,
அச்செடியை மட்டுமே கண்டுபிடித்தான்.
கிணற்றின் மேல்,
இருகனிகள் தொங்கும் மரமாய்..
அப்பொழுது அவன் கண்களுள்
முதல் முறையாய் பறந்த
செம்போத்துகள்,
மரத்தின் அடிவயிற்றில்
தன் மகளின்
முதல் குருதி வாசத்தோடு
கபில வண்ண மலர்களாய்
வழிந்த போது தான்
அவன் கோடாரி
அழுதது முதல்முறையாய்..

துருவேறிய சாவியோடு செயலிழந்த மனிதனை இணைக்கும் இந்தக் கவிதை:

என் முன்னே
துருவேறிய சாவியொன்று கிடக்கிறது.
நிதம் காற்றின் கதவுகளைத் திறந்து
மழை, வெயிலின் வீட்டிற்கு
அழையா அதிதியாய்
சென்று வந்த களைப்பில்
பெரும் மௌனத்தை
தம் மீது துருவாய் ஏற்றி
உறங்கிக் கொண்டிருக்கிறது.
இச்சாவியால்
திறக்கப்படா பூட்டும்
பூட்டோடு ஒரு கதவும்
கதவோடு ஒரு வீடும்
வீட்டினுள் என் போல் எவரும் கூட
தம்மை விடுவிக்கும்படி
அலறிக் கொண்டிருக்கலாம்.
ஏதும் செய்ய இயலாதவனாய்
சாவியையே பார்த்தவாறிருக்கிறேன்
இதயம் படபடக்க
வெயில், மழையென
நாட்கள் பலவற்றால்
நானும் துருவேறியபடி.
இப்பொழுது,
என் பின்னிருந்து பார்க்கும் எவரேனும்
என்னைத் துருவேறிய சாவியென்றும்
என் இதயத்துடிப்பைக் கேட்டு
தான் அலறிக்கொண்டிருப்பதாகவும்
தம் கவிதையில்
எழுதிக் கொண்டிருக்கக் கூடும்
துருவேறி, இதயம் துடிதுடிக்க..

நாகரீகத்தின் பலனால் இயற்கையின் நன்மைகளை இழந்த கதையை இந்த வதந்தி கவிதை அழகாக சொல்கிறது வலிகளோடு...

சாம்பல் நிற புற்களை விழுங்கக் காத்திருக்கும்
வறள் புவிக்கு தீரா பெருந்தபனம்
பிணியிலடங்கா வானின் தேமல்கள்
வேண்டி ஏங்கும் கருந்திட்டு
மடிந்த மரங்களின் கடைசி மூச்சுக்காற்று
மறந்த பறவையின் சப்தங்களை
காதுக்குள் நுழையும் இறகு
கசடுகளாய் உமிழ்ந்தவாறிருக்கிறது
குளம் முழுக்க அருந்தி வளர்ந்த
பெருங்கட்டிடத்தின் நூற்றி எட்டாவது தளத்தில்
கழிவறையிலிருந்து சமையலறைக்கு பறக்கும்
காகிதம் பலவண்ணமாய்
பேசா வார்த்தைகளெல்லாம்
மாலையாய் உதிரும் மௌனத்தின் மரணம்
கூற மறந்தவொன்றின் நீட்சி
ஆந்தை பொம்மைக்கு இமை வடிப்பவன்
பகலில் கொல்லப்பட்டான்
என்பதிலிருக்கும் வதந்தி
பகலை கொலை செய்தான் என்பதில் இல்லை..

பட்டிணத்தாரின் ஒருமடமாது ஒருவனுமாகி என்றப் பாடலில் ஒருவன் குழந்தை பருவம் முதல் முதுமை வரைக்குமான நிலைகளை சொல்லியிருப்பார்... அது போன்ற பொருளாக்கம் உள்ள கவிதைதான் இந்தக் கவிதை. இதை றாம் சங்கரி சிறப்பாகவே வடித்திருப்பார். அதுவும் நவீனத்தில்...

1.
முதலில் இலேசாகவும் பின் வேகமாகவும்
அதிர்ந்து வீழ்ந்த மேவாய் முன்னம்பல்லொன்றை
கதிரவனின் கண்கள் நுழையா
தம் உள்ளங்கைக்குள் மறைத்துக் கொண்டவன்
சாணத்தினுள் திணித்து மண்ணிற்க்குள்
புதைக்க மணலை நனைத்துக் குளிர்ந்ததோர்
பெருமழை

2.
இயற்கை நித்தல் நீரூற்றி உணவளிக்க
அடர் செவ் வேர்களோடு
திடமாய் கிளை பரப்பி
நன்னிலத்தில் மழை பலவற்றோடும்
துளிர் விட்டது
முப்பத்தியிரண்டு சிறு வெண் கனிகளோடு
அரைவட்ட மரமொன்று

3.
உணவுத் தொழிற்சாலை பெருங்குழாய் கக்கிய
புகை தின்று உடைந்திட்ட முகிழ்
வடித்த குருதியோடு புணர்ந்த காணி
தெளித்தச் சேற்றினால்
மஞ்சற் பூத்த வெண் கனிகளின் மேல்
இரசாயன பூச்சிக்கொல்லிகளை நற்மணத்தோடு
தேய்த்தெடுத்தும் புகுந்திட்ட வண்டுகள்
பெருங்கடைப் பற்களிரண்டை
மிகு வலியினோடு அதிர்வுற வீழ்த்தியது
துற்நாற்ற நெடி விரவ

4.
கனிகள் யாவும் அடற் மஞ்சளாய்
செம்மையாய், கருநிறம் பூசி
ஒவ்வொன்றாய் உதிர
கடைசிக் கனியும் சிறு சலனமுமன்றி
அவன் முதற் பல் புதைந்த
அதே இளங் காணியின்
கிழடுற்ற மேற்தோலின் பெரும் பிளவினுள்
புகுந்தது கதிரவன் களவு போக
வீட்டுக் கதவுகள், சாளரங்களை அஞ்சி அடைத்து
மக்கள் கூறுமோர் அதே கிரகண நாளில்

5.
மூக்குக் கண்ணாடியை துடைத்து அணிந்தும்
வானை நோக்கிய அவன் பார்வையில்
நீங்கா பழுப்பு நிறம் மட்டுமே எஞ்சி வழிய
துளி மழையாவது கண்ணிற்க்குள்
கண்ணீராய் நுழையுமெனக் காத்திருந்தவன்
ஊன்று கோலொடு நீந்தியபடி
கடந்திட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பயணிக்க
வேண்டித் தோற்கிறான் நினைவலைகளிடத்தே..

கீழே உள்ள கவிதை இருக்கு படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இக்கவிதையை எழுதிய விதம் இதுவரை உலகம் முழுக்க திருநங்கை பற்றி எழுதி இருக்கும் கவிதைகளில் முதன்மையானதொரு இடத்தில் இது எப்போதும் இருக்கும் வண்ணம் வலிமையானது. காரணம் அவர்களின் ஆணிவேரை தொட்டு வலியை வலிமையாக மாற்றி இருப்பார்.

கவிதா என்ற பெயரை
தம் பத்தாம் வகுப்பு
கணக்கு நோட்டின் பின்புறம்
எழுதி வைத்திருந்ததால் தான்
கணக்கு வாத்தியாரிடம் பிடிபட்டு
அடிவாங்கினான், கதிரவன்.
அன்று முதல்
கவிதா என்ற பெண்ணை
கதிரவன் காதலிப்பதாகவே
எங்கள்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
முழுவதிலும் பேசிக்கொண்டனர்.
பிறகு, வீட்டுச் சுவரில் எழுதி வைத்து
வீட்டிலும் மாட்டிக்கொண்டவன்
மரம், செடியென பார்க்கும் யாதிலும்
கவிதாவின் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருந்தான்.
கதிரவனை அழைத்து
கவிதா பற்றி விசாரித்தால்,
அச்சம் மிகுந்த
தம் கண்களை மருண்டவாறு உருட்டி
எதுவும் கூறாமலேயே
அமைதியாய் ஓடிவிடுவான்.
நாங்களும் கவிதா பற்றி
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்
அவனிடம் தொடர்ந்து விசாரிக்க,
அவனும் தொடர்ந்து ஓடியவாறிருந்தான்.
இப்படியாக அவன்
ஊரை விட்டே ஓடிய ஒருநாளில்
யாரென்றே தெரியாத கவிதாவோடு தான்
கதிரவன் ஓடியிருக்கக்கூடுமென
ஊரே நம்பியது.
பல இடங்களில் தேடியும்
கிடைக்காத கதிரவன்
பல வருடங்களுக்குப் பின்
ஊருக்குத் திரும்பியிருந்தான், கவிதாவாக.
இப்பொழுது அந்த கண்கள்
சிறு மிரட்சியும், பயமுமன்றி
சிரித்துக் கொண்டிருந்தது
பேருண்மையின் ஒளி வீசிட.
-----

படைப்பாளி ராஜ் சௌந்தர் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

துரை. நந்தகுமார்

View

மாதாந்திர பரிசு

பிரபுசங்கர்.க

View

மாதாந்திர பரிசு

மா. காளிதாஸ்

View

மாதாந்திர பரிசு

மதுரை சிக்கந்தர்

View

மாதாந்திர பரிசு

கி.சம்பத்குமார்

View

கவிச்சுடர் விருது

தேன்மொழி தாஸ்

கவிச்சுடர் தேன்மொழி தாஸ் ஒரு அறிமுகம்
********************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி தேன்மொழி தாஸ் அவர்களின்
இயற்பெயர் ரோஸ்லின் ஜெயசுதா. மேற்குத்தொடர்ச்சி மலையில் மணலார் என்ற தேயிலைத் தோட்டப் பிரதேசத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் சுப்பையா என்ற மரிய தாஸ்-லீலா மரியதாஸ் . இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்து புகழ்பெற்ற அப்பலோ மருத்துவமனையில் 2001 வரை பணிபுரிந்தார் . இவர் கவிதை, கதை திரைக்கதை , உரையாடல் பாடல்கள் இயற்றுவது என பன்முகத் திறமைகொண்டவராக திகழ்கிறார். 2001 முதல் தான் கால்பதித்த இலக்கியம் மற்றும் திரை துறை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களிலும் அயராது செயலாற்றுகிறார்.

மிகவும் சிறிய வயதிலேயே கவிதைகளை இயற்றுவதில் திறமை கொண்ட இவர் பள்ளி காலங்களில் நாடகங்கள் எழுதி இயக்குவதிலும் நடிப்பதிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார் . எண்ணற்ற கைவினை வேலைப்பாடுகள் மற்றும் ஒவியம் இவரது பொழுதுபோக்கு . பரதம் மற்றும் கர்நாடக சங்கீதமும் முறைப்படி கற்றுத் தேர்ந்தவர் . இசையில் பியானோ மற்றும் கிடார் கற்றுக் கொண்டதோடு மேலும் இசையில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் . ஆயினும் கவிதை மட்டுமே அவரின் ஆன்மாவை மென்மேலும் அசைத்து வலுப்பெற்றது.

1996 முதல் கவிதைகள் அச்சில் சிறுபத்திரிக்கை வழியாக பிரசுரம் ஆகின . மிகுந்த கவனம் பெற்ற இவரது கவிதைகள் முல்லை மற்றும் குறிஞ்சி திணை சார்ந்த கவிதைகளாக கொண்டாடப்பட்டன.
2001ஆம் ஆண்டு இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘இசையில்லாத இலையில்லை’ வெளிவந்தது. அந்த நூல் தேவமகள் அறக்கட்டளை விருது, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு மற்றும் சிற்பி இலக்கிய விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது.

பாரதிராஜாவின் ‘ஈரநிலம்’ படத்திற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்கான விருது 2003ல் இவருக்கு கிடைத்தது.இது இவரின் முதல் திரைப்படம்.இதன்மூலமாக தமிழ் திரைப்பட வரலாற்றில் உரையாடலுக்காக விருது பெற்ற முதல் பெண் என்ற அடையாளமும் இவரை வந்தடைந்தது.ஈரநிலம் படம் மூலமாக பாடலாசிரியராகவும் அறிமுகமானார். இதுவரை நாற்பதுக்கும் மேலான திரையிசைப் பாடல்கள் எழுதியுள்ளார்.

2003ஆம் ஆண்டு இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘அநாதி காலம்’ வெளியானது. 2001ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் சிறுகதைகளும் எழுதியுள்ளார். 2007ல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘ஒளியறியா காட்டுக்குள்’ வெளியானது. மார்ச், 2016ல் இவரது நான்காவது கவிதைத் தொகுப்பாக ‘நிராசைகளின் ஆதித் தாய்’ வெளியிடப்பட்டது.
இதன் பின் களம் விருது மற்றும் நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரெங்கநாதன் நினைவு விருதுகளை பெற்றார் . நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரெங்கநாதன் நினைவு விருது என்பது படைப்பாளரின் அனைத்து புத்தகங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தும்நோக்கத்தில் தரப்படுவதாகும்
காயா இவரது ஐந்தாவது கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு 2017 ல் வெளியாகி பெரும் கவனத்தை ஏற்படுத்தியது

2006இல் இருந்து 2011 வரை கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘தெக்கத்திப் பொண்ணு’ என்ற நெடுந்தொடருக்கு உரையாடல் எழுதினார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ ‘காதலிக்க நேரமில்லை’ என்ற நெடுந்தொடருக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கி.ராஜநாரயணன் எழுதி சுகாசினி மணி ரத்னம் இயக்கிய ‘காய்ச்ச மரம்’ குறும்படத்தில் உதவி இயக்குநரகாவும், உரையாடல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.மேலும் தொடர்து திரைப்பட துறையில் பாடல்கள் மற்றும் திரைக்கதை இயற்றுவதோடு இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

ஆறாம் தொகுப்பு விரைவில் இவ்வாண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இயற்கையை அதன் போக்கில் கண்டு இரசித்துவிட்டு கடந்து போகாமல், அதனுள் நுழைந்து பல கேள்விகளை முன் வைக்கிறார். வாழ்க்கையின் சோகங்களுக்குள் அடிக்கடி நுழைந்து அதனுள்ளும் முடங்கிப் போகிறார். இந்த பண்பே, அவர் பின் நாட்களில் ஒரு மிகச் சிறந்த கவிதைக்காரியாக விளங்கவும், தனிமையை நேசிக்கவும் அவருக்கு கற்று கொடுத்திருக்கிறது எனலாம்.

அவரது கவிதைகளின் படிமங்கள் மற்றும் குறியீடுகளின் அடர்த்தியே அவரை தனித்துவமாக இந்த இலக்கிய உலகில் தரம்பிரித்து காட்டுகிறது. இக்கால நவீனத்துவ கவிதைகளில் இம்மாதிரியான படிமம், குறியீடுகள் மற்றும் தொன்மங்களை வைத்து எழுதும் ஒருசிலரில் முதன்மையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போதும்கூட, அவரிடம் யார் கேட்டாலும் தானொரு பாடலாசிரியர் என்பதைவிட கவிதை எழுதுவதைத்தான் தவமாகக் கருதுவதாக சொல்கிறார். அழகான வடிவங்களில் இவரது கவிதைகளின் வார்த்தைகள் மிளிர்கின்றன. சிலரிடமிருந்து, இவரது கவிதைகள் புரிவதில்லை என்ற புகார்களும் வருவதுண்டு . உண்மையில் இவரது கவிதைகள் படித்தவுடன் புரிந்து கொள்ளும் தன்மையில் இருப்பதில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை படித்த பிறகு அதன் நுட்பத்தில் சொக்கிப் போவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இவரது கவிதைகளின் நடை யாரையும் பின் தொடர்ந்து செல்வதில்லை என்பதும், இவருக்கு மட்டுமே உரித்தான ஞான பயிற்சியாகும். இவரது கவிதைகளில், சிலவற்றை நாம் வாசிக்கும் போது, சங்கக்காலத்திற்குள் நம்மை அறியாமலயே, நாம் சென்றுவிடுவது நிச்சயம். இவரது சில கவிதைகள் சூபித்துவ கவிதைகளையும், ரூமியையும் நினைவு கூறச் செய்யும். இயற்கையை நேசிக்கும் ஆர்வலர் என்பதால் காடும் காடு சார்ந்த இடங்களின் அமைப்பும், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றியெல்லாம் கூட இவரது கவிதைகளின் படிமங்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது.

இவர் கவிதைகளுக்கு செல்வதற்கு முன்பு படிமம் மற்றும் குறியீடுகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

படிமமும் குறியீடும்
****************************

சொல்வளமும் கற்பனைத் திறனும் இலக்கிய உருவாக்கத்தில் புதிய அலகுகளை அளிக்கின் றன. படைப்புகளில் அழகூட்டுவதற்காகப் படைப்பாளர்களின் கற்பனையில் உதிக்கும் இலக்கியக் கருவிகளில் (உத்திகளில்) குறியீடு குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

குறியீடு என்பது ‘சின்னம்’, ‘அடையாளம்’ என்று பொருள்படும். படிமம் என்பது வார்ப்பு, பிரதிமை, உருவத் தோற்றம் என்று பொருள்படும். இரண்டிற்கும் உள்ள தொடர்பு இவ்வர்த்தங்களால் தெளிவாகிறது. படிமம் என்பது ஒரு பரந்த காட்சியமைப்பு. அதில் இடம்பெறும் விலங்குகள், மனிதர்கள், மரங்கள் செடிகொடிகள் போன்ற எந்தக் கூறும் குறியீட்டுப் பொருள் பெறமுடியும். படிமம் என்பது ஒரு காட்சி. அதில் இடம்பெறும் கூறுகளில் ஒன்று குறியீடு குறியீடாகும்போது, அக்காட்சிக்கு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன.

சங்க இலக்கியத்தில் பயின்று வரும் அணிகளும், படிமங்களும் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. ஒரு காட்சியை விளக்க இன்னொன்றினைக் கையாளும்போது குறியீடு உருவாகிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற நான்கும் குறிப்பாகப் பொருளுணர்த்தும் இயல்புடையவை.

சங்க இலக்கியக் காலம் குறியீட்டுக் காலமாக அமைகிறது. இயற்கைப் பொருட்களை, அகப்பொருள் நுட்பங்களை உணர்த்த, குறியீடுகள் பயின்று வருகின்றன. சமயம் தொடர்பான தொன்மக் குறியீடுகள் பக்தி இயக்கக் காலத்தில் இடம் பெற்றன. சித்தர்கள், குறியீடுகளைப் பொதுமைப் படுத்தினர். குறியீடுகளை அடிப்படை யாகக் கொண்டு பிற்காலக் கவிஞர்களும் தமது கவிதைகளை அமைத்துள்ளனர்.

குறியீடும் படிமமும் சங்க இலக்கியத்திலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்க காலச் சமூகம், அது உருவாக்கியுள்ள பொருளின் வரையறை போன்றவை தொடர்பான இன்றைய ஆய்வுகள், சங்ககாலம் பொற்காலம் என்னும் கருத்தினை மறுக்கத் தொடங்கியிருக்கும் நிலையிலும், மொழிநடை, கற்பனை, அணிநயம், செறிவு ஆகியவை நிறைந்த சங்க இலக்கி யத்தின் கவித்துவச் சிறப்பு பற்றிய ஐயத்தினை எங்கும் எழுப்ப இயலவில்லை. இத்தகைய மேம்பாடு நிறைந்த சங்க இலக்கியத் தில் நாம் காணும் உள்ளுறை இறைச்சி என்னும் குறிப்புப் பொருள்கள் அடங்கிய இலக்கியக்கூறுகள், குறியீடு, படிமம் போன்றவற்றின் சிறப்பை உணர்த்துபவையாக உள்ளன.

ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துவது குறியீடு. அது உள்ளுறையாக, நூற்றுக் கணக்கில் சங்கப் பாக்களில் காணப்படுகிறது.

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் (ஐங்.)

என்ற பாட்டில் “பூத்திருக்கும் காஞ்சி மரங்கள் குலப் பெண் களையும் புலால் நாறும் மீன்கள் பரத்தையரையும்” குறிப்பதாகக் குறியீடு அமைகிறது. இதுபோல் செடி கொடி மரம் பறவை விலங்கு இவற்றின் செயல்பாடுகள் வழியே மக்களின் வாழ்வைக் குறியீடுகளால் விளக்கும் இலக்கிய உத்திகளைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

சங்க இலக்கியத்தின் குலமரபுச் செய்திகளும், நிலவழிப் பிரிவுகளான முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஆகியவையும் குறியீடுகளே ஆகும்.
படிமம் விரிவான காட்சியைத் தோற்றுவிக்கும் தன்மையுடையது. சங்க இலக்கியத்தில் வேங்கைப் பூக்களின் மலர்ச்சி, யானை, புலி இவற்றின் பகை, பொய்கூறும் தலைவன் நாட்டின் அருவி என்ற பல்வேறு படிமங்களின் வழியே தலைவன் தலைவி காதல் வாழ்வு விளக்கப்படுகிறது.

கானமுயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்.772)

கானமுயலெய்த அம்பு, யானை எய்து பிழைத்த வேல் இரண்டுமே இங்கு குறியீடுகள்.

பிறிதுமொழிதல் அணி அமைந்த குறட்பாக்களில் உருவகங்கள், குறியீடுகள் சிறப்புற அமைகின்றன என்று பொதுவாகச் சொல்ல இயலும்.

சங்ககாலத்திலும், சித்தர் காலத்திலும், இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் இலக்கிய உத்தியாகப் பயன்படுகிறது என்றும், வெறும் இலக்கிய உத்தியாக மட்டுமல்லாமல், அது புதுக்கவிதையின் சிறப்புப் பண்பாகவே மாறிவிட்டது என்றும் கவிஞர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.

எருமைவெளியனார் மகன் கடலனார் எழுதிய பாட்டில் படிமமும் காணக்கிடக்கிறது.

ஈருயிர்ப் பிணவின் வயவுபசி களைஇய
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் (அகம்.373: 12-15)

இப்பகுதியில் புலியின் அன்பு வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தனது பெண்புலியின் பசியைக் களைவதற்காக யானையைக் கொன்று வந்த ஆண்புலி, அதனைப் பாம்பு உமிழ்ந்த மணியின் வெளிச்சத்தில் இழுத்துச் செல்கிறது.

தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் சென்ற வழியின் கொடுமையை நினைத்தும், அவன் திரும்பி வந்து தன்னை மணமுடிக்காத நிலை குறித்தும் தலைவி வருந்துகிறாள். அவள் தனது தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாட்டின் இரு படிமக் காட்சிகளும் ஒன்றிற்கொன்று முர ணானவை. முதல் காட்சியில் தனது பசியைத் தீர்த்துக் கொள் வதற்காக மின்னி இடிக்கும் வானத்தையும் பொருட்படுத்தாமல் புற்றுக்குள் கைவிட்டு ஈயற் சோற்றை உண்ண விரும்பும் கரடியின் சித்திரத்தைக் காண்கிறோம். அதற்கு எதிரான இன்னொரு காட்சியில் தனது மனைவியாகிய புலியின் துயர் தீர்க்கச் சிறுவெளிச்சத்திலும் தான் கொன்ற யானையை இழுத்துச் செல்லும் ஆண் புலியின் செயலைக் காண்கிறோம்.

இங்கு தலைவி அமைக்க விரும்பும் இல்லறக்காட்சியின் குறியீடாக இரண்டாவது செயற் படிமம் இடம்பெறுகிறது. எப்படி அந்த ஆண்புலி தனது பெண்புலிக்காக யானையைக் கொன்று நள்ளிரவிலும் இழுத்துவர முற்படுகிறதோ அப்படித் தனக்காகத் தன் கணவன் வாழும் இல்லற வாழ்வைத் தலைவி நாடுகிறாள் என்பது குறியீட்டுச் செய்தியாக அமைகிறது.

ஆனால் முதற்காட்சியோ தனது இன்பத்தை மட்டுமே கருதித் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள முனையும் கரடியைக் காட்டுகிறது. அவ்வாறே தலைவனும் இப்போது செயற்படுவதாகத் தலைவி நினைக்கிறாள். அதனால் அவள் வருந்துகிறாள். ஆனால் எவர் மீதும் தவறில்லை என்றும் தோழியிடம் துன்பத்தோடு உரைக் கிறாள். ஆகவே இப்பாடலில் படிமங்கள் குறியீடுகளாகச் செயற் பட்டு இப்போது காணும் வாழ்க்கை நிலைக்கும் தான் கற்பனை செய்துள்ள வாழ்க்கை நிலைக்குமான முரணை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன என்பதைக் காணமுடிகிறது.

இங்கு குறியீடாக அமைபவை இரு படிமக் காட்சிகள். படிமத்திற்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பினை இப்பாடல் நன்கு விளக்குவதாக அமைந்துள்ள்து.
முதற் படிமக் காட்சியில் கரடி தலைவனைக் குறிக்கிறது என்றும், அது புற்றாஞ் சோற்றை உண்பது தலைவியின் நலனைத் துய்ப்பது என்றும் கொள்ள இயலும்.

இரண்டாவது காட்சியிலும் ஆண் புலி தலைவனைக் குறிக்கிறது, பெண் புலி தலைவியைக் குறிக்கிறது. ஆனால் இக்காட்சி இல்லற அன்பு வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது.

படிமங்கள் பல, குறியீடுகளாக ஆக்கம் பெறும் தன்மையுடையவை. ஆனால் குறியீடுகள் அனைத்தும் படிமங்கள் ஆகமாட்டா என்பதை மட்டும் நினைவில் வைக்க வேண்டும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து இப்போது கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் கவிதைகளை கொஞ்சம் பார்ப்போம். அதில் அவர் எவ்வாறெல்லாம் படிமங்களையும் குறியீடுகளையும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

இப்போது கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் படைப்புகளை அலசலாம்:
***********************************************************************************************************

எனது அணைப்பின் கதகதப்பை
நிலவினாலும் தரவியலாது என
உணரும் நாளில் நீ
வானத்தை
நம் காதல் கடிதமென மடிப்பாய்...

- காதலன், தன் காதலியின் பிரிவை உணரும் தருணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை இந்த வரிகள் மூலமாக அழகாக சொல்லிவிடுகிறார்.

கனவுகளின் நீட்சியாகவே இவரது கவிதைகள் விரிவதை நாம் காணமுடிகிறது. இவரது நிராசைகளின் ஆதித்தாய் மிகவும் பலரால் பேசப்பட்ட கவிதை தொகுப்பாகும். தனது கவிதைகளின் கதாபாத்திரங்களான சூசன்,ஜெசி, சூனு இவர்கள் மூலமாக கவிதைகளின் வழியே தான் சொல்லவந்ததை சொல்வது, இவருக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.

தர்கம் செய்யும் கவிதைகளை இவரிடம் காணமுடிந்தாலும், துயரங்களை பேசும் கவிதைகளைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

வீட்டு கதவை தட்டிய விரல்கள்
என் இளமையோடு உதிர்ந்து விட்டன
வெகுதூரம் வந்து விட்டேன்
அறிவு தெளிவு நிதானம்
மிக நீண்டதொரு மௌனம்
எல்லாவற்றையும் ஒரு மரத்தனடியில்
இறந்த என் நாய்குட்டியைப் போல் புதைக்கிறேன்
இப்போது உங்களுக்கு புரியக்கூடும்
என் மனது தவிர மற்றவை மரித்துப் போனது...

- தன் நாய்குட்டி இறந்த சோகத்தை, அதை புதைத்த இடத்திலேயே உதிர்ந்துபோன இளமையோடு எல்லாவற்றையும் புதைத்துவிட்டு, வெற்று மனதோடு வாழும் ஓர் உயிராக, தன் ஆற்றாமையை இந்த கவிதையில் கொட்டுகிறார்.

பிரார்த்தனைகளுக்காக தேவாலயங்களில் ஏற்றப்படும் மெழுகு வர்த்திகளின் வெளிச்சம், நம் கவிஞரின் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறது.. ஒரு சூபிக் கவிஞரின் பார்வையோடு, அவை நம்மிடம் செய்தியை பகிர்கின்றது

மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினைவிட
குரல்களே அதிகம் கேட்கின்றன...

- பிரார்த்தனை மெழுகுவர்த்திகள் ஒளியை மட்டுமா நமக்கு தருகிறது? என்ற கேள்வியை நாசுக்காக வைக்கிறார்.

கவிஞரின் சங்கீதம் 151 என்ற கவிதையின் சில வரிகள் இப்படிப்பட்ட அசத்தல்களை கொண்டதாகவே இருக்கின்றன

நாம் எப்போதோ இறந்து விட்டோம்
இங்கிருப்பது குரல்கள் தான் என்று நம்புங்கள்
ஆதலால்
வார்த்தைகளில் வார்த்தைகளுக்காக வாழுங்கள்
நமது மூதாதையர்களும் நம்முள்ளே
சொற்களின் உடல்களால் உறைந்திருக்கிறார்கள்

பூக்கள் தனது வாசனையை தண்டுகளில்
நிலைநிறுத்துவதில்லை
தனக்குள்ளேயே அதனை தவிக்கவிடும்
அகம் தவிப்புடையது
அவையாவும் வீரியமிக்க கருவாகும்

நித்தியத்தின் ஒரு தும்பு நம் தொப்புள் கொடி
மறுமுனையை கண்டறிபவன் யார்

- வரிகளின் கூர்மை கவிதைகளை அழகு செய்து விடுகிறது. வர்ணிப்புகள் மட்டுமே கவிதையாகுமா என்றால் நிச்சயம் கிடையாது.. ஒரு கவிதை தான் சொல்லவந்ததை தைரியமாக சொல்லவேண்டும்.

இவரது அழகான கவிதைகளில் ஒன்று அகநீர்வாழ் பறவை தனிமை மனதுடன் வாழும் ஒருவரையே அகநீர்வாழ் பறவை என்று சொல்கிறார். இந்த கவிதையில் விடாமல் பெய்யும் மழையை ஊன்றி பெய்வதாக சொல்கிறார். அழுத்தமாக பெய்யும் மழை, பூமிக்கு ஆதாரமான மழை இப்படியெல்லாம் விளங்கவைக்கிறது அந்த வார்த்தை, மழையின் காரணமாக பெருக்கெடுத்தோடும் மழை வெள்ளத்தை தனக்கே உரித்தான பாணியில் கார்காலத்தின் உரிமை இடித்துக் கொண்டு ஓடுகிறது என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துகிறார். எவ்வளவு நுட்பான சொல் !
இந்த கவிதையை உள்ளார்ந்து படித்தால் மழை ,இரவு என்பன எல்லாமே படிமங்களாக மாறி மனதோடு தனியாக வாழ்பவனை பற்றியும் சொல்லும். இதுதான் அந்த கவிதை :

மழை ஊன்றிப் பெய்துகொண்டிருக்கிறது
கருங்காணப் பயறுகளாய் பெயர்ந்து
இன்றேனும் உதிர்ந்து விடாதா இரவு
கார்காலத்தின் உரிமை இடித்துக் கொண்டு ஓடுகிறது
எதனைக் கற்பிக்க இந்நேரம் சாமக்கோடாங்கி அலைகிறான்
கருத்தாளி அவன் காலடி கரும்பொன்
நினைவு சிதறுமிடமெல்லாம் பேசும் தவளைகள்
கலகிகள்
ஒரு மாத்திரை அளவு
எதையோ திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது மனம்
எல்லையின்மையில் ஒரு பொட்டு வைக்கிறேன்
அழுந்துதல் எத்தகைய இன்னிசை
உலர்ந்த பூ சாம்பலாய்ப் புரள்கிறது
கிச்சிலி வாசனை சாளரத்தை தட்டுகிறது
அது எனக்கு தேனீர் தர விரும்புகிறது
மேலிமையில் திரளும் ஒளித் தண்ணீர்
அகநீர்வாழ் பறவை

காணும் காட்சிகளில் பரவசம் காண்பவனே கவிஞனாகிறான். நிலவு, நட்சத்திரம், கடல் இப்படியே கவிஞர்களிடம் சிக்கிக் கொண்ட இரசனைகளின் இடையே இவர் செடிகளில், நீர் நிலைகளில் காணப்படும் மேன்டிஸ் என்கிற ஒருவகை குச்சிபூச்சியின் அழகில் சொக்கி போகிறார். அது தன் கால்களை அடிக்கடி உயர்த்தி அசைப்பதும், தலையை திருப்புவதும் ஒரு நடனமாகவே அவருக்கு தெரிகிறது. இதனை தனது மேன்டிஸ் நடனம் என்ற கவிதையில்

மேன்டிஸ் பூச்சிகளின் நடனம் காண்கையில்
எல்லா உயிர்களின் விரல்களிலும்
இசையின் மனதே நிறைந்திருக்கின்றன
என்று உணர்கிறேன்
இச்சிறு உயிர்கள் புணரும் உடல்மொழியில்
பல எழுத்துருக்கள் வெளியில் மிதப்பதையும் விழித்தாளில் குறித்து கொள்கிறேன்... என்று குறிப்பிடுகிறார்.

- காதலனின் நினைவை தக்க வைத்துக்கொள்ள காதலி ஏற்படுத்திக் கொள்ளும் முன்னெடுப்புகளை அழகாக சொல்லும் பல நாள் முத்தங்கள் என்ற கவிதை நம்மை சங்க காலத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறது..

இதுதான் அந்த கவிதை:

மடியில் மணிமான் கதிராய் படுத்துக்கொள்
வெள்ளைப்போள வாசனைக் கைகளை உன் மார்போடு சேர்த்துக்கொள்
சொல்மாலைகள் களைவோம்
பத்ராட்ச மரப்பூக்களாய் நமது முத்தங்கள் பூக்கட்டும்
காற்றின் உப்பை கனியச் செய்து தருவேன்
மகாமாயம் தேசத்தில் உலவிச் செல்வதை நீயறிவாய்
பூக்குஞ்சுகள் நமது தலையணை அடியில்
புலம்புகின்றன
விபரீத காலங்களை நான் விரும்பவில்லை
ஆயினும் அணைத்துக்கொள்
காட்டு முந்திரிக்கொடிகளாய் படர்ந்துவிடுகிறேன்
மார்க்குழி மத்தியில் உனது உதடுகளை
சொல்லோடு பதியமிடு
வாஞ்சை உறிஞ்சிக்கொள்ளும்
அகத்தின் ஊற்றில் ஆலங்கட்டிகளாய் உனது வார்த்தைகள் பயணிக்கும் பாதையில்
ஒரு சமக்குறி இடு சிற்றோடையாகட்டும்
கண்ணாடிச் சதை மனம்
இன்று அதை வீட்டு முற்றத்தில் குமரிச்செடியின் அகத்தில் வைத்தேன்
நீ விலகியிருக்கும் காலங்களில் இப்படித்தான் பொழுதுகளை மறைக்கிறேன்
சீந்தில் கொடியின் சிவப்புக் கனிக்கொத்தில்
பலநாள் முத்தங்கள் உதிர்ந்தன
சுபலாலிகள் மாராப்பில் மயங்கின
நீடுவாழ்தல் என்பது காத்திருப்பு
மடியில் மணிமான் கதிராய் படுத்துக்கொள்

- தேனை சுவைத்தவர்கள் அதன் ருசியை மட்டுமே சிந்தித்திருப்பார்கள்...அதனை எடுக்க மலைவாசிகள் எவ்வாறெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பற்றி தெளிவாக சொல்லும் ஒரு கவிதை இதுவாக மட்டுமே இருக்க முடியும்.. இவரும் மலைவாழ் மகள் என்பதால் இவருக்கு இது சாத்தியமாகிப் போனதோ என்று வியக்கத் தோன்றுகிறது...

நீங்களும் இரசியுங்கள்;

தேன் வேட்டை

சருகுகளின் சந்நிதியில்
இலையுதிர் காலத்து அதிகாலை உதிரும்
மனதின் வெடிப்புகளுக்கு
சந்துபூசுதல் எனும் ஆராதனை
தாயின் மடியில் நிறைவேறும்
உலகநடை என்பது மலைஊற்றில் முதல் பாதம்
ஒத்தயடிப்பாதையில் பொன்வண்டின் மூக்கு மனிதனின் பாதத்தை நுகர்ந்து ஆலோசிக்கும்
மேலும் அது பாடிச்செல்லும்
மனிதனின் கண்கள் பாயும் தட்டு
பார்வை தான் பூஞ்சிறகு என்று
தனிமையின் கீர்த்தனம் வெளியெங்கும் நிறைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்
கண்ணிதழ் கருணை கொண்டது
குளிர்ந்த சொற்களை கேளையாடுகள் மலைவெளியெங்கும் மேய்ந்திருக்கும்
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
இலைக்கறி உண்டு
சந்தனச் சாரலில் அந்நாளைக் குளிக்கச் செய்து
அம்பும் கைவில்லும்
கோடரியும் கவ்வாத்துக் கத்தியும்
தோளில் அடைசுமக்கப் பையும்
உடலெங்கும் கொச்சைக் கயறுகளையும் சுற்றி
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
காட்டுப்பூனைகளை விரட்டி விளையாடி அதன் பேதைகுணம் வாங்கி
மலைவேம்பு பூக்களைத் தலைப்பாகையில் கட்டி
நிலவேம்பு வேர்களை வாயுக்குள் சவைத்தபடி கூட்டுக்காரர்களை வம்பிழுத்து மலையேறி
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
தேனடை தொங்கும் மரத்தடியில்
சருகுகள் குவித்து தீ மூட்டி
அதன் மேல் கூட்டுக்காரர்கள் பச்சைக் கசப்பந்தளைகளால் புகைமூட்ட
தேனடையில் தலைவேட்டை காரன் அம்பெய்வான்
புகைச்சட்டியை இடுப்பில் கட்டி அவன் மரமேற
நாங்கள் வேட்டைக்குப் பாடும் பாடல்
தா.....யே
தா.....யே
தா.....யே
என்றத் தூரக் குரலாகும்
பலநாகம் ஒருசேரச் சீறும் விதமாய்
தேனீக்களின் தவம் கலையும்
மரக்கட்டைகளில் ஈத்தல் குச்சிகளால் இசையெடுக்க
மலைகள் உள்வாங்கி தனது ஈரக்குலையிலிருந்து எதிரொலிக்கும்
தாய்
எனும் சொல் புகையினுள் உருவமாகும்
அந்நேரம்
உயிரின் பற்றுக் கம்பிகள் சுருளும்
தா.....யே தா.....யே தா.....யே என்றபடி
மூங்கில் முனகும் தக் தக் தக்கெனும் ஓசையோடு
தேனடை அறுக்க வேட்டையின் வெற்றியில்
உயிரின் பற்றுக் கம்பிகள் நீளும்
ஈக்கள் கலையக் கலய காடு அசையும்
ஆயினும்
புகையினூடே
நாங்கள் பாடிக் கொள்வோம்

காடே எல்லாவற்றிற்கும் நீதான் குளிகை

- இவரது இரசனைகள் மிகவும் வித்தியாசமானது என்பதற்கு தட்டானின் இரண்டு கண்கள் என்ற கவிதை மிகப்பெரிய சான்றாகும். பளபளக்கும் தட்டானின் கண்களை மட்டுமே படிம மூலமாக வைத்துக் கொண்டு அவர் காணும் காட்சிகள் பரவசமானது...

தட்டானின் கண்கள்

இரண்டு கடல்
இரண்டு பிரபஞ்சம்
இரண்டு பித்தப்பை

கண்ணாடி ஸ்தனங்கள்
பார்வை கொண்ட கூழாங்கற்கள்
அலையும் ஓவிய ஞானங்கள்

உதிராக் கண்ணீர்
உருளும் ஸ்படிகம்
நீர்நிலைகளின் காம ஒளிகள்

ஞானம் பெருவதற்கு முன்னிருந்த
புத்தனின் ஆன்மா
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்த
தீர்கதரிசிகளின் கனவுகள்
சுத்த சுதந்திரத்தின் மூல மந்திரங்கள்

யாத்ரீகனின் பின் மூளை
ஒளியின் ஜல்லடை
இசையின் இயங்கு தளம்

தவித்துப் பறக்கும் நாளமில்லாச் சுரப்பிகள்
தாவரங்களின் நிலாக்கள்
தட்டாம் பூச்சியின் கண்கள்

தனிமையும் மௌனமும் கூட அவர் கவிதைகளில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது... அதுவே அவருக்கு நேசமாகவும் சில நேரங்களில் மாறிப்போகிறது.அவரது குரல் என்ற இந்த கவிதை மிகவும் நுட்பமானதும் கூட...

குரல்

தனித்திருக்கும் பொழுதுகளில்
என் குரல்
சுவாச அறையைத் தட்டுகிறது

அது
என் காதுகளில் நடக்கையில்
பெயரிடப்படாத உலகமொன்றின்
அந்தி கருகுகிறது

என்னைத் தீட்டிக் குழப்பி
அழவும் ஆறுதலாகவும்
பிரியமாகவும் பேரொலிக்கிறது

அதன் கேள்விகளுக்கு
அனேகமாய்ப் பதலளிக்க முடியாமல்தான்
அவதியுறுகிறேன்

என்னைவிட
என் ஆழ்குரலுக்கு
கவிதை நன்குத் தெரிந்திருக்கிறது

விரல்களற்ற வலியைச் சொல்லி என் விரல்களை எழுதக்கேட்கிறது

என் காதுகளைவிட நாசியைவிட
ஓசைகளை வாசனைகளைத்
துளிகளாய் அள்ளி
துளைச் செவியின் பரணில்
தேக்கி வைத்திருக்கிறது

எனை இருண்டதொரு
தாழ்வாரத்திற்கு அழைத்துப்போய்
பேசிப் பேசி முடிச்சவழிப்பதுபோல்
சிக்கலிட்டு வைக்கிறது

அங்கே நான் கவனிக்காத எதையோ
பதுக்கி வைத்திருப்பதாய்ச் சொல்கிறது

இதோ இப்போது கூட
இங்கேயே வரிகளை விட்டு விட்டு
வரும்படி கூப்பிடுகிறது

 - ஒளியறியாக் காட்டுக்குள்

காதலன் சென்ற வழித்தடத்தில் நின்று கொண்டு அவனது காதலி இவ்வாறும் சிந்திக்க முடியும் என்பதே இந்தக் கவிதை

இந்நேரம் நீ
உன் வீட்டை அடைந்திருப்பாய்
நீ விட்டுச்சென்ற இடத்திலிருந்து
நமக்கான வீட்டின் வரைபடமொன்றை
வரைந்து கொண்டிருக்கிறேன்
நான்

கவிதைகளில் இன்னமும் புதுபுது முயற்சிகளில் இறங்கி பயணிக்கவும் தொடங்கியுள்ளார். இவரது இந்த கவிதைப் பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும் படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது.

படைப்பாளி தேன்மொழி தாஸ் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சக்தி அருளானந்தம்

View

மாதாந்திர பரிசு

நிவேதா சுப்பிரமணியம்

View

மாதாந்திர பரிசு

ரா. ராஜசேகர்

View

மாதாந்திர பரிசு

சப்னா செய்ன்

View

கவிச்சுடர் விருது

குறிஞ்சி நாடன்

கவிச்சுடர் குறிஞ்சி நாடன் ஒரு அறிமுகம்
********************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களின் இயற்பெயர் தியாகராஜன். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்த திருச்சிக் காரர் உதகையில் வளர்ந்தவர் . தற்போது பணி நிமித்தமாக அயல்நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இவர் ஜாதி மத இன பேதங்களை மறந்த வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருபவர். பல கவியரங்குகளிலும் தனது கவித்திறனை காண்பித்துக் கொண்டிருக்கும் இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினரும் கூட. இவரது பல கவிதைகள் பிரபல பத்திரிக்கைகள்/நாளிதழ்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன. வேலைப்பளு காரணமாக இலக்கிய எழுத்துக்களில் கொஞ்சம் ஓய்ந்திருந்த இவர் நமது படைப்புக் குழுமத்தால் ஈர்க்கப் பட்டு மீண்டும் எழுத்துலகுக்கு வந்து தனது படைப்புக்களால் படைப்பு வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து கொண்டிருப்பவர்.

சமூக மிருகம் என்கிற மனித சமுகத்தை இவரது கவிக்கண்கள் பார்க்கும்வெவ்வேறு கோணங்களில் உதயமாகின்றன பல்வேறு கவிதைகள். அந்தப் படைப்புக்களில் ஒரு சிறப்பான படைப்பு :-

ஏ சமூக மிருகமே!
-----------------------

அவசரமாய் நீ
அபிநயம் புரிந்து
அகிலம் வென்றவன்
என்கின்றாய்.
தலைகணம்தான் உன்
முடி அதைச் சூடி
தரணி யாள்கிற
கோவென்றாய்.
நிதர்சன வெளியில்
எடுத்துப் போட்டால்
நெருப்பாய் சுடும் உன்
லாவணிகள்.
கரிசனம் ஏதும்
காட்டியதுண்டா
இயற்கையெலாம் உன்
காலணிகள்.

தங்க முட்டை
வாத்தைக் கொன்று
தரித்திரனாய் பசி
தீர்கின்றாய்.
அங்கம் முழுதும்
பங்கம் வந்தால்
ஆண்டவனை நீ
நோகின்றாய்.
காற்றுதான் உன்
உயிரின் ஊற்று
கசடாய் மாற்றி
இழுக்கின்றாய்.
தண்ணீர் இன்றி
தாகம் தீரேன்
வல்லமையை நான்
ஏற்கின்றேன்.

கூட்டுப் புழுவின்
குட்டி வீட்டை
கல்லறை யாக்கி
பட்டென்றாய்.
கூட்டை உடைத்து
உணவைத் திருடி
சுவைக்கும் மருந்து
தேன் என்றாய்.
மாட்டைக் கறந்து
கன்றை ஏய்த்து
புரதச் சத்து
பாலென்பாய்.
ஏட்டைப் புரட்டு
மரத்தின் பிணத்தில்
எழுதிய சரித்திரம்
நீ நண்பா.

நிலத்தைப் பிரித்து
வேலியமைத்து
எனது உனது
என்கின்றாய்.
குணத்தை நிறத்தை
இனத்தை மதத்தை
வகுத்துச் சிதறிப்
பிரிகின்றாய்.
எல்லைக் கோடு
தொல்லை அதைத்தான்
தேசப் பற்றாய்க்
கொள்கின்றாய்.
உன்னைப் போல்தான்
அவனும் மனிதன்
அவனை நீயேன்
கொல்கின்றாய்?

ஆயிரம் கோடி
உயிர்களின் பூமி
அதிலே நீயும்
ஒரு விலங்கு.
அன்பு அறிவு
ஒழுக்க வாழ்வு
அனைத்திலும் உண்டு
அதை விரும்பு.
செத்தால் நீயும்
மண்ணாய்ப் போவாய்
உடலும் உடன்வர
மறுக்கிறது.
ஆறாம் அறிவை
ஆற்றில் கழுவு
அழுக்காய் கருப்பாய்
இருக்கிறது.


கடவுளின் பெயரால் இச்சமுதாயத்தில் நமக்குள் நாமே பிளவுபட்டுக்கிடக்கும் நிலையை நாம் கண்ணுற்று வருகிறோம். மானுடத்தின் மேன்மைக்காகவும் அமைதி நிறைந்த வாழ்வுக்காகவும் நமக்காக நாமே தோற்றுவித்த வழிமுறைகள்தாம் இந்த மதங்கள். காலத்தாலும் தூரத்தாலும் இம்மதங்களின் வழிபாட்டு முறைகளும் தேவ நாமங்களும் வேறுபட்டுப் போயிருந்தாலும் மனிதனை மென்மையாக வைக்கும் நோக்கத்துடன் மட்டுமே படைக்கப் பட்டவை. அப்படிப் பட்ட மதங்களின் பெயராலேயே இன்று மனிதனின் வாழ்க்கை அமைதியும் நன்மையையும் இழந்த ஒரு போராட்டக் காலமாகிவிட்ட நிலைமையும் காண்கிறோம். படைப்பாளி குறிஞ்சி நாடனின் கடவுளைப் பற்றிய ஒரு கவிதையைக் காணுங்கள் :-

நான்தான் கடவுள் என்று
முறைப்படி
அறிவிக்கவில்லை நான்.
நீங்களாகவே
கண்டுபிடிக்கட்டுமென்று
காத்திருந்தேன்.
நீங்களோ
வேறு எதையோ
கடவுளென்று கூத்தாடி
என்னைப் போட்டுடைத்தீர்கள்.
உங்களைச் சந்திக்காமலேயே செத்த
சாமானியனாகி விட்டேன் நான்!

பள்ளி செல்லும் பால்ய காலத்தில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்க்கையை வாழ்கிறான். அந்தக் களங்கமில்லா வயதில் பள்ளிசெல்லும் மகள் சின்றில்லாவின் வகுப்பறை என்கிற இந்த கவிதையை வாசிக்கும் எவருக்கும் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்கிற வேட்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. வீட்டுப் பாடங்களும் தேர்வுகளும் இல்லாத ஒரு பள்ளிப் பருவம் :-

சின்றில்லாவின் வகுப்பறை
----------------------------------------------------

வீடு திரும்பியதும்
தன் வகுப்பறைக்குள் சென்று
கதவடைத்துக் கொள்கிறாள்
சின்றில்லா!

குட்டி உலகமொன்று
வெளிச்சத்தோடு விரிகிறது!

இல்லாத மூக்குக்கண்ணாடியை சரிசெய்தபடி
விதுலா மிஸ்ஸின் மிடுக்கோடு
பாடம் நடத்தத் தொடங்குகிறாள்!

வகுப்பில்
பூனைக்குட்டியும்
சில தேவதைகளும் படிக்கிறார்கள்!

சுற்றுச்சுவர் நான்கும்
சித்திர எழுத்துக்களால்
நிறைகின்றன!

பதில் சொல்லாத தேவதைக்கு
ஒரு பென்சிலை பரிசளித்து
இது அடுத்தமுறை
நீ சொல்லப்போகும்
சரியான பதிலுக்கு என்கிறாள்.

கணக்கு புரியாத
பூனைக்குட்டியை
செல்லமாய்த் தட்டி
நாளைக்கு
உங்க அம்மாவை கூட்டிவா என்கிறாள்.

தலையில் தானே குட்டிக்கொண்டு
வாய்ப்பாட்டை
மனப்பாடம் செய்யும்
இன்னொரு தேவதையை அழைத்து
தனது இசைக்கேற்ப
ஏழாம் வாய்ப்பாட்டைப் பாடச்சொல்கிறாள்.
இசையாய் பரவுகிறது
ஏழாம் வாய்ப்பாடு!

சூரியமண்டலத்தை
மடியில் பரப்பி
ஆளுக்கு கொஞ்சம்
நட்சத்திரங்களை
அள்ளிக்கொள்ளச் சொல்கிறாள்.

பானிபட்டுப் போரில்
இரத்தவாடை வீசுமென்று
வெள்ளைப் புறாவோன்றின் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.

அழகான ஓவியத்திலிருந்து
வண்ணங்களை அள்ளி
தேவதைகளின் வெள்ளுடைகளில் பூசிவிட்டு
கன்னம் குழிவிழ சிரிக்கிறாள்!

வகுப்பு முடிவுக்கு வருகிறது.
தேர்வு அறிவிப்புக்கு
காதுதீட்டி காத்திருக்கிறார்கள்
தேவதைகள்.

இனி தேர்வுகளே கிடையாதென்று அறிவித்துவிட்டு
குதூகலதத்தை கண்களில் நிரப்பிக்கொண்டு
அறையைத் திறக்கிறாள்
என் சின்றில்லா.

எழுதப் படாத வீட்டுப்பாடங்களை
நான் எப்படி நினைவூட்டுவது?

இறைபக்தியும் வணிக நோக்கத்தை கவசமாக அணிந்து கொள்ளும் அவத்தைக் கண்ணுறும் கவிஞரின் ஒரு கவிதை :-
புதுப்பிப்பு.
------------

கரடு முரடான நிகழ்வுகளை
அலங்கோலமாய் வரைந்து
புரதானம் ஒரு கல்வெட்டைத் தந்தது
வாசிக்கத் தெரியாதவனிடம்.

சிதிலமடைதலின் உன்னதத்தைப்
பதைப்புடன் இழந்த புணரமைப்பில்
ஆதியின் மலர்கள்
பாடம் செய்யப்பட்டன.

ஆன்மாக்கள் சம்மணமிட்டிருந்த
சுண்ணாம்புக் கற்களில்
கான்கிரீட் ஏறுகிறது.

களவுபோயிருந்த கலசம்
தான் பொருந்தியிருந்த இடத்தை
நிரந்தரமாய் இழக்கிறது.

கிழக்கு பார்த்த
ஒரு தூண் சாய்க்கப்படும்போது
அது தாங்கியிருந்த
காலமும் சரிகிறது.

தலைமுறை மசக்கையில்
ஓய்வெடுத்தப் பொந்தினை
புறத்தே பட்சிகள் தேடுகின்றன.

மதில்பற்றி ஊடாடிய வேர்
சுடரில் பசைபோக்கி
சுள்ளியாகிறது.

தன் வீட்டை
யாரோ ஆக்கிரமித்துவிட்டதாய்
அழுதுகொண்டே
வெளியேறுகிறது இறை.

பிறகு

வரிசையில் நிற்கின்றன
அர்ச்சனைத் தட்டுகள்.
பிரமாண்டம் தொனிக்கிறது கோபுரம்,
ஒரு வணிக வளாகத்தைப்போல!


மனிதன் வாழ்வில் செய்வதனைத்தும் ஒரு தேடல்தான். முடிவற்ற அந்தத் தேடல் அவனது வாழ்வு முற்றுப் பெறுகையில் முற்றுப் பெறுமோ ? தோல்விகள் என்று வாழ்க்கையில் பெயரரிடப் படும் எல்லா செயல்களும் மானுட மனத்தின் தேடல்கள் என்கிறார் கவிஞர் ::-

சுழன்று கொண்டிருந்த தட்டிலிருந்து
வடித்துப் பருகிக்கொண்டிருந்தேன் இசையை.

எனது நாயும்
வாலில் அமர்ந்த ஈயைக் கவ்வ
வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இசையைப்பருகும் முகபாவனையொடு.

மின்வெட்டு
இசையின் குரலை
காற்றின் பிளவில் பதுக்க,
நாயைத்துரத்தி
இசையை மீட்கப்புறப்பட்டேன்.

இப்படித்தான்
அன்று
சுடரைத்தேடி
திரியைப் பிரிந்து சென்றேன் .
மௌன இருட்டில் திரும்பியபோது
திரியைத் திண்றுவிட்டிருந்தது விளக்கு.

ஒருமுறை
வானம் அறுந்து விழுந்த போதும்
உடைமாற்றிப்போன ஓடையில்
மேகம் கிடைக்குமென
தூண்டிலிட்டேன்.
வசமாய் மாட்டிக்கொண்டது எனது நிழல்.

இதையெல்லாம்
நீங்கள் தோல்வி என்கிறீர்கள்.
நான் தேடல் என்கிறேன் .

உடைதல் என்பது அழிவா இழப்பா மாற்றமா தோற்றமா ? இந்தப் பிரபஞ்சமும் பூமியும் எல்லாம் ஒரு உடைதலின் விளைவே. உடைதல் என்னும் ஒரு சொல்லுக்கு கவிஞர் சொல்லும் அழகான விளக்கம் பாரீர் ::-

உடைந்தால்
அழுது
உடையாதே.

உடைதல்
இழப்பல்ல
மாற்றம்.

நெபுலா உடைந்து
புவி வந்தது
பனிக்குடம் உடைந்து
நீ வந்தாய்.

எது உடைந்தாலும்
மனம் உடையாதே.
மனம் உடைந்தால்
நீ உடைவாய்.

உடைதல் இழப்பல்ல
மாற்றம்.
அதைக் காண
நீ உடையாதிருக்க வேண்டும்.

உடைந்த குடமொன்றில்
மண் நிரப்பி
செடி நட்டு
பூந்தொட்டி என்று
பெயர் சூட்டுகிறான் பார்
அந்த
நெட்டிக் கிழவன்.

சொர்க்கம் என்பது என்ன? மனிதன் தேடித்திரியும் சொர்க்கத்தை எங்கு காண முடியும் ? ஒரு கிராமத்து மொழி கொஞ்சும் இந்த அழகான கவிதையினை வாசித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்:-
ஓலக் குடில்
-----------------------

ஓலக்குடிலுக்குள்ளே ஒன்னுமே
-- இல்லையினு
சீலக்கருவாச்சி சொன்னதயா
--எண்ணிநின்னே?

காலையில உதிச்சதுமே கதிரரசங்
--கதவுதட்டி
மூல முடுக்கெல்லாம் பரவுறத பாக்கலியா?

ஊருக்கே பொதுவாக ஒத்தமழை
-- பெய்யயில
ஒனக்கும் எனக்கு மட்டும் உள்ளவந்து
-- பெய்யலையா?

மலையேறி வரச்சொல்லி மாநிலமே
-- காத்திருக்க
முழுநெலவு ஓடியாந்து கூரமேல நிக்கலியா!

சனமெல்லாம் மணலள்ளி மச்சிவூடு
--- கட்டுதுக
நதிவத்தி போச்சுதுன்னு அப்புறமா
--- கத்துதுக.
ஒத்தப் புடிகூட ஓடமண்ணு இங்கயில்ல
ஒனக்கும் எனக்குந்தான்டி பாவத்துல
-- பங்குயில்ல!

ஓலக் குடிசக்குள்ள ஒளிச்சுவைக்க
-- ஒன்னுமில்ல
ஒன்னையத் தவர இங்கக் களவாடத்
-- தங்கமில்ல!

ஒனக்குன்னு சேத்துவைக்க ஒத்தணா
-- காசுயில்ல
உசுரகூட. எடுத்துக்க ஒசந்தது பாசம்புள்ளே!

நெத்திலி கொழம்போட நெல்லு சோறாக்கி
பச்சமுத்தம் தந்துகிட்டு பரிமாறி பசியாறி
வெத்தலையில் நீ செவந்து பக்கம்வந்து
-- நிக்கயிலே
ஓலக் குடுசதான் உண்மையில சொர்க்கம்
-- புள்ளே!

மானுடத்தை அறியாமை இருளில் இருந்து வெளிக் கொணர அவ்வப்போது இந்தப் பூவுலகின் வெவ்வேறு மூலைகளில் தோன்றி மறையும் ஞானிகளையும் தெய்வமாக்கி அவர்களின் போதனைகளை வெறும் எடுகளுக்குள் பதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் உலகமிது . கவிஞர் குறிஞ்சி நாடனின் மற்றுமொரு சாடல் கவிதை:-

புத்தனைத் தொலைத்த
போதி பற்றிய குறிப்புகள்.
-----------------------------

# உன்னை மனிதனாக்க நினைத்த.
புத்தனை
நீ கடவுளாக்கினாய்.
மனிதனாக்கும் சூட்சமம்
கல்லானது.

# புத்தன் மறைந்ததாய்ச் சொல்லாதே
நீ மறுத்த உலகத்தில்
இன்னும்
போதித்துக்
கொண்டுதானிருக்கிறான்.

# துறந்தா வாழ்ந்தான் புத்தன்
ஆசையை ஒழிக்கும்
பேராசை அவனுக்கு.

# உனக்கு மரம் யாவும் மரம்தான்
போதியென்றாலும்
சிலுவைகள் செய்து
புத்தனை அறைவாய்.

# அரசு துறந்தான்
ஆசை துறந்தான்
அவன் ஆடை துறந்ததுதான்
பிடித்தது உனக்கு.
நிர்வாணமாய் அலைகிறாய்.

# ஆசைப் படுபவனுக்கும்
ஏக்கப் படுபவனுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
வேறு வழியின்றி
கடவுளானான் புத்தன்.

# அறுக்கப்பட்ட போதிமரத்தின்
அடிக்கட்டையில் அமர்ந்து
மீண்டும்
சித்தார்த்தனாகிக்
கொண்டிருக்கிறான்
புத்தன்.

# ஒரு நாடு முழுவதும்
பௌத்தம்
இனவெறி போதித்தது.
புத்தன்
வெளியேறிவிட்டதை அறியாமல்
தினந்தோறும் மணியடிக்கிறான்
அந்த பிக்கு.

# அமைதி குறித்த
துள்ளிசையின் ஒரு துளி
அவனது மூடிய இமையில் விழுந்து
கன்னத்தில் வழிந்ததும்
தேனீர் கடையை நேக்கி
நடையைக் கட்டுகிறான்
புத்தன்.

படைப்புக் குழுமம் அறிவித்திருந்த &ldquoநதிக்கரை ஞாபகங்கள்&rdquo கவிதைப் போட்டியின் தலைப்பு முக நூல் கவிஞர்களின் எண்ண ஓட்டத்தின் வெவ்வேறு கோணங்களை படம் பிடித்து வாசகர் முன்னே வைக்க காரணமாக இருந்தது. கவிஞர் குறிஞ்சி நாடனின் &ldquoநதிக்கரை ஞாபகங்களை&rdquo கீழே பார்ப்போம் :-

நதிக்கரை ஞாபகங்கள்.
------------------------------------------

நதியும் நதிக்கரையும்
பால்யத்தின் ஞாபகத்தில்
உறைந்து கிடக்கும் தாகநாளில்
நதிகளற்ற தேசத்து யாத்ரீகன் கேட்கிறான்,
உன் நாகரீகத்தைச் செதுக்கிய நதிகள் எங்கே?

முதலில் நான் கூவத்தைக் காட்டியிருக்கக் கூடாது
நதியின் தொழுநோய் இதுவென்று
மூக்கைப் பிடித்தபடி ஒரு கோக் அடித்தான்.
நீ குடித்ததுதான் தாமிரபரணி நதியென்றேன்!

மணல் வண்டிக்கடியில் கண்ணீரைப்போல் வடிந்த
பாலாற்றைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
கரையைத்தோண்டிக் கதறக்கதற புதைத்தோமே
அந்தப் பெண்ணையாற்றின் சமாதியைக் கண்டான்!

காவிரி கைதான இட.த்தைப் பார்த்து
நதி கன்னடம் பேசியதா என்றான்!
வைகைக் கரையில் கிடந்த
கேரளத்து வதந்திகளைக் காறித்துப்பிவிட்டு
நதிகளின் புத்திரர்கள் எங்கே எனத்தேட...
மூட்டைத்தூக்கும் நெட்டிக்கிழவனை காட்டினேன்!

சட்டென மகாநதிகள் தூரமா என்றான்.
அஞ்சலகம் அழைத்துச்சென்று
கங்கையை வாங்கி கையில் திணித்தேன்.

குறிப்பேட்டை எடுத்துக் குறித்தான்
மகாநதிகள்தான் இந்த நாட்டை ஆளுகின்றன!?

குறிஞ்சி நாடனின் கவித் திறனுக்கு எடுத்துக் காட்டாக இனியும் பல் கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கட்டுரை மிக நீண்டு விடும் என்கிற காரணத்தால் குறிஞ்சி நாடனின் மேலும் சில கவிதைகளையும் சில வரிகளையும் குறிப்பிடாமல் விட முடியவில்லை. படைப்புக் குழுமத்தின் அனைத்து படைப்பாளிகளின் சிந்தைக்காக கீழே கொடுக்கிறோம் -
மனிதர்களாய் இருந்தோம் .
கடல்
நனைத்து நனைத்து
மீனவர்களாக்கிவிட்டது!
காத்திருக்க வைத்து
கரை எங்கள் பெண்களை
மீன்காரிகளாக்கிவிட்டது.
எங்கள் குழந்தைகளை
அகதிகளாக்கியதுதான்
யாரென்று தெரியவில்லை!
************************************************

புழுதியில் குளித்த பூவைப்போல
நெகிழிக் குப்பை சேகரிக்கும் சிறுமி,
எதையும் தரமுடியாது வெட்கித் தலைகுனியும் எனக்கு
கோணிப்பை நிரம்ப பரிதவிப்பைத் தந்துவிட்டு
வியர்த்த கைகளில்
எதிர்காலத்தை
இழுத்துச் செல்கிறாள்.
*********************************************************

அரபு நாடுகளின் பாலை வனங்களை தங்களது வேர்வையை உதிரமாக்கி உழைப்பால் சோலைவனங்களாக்கிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்கள் காணும் உண்மையான சோலை வனம் எங்குள்ளது ?
பாலைவனச்சோலை.
------------------------
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில் வௌலாலைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறான்
இராமநாதபுரத்து சண்டியன்.

தண்டச்சோறு பட்டம் வழங்கி கால்கட்டுபோட்டால்
அடங்குவானென்று
அசலூரில் இவனை
துபாய் மாப்பிள்ளையாக்கியிருந்தார் அப்பா!

திருச்சி ஏஜெண்டுக்கு
அம்மாவின் தாலிசரடையும்
புதுப்பொண்ணின் ஆரத்தையும் விற்று
அறுபதாயிரம் அழுதுவிட்டு
இதோ
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில்
வௌலாலைப்போல....

தமிழரசி உண்டாகியிருக்காடா!
வந்த மூன்றுமாதத்தில் இனிப்பு அனுப்பினாள் அம்மா!

அலைபேசியில்
தினமும் அழும் தமிழரசியை கொஞ்சிக்கொஞ்சி தூங்கவைத்துவிட்டு
இவன் அழத்தொடங்குவான்!

இது பேறுகாலம்
அதனால்தான்
கீழே
கப்பூஸ் பொட்டலத்திற்கு அடியில் வைத்த அலைபேசிக்கு பெரம்பலூர் சண்டியனின் காதுகளைக் காவல் வைத்திருந்தான்.

அரேபியப் பகல் அனலாய் எரிக்க
முரட்டுச் சீருடைக்கு வெளியே
அவனது தாய்ப்பால்
உருகி வழிந்துகொண்டிருந்தது.

தலைக்குமேல் தாழ்வாய் பறக்கும்
விமானத்தின் பேரிரைச்சல்
புதிதாய் வரும்
துபாய் மாப்பிள்ளைகளின் கதறலைப்போல் கேட்டது அவனுக்கு.

பெரம்பலூர் சகா
கீழிருந்து கத்தினான்.
பொட்ட புள்ளே பொறந்திருக்காம் மாப்ளேய்.....

வைகை ஈரமாயிருந்த காலத்தின் கீழைக்காற்று
காதுக்குள் புகுந்து
சில்லிட வைத்தாற்போல்
குளிர்ந்தான்.

வெள்ளிக்கிழமை அறையில் வாங்கிவைத்த கிலுகிலுப்பையை
இங்கிருந்தே எடுத்து
இராமநாதபுரத்தில் ஆட்டினான்!.

தோளைத் தட்டிவிட்டுக்கொண்டு
எம்பி
சூரியனைத் தொட்டு
மத்தாப்பாய் பொறிபறக்க
இணைத்து பற்றவைத்தான்
இரும்புச்சட்டங்களை.

அன்று மாலை
அவன்
அனுப்பிய முத்தங்கள்
அலைபேசி கோபுரத்தில் மோதி
உதிர்ந்து
பூக்களாய் பூத்தன.

அதைத்தான்
பாலைவனச்சோலை
என்று
எல்லோரும் அழைக்கிறார்கள்!

எவ்வளவோ படைப்புகளை நம் குழுமத்தில் பதிந்திருந்தாலும் அதையெல்லாம் இங்கே எடுத்து சொல்ல இயலாத காரணத்தாலும் சில வரிகளை மட்டும் துளிகளாக தருகிறோம்.

//
தேசத்தின் வயல்வெளிகளெங்கும்
நீ
விளைவிக்கத் தவறிய பயிர்களையெல்லாம்
தழுவித் தழுவி
அழுகிறது உன் ஆவி!
//

//
விட்டுக்கொடுப்பது
உரிமையுடன் தட்டிப்பறிப்பது!
விலங்குதான் இது
நீ இழுத்தால் உடைந்துவிடும்
ஆனால்
இங்கு
விலங்குடைதல் சாபம்!
//

//
எத்தனை அலங்காரம்
எத்தனை அகங்காரம்
விட்டிலைவிட
கொஞ்சநாள்
அதிகமாய் வாழ்பவனுக்கு!
//

//
அவள்
சுருட்டி வைத்திருந்த இருட்டு
சுட்டுவிரலாய் என்னை நோக்கி நீண்டது
//

//
நம் கனவு
அருகில்தான் உலவிக்கொண்டிருக்க வேண்டும்.
பூக்களை விலக்கிக்கொண்டு,
மகள் வாசம் வீசுகிறது பார்!
//

படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

மதுசூதன். எஸ்

View

மாதாந்திர பரிசு

ர மதன் குமார்

View

கவிச்சுடர் விருது

ஸ்டெல்லா தமிழரசி ர

கவிச்சுடர் ஸ்டெல்லா தமிழரசி ர  ஒரு அறிமுகம்
***************************************************

//

இதோ பசிக்கிறது.
ஒர் கவிதையை தின்றுக்
கொண்டிருக்கிறேன்.

//

படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி எழுதிய ஒரு கவிதையை மேலே வாசித்தீர்கள். கவிதைகளை தின்றுக் கொண்டிருக்கும் அளவிற்கு கவிதை சுவைப்பவர். மகாகவி பாரதி பிறந்த மாதமான டிசம்பரில் ஒரு கவிதாயினிக்கு கவிச்சுடர் விருது அளிக்கப் படுவதில் படைப்பு குழுமம் மிகுந்த பெருமை கொள்கிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் சிந்தனை கொண்ட படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்கள்
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். வடசென்னையில் வசிப்பவர். ஒரு காலத்தில் கவிதை என்றாலே காதல் கவிதைதான் என்று காதல் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது திருமணமும் காதல் திருமணம்தான்.

கவிக்கோவின் “அவளுக்கு நிலா” என்ற புத்தகத்தை விரும்பி வாசித்தவர் பின்பு அதன் ஈடுபாட்டில் தனது மகளுக்கு நிலா என பெயரிட்டு மகிழ்ந்தவர். கவிதைமேல் எவ்வளவு தாகம் கொண்டுள்ளார் என்பது இந்த ஒரு சம்பவமே சாட்சி. முக நூலில் அவர் பலவருடங்களாக கவிதை எழுதி வருகிறார். அத்துடன் பல வார/மாத இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் இவரது கவிதையை எப்போதுமே காணலாம்.

இவரது கவிதை பயணம் 6ஆவது படிக்கும் போது தீக்குச்சி என்னும் ஒரு காதல் சார்ந்த சமூக கவிதையின் தொடக்கத்தில் பிறந்தது. பள்ளியின் ஆங்கில ஆசிரியர்தான் ஸ்டெல்லா தமிழரசிக்கு கவிதை எழுத அதிகம் சொல்லி கொடுத்தவர்.

இவருக்கு முதல் கைத்தட்டலும், முதல் பாராட்டும் கவிதையின் இடம் தான் தொடங்கியது. அப்போது அவருக்கு ஒரு பென்சில் பரிசளிக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது. அதனால்தான் என்னவோ இப்பொது வரை படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி பென்சிலை மிக அதிகமாக காதலிப்பவராம்.வட சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் எழுதிவரும் இவரது வாழ்வியல்/சமூகம்/ காதல் கவிதைகளுக்கு மிக பெரிய வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் நிறைய கவிதைகள் எழுதி வந்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்...

நம் நாட்டைக்காக்கும் போர்வீரனுக்கு எவ்வளவு மரியாதையும் அன்பையும் செலுத்த வேண்டுமோ அவ்வளவு அன்பையும் நேசிப்பையும் நம் வீட்டைக்காக்கும் ஒரு கூர்க்காவுக்கும் கொடுக்கும் ஒரு வாழ்வியல் நிறைந்த சமூக கவிதையை இங்கே கீழே காண்போம்..

//
சலாம்
----------

எனதுவீட்டை நன்கு அடையாளம் அறிந்த
பெயர்தெரியாத கூர்க்காவின்
மாத சந்திப்பு இது...

பொன்முறுவலோடு
எனது வீட்டின் கதவை தட்டும்
அவர் கைகளுக்கு என்னால்
மாதம் பத்து ரூபாய் மட்டுமே
தர முடிகிறது..

நள்ளிரவு நேரத்தில்
கூர்க்காவின் தடி என் வீட்டு கதவை
இரண்டு முறைதட்டுவதோ
அல்லது அவரின் விசில்
சத்தம் என் வீட்டு தெருவைகடக்கும் போது
சற்று வேகமாகவோ கேட்டதேயில்லை...

அவரின் வருகையை
இதுவரை உணர முடியாத எனக்கு
அவருக்கு முன் வந்து போன
குடுகுடுப்பைகாரனின் சத்தம்
அச்சுறுதலின் தூக்கத்தை வரவழைத்துவிடும்

இரவில் வந்தாரா
வரவில்லையாயென்ற கேள்விக்குறி
அவரின் ஒற்றை புன்னகையில்
சிதைத்துவிடவே செய்கிறது...

இதுவரை எதுவுமே
பேசாத அவரின் வார்த்தைகள் தவிர
எல்லாமே பேசி நலம் விசாரிக்கும்
மௌனம் அவ்வளவு அழகு...

அவரின் மாதந்திர சந்திப்பு
என்பது செடியில் பூத்த
புதுரோஜாவை பார்ப்பதுப்போன்ற
அலாதியின்பம்...

பத்து ரூபாயோடு
எனக்கு சலாம் வைக்கும் கைகளுக்கு
எந்த கபட தன்மையையும்
உணந்ததேயில்லை நான்

மீண்டும்
அவரைகான அடுத்த மாதம்
ஏதோ ஒரு நாளில்
கையில் பத்துரூபாய் நோட்டை
சுமந்தவளாய்
நின்று கொண்டிருக்க வேண்டும்

எனக்கான சலாம் அவரிடமிருந்து
பெருவதற்கு..

//

இயற்கையை அழிக்கும் மனித பிம்பத்தை தேடி திரியும் ஒரு சமூக அவலத்தை/கொடூரத்தை குழந்தை மன வாயிலாக சொல்லி இருக்கும் நேர்த்தி மிகவும் தேர்ந்த ஒரு கவிஞரின் பார்வையை பதிவு செய்யும் வித்தையை இப்படைப்பில் காணலாம்.

//
அந்த
யாரும் மற்ற
நதிக்கரையில்

சின்ன சின்ன
நண்டுகள்,
சுருண்டு படுத்துகிடக்கும்
நத்தைகள்...

புதைமணல்
பொக்கிஷமாய்
வண்ண கூழாங்கல்
துணைக்கு கொஞ்சம்
சங்கு...

இரு இதழ்
மடித்தது போல
அந்த சோழிகள்...

வலதுபுற
தென்னை.
சிலு சிலு
காற்று...

துவைத்த ஆடை
ஈரம் உலர
கொடிமரத் தொங்கல்

வெகு தூரத்தில்
நீயும் நானும்
தோள் சாய்ந்தது
போல உள்ள
அந்த புகைபடத்தை
பார்த்து கேட்க ஆரம்பித்துவிடுவான்...
மகன்-

அம்மா, இதற்கு
பெயர்தான் ஆற்றங்கரையா,??

அவனுக்கு எப்படி
புரியவைக்க
மணல் கொள்ளை
கொண்ட அந்த
பாதள பள்ளம் தான்
அந்த ஆற்றங்கரையென்று...

//

தனக்குள் பேசும் ஒரு யுக்தி கவிஞர்களுக்கு உரிய பாணி அதிலும் தத்துவார்த்தம் மிகுந்தும் அதில் பொருள் பொதிந்து சொல்வது கவிதையில் தனி மரபாக போற்றப்பட்டு இன்றளவும் இருக்கிறது அப்படிப்பட்ட பாணியில் இரு அதியற்புத கவிதையை பார்க்கலாம்.

//
இந்த சுவர் தடுப்புச்சுவரல்ல
எனக்கான
உலகத்தின்
மதில் சுவர்

நான்
எங்கு சென்றாலும்
இச்சுவரை சுமந்து
செல்ல முற்படுகிறேன்
இச்சுவரை நான்காய்
பிரித்து அவசர
கூடாரமிட்டு அதின்
நுழைவுவாயிலில்
பைத்தியங்கள் ஜாக்கிரதையென
ஒர் அறிமுக பலகையை
விளம்பரம் செய்கிறேன்...

என்னைப்பார்ந்து
பயந்து ஒடிய
அத்தனை அறிவாளிகளுமே
எதிர்கால பைத்தியங்கள்தான்
ஏனேனில் நானும் ஒருகாலத்தில்
அறிவாளி பட்டம்பெற்ற
நபரின் கடைசி மனிதன்

என்னை இப்போது
ஆராய்ச்சி செய்து
எப்படி பைத்தியமானாயென
கட்டுரை எழுதும்
வருங்கால எழுத்தாளனின்
பேனா முனையில்
கேள்விக்குறியாய் அமர்ந்திருக்கிறேன்...

வினாவ தொடங்கின
அவனுக்கு பதிலளிக்க
விருப்பமில்லையெனினும்
அவன் வைத்திருந்த
பேனாவிற்கு பதிலளிக்க
எனக்கு பேராசை

அப்பேனாவை வாங்கி
எழுத முற்பட்ட போது
அந்த எழுத்தாளர் பயந்து
சற்று பின்நோக்கி
ஒருசாக்பிஸ் துண்டை
எனதறையில்
தூக்கிப் போட்டார்...

அந்த சாக்பிஸ் துண்டை
கையில் எடுத்து
என் சுதந்திர எல்லைக்கோடான
மதில் சுவரில் கிறுக்கி வைத்தேன்

எவராலும்
புரிந்துக் கொள்ள இயலா
கவிதையை

ஒருவேளை
அதை மொழிப்பெயர்ப்பு
செய்ய எந்த எழுத்தாளர்
முன்வருகிறாறோ
அவரும் என்னைப்போலவே
ஓர் சுவரை சுமந்து நிற்பார்
அதன் நுழைவுவாயிலில்
கட்டாயம்
பைத்தியங்கள் ஜாக்கிரதை யென
விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்...
//

//


இப்பொழுது நீங்கள்
என் பூத உடலைப்பார்த்து
எனக்காக அழுவதைப்போல்
அழுதவள்தான் நான் கூட
முன்பொரு காலத்தில்!

நேற்றுவரை என் முதுகுக்கு பின்னால்
கூர் கத்தியில் கிழித்து கொண்டிருந்த பேரன்பு
பூங்கொத்தோடு முதல் ஆளாய்
முதல் வரிசையில்
என் முன்னாங்கால் இடது பக்கத்தில்
தலை கவிழ்ந்து அழுது கொண்டிருக்கிறது
இனி யார் முதுகில்
குத்தப்போகிறோமென்று...

நீ இறந்ததும் இறந்துவிடுவேன்
என்று சத்தியம் உரைத்த நண்பன்
பாண்டியன் கடையில் இறால் பிரியாணி
ஆர்டர் செய்து கொண்டிருக்கிறான்

எனக்கான Rip களை பார்த்து
அவசர அவசரமாய் ஒடி வரும்
உண்மை காதலனுக்காக தான்
என் மெட்டி விரல் காத்து கொண்டிருந்தது

என் பேரன்பு கணத்தை
கனமாக பேச தொடங்கும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒருரோஜா மாலையோடு
அவன் கண்ணீர் கசியும் ஒற்றைதுளியில்
நான் புனிதமாவேன்...

இப்போது என்னை தூக்குங்கள்
நான் ஈகோ அற்று
மிக லேசாக படுத்திருக்கிறேன்!
//

அழகியலை அதன் அழகு மாறாமல் சொல்லும் லாவகம் இக்கவிதையின் வாயிலாக காற்றில் வாசம் வீசி செல்லும் ஒரு குளிர் தென்றல் போல சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறார்...

//
அடிக்கடி
கனவில் பாதி தூரம் பயணிப்பதாய்ச் சொல்லும்
வண்ணத்துப்பூச்சிக்கு
ஓர் இறகில்லை...

ஒற்றை இறக்கையோடு
மற்றொன்றை
சரிவர தேட முடியவில்லையென்ற குற்றச்சாட்டு
கடிதம்மூலம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது கனவில்...

இறக்கையை தேடி அலையும்
வண்ணத்துப்பூச்சியின் காவலாளிப் போலவே திரிகிறேன்...

மகளின் நோட்டு புத்தகத்தில்
மறைந்து வைத்து
"சாமி எப்படியாச்சுஇதை காசாக்கிடுனு
வானத்தைப் பார்த்து வேண்டி நிற்கும்"
அவளை

எதுவும்கேட்காமல்
திறந்து பார்த்தேன்
ஒற்றைசிறகு எப்படியோ காசாக மாறுமென்ற
நம்பிக்கை தெரிந்தது...

இறக்கையைதிருடி
வண்ணத்துப்பூச்சிக்கும்

மகளின் நம்பிக்கைக்கு நூறுரூபாயும்
கொடுத்தும்
பறக்கவிட்டேன்
இரவுகளின் கனவுபொழுதை
//

பெண்ணியத்தையும் அதன் வலிமிகுந்த வாழ்வியலையும் வெளியே சொல்லமுடியாத சில சூழல்களையும் இவ்வளவு எளிமையாக வலிமையாக சொல்ல முடியும் என்று நிரூபிக்கும் ஒரு கவிதை இது...

//

திடீரென எனதுபறவை
வயதிற்கு வந்துவிட்டது
தண்ணீர் ஊற்ற எந்த பறவையை
அத்தை பறவையாய் அழைக்கலாமென்று
சிந்தனை செய்கிறேன்

சிட்டுக்குருவி...
சிறிய பறவை
தேவையில்லையென்று மனம் சொல்கிறது

புறா
அழகு ஆபாத்தானது வேண்டாமென்கிறது

கிளி,அல்லது மயில்
அவர்களை அழைக்க தகுதியற்றவர்களாகிறேன்

கழுகு அல்லது பருந்து
அய்யையோ வேண்டவே வேண்டாம்
பார்வையில் கொத்தி திண்ணும் வகையை சார்ந்தவைகள் அவை

இப்போது என்ன செய்வதென்ற
கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான்
வயதிற்கு வந்ததை மறைத்துவிடுவோம்
உதிரக்கசிவு இறக்கையில் படாமல் பார்த்துக்
கொள்ளட்டும் செல்லப் பறவை
//

படைப்பாளியின் சில கவிமழை துளிகளை உங்கள் பார்வையில் நனைய விடுகிறோம்...

//
வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?
//

//
என்னை பு(ர)சித்துக்கொள்
அதுவே உனக்கு நான் வழங்கும் பாவமன்னிப்புதான்.
//

//
அலைகளின் பெருத்த சத்தம் நான்
மொழிபெயர்ப்பு செய்ய முடியாத
வானிலை எச்சரிக்கை நீ!
//

//
இலையுதிர்கால மரங்களைப்போல
ஆடை உதிர்ப்போம் வா
காதல் துளிர்க்கட்டும்
பட்டாம்பூச்சி கனத்துகிடக்கிறது.!
//

//
ஒரே பறவையின்
இறக்கைகள் நாம்
நீ வலதாகவும்
நான் இடதாகவும்
பறக்கிறோம்
//

//
மூங்கிலாய்
அசைகிறேன் நான்!
புல்லாங்குழலாய்
வாசிக்கிறாய் நீ!
//

//
எந்த இசைக்கருவியின்
நரம்பு நீ?
மீட்டவே தெரியவில்லை எனக்கு..?
//

//
மெழுவர்த்தியின் சாயலை போர்த்திக்கொள்கிறேன்
இப்போது
உனக்காக உருகவா?
இல்லை எனக்காக எரியவா?
//

இவரது பல படைப்புகளை சாதாரணமாக கடந்து விட முடியாது எளிமையாக இருந்தாலும் அதற்குள் பல பரிமாணங்களை உள்ளடக்கி எழுதுவதில் மிகவும் கைதேர்ந்தவர். இப்படிப்பட்ட பலகவிதைகள் இருப்பினும் எல்லாவற்றையும் இங்கே எடுத்து எழுத்தமுடியாத காரணத்தால் இன்னும் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறோம்...


ஒர் கனவை
சாதாரணமாக கடந்து விடமுடியாது
--------------------------------------------------------

மார்கழி குளிர்போர்த்திய சாலையில்
வெறுமனே படுத்திருக்கும் யாரோ ஒருவரின் குளிருக்கு தார்பாய் கிடைத்தது போல
அத்தனை கதகதப்பு அக்கனவுக்கு

கோடை வெயிலில்
மயங்கி கிடக்கும் யாரோ ஒருவரின்
தொண்டைக்கு பன்னீர் சோடா இறங்குவது போன்று அத்தனை சுகம் அக் கனவுக்கு

நீண்ட நாள் ஆறா காயத்தில்
விரல் தொடமல் மயிற்பீலீயில்
மருந்திடும் சுகம் அக் கனவுக்கு

பள்ளி முடிந்ததும் ஒடி வந்து
தாயை தழுவும் குழந்தையின் சுகம் அக் கனவுக்கு

ஓர் மதியத்தின் நடுவெய்யிலில்
என் பின்னே நன்றியோடு ஓடிவரும்
குட்டி நாயின்
நுனி நாக்கு எச்சிலில்
நனைந்த சுகம் அக் கனவுக்கு

மிகக்கடுமையாக
பேசிக்கொணடிருக்கும் வேளையில்
முந்தானை இழுத்து சிரிக்கும்
குழந்தையின் முகசுகம் அக்கனவுக்கு

யாருமே இல்லாத பெருந்துயரில்
தோள்சாய்ந்து அழ கிடைத்த நட்பின் சுகம்
அக்கனவுக்கு

அம்மாவின் விரல்
கேசம் கோதும் சுகம்
அப்பாவின் ஆசை குட்டின் சுகம்....

அக் கனவு...
அக் கனவு...
அக் கனவு...

கடைசியாய்...,
வாழ்வை மிக நிம்மதியாய் வாழ்ந்து முடித்த
ஒற்றை நிமிடத்தின்
"ம்"சுகத்தின் பேரன்பு அக்கனவு.

அதனால்தான் சொல்கிறேன்
ஒரு கனவை கடப்பது அவ்வளவு எளிதல்ல.
//

~~~~~~~~~~~~~~~~~~~~~~

படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

கார்த்திக் திலகன்

கவிச்சுடர் கார்த்திக் திலகன்  ஒரு அறிமுகம்
***************************************************

//
இரண்டிரண்டாக
வாக்கியங்களை நறுக்கி
மாயப்புனைவின் மிளகுத்தூளை
அங்குமிங்குமாக தூவி
கைபேசி தொடுதிரையின்
மின்னணு வெப்பத்தில்
நீ விரும்பி சுவைப்பாயே என்று
உனக்காக
சூடான கவிதைகளை
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
அதற்குள் என்ன அவசரம்
இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ
நண்பா
நாமெல்லாம் தட்டு நிறைய
பசியை கொடுத்தாலே
அள்ளி அள்ளி புசிக்கிற ஜாதி...
//

படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் கார்த்திக் திலகன் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகளை மேலே வாசித்தீர்கள். எழுதாமல் இருப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று எழுதி கேட்கும் அளவுக்கு எழுத்தின் தாகத்தால் உந்தப் பட்டு தற்போது நவீனக்கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற இந்த 44 வயது கடலூர் கவிஞர் துணை வட்டாட்சியர் என்கிற பொறுப்பான ஒரு அரசு அதிகாரியும் ஆவார். கார்த்திகேயன் என்கிற இயற்பெயரை கார்த்திக் எனச்சுருக்கி மனைவியின் மீது வைத்திருக்கும் பேரன்பு காரணமாக திலகம் என்கிற மனைவியின் பெயரை திலகன் என்று மாற்றி கார்த்திக் திலகன் என்ற புனைபெயரில் எழுதுகிறார்.

பல பிரபலமான நாளிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் கார்த்திக் திலகன் முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் பெரும் வாசகர் வட்டத்தை வைத்திருப்பவர். பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் புலன் உதிர் காலம் என்கிற தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கவிஞனின் தலையாயப் பணி மொழிக்கு வெளியே அலைந்து கொண்டிருக்கும் கவிதையை மொழிக்கு உள்ளே கூட்டிவந்து உட்கார வைப்பதுதான் என்கிறார் இவர்.

சொற்களை இவர் ஆட்டிப் படைக்கிறாரா இல்லை சொற்களால் இவர் ஆட்டுவிக்கப் படுகிறாரா என வாசிப்பவர்களை அசத்த வைக்கும் சொற்களின் சிலம்பாட்டக்காரர். பொன்னிறமாக வறுத்தெடுத்த முத்தங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

//

என் எதிரில் இருந்த
கோப்பையில்
கவிதையின் மது...
ஐநூறு ஆண்டு
பழமையான சொற்களை
மனதுக்கடியில்
புளிக்க வைத்து
தயாரித்தது....
ஒரு வெள்ளித் தட்டில்
பொன்னிறமாக வறுத்த
இரண்டு முத்தங்கள்...
ஒரு வாய் மதுவுக்கு
ஒருகடி முத்தம்...
சமையலறையில் இருந்து
உன் குரல் கேட்கிறது
முத்தம் போதுமா
இன்னும் இரண்டு
பொறிக்கட்டுமா என்று
எப்படிச் சொல்வது
இன்னும்
இருநூறு ஆண்டு
கழித்துக் கேட்டாலும்
இரண்டுமே எனக்கு
சலிக்காது என்று..
//


மொழி சிலசமயங்களில் மொழியாமல் இருக்கும் போதோ சிறு துளியாக விழும்போதோ அதன் ஊடுருவல் மிகச்சக்தி வாய்ந்தது. உம் எனும் சிறு சொல் பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு அர்த்தங்களை அணிந்து கொண்டு வாழ்வின் கணங்களை எப்படி நகர்த்துகிறது பாருங்கள். அவரது கவிதை ஆயுதங்களில் ஒரு ஈட்டியாகப் பாயும் ஒரு கவிதை;-

//

கதை சொல்லிகளை விட
உம் கொட்டிகள்தான்
நம்மை அதிகம் கவர்ந்துவிடுகிறார்கள்
சிறுபொழுதின் காம்புகளில் கூட
சில்வண்டுகளைப் போல்
அமர்ந்துவிடுகின்றன
இந்த உம் கள்
நெகு நெகுவென்று
பிரிந்து செல்லும்
கதைகளின் கிளைமீது...
கேசம் கலைய கிடக்கும்
காரிகையின் இதழ் மீது...
அதிகாரத்தின் பாதுகைகள்
நசுக்குகிற சிறுநீரக நுண்குழல்களின் மீது....
வாழ்வை அரவை செய்யும்
இயந்திரங்களின் ஒலி மீது...
அவைகள் பசியோடு அமர்கின்றன
கதைகளுக்கு உம்கொட்டியபடி
உறக்கமென்னும்
நாவாயின் சுக்கானை
காற்றுவீசும் திசையில்
லாவகமாக திருப்புகின்றனர்
குழந்தைகள்
படுக்கையில்
கொட்டப்படும் உம்கள்
சொர்க்கத்தின் படப்பைக்குள்
செம்மீன்களாய் சேகரமாகின்றன
அதிகாரத்தின்
உம்களுக்கு எதிராக
அடக்கமுடியாமல்
அழுதுவிடுகின்றன
எளியவனின்
சிறுநீரக நுண்குழல்கள்
இயந்திரங்கள் கொட்டுகிற
உம் களில் அரைபடுகின்றன
உழைப்பாளியின்
அந்தியும் பகலும்...
இப்படிதான் இன்று
என்னருகில் செல்பேசிக்கொண்டிருந்த
உம்கொட்டியின் கன்னம்
சட்டென்று வியர்த்துவிட்டது
அவன் கனவின் லங்கோட்டை
யார் பிடித்து இழுத்ததோ
மறு முனையில்......
//


நலிவடைந்து வரும் கிராமியக் கலைகளும் கலைஞர்களும் கவிஞரின் பார்வையில் ஒரு வாழ்வியல் கவிதையாக பரிணமிக்கிறது . விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலைகளை பாடாத கவிஞர்களும் உண்டோ ? இந்த உருக்கமான கவிதை கவிஞரின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டு :-

//

தெரு மேடையில்
ஆடுவதற்கு முன் திரைக்குள்
அவன் ஒத்திகை பழகும் போதே
குரல் கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்
கையிலேந்திய மரக்கத்தியை
சுழற்றி சுழற்றி சிவன் வேடத்தில்
அவன் அடவு கட்டினால்
காற்றில் மிதக்கும் படகா
காணத்தில் மிதக்கும் உடலா
அந்த சிவனே கெட்டான்டா
என்பார்கள் பெருசுகள்
ஆறுகால பூஜையோடு
சிவன் நன்றாகத்தான் இருக்கிறான்
எங்கள் ஊரில்
இவன்தான் கெட்டுப்போனான்
நலிவடைந்த கலைஞனுக்கான
நானூறு ரூபாய் பென்சனில்
பொலிவிழந்து போனது
அவன் பிழைப்பு..
திருமணமே செய்துகொள்ளாத
அவன் சொல்வான்
தான் கலியாணஞ் செய்து கொண்ட காதலி கலைதான் என்று
நீரில் மிதக்கும் நீண்ட ஜடாமுடியை
அலைகள் தாலாட்ட ஒருநாள்
குளத்தில் மிதந்த
தெருக்கூத்து மகாராஜாவை
ஊரே சுற்றி நின்று
வேடிக்கை பார்த்தது
மின்னலை போல ஆடியபாதத்திலிருந்து
மின்சாரத்தை பருகிக் கொண்டன
மீன்குஞ்சுகள்
நிரம்பிய கூட்டத்தை கண்டதும்
நீர்த்திரைக்கு பின்னாலிருந்து
மானசீகமாக ஒலிக்கிறது
அவன் குரல்
தந்தானே தந்தானே என்று...
அவனுக்கு எதையுமே தராத சிவனே
அவன் ஆன்மாவுக்காவது
அமைதியை தா...
//


சில உணர்வுகளுக்கு மாற்றீடு கிடையாது. ஒரு கவிஞன் என்றாலே தனிமைஎன்னும் உணர்வை எப்போதும் தன காதலைப் போல் தன் மனதுக்குள் பொத்தி வைத்திருப்பவன். கவிஞனின் தனிமையை அவனால் விட்டுபிரிய நேரும் என்கிற போது அதற்கு மாற்றாக அவனால் எதை அங்கு வைத்துவிட்டு வரமுடியும் ? ஒரு அழகான கவிதை..தனிமையின் இனிமையோடு..

//

இரண்டு சூரியன்கள்
பிரகாசிக்கும் அளவுக்கு
என் வானம் ஒன்றும்
அவ்வளவு பெரியதல்ல
அப்படியும் இரண்டாவது சூரியன்
வந்துவிட்டால்
முதலாவது சூரியன் தானே
காற்றில் கரைந்துவிடுகிறது
எதையும் மாற்றீடு செய்துவிட்டு
பதிலிகளை வைத்துவிட முடிகிறது
துக்கம் இருந்த இடத்தில் அன்பை
மகிழ்ச்சி இருந்த இடத்தில்
அற உணர்வை
காதல் இருந்த இடத்தில் ரகசியங்களை
பிரிவு இருந்த இடத்தில் இசையை
எல்லாம் எளிதாக இருக்கிறது
ஆனால்
நான் தனிமையை
காலி செய்துவிட்ட பிறகு
தனிமை இருந்த இடம் மட்டும்
காலியாகவே இருக்கிறது
ஏனென்று தெரியவில்லை
//


மானுடனுக்கு அன்பைப் பகிர்வதற்காகவே இயற்கை படைக்கப் பட்டிருக்கிறது. கவிஞன் தன்னையே கைவிட்டு நிராதரவான நிலைமையில் அன்பின் பசியாற காதலிபோல் இயற்கையை அழைக்கும் குரலுக்கு நம்பிக்கை உணவாகக் கிடைக்க கவிஞரின் எழுதுகோல் வடித்த கவிதையொன்றை பாருங்கள் ;-

//

என்னை நானே கைவிடுவது
எத்தனை துயரார்ந்தது.
கடவுள் என்னை
கைவிடுவதை விட
அது கொடுமையானது.
அப்படியொரு நிராதரவான கணத்தில்தான் எனது தேடல் துவங்கியது.
தாங்கமுடியாத அன்பின்பசி எனக்கு.
நீலமலையின் குறுக்கே
அடிவானமெங்கும்
கிளைகள் பிரிந்து
பரபரவென ஓடும் மின்னலைப்போல,
நான் தேடத்துவங்கினேன்.
அதோ அந்த மலைமேலே,
மேகத்தை ஒரு பாத்திரத்திலெடுத்து
கூழ்பிசைந்து கொண்டிருந்தவளை கண்டேன்.
அவள் தலை எங்கும் ஆயிரம் கண்கள்.
அவள் பார்வையின் விள்ளல்களை வாரிவாரி விழுங்கியும்
அடங்கவே இல்லை என்
அன்பின் பசி.
அம்மா... என்று வானம் அதிர
அழைக்கிறேன்.
மாயத் தொப்புள் கொடியை
பிடித்துக்கொண்டு அவள் குரல்
மலைஇறங்கி வந்தது என்னிடம்.
அவள் குரலை பிடித்துக்கொண்டு
அழத் தொடங்கினேன்.
பசுவின் பின்கால்களுக்கிடையில்
பிறந்து விழுந்த இளங்கன்றைப்போல,
தட்டுத்தடுமாறி
எனக்குள் எழுகிறது
ஒரு புதிய நம்பிக்கை....
//


தாயன்புக்கு நிகர் உண்டோ? மண்ணையும் மொழியையும் தாயாக ஏற்றுக் கொண்ட கவிஞன் என்றுமே தாய்க்கு முன்னால் ஒரு சிறு மழலையாக இருக்க ஆசைப்படுகிறான். வளர்ந்த பருவத்தில் தாயன்பை தூர நின்று பார்த்து ஏங்கும் ஒரு குழந்தையாய் மனதுக்குள் மாறிவிடும் கவிஞனின் உணர்வின் வெளிப்பாட்டை திரு கார்திக் திலகன் அவர்களது இந்தக் கவிதை மூலம் நம்மையும் ஈனக வைக்கிறார் ;;-

//

என் குளிர் கண்ணாடியை
எடுத்து அணிந்து கொண்டாள்
என் குட்டி மகள்
என் பெரிய சப்பாத்துகளில்
கால்களை நுழைத்துக் கொண்டு
இடுப்பில் கைவைத்து
என்னைப் போலவே
நடந்துகாட்டுகிறாள் அவள்
பேத்தியை அள்ளி
மடியிலிட்டு கொஞ்சுகிறாள்
என் அம்மா
என் மகளின் வயதில்
அம்மா எனக்கு வாங்கித்தந்த
சப்பாத்துக்கள்
குட்டி குட்டி நிலாக்களைப்போல
இருக்கும்
என்ன ஆச்சரியம்
அந்த குட்டி நிலாக்களுக்குள்
என் கால்கள் இப்போது
எளிதாக நுழைந்துகொண்டன
அடிவானில் பதுங்கும்
சிவந்த முட்டை உடைந்து
உன்
பழைய கொஞ்சல்கள் எல்லாம்
என்னை நோக்கி
பறந்து வருவது போல்
ஏக்கமாக இருக்கிறது
அம்மா என்னையும்
ஒருமுறை கொஞ்சேன்......
//


அதிகாலை என்பது மனிதனுக்கு தன் பிறப்பை நினைவூட்டும் நேரமோ ? வாழ்க்கை உயிர்களுக்கு ஊட்டும் தாய்ப்பாலின் சுவையோ ? மனித நேயம் ஒவ்வொரு மனதுக்குள்ளும் மலரத் துவங்கும் நேரமோ ? கார்திக் திலகனின் அனுபவம் ஒரு கவிதையாய்..

//

காலை பனியில் மங்கலாக கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன
கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகள்
பனிக்குல்லாய் அணிந்து கொண்டு நடைப்பயிற்சி போகிற முதியவர்கள்
பனிக்குள்ளிருந்து
வெளியே வருகிறார்கள்
பின்பு பனிக்குள்ளேயே போய்விடுகிறார்கள்
அவர்களின் இதயக்கடிகாரத்திலிருந்து
இயந்திரக்குருவி
காலக்கிரமமாக வெளியே வந்து
கூவி விட்டு உள்ளே போகிறது
வங்கியில் வேலை பார்க்கும் பெண்
தன் செல்ல நாயை அழைத்து வந்திருக்கிறாள்
என்னை கண்டதும் முகம் மலர்த்தி
குசலம் விசாரிக்கிறாள்
என் முகத்தை பார்த்து
வினோத ஒலி எழுப்பிய நாய்
என் கால்களை நக்கிவிட்டது
அந்த எச்சிலின் ஈரம்
எனக்கு புரியவைத்துவிட்டது
எச்சில் என்பது ஒரு மொழி என்பதையும்
ஈரம் என்பது ஒரு வார்த்தை
என்பதையும்
கிழக்கிலிருந்து
பனிக்குல்லாய் அணிந்து வந்த முதியவரின் பெயரைக் கேட்டேன்
சூரியன் என்றார் அவர்
இன்று பனிகொஞ்சம் அதிகம்
என்று முணுமுணுத்தது
அவரின் செம்பழுப்பு நிற உதடுகள்..
//


கணவன் மனைவி அன்பின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் மனதுக்குள் அவர்கள் அமைத்திருக்கும் ஒரு ரசசிய சுரங்கப்பாதை வழியாகவே நடைபெறுவதுதான்.. அந்த ரகசிய சுரங்கப் பாதை பகிரங்கமாக திறக்கப் படும் கணம் என்பது அவளின் நோயுற்ற நிலையில்தான். ஆறுதல் தேறுதல் என்பதெல்லாம் இருவருக்குமிடையே வெளிப்படும் இருவழி பரிமாற்றம். இல்லத்தரசியின் நோயுற்ற நிலைகண்டு இயலாது நிற்கும் ஒரு கணவனின் நிலையை வலிகளின் வரிகளில் பதிவு செய்கிறார் கவிஞர் ;;-

//

நோயுற்ற மனைவியின் கை
குழந்தையின் கைபோல இருக்கிறது.
எடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்ள ஏதுவாக...
எத்தனை கோபத்தில் அவள்
இருக மூடி வைத்திருந்தாலும்
என்னைக் கண்டதும் அவள்
மனதின் தாழ் சட்டென தெறித்துவிடும்.
எனக்கான வீடு அவள் மனம்தான்
என்று நம்புகிறேன்.
இரண்டு மனங்களுக்கிடையே
ரகசிய சுரங்கவழி ஒன்றிருக்கிறது.
யாருமே சொல்ல முடியாத
ஆறுதல்களை
அதன் வழியேதான் நாங்கள்
எடுத்துச் செல்வோம்.
இன்று அவள் நோயுற்றிருக்கிறாள்.
ரகசிய பாதையின் கதவுகளை
பகிரங்கமாக திறக்கிறேன் நான்
அழுகையால்...
கடவுள் நம் கூடவே இருக்கிறார்
கவலையை விடு என்று,
கண்களை துடைக்கிறாள் அவள்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
இந்த தலைகீழ் விகிதங்களை
என்னதான் செய்வது என்று
கைகளை பிசைகிறது விதி.....
//


மானுடம் பிறந்த போதே காதலும் பிறந்து விட்டது. காலப்போக்கில் ஜாதி மத இனமென்று மனிதன் பின்னிய மாயவலைகளில் அவனே வீழ்ந்து விடுகிற கொடுமையை நாம் காண்கிறோம். வாழ்நாட்களில் சாகடிக்கப்பட்ட காதல் இறந்தபின் உயிர்பெறுகிறது . சாதிக் கொடுமையாலோ சமூக ஏற்றத்தாழ்வின் அவலத்தாலோ கொலைசெய்யப் பட்ட ஒரு காதலை இரு பிணங்களாய் சுமந்து செல்லும் அமரர் ஊர்தியின் ஓட்டுனரின் பார்வையாக ஒரு கவிதை கண்ணீரை அணிந்து கொண்டு வடிக்கப்ப்பட்டுள்ளது;-

//

அமரர் ஊர்தியில்
ஓட்டுனன் வேலை அவனுக்கு.
என்றாலும் குடிப்பழக்கமில்லை.
ஆனால், சவபயணங்களின் போது
சாராயத்தில் ஊறவைத்தது போல
விரைப்பாக இருக்கும்
அவன் மனம்.
ஒவ்வொரு உடலுக்கும்
ஒரு மணம் இருப்பதைப் போல,
ஒவ்வொரு சவத்திற்கும்
ஒரு மணம் இருக்கிறது
என்பான் அவன்.
அன்று அவனுக்கு வாய்த்தது
கட்டிக்கொண்டே தீக்குளித்து இறந்து போன
காதலர்களின் இரட்டைச் சவம்.
எரிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்.
இறுதிவரை பிரிக்கவேமுடியவில்லை
சவங்களை.
நண்பர்கள் மட்டுமே கூட இருந்தனர்.
அவர்களின் கண்களில் வரிசைகட்டிய நீர்முல்லைகளின்
மணம் என்னவோ செய்தது.
கண்ணீர் என்பது வெறும் திரவம் மட்டுமே அல்ல என்று அவனுக்கு
அப்போது தோன்றியது.
தார்ச்சாலை என்கிற
இரவின் படிமத்தின்மீது
ஊர்ந்து கொண்டிருந்தது வாகனம்.
தழுவியஉடல்களில்
சிக்கிக்கொண்ட
மரணத்தின் எலும்புகள்
முறியும் ஓசை
கேட்டுக்கொண்டே இருந்தது
வாகனம் குலுங்கும் போது....
முத்தங்களின் கருகல் வாசனை
அவன் மூக்கைத் துளைத்தது.
கடைசிவரை அவன்
திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஆன்மாக்களின் புணர்ச்சியை பார்ப்பது
அத்தனை நாகரிகமில்லை என்று
நினைத்தான் போலும். 
மறுநாள் காலை மனைவியை
அழைத்து -
அம்மு நான் இனி அந்த
வேலைக்கு போகலடா
என்றான் விட்டத்தை வெறித்தபடி....
//


உலகையும் உயிர்களையும் மனிதர்களையும் படைத்த இறைவனுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் நையாண்டி வேடமிட்டு வரும் நெத்தியடிக் கவிதை ஒன்று:-

//

இந்த பூமியை வானமென்னும் கிண்ணத்தை கொண்டு
மூடிவைத்து விட்டுப் போன இறைவன்
திரும்பி வந்து பார்ப்பதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது இங்கே.
காளான்களைப் போல குப் என முளைத்து விட்டன கட்டிடங்கள்.
அதில் ஒரு சிப்பிக்குள் அமர்ந்தபடி குட்டி கடவுளுக்கு
முலையூட்டுகிறாள் தாயொருத்தி
கடவுளை வளர்த்து வளர்த்து மனிதனாக்கும்
துர்தேவதைகள்தான் இந்த தாய்தந்தையர்கள்.
கடவுளே வானத்து கிண்ணத்தை
திறந்து திறந்து
பார்த்துக் கொண்டு
அந்தரத்திலேயே தொங்கியபடி
அருள்பாலித்துக் கொண்டிரு!
பூமிக்குள் இறங்கி வந்து விடாதே!
உன்னை பலவந்தமாக கொன்றுவிட்டு
உன் உடலுக்குள் கூடு பாய இங்கே மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏதோ உன் அந்தரங்க தோழன் என்பதால் நானிதை சொல்லும்படி ஆயிற்று.
சூதானமாக பிழைத்துக்கொள்.
நீ நினைப்பதைப் போல புனிதர்களாக இருப்பதற்கு
அவர்கள் கடவுளர்களல்ல மனிதர்கள் மா...மனிதர்கள்.
//


கவிச்சுடர் கார்த்திக் திலகனின் கவிதைளை எல்லாம் இங்கு எடுத்தியம்புவது என்பது கடினம் என்பதால் படைப்பின் படைப்பாளிகளுக்காக சொற்களால் சிலம்பமாடும் அவரின் சில கவிதைகளிலிருந்து சில வைர வரிகளை மட்டும் தருகிறோம்.;-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உதிரத்துளிகளை ஒன்றாக்கி
ஒரு பெண்ணை செய்வது எளிது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சற்றுமுன்பு
அவ்வழியேதான்
ஒரு கவிதைப்பாகன்
வார்த்தைகளை
ஓட்டிச்சென்றிருக்கிறான்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரவுக்குள் இருந்து ஒரு பகலை வெளியில்
எடுத்து கைதட்டல் வாங்கும் வித்தைக்காரன்தானே
இந்த சூரியன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் கவிதையுற்றிருக்கிறேன்.
அவள் கருவுற்றிருக்கிறாள்.
எனக்கு இப்போது முடிந்து விடும்.
அவளுக்கு பத்து மாதம் ஆகும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படைப்பாளி கார்த்திக் திலகன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

Showing 701 - 720 of 735 ( for page 36 )