logo

விழியல்ல விபத்துப்பகுதி


நூல் பெயர் :  விழியல்ல விபத்துப்பகுதி
                   (கவிதை)

ஆசிரியர் :  கோபிநாதன் பச்சையப்பன்  

பதிப்பு         :  முதற்பதிப்பு 2021

பக்கங்கள் :  102

வடிவமைப்பு :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம் :  படைப்பு டிசைன் டீம்

வெளியீட்டகம் :  இலக்கியப் படைப்புக் குழுமம்

அச்சிடல் :  படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
  
வெளியீடு     :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர் :  ஜின்னா அஸ்மி

விலை         :  ரூ100
மன்றாடிக் கொள்ளப் பழகிய மனதிற்குத் தெரியும் தனக்குள் காதல் ஒளிந்திருக்கிறது என்று. மௌனமாகத் துடிக்கும் இதயத்திற்குத் தெரியும் தனக்குள் காதல் மலர்ந்திருக்கிறது என்று. பூத்துவிட்ட காதலை எப்படிச் சொன்னாலும் வரிகளிலும் வாசம் வீசும், ஊமை வார்த்தைகள் கூட உரக்கப் பேசும். அதுதான் காதலின் அடையாளம். எல்லா மொழியிலும் காதல் இருக்கிறது ஆனால் எந்தக் காதலிலும் எந்த மொழியும் இல்லை காரணம் அது எல்லா நேரத்திலும் காதலாகவே இருக்கிறது. அழகாக இருப்பதெல்லாம் காதலாகின்றன, காதலாக இருப்பதெல்லாம் அழகாகின்றன. அப்படிப்பட்ட பார்வையின் வரிகளை எல்லாம் கண்களுக்கே தெரியாமல் காதலின் தயவோடு கவிதைகளாக உருமாற்றி உருவாக்கப்பட்டிருப்பதே 'விழியல்ல விபத்துப்பகுதி' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வகையில் வாசிப்பவர் எல்லோருக்கும் தான் எழுதியது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி விட்டுப் போவதே இத்தொகுப்பின் பலம்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், கத்தார் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி 'கோபிநாதன் பச்சையப்பன்' அவர்களுக்கு இது மூன்றாம் தொகுப்பு. கத்தார் நாட்டில் வழங்கப்படும் 'தமிழ் மகன் விருது' என்ற தனித்துவமான விருதையும், உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா வழங்கிய 'The Enlightenment Award', எனும் விருதை பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.