logo

என் தெருவில்  வெஸ்ட் மினிஸ்டர் பாலம்


மானுட அறிவின் நீட்சி காலத்தின் கைகளில் கணினியை ஒப்படைத்தது போல இலக்கியத்தின் புரட்சி கவிஞர்களின் கருக்களில் புதுக்கவிதைகளைப் பிரசவித்தது. அதிலும் படைப்பாளி கோ. ஸ்ரீதரன் அவர்கள் வாழ்வியல் வரிகளைத் தனக்குள்ளிருந்தே தரவிறக்கம் செய்துகொள்ளும் புதுவகை கவிதைக்கணினியை உருவாக்கி அதை வாசிப்பவரின் கைகளில் ஆயுள் ரேகையாக அணைக்கட்டினார். பின்பு அதில் பொங்கிவரும் மென்பொருள் வெள்ளத்தைத் தன் தெரு வழியாகப் பயணிக்க பாதை அமைத்தார். வேடிக்கைப் பார்க்க வெஸ்ட் மினிஸ்டர் பாலம் கட்டினார். கடைசியாக அதற்கு "என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம்" என்று பெயர் வைத்தார். இப்போது பொதுமக்கள் பயணத்திற்காகப் படைப்புக் குழுமம் பெருமையோடு திறந்து வைக்கிறது இப்பாலத்தை.

ஒப்பீடு செய்ய இயலாதபடி கவிதையின் படிமங்களைக் காலக்கண்ணாடியின் வழியே காட்டுகிறார். அதில் பார்ப்பவரின் பிம்பங்களைப் பிரதிபலிக்க வைக்காமல் இந்தச் சமூகத்தைப் பிரதிபலிக்கச் செய்து மாயக்கண்ணாடி-யாக்குகிறார். எல்லோருக்கும் எளிதில் புரியும் எதார்த்தத்தை இயல்பாக எடுத்துச் சொல்வதே இவரது கவிதைகள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட பொறியாளரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.
நூல் பெயர்
என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம்

ஆசிரியர்:
கோ. ஸ்ரீதரன்

பதிப்பு:
முதற் பதிப்பு 2018

பக்கங்கள் :
120

அட்டைப்படம்:
ரவிபேலட்

வெளியீடு:
படைப்பு பதிப்பகம்

விலை:
100

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.